ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் சூரிய உதயம் காண்கிறோம். மாலையில் சூரியன் அஸ்தமனமாகிறது. அப்படியானால் சூரியன் காலையில் கிழக்கில் உதித்து நகர்ந்துகொண்டே போய், மாலைநேரத்தில் மேற்கில் மறைகிறது. இது தினமும் நம் கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் நகர்வு. இதுபோல மற்ற கிரகங்களும் ஒரே இடத்தில் ஆணி அடித்தாற்போல் இல்லாமல் நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நகர்வினை கோட்சாரம் என்பர்.
ஒரு ராசியைக் கடக்க சூரியன் ஒரு மாதம், சந்திரன் இரண்டேகால் நாட்கள், செவ்வாய் ஒன்றரை மாதம், புதன் 28 நாட்கள், வியாழன் எனும் குரு ஒரு வருடம், சுக்கிரன் ஒரு மாதம், சனி இரண்டரை வருடங்கள், ராகு- கேது ஒன்றரை வருடம் என எடுத்துக்கொள்வர். தற்போதைய கோட்சாரத்தில் குருபகவான் மகர ராசியோடு அல்லாடிவிட்டு இப்போது நேர்சீராக கும்பம் வந்து சேர்ந்துள்ளார்.
குருப்பெயர்ச்சிக் கணக்கு வாக்கியப்படி: 2021 ஐப்பசி- 27, நவம்பர்- 13 அன்று குரு கும்பம் செல்கிறார். 2022 சித்திரை- 1, ஏப்ரல் 14 அன்று மீன ராசிக்கு மாறிவிடுவார்.
திருக்கணிதப்படி: 2021 கார்த்திகை- 5, நவம்பர்- 20 அன்று குரு கும்பம் செல்கிறார். 2022 பங்குனி-30, ஏப்ரல்- 13 அன்று மீன ராசிக்கு மாறிவிடுவார்.
குரு பற்றிய விவரம்
எல்லா கிரகங்களிலும் குரு எனும் கிரகமே அதிக சுபத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஒரு ஜாதகரின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் செழிப்புக்கும் குருவே காரணமாவார். குரு பார்வை கொழிக்கும். பார்த்த இடம் கோடி நன்மைபெறும். எனவேதான் லக்னம் அல்லது ராசியை குரு பார்க்கப் பிறந்த வர்கள் ஏதோ ஒருவகையில் மேன்மையடைந்து விடுவர். குரு பார்க்க எந்தவித தோஷமும் நிவர்த்தியாகிவிடும்.
குருவுக்கு தனுசு, மீனம் ஆகியவை ஆட்சிவீடுகள். ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்கு குரு செல்லும்போது, முதல் 12 நாட்கள் புஷ்கரம் எனப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நதிகளில் புஷ்கரம் எனும் விழா நடக்கும். குரு பகவான் 12 ராசிகளையும் சுற்றி வருவதை வியாழ வட்டம் என்பர்.
2021, நவம்பரில் குரு கும்ப ராசிக்கு வந்துள்ளார். பிறந்த ஜாதகத்தில் யாருக்கெல்லாம் குரு கும்ப ராசியில் இருக்கிறாரோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய- புதுமையான- நன்மையான- இதுவரையில் கண்டிராத மாற்றத்தை சந்திப்பார்கள்.
குரு கடகத்தில் உச்சமும் மகரத்தில் நீசமும் அடைவார். இவரின் தசா காலம் 16 ஆண்டுகள். இவரது நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. நிறம்- மஞ்சள்; அதிதேவதை- பிரம்மா; வாகனம்- யானை; தானியம்- கொண்டைக்கடலை; உலோகம்- தங்கம்; மலர்- முல்லை; ஆசனம்- செவ்வகம்; திசை- வடக்கு; ரத்தினம்- க
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் சூரிய உதயம் காண்கிறோம். மாலையில் சூரியன் அஸ்தமனமாகிறது. அப்படியானால் சூரியன் காலையில் கிழக்கில் உதித்து நகர்ந்துகொண்டே போய், மாலைநேரத்தில் மேற்கில் மறைகிறது. இது தினமும் நம் கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் நகர்வு. இதுபோல மற்ற கிரகங்களும் ஒரே இடத்தில் ஆணி அடித்தாற்போல் இல்லாமல் நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நகர்வினை கோட்சாரம் என்பர்.
ஒரு ராசியைக் கடக்க சூரியன் ஒரு மாதம், சந்திரன் இரண்டேகால் நாட்கள், செவ்வாய் ஒன்றரை மாதம், புதன் 28 நாட்கள், வியாழன் எனும் குரு ஒரு வருடம், சுக்கிரன் ஒரு மாதம், சனி இரண்டரை வருடங்கள், ராகு- கேது ஒன்றரை வருடம் என எடுத்துக்கொள்வர். தற்போதைய கோட்சாரத்தில் குருபகவான் மகர ராசியோடு அல்லாடிவிட்டு இப்போது நேர்சீராக கும்பம் வந்து சேர்ந்துள்ளார்.
குருப்பெயர்ச்சிக் கணக்கு வாக்கியப்படி: 2021 ஐப்பசி- 27, நவம்பர்- 13 அன்று குரு கும்பம் செல்கிறார். 2022 சித்திரை- 1, ஏப்ரல் 14 அன்று மீன ராசிக்கு மாறிவிடுவார்.
திருக்கணிதப்படி: 2021 கார்த்திகை- 5, நவம்பர்- 20 அன்று குரு கும்பம் செல்கிறார். 2022 பங்குனி-30, ஏப்ரல்- 13 அன்று மீன ராசிக்கு மாறிவிடுவார்.
குரு பற்றிய விவரம்
எல்லா கிரகங்களிலும் குரு எனும் கிரகமே அதிக சுபத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஒரு ஜாதகரின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் செழிப்புக்கும் குருவே காரணமாவார். குரு பார்வை கொழிக்கும். பார்த்த இடம் கோடி நன்மைபெறும். எனவேதான் லக்னம் அல்லது ராசியை குரு பார்க்கப் பிறந்த வர்கள் ஏதோ ஒருவகையில் மேன்மையடைந்து விடுவர். குரு பார்க்க எந்தவித தோஷமும் நிவர்த்தியாகிவிடும்.
குருவுக்கு தனுசு, மீனம் ஆகியவை ஆட்சிவீடுகள். ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்கு குரு செல்லும்போது, முதல் 12 நாட்கள் புஷ்கரம் எனப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நதிகளில் புஷ்கரம் எனும் விழா நடக்கும். குரு பகவான் 12 ராசிகளையும் சுற்றி வருவதை வியாழ வட்டம் என்பர்.
2021, நவம்பரில் குரு கும்ப ராசிக்கு வந்துள்ளார். பிறந்த ஜாதகத்தில் யாருக்கெல்லாம் குரு கும்ப ராசியில் இருக்கிறாரோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய- புதுமையான- நன்மையான- இதுவரையில் கண்டிராத மாற்றத்தை சந்திப்பார்கள்.
குரு கடகத்தில் உச்சமும் மகரத்தில் நீசமும் அடைவார். இவரின் தசா காலம் 16 ஆண்டுகள். இவரது நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. நிறம்- மஞ்சள்; அதிதேவதை- பிரம்மா; வாகனம்- யானை; தானியம்- கொண்டைக்கடலை; உலோகம்- தங்கம்; மலர்- முல்லை; ஆசனம்- செவ்வகம்; திசை- வடக்கு; ரத்தினம்- கனகபுஷ்பராகம்; பறவை- அன்னம்.
குரு காயத்ரி
வ்ருஷ த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு துதி
தேவனாம் ச ரிஷீனாம் ச
குரு காஞ்சன சந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேஷம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
இப்போது குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இவர் நீண்டகாலம் மகரம், கும்பம் என இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என்று மாறிமாறி சஞ்சாரம் செய்தார். இப்போதைக்கு கும்ப ராசியில் நிலைகொண்டுள்ளார். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் மட்டுமே கும்ப ராசியில் குரு இருப்பார். பின்னர் மீன ராசிக்குச் சென்றுவிடுவார்.
கும்ப குருவின் பொதுப்பலன்கள்
காலபுருஷ தத்துவப்படி கும்ப ராசி என்பது 11-ஆம் இடமாகும். இது காலபுருஷனின் லாபம் மற்றும் பாதக ஸ்தானமாகும். அதாவது ஒரு நன்மை கிடைக்கும்போது "நங்'கென்று ஒரு குட்டும் கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சியின்போது மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அது வரும் வழி சற்று நெருடலாக அமையும். அரசியல்வாதிகளில் பலர் வழக்கமான குறுக்குவழிகளைப் பின்பற்றுவர். பொன் நகைகளில் அதிக அளவு செம்பு கலக்கப்படும். பல மடாதிபதிகள்- குறிப்பாக செல்வம் நிறைந்த மடத்துத் தலைவர்கள், ஒன்று நோயின் பிடியில் சிக்குவர் அல்லது ஏதேனும் விபத்தை சந்திக்கக்கூடும். நிலம் விஷயமாக பல ரகசியங்கள் வெளிப்படும். சமையல் சம்பந்தமான ஏதோவொரு விஷயம் வெளிவந்து மக்களைக் கலவரப்படுத்தக்கூடும். நிறைய திருமணங்கள் நடக்கும். எல்லாவற்றிலும் ஒருவித கலப்புத் தன்மை இருக்கும். மறுமணங்கள் நடக்கும். இந்த குருப்பெயர்ச்சியில் பலரது எண்ணங்களில் சற்றே கோணல் தன்மை இருக்கும். பிற மதத்தவர்களுடன் கூட்டணி அமைத்து தங்கள் காரியங்களைச் செய்வர். மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ- பலருடன் இணைந்து உழைக்கும் சூழ்நிலை உருவாகும். பல சேவை நிறுவனங்கள் மக்களுக்குத் தொண்டாற்ற முன்வரும். 11-ஆமிடம் என்பது பல ஆட்கள் கூடியிருக்கும் செயல், தொழிலைக் குறிக்கும். அதனால்தான் 11-ஆமிடத்தை அரசியல் எனும் கூட்டமான செயலைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. குரு 11-ல் இருக்கும்போது இவ்வித செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். அவர் இருக்கும் கும்ப ராசியிலுள்ள அவிட்ட நட்சத்திர சார செவ்வாய், இளம் வயதினரை கூடிநின்று வேலை செய்யத் தூண்டுவார். சதய நட்சத்திர ராகு, வேற்றின மக்களைச் சேர்த்து சேவைசெய்யக் கூறுவார். பூரட்டாதி நட்சத்திர குரு, ஆன்மிகவாதிகளை அணைத்துச் செல்லச் செய்வார். எனவே, கும்ப குரு நிறைய மக்களின் சேர்ந்த ஆதரவோடு ஆசைகளை நிறைவேற்றுவார். இனி குருவின் பார்வைப் பலன்களைக் காணலாம்.
ஐந்தாம் பார்வை
குரு தனது ஐந்தாம் பார்வையால் காலபுருஷனின் மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் மக்களுக்கு வாழ்வின்மீது ஒரு பிடிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் சிறுசிறு இடைவெளி ஏற்படும். பல இளைய சகோதரர்களுக்குத் திருமணம் நடக்கும். நிறைய மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி வேலை கிடைக்கும். இதனால் மக்களுக்கு மனதில் ஒரு சக்தி பிறக்கும். சிறுதூர வாகன வசதி மேம்படும். பல ஜாதகர்கள் ஒப்பந்தம், குத்தகை எடுப்பார்கள். வீட்டு முதலீடு அதிகரிக்கும். நூல்கள் நிறைய அச்சிடப்படும். நூலகங்கள் புதுப்பிக்கப்படும். மனிதர்களின் நுண்ணறிவு நம்பமுடியாத அளவில் இருக்கும். அலைபேசி விற்பனை பெருகும். மொழித் திறமை பளிச்சிடும். சகோதரர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்படுவதால், ஒருவருக்கொருவர் தோழனாக மாறி உதவிசெய்வர்.
ஏழாம் பார்வை
கும்ப குரு தனது ஏழாம் பார்வையால் காலபுருஷனின் ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். இது பூர்வபுண்ணிய வீடு. எனவே பூர்வீகத் தொழில் செய்பவர்களின் நிலை மேன்மை பெறும். பல ஜாதகர்கள் குழந்தை பாக்கியம் பெறுவர். கலைத்தொழில் பரிமளிக்கும். காதல் வெற்றி பெறும். பங்கு வர்த்தகம் ஓங்கும். பொழுதுபோக்கு இன்பம் தரும். தந்தையின் பூர்வீக வீடு கிடைக்கும். அரசு, பழமையான வழிபாடு செய்பவர்கள்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். அரசு சார்பில் பழமையான கோவில்கள் புனரமைக்கப்படும். 5-ஆமிடம் என்பது ஆரோக்கிய ஸ்தானம். இதனை குரு பார்ப்பதால் மக்களின் ஆரோக்கியம் அதிக மேன்மையடையும். இதுவரையில் இருந்துவந்த நோய்த் தொந்தரவுகள் விலகும். குரு பார்வை, ஆட்சி செய்வோருக்கு பழமையான விஷயங்களில் இருந்துவந்த நெருக்கடிகளை- கெட்ட பெயரை நீக்கி, நல்ல பெயர் தந்து நல்லாட்சி செய்ய வைக்கும். குரு சூரியன் வீட்டைப் பார்க்கும்போது ஆட்சியில் இருப்போரை மேன்மையடையச் செய்வார்.
ஒன்பதாம் பார்வை
கும்ப குரு தனது ஒன்பதாம் பார்வையால் காலபுருஷனின் ஏழாம் வீட்டைப் பார்வையிடுகிறார். பல திருமணங்களை நடத்திவைப்பார். வியாபாரம் பெருகும். வியாபாரத்தில் வேற்று மதத்தவர், வெளிநாட்டினர் என- அவர்களுடன் கூட்டுசேர்ந்து வணிகம் வளம்பெறும். இந்த கூட்டுச் செயலில் சற்று கள்ளத்தனம் கலந்திருக்கும் ஆன்மிக சுற்றுலா முன்னேறும். தொழில்கள் விருத்தியாகி மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். விவாகரத்து வழக்குகள் ரத்தாகி மணவாழ்வு தொடரும். இன்ஷூரன்ஸ் சம்பந்த வழக்கொன்று புதிய சட்டத்தை உருவாக்கும். மக்கள் வெறுக்கும் மோசமான வழக்குகள் நீதிமன்றத்தின் கடுமையான தண்டனையின்மூலம் படிப்பினை தரும். ஒரு சந்நியாசியின் சொத்துகள் சட்டப்படி அரசை வந்துசேரும் அல்லது மடாதிபதி மடம் சார்ந்த ஆஸ்தியை விரயம் செய்யவேண்டி வரும்.
பொதுப் பலன்கள்
குருபகவான் கும்பம் எனும் காற்று ராசியில் உள்ளார். அவர் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளைப் பார்வையிடுகிறார். மிதுனம் என்பது காற்று ராசி. சிம்மம் நெருப்பு ராசி. துலாம் காற்று ராசி. இதில் சிம்ம சூரியனுக்கும் குருவுக்கும் நன்றாக இணங்கிப் போய்விடும். சூரியனார் கோவிலில் சூரியன், சாயாதேவி, உஷாதேவி எதிரில் குருபகவான் அருள்பாலித்துக் கொண்டிருப்பார். எனவே குரு பார்வை பட்டவுடன் சூரிய நெருப்பு அடக்கி வாசிக்கும். அதனால் சிம்ம ராசியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். அரசுமூலம் மக்களுக்கு நன்மையே தருவார். இந்த மிதுனம், துலா ராசியைப் பார்ப்பதுதான் சற்று யோசிக்கவைக்கிறது. இரண்டும் காற்று ராசிகள். அதுமட்டுமல்லாது இரண்டிலும் உள்ள நட்சத்திர சாரநாதர்கள் ஒன்றுபோலவே உள்ளனர். மிதுன ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் எனும் நட்சத்திரங்கள் உள்ளன. அவை செவ்வாய், ராகு, குரு சாரம் வாங்கியுள்ளன. துலா ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் எனும் செவ்வாய், ராகு, குரு சார நட்சத்திரங்கள் உள்ளன.
குருவுக்கு பெருக்கும் குணமுண்டு. இவர் பார்க்கும் காற்று ராசியிலுள்ள செவ்வாய் எனும் அசுப காரகத்தையும், ராகு எனும் விஷக்கிருமி காரகத்தையும் பெருக்குவார் என தெரிகிறது. ஆயினும் குரு சாரமும் உடனிருப்பதால், மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் புரிகிறது. மேலும் குரு காலபுருஷனின் ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் ஆரோக்கியம் மேன்மையடையும் என்பது நிச்சயம்.
குரு இருக்கும் வீட்டிலும் செவ்வாய், ராகு, குரு சார நட்சத்திரங்களான அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகியவை இருப்பது கவனிக்கத்தக்கது.
எனவே இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான் 3-ஆமிட ராகுவோடு- அதுவும் காற்று ராசி ராகுவோடு சம்பந்தம் பெறுகிறார் என்பதை கவனியுங்கள். இதனால் பெருக்கத்திற்குரிய குரு, விஷப்பூச்சிகளைக் குறிக்கும் ராகுவின் காரத்தன்மையைப் பெருக்குவார் என்று அறியலாம். அதுவும் காற்றின்மூலம் பெருகுமென்று தெரிகிறது. ஆனால் முன்புபோல இது அதிக தீவிரமாக இருக்காது. ஏனெனில் குரு சார நட்சத்திரங்கள் உடனிருப்பதால் இந்த காற்றுப் பரவல் கட்டுக்குள் இருக்கும். அந்தக்காலத்தில் சமையலறையில் அங்ஙனக் குழி எனும் கைகழுவும்- காய்கறி கழுவும்- தண்ணீர் ஊற்றமட்டும் ஒரு சிறிய இடம் வைத்திருப்பர். இரவானவுடன் ஒரு கல்லை வைத்து அந்த வழியை அடைத்துவிடுவர். ஏனெனில் அந்தவழியே பூச்சிகள் வரக்கூடாது என்பதற்காக. (அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் பாம்பு என்று உச்சரிக்கமாட்டார்கள். அதனை பூச்சி என்றே குறிப்பிடுவர்.) பின்னர் நாகரிகம் பெருகப்பெருக சல்லடை, கம்பி போன்றவற்றைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆக, எப்போதும் மக்கள் பூச்சிகளிடமிருந்து காபந்து செய்ய மறைந்து வாழ்ந்தனர். இப்போதும் அதேவழியைப் பின்பற்றுங்கள். கதவை மூடிக்கொண்டு வீட்டிற்குள் இருந்து பழகுங்கள். நல்லவேளையாக இந்த கும்ப குரு சுமார் ஐந்து மாதங்கள்தான் கும்பத்தில் உள்ளார். காற்றின் ராகுவைப் பெருக்கும் விதத்தில் அமைந்திருக்கிறார். ஐந்து மாதங்கள்தானே... அனைவரும் வீட்டிற்குள் பத்திரமாக- பாதுகாப்பாக இருங்கள்; நலமோடு வாழலாம். இந்த கும்ப குரு தகவல்தொடர்பு, வணிக வீடு ஆகிய இரண்டையும் பார்ப்பதால், வியாபாரம் நேரிடையாக இல்லாமல் தகவல் தொடர்புமூலம் பெருகுமென அனுமானித்துக் கொள்ளலாம். மேலும் அரசு மற்றும் ஆரோக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், அரசு சட்டங்கள்மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிகிறது.
பரிகாரங்கள்
சிவபெருமான், தர்மசாஸ்தாவை வணங்கவும். குரு, ராகு நட்சத்திரங்களைப் பார்ப்பதால், அவரவர் ஊரிலுள்ள காளியை- துர்க்கையை வணங்கவும். கோவில்களிலுள்ள சரபேஸ்வரரை விளக்கேற்றி வழிபடவும். கோவில்களில் அனைத்து மக்களின் நன்மைக்காக மிருத்யுஞ்ஜய ஜபம் நடத்தப்படவேண்டும். கூடிய மட்டும் உங்கள் ஊரிலுள்ள தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை, வெள்ளை கொண்டைக்கடலை கொண்டு வணங்கவும். மக்களை வீட்டிற்குள்ளிருந்து வெளியே போகாதீர்கள் என்று கூறிவிட்டு எவ்வாறு பரிகாரம் செய்ய இயலும்? அதற்காக கைபேசியில் அந்தந்த கோவிலுக்குப் பணம் அனுப்பும் வசதியை- "இந்த பூஜைக்கு இவ்வளவு தொகை' என தெளிவாகக் குறிப்பிடவும். இவ்வாறு பணம் அனுப்பும் வசதியை எளிமைப்படுத்த வேண்டும். திருமுறைகள் ஓதவும். மூவர் அருளிய தேவாரம், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா, சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு, திருமூலர் அருளிய திருமந்திரம், பரணதேவர் அருளிய சிவபெருமான் திருவந்தாதி, சேக்கிழார் அருளிய பெரியபுராணம், கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி, நக்கீர தேவ நாயனார் அருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி என சிவபெருமான் பற்றி உங்களுக்குத் தெரிந்த- உங்களால் முடிந்த பதிகங்களைப் பாடி வணங்கவும். இது உலகமக்கள் அனைவருக்குமான வேண்டுதலாக- பிரார்த்தனையாக இருக்கும். எறும்புக்கும் படியளக்கும் ஈசன் மக்களின் வேண்டுதல்களையும் கேட்கமாட்டாரா என்ன!