சரணடைந்தவருக்கு சந்தோஷ வாழ்வருளும் திருச்சேறை சாரநாதப் பெருமாள்! கோவை ஆறுமுகம்

/idhalgal/om/happy-life-one-who-surrendered-trichsera-saranath-perumal-coimbatore-arumugam

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.'

-திருவள்ளுவர்

அறத்தின் இயல்போடு நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலை யானவராகத் திகழ்பவர் இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான் முதன்மையானவர்.

மகான் வல்லபாச்சாரியார் பூஜை செய்யத் துவங்கிய நேரம் சிறிதளவு தயிர் தேவைப்பட்டது. அதையறிந்த மகானின் சீடர், அருகிலுள்ள தயிர் விற்கும் பெண்மணி யிடம் போய் தயிர்கேட்டார். வல்லபரின் தவ ஆற்றல் மற்றும் அவரது சீடர்களைப் பற்றி தயிர் விற்கும் பெண்ணிற்கு நன்றாகவே தெரியும். ஆகவே சீடரிடம், "நல்ல தயிராகவே தருகிறேன் விலை என்ன கொடுப்பீர்கள்?'' என கேட்டாள்.

ss

"என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றார் சீடர். "அப்படியானால் எனக்கு முக்தியைக் கொடுங்கள்'' என்றாள் தயிர்க்காரப் பெண். "இதோ தருகிறேன்'' என்ற சீடர் அதை அப்படியே எழுதி. அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தார். பெண்ணும் தயிரைக் கொடுத்தாள்.

அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்கள், "ஏமாந்துவிட்டாயே. அவர் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்'' என்று தயிர்க்காரப் பெண்ணை கேலி செய்தனர்.

அவர்கள் சொன்ன எதையும் தயிர்க்காரப் பெண் பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்தில் அந்தப் பெண் இறந்துவிட்டாள். எமதூதர் களும், விஷ்ணுதூதர்களும் வந்தனர். "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இவள் சிறிதளவுகூட புண்ணியம் செய்ததில்லை....'' என்றனர் எமதூதர்கள்.

"அதைப் பற்றியெல்லாம் கேள்வியே இல்லை. வல்லபரின் சீடர் இவளுக்கு முக்தி சீட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். விலகிப் போங்கள்...'' என்று விஷ்ணுதூதர்கள் சொல்லி, தயிர்க்காரப் பெண்ணின் ஆன்மாவை வைகுண்டத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அதேசமயம் சீடர் கொண்டு வந்த தயிரை வைத்து பூஜையை முடித்த வல்லபர், "தயிருக்கு என்ன விலை கொடுத்தாய்?'' என கேட்டார். "குருநாதா அந்த தயிர்க்காரப் பெண் முக்தி கேட்டாள். தங்கள் பெயரால் "தந்தேன்' என்று எழுதிக் கொடுத்துவிட்டு தயிரை வாங்கி வந்தேன். அதுதான் விலை'' என்றார் சீடர்.

அதைக்கேட்ட குருநாதர், "அடடா, என்ன இப்படி செய்துவிட்டாய்? அவள் செய்த உதவிக்கு, அந்த தயிருக்கு விலையாக நீ கொடுத் தது மிகவும் குறைவு; அவள் தந்த தயிருக்கு கிருஷ்ண பக்தியை அல்லவா விலையாகக் கொடுத்திருக்கவேண்டும்'' என்றார்.

"உண்மைதான் குருநாதர். ஆனால் அவள் பக்தியைக் கேட்கவில்லையே. கேட்டிருந்தால் தந்திருப்பேன்'' என்றார் சீடர். மகான்கள் மகிமைகளை மட்டும் விளக்குவதில்லை. பக்திக்கு அவர்கள் கொடுக்கின்ற முக்கியத் துவம்தான் மேலானது.

ss

சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்றுகொண்டிருந்தார். ஒருசமயம் அவர் காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையிலிருந்து மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இவ்விதம் சந்நியாசி செய்ததை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். கண் விழித்தபிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்துவிட்டது. நீண்ட நேரம் கழிந்தது. சந்நியாசி தியானம் கலைந்து எழுந்தார். மாடு மேய்க்கும் சிறுவன் அவர் அருகில் சென்றான்.

"சுவாமி! நீங்கள் இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டான். அதற்குத் துறவி, "நான் இறைவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்துகொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதைக்கேட்ட சிறுவன், இந்த ஆற்றில் நீராடி இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்கமுடியும் போலும்! சந்நியாசி

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.'

-திருவள்ளுவர்

அறத்தின் இயல்போடு நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலை யானவராகத் திகழ்பவர் இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான் முதன்மையானவர்.

மகான் வல்லபாச்சாரியார் பூஜை செய்யத் துவங்கிய நேரம் சிறிதளவு தயிர் தேவைப்பட்டது. அதையறிந்த மகானின் சீடர், அருகிலுள்ள தயிர் விற்கும் பெண்மணி யிடம் போய் தயிர்கேட்டார். வல்லபரின் தவ ஆற்றல் மற்றும் அவரது சீடர்களைப் பற்றி தயிர் விற்கும் பெண்ணிற்கு நன்றாகவே தெரியும். ஆகவே சீடரிடம், "நல்ல தயிராகவே தருகிறேன் விலை என்ன கொடுப்பீர்கள்?'' என கேட்டாள்.

ss

"என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றார் சீடர். "அப்படியானால் எனக்கு முக்தியைக் கொடுங்கள்'' என்றாள் தயிர்க்காரப் பெண். "இதோ தருகிறேன்'' என்ற சீடர் அதை அப்படியே எழுதி. அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தார். பெண்ணும் தயிரைக் கொடுத்தாள்.

அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்கள், "ஏமாந்துவிட்டாயே. அவர் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்'' என்று தயிர்க்காரப் பெண்ணை கேலி செய்தனர்.

அவர்கள் சொன்ன எதையும் தயிர்க்காரப் பெண் பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்தில் அந்தப் பெண் இறந்துவிட்டாள். எமதூதர் களும், விஷ்ணுதூதர்களும் வந்தனர். "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இவள் சிறிதளவுகூட புண்ணியம் செய்ததில்லை....'' என்றனர் எமதூதர்கள்.

"அதைப் பற்றியெல்லாம் கேள்வியே இல்லை. வல்லபரின் சீடர் இவளுக்கு முக்தி சீட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். விலகிப் போங்கள்...'' என்று விஷ்ணுதூதர்கள் சொல்லி, தயிர்க்காரப் பெண்ணின் ஆன்மாவை வைகுண்டத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அதேசமயம் சீடர் கொண்டு வந்த தயிரை வைத்து பூஜையை முடித்த வல்லபர், "தயிருக்கு என்ன விலை கொடுத்தாய்?'' என கேட்டார். "குருநாதா அந்த தயிர்க்காரப் பெண் முக்தி கேட்டாள். தங்கள் பெயரால் "தந்தேன்' என்று எழுதிக் கொடுத்துவிட்டு தயிரை வாங்கி வந்தேன். அதுதான் விலை'' என்றார் சீடர்.

அதைக்கேட்ட குருநாதர், "அடடா, என்ன இப்படி செய்துவிட்டாய்? அவள் செய்த உதவிக்கு, அந்த தயிருக்கு விலையாக நீ கொடுத் தது மிகவும் குறைவு; அவள் தந்த தயிருக்கு கிருஷ்ண பக்தியை அல்லவா விலையாகக் கொடுத்திருக்கவேண்டும்'' என்றார்.

"உண்மைதான் குருநாதர். ஆனால் அவள் பக்தியைக் கேட்கவில்லையே. கேட்டிருந்தால் தந்திருப்பேன்'' என்றார் சீடர். மகான்கள் மகிமைகளை மட்டும் விளக்குவதில்லை. பக்திக்கு அவர்கள் கொடுக்கின்ற முக்கியத் துவம்தான் மேலானது.

ss

சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்றுகொண்டிருந்தார். ஒருசமயம் அவர் காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையிலிருந்து மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இவ்விதம் சந்நியாசி செய்ததை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். கண் விழித்தபிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்துவிட்டது. நீண்ட நேரம் கழிந்தது. சந்நியாசி தியானம் கலைந்து எழுந்தார். மாடு மேய்க்கும் சிறுவன் அவர் அருகில் சென்றான்.

"சுவாமி! நீங்கள் இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டான். அதற்குத் துறவி, "நான் இறைவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்துகொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதைக்கேட்ட சிறுவன், இந்த ஆற்றில் நீராடி இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்கமுடியும் போலும்! சந்நியாசி அதைத்தானே செய்தார். ஏன் நாமும் அவரைப் போலவே இறைவனைப் பார்க்க முயற்சிக்கக்கூடாது என்று நினைத்தான்.

உடனடியாக ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, "இறைவனே! நீ என் முன்னால் தோன்றி எனக்கு காட்சி தரவேண்டும்' என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்துடன், அவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்வதைக்கண்ட கடவுளும் சிறுவன் முன்னால் தோன்றினார்.

ss

அதற்குமுன் சிறுவன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் அவரிடம், "நீங்கள் யார்?'' என்று வினவினான். இறைவன், "நான்தான் இறைவன், நீ என்னைப் பார்க்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா! அதனால்தான் இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்'' என்றார்.

சிறுவன், "நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? ஏற்கெனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, "இவர்தான் இறைவன்!' என்று உங்களச் சுட்டிக் காட்டிக் கூறினால் தான் நம்புவேன்!'' என்றான்.

"அப்படியா? என்னை இதற்குமுன் பார்த்த யாரையாவது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். சிறுவன், "இங்கு சற்றுமுன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். அவர் இதற்குள் நீண்ட தூரம் சென்றிருக்க மாட்டார். நான் அவரைத் தேடிப்பிடித்து இங்கு அழைத்துவருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருக்கவேண்டும்'' என்றான்.

அதற்கு இறைவனும், "சரியப்பா. நீ கூறியபடியே அந்தத் துறவியை இங்கு அழைத்து வா! நான் காத்திருக்கிறேன்'' என்றார்.

அவரிடம் சிறுவன், "நான் இங்கிருந்து சென்றதும் நீங்கள் போய்விட்டால் என்ன செய்வது? எனவே நான் உங்களை மரத்தில் கயிற்றால் கட்டிவிட்டு பிறகு சென்று துறவியை அழைத்துவருகிறேன்'' என்றான்.

சிறுவன் நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அவற்றைக்கொண்டு இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான். பிறகு துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான். துறவியை நெருங்கிய அவன், "சுவாமி! நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து "இறைவனே! நீ என் முன்னால் தரிசனம் தரவேண்டும்' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி "நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால் இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்' என்று கூறினார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீங்கள் வந்து அவர் இறைவனா என்று சொல்லுங்கள்'' என்று கூறி அழைத்தான்.

ss

அதிர்ந்துபோன துறவி சிறுவனுடன் சென்றார். சிறுவன் கட்டப்பட்டிருந்த இறைவனைச் சுட்டிக்காட்டி துறவியிடம், "அதோ பாருங்கள்! நான் இவரைத்தான் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா!'' என்று கேட்டான். துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை. எனவே அவர் சிறுவனிடம், "நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே!'' என்றார். அதற்கு சிறுவன், "சுவாமி, என்ன சொல்கிறீர்கள்? நன்றாகப் பாருங்கள்! நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே!'' என்றான். துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை.

அப்போது மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன், "சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன் நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்கு தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன்'' என்றார்.

அதைக்கேட்ட சிறுவன், "இறைவனே! இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான் எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே இவருக்கும் நீங்கள் தரிசனம் கொடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டான். சிறுவனின் பிரார்த்தனைய ஏற்று இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.

இறை நம்பிக்கையுடன்கூடிய தன்னம்பிக்கை தெளிவு, துணிச்சல் இம்மூன்றும்தான் ஒருவரை எப்போதும் காப்பாற்றி நல்வழி நடத்திச் செல்லும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம் தான் திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் திருக்கோவில்.

மூலவர்: சாரநாதப் பெருமாள்.

தாயார்: சாரநாயகித் தாயார்.

உற்சவர்: சாரநாதர்

ஊர்: திருச்சேறை.

தீர்த்தம்: சார புஷ்கரணி

தலவிருட்சம்: செண்பகம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆழ்வார் களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலங்களை திவ்ய தேசங்கள் என்பர். அந்த வகையிலே 108 திவ்ய தேசங்களில் 15-ஆவது திவ்ய க்ஷேத்திரமாகவும், காவிரி மற்றும் மார்க்கண்டேயரால் வழிபடப்பட்டதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று பதிகம் பாடப்பட்ட பெருமை யுடன், காவிரி தென்கரைத் தலமாகவும் சிறந்து விளங்குகின்ற ஆலயம்தான் திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில்

"பைவிரியும் வரியரவில் படுகடலுள்

துயிலமர்ந்த பண்பா என்றும்

மைவிரியும் மணிவரைபோல் மாயவனே

என்றென்றும் வண்டார்நீலம்

செய்வரியும் தண்சேறையெம் பெருமான்

திருவடியைச் சிந்தித்தேற்கு, என்

ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க்

காளாமென் அன்புதானே

-திருமங்கையாழ்வார்.

திருச்சேறை சைவமும் வைணவமும் கைகோர்த்த புண்ணிய ஸ்தலம் இது. இங்கே சார பரமேஸ்வரர் கோவிலும் உள்ளது. சாரநாதப் பெருமாள் கோவிலும் உள்ளது.

தலகுறிப்பு

விஜயநகரப் பேரரசு ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் தஞ்சாவூரை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னர் மன்னார்குடியிலுள்ள ராஜகோபால சுவாமி கோவிலின் திருப்பணிக்காக தன் அமைச்சர் நரசபூபாலன் பொறுப்பில் வண்டிகள் நிறைய கருங்கற்களை அனுப்பி வைத்தார். அந்த வண்டிகள் இந்தத் தலத்தின் வழியாகச் சென்றன. அவற்றை அழைத் துச் சென்ற நரசபூபாலன் என்பவர் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒரு கல்லை மன்னருக்குத் தெரியாமல் இந்த தலத்தின் திருப்பணிக்காக இறக்கி வைத்தார். நரசபூபாலன் திருச்சேறை பெருமாளின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னருக்கு விஷயம் தெரிந்தது. அதனால் நரசபூபாலன் நடுநடுங்கிப் போனார். சாரதநாதப் பெருமாளை சரணடைந்தார். மணவாள நாயக்க மன்னர் இத்தலத்திற்கு வந்து கோவிலைக் கண்டார். அப்போது அங்கே திருச்சேறையில் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகக் காட்சி கொடுத்தார் பெருமாள். இதில் நெக்குருகிப் போன மன்னன் இந்தக் கோவிலுக்கும் திருப்பணிகள் மேற்கொண்டான் என்கிறது தலபுராணம். இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியுடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவேதான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப் பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.

தலவரலாறு

வேதத்தை நமக்கு அருளியவர் பெருமாள். வேதத்தின் மூலம்தான் நாம் முன்ஜென்ம பாவத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறோம். பகவானே நேரடியாக காணத்துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம்காணமுடியும். அதுதான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. அப்படிப்பட்ட வேதங்களுக்குப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதால், ஆதிசேஷன் குடையின்கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டி ருந்த மஹாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து, "பிரளய காலம் வருகிறது. நீ உடனே பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து, அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய்'' என கட்டளை யிட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்த வண்ணம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால், "பூலோக முக்கிய தலங்களில் ஒன்றான திருச்சேறை சென்று, சார புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து செய்'' எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களைப் பாதுகாத்தார். ஒருமுறை காவிரித்தாய், கங்கைக்கு இணை யான பெருமை தனக்கும் வேண்டும் எனக் கேட்டு, இத்தல சார புஷ்கரணியில் மேற்குக் கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவமிருந்தாள். மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரிதாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி, "எப்போதும் இதேகோலத்தில் இங்கு காட்சிதரவேண்டும் கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்'' என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடதுபக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். மார்க் கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலியப்பன் கோவி லில் மார்கண்டேயரின் மகள் பூதேவியை சிறு வயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர், "இவள் சிறுபெண், இவளுக்கு சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்துகொள்ள முடியும்?'' என்கிறார். அதற்குப் பெருமாள், "இவள் உப்பே போடாமல் சமைத்தாலும் அதை நான் திருப்தியாக ஏற்றுக்கொள்வேன்'' என்று கூறி, பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார்.

ssd

சிறப்பம்சங்கள்

* தனக்குப் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமிதான் திருச் சேறை.

ப் பத்து நாட்கள் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா, இங்கு நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானதாகும். 10-ஆம் நாளன்று தேரோட்டம். பெருமாள் ஐந்து தேவியருடன் காவிரித்தாய்க்குக் காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால், இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமங்கையாழ்வார் இத்தலத்தைப்பற்றி பாடிய பாசுரங்களை, ஆலயப் பட்டாச்சாரியார்கள் ஒருங்கிணைந்து பெருமாளைப் போற்றிப் பாடுவதைக் காண்பதற்கு கொடுத்து வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் உள்ளூர் வாசிகள்.

* அனுதினமும் ஆறுகால பூஜைகள் நடப்பதுடன் கீழ்கண்ட திருவிழாக்களும் வைணவ முறைப்படி நடக்கிறது.

சித்திரை- ராமானுஜர் உற்சவம்.

வைகாசி- வசந்த உற்சவம்.

ஆடி- ஜேஸ்டாபிக்ஷேகம்.

ஆவணி- பவித்ர உற்சவம்.

புரட்டாசி- நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனி.

ஐப்பசி- மணவாள மாமுனிகள் உற்சவம்.

கார்த்திகை- திருக்கார்த்திகை தீபத் திருவிழா.

மார்கழி- ராப்பத்து- பகல்பத்து, சொர்க்கவாசல் திறப்பு.

தை- தைப்பூசத் தேர்த்திருவிழா, பஞ்ச லட்சுமி தாயாருடன் பெருமாள் காட்சி தருதல்.

வருடாவருடம் தைப்பூசத்தன்று தேர்த்திருவிழா நடைபெற்றாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம், அச்சமயம் வருகின்ற தைப்பூசமானது மகாமசத்திற்கு இணையானது என்று பெருமிதத்துடன் ஆலய பட்டாச்சாரியார்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தென்னிந்திய கட்டடக்கலை வடிவமைப்பில் தஞ்சை நாயக்க மன்னர் களால் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் சார புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடினால் 108 முறை காவிரியில் நீராடிய புண்ணியம கிட்டும் என்கின்றனர் ஆச்சாரியர்கள்.

திருக்கோவில் அமைப்பு

காவிரியையும் அதன் கிளை நதியான கொள்ளிடத்தையும் ஒரு மாலையாகக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் எப்படி அருளாட்சி புரிகிறாரோ, அதேபோல் இத்திருத்தலத்தில் சாரநாதப் பெருமாள் காவிரியின் கிளை நதிகளான முடிகொண்டான் ஆற்றிறகும், குடமுருட்டி ஆற்றிற்கும் இடையில் திருக்கோவில் கொண்டுள்ளார்.

சாரக்ஷேத்திரம் எனப்படும் திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் பெரிய பரப்பளவில், கிழக்கு நோக்கிய ஏழுநிலை ராஜகோபுரத்திற்கு முன்புறம் சார புஷ்கரணி தீர்த்தக்குளம் ஒரு குறிப்பிட்ட சதுரத்தில் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தீர்த்தக்குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்த ஆஞ்சனேயர் அருள்கிறார். மேற்குக் கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோவில் நீளம் 380 அடி, அகலம் 234 அடி, 90 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் மூன்று பிராகாரங்களை கொண்ட அமைப்பில் உள்ளது. கோவில் உள் பிராகாரத்தில் சீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், வனவாசராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாபா, ருக்மிணி, நரசிம்மமூர்த்தி பால சாரநாதர் சந்நிதிகள் உள்ளன. தல விருட்சம் செணபகமரம் உள்ளது.

கருவறையில் மூலவராக சாரநாதம் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தாயாரின் திருநாம் சாரநாயகி பெருமாளுக்கு வலப்புறம் காவிரி அன்னையும், தென்புறம் மார்க்கண்டேய முனிவரும் சிலாரூபத்தில் காணப்படுகின்றனர். உற்சவர் சாரநாதப் பெருமாள் பூமிதேவி, நீளாதேவி, சாரநாயகி, ஸ்ரீதேவி, ஆண்டாள் சகிதம்காட்சியளிக்கிறார். அதனால் "பஞ்ச லட்சுமி சமேத பெருமாள்' எனவும் அழைக்கப் படுகிறார். இவர்களுக்கு முன்னால் மாமதலைப்பிரான், தவழும் திருக்கோலத்தில் உற்சவராய்த் திகழ்கிறார்.

வாழ்க்கையில் பெருமையடையவும், தடங்கல்கள் விலகவும், நினைத்ததை சாதிக்க வும், சொத்து சுகம் கைவிட்டுப் போகாமலிருக்கவும், வழக்கு விஷயங்களில சாதகமான சூழ்நிலை ஏற்படவும், பதவி உயர்வு கிடைக் காமல் தடைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த முட்டுக்கட்டைகள் விலகவும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும். உறவினர்களால் எந்தவித அபகீர்த்தி ஏற்படாமல் இருக்கவும் "கங்கையிற் புனிதமாய காவிரி' என்று அருள்புரிந்த திருச்சேறை சாரநாதனை வணங்கினால் சகல தோஷமகற்றி சந்தோஷ வாழ்வினை அளிப்பான் என்பதில் ஐயமில்லை. புண்ணிய மாதமான புரட்டாசி சனியன்று வழிபடுவோம் வளம் பெறுவோம்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக் கும்.

ஆலயத் தொடர்ப்புக்கு: செயல்

அலுவலர், 0435-2486001. சாரநாதப் பெருமாள்

திருக்கேவில், திருச்சேறை (அஞ்சல்), கும்பகோணம் (வட்டம்). தஞ்சை மாவட்டம்- 612 605. அலைபேசி: 94441 04374.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சேறை உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலம் வழியாகச் செல்லும் பஸ் வசதி நிறைய உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா

om011023
இதையும் படியுங்கள்
Subscribe