மிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே கிராம எல்லை தெய்வ வழிபாடுகள் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு உதாரணமாக வால்மீகி இராமாயணத்தில் சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு பறந்து செல்கிறார். இலங்கையின் எல்லைக்குள் அவர் நுழைய முயன்றபோது இலங்கையின் எல்லை தெய்வமான லங்கா லட்சுமி அனுமனை தடுத்து நிறுத்துகிறார். அந்த எல்லை தெய்வத்திடம் வாதாடி அதன்பிறகே அனுமன் இலங்கைக்குள் சென்று சீதையை சந்தித்தார் என்பது இராமாயண காலத்திலேயே எல்லை தெய்வம் இருந்துள்ளதை நாம் அறிகிறோம்.

கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுபோன்ற பல தெய்வங்கள் உள்ளன. அவற்றை வீட்டு தெய்வம் என்றும், குலதெய்வம் என்றும், இனத் தெய்வம், ஊர் தெய்வம் என்றும், வெகுசன தெய்வம் என்றும் வழிபட்டுவருகிறார்கள். இதில் வீட்டு தெய்வம் என்பது தங்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வாழ்ந்து, மறைந்த முன்னோர்களை அதிலும் கன்னிப் பெண்களாக இருந்து மறைந்த பெண்களையே தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் பரவலாக உள்ளது. இதற்கு "வீட்டு சாமி, குடும்ப தெய்வம், கன்னி தெய்வம் .வாழ்வு அரசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது குலதெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட மூதாதையர்களின் மரபில் தோன்றியவர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் உறவுகொண்டு குழுவாக வாழ்ந்தவர்கள். இவர்கள் ரத்த உறவு உடைய பங்காளிகள். ஒரே குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்படும் இவர்கள் வழிபடும் தெய்வம் குலதெய்வம் எனப்படுகிறது. குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு. "குருவை மறந் தாலும் குலதெய்வத்தை மறக்காதே' என்ற பழமொழி கிராமப்புறங்களில் உண்டு. இப்படி குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

bb

இனத்தெய்வம் என்பது பல குலங்கள் ஒன்றுசேர்ந்தது ஓர் இனம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தினர் தங்களுக்கென்று தெய்வங்களை உருவாக்கி வழிபட்டுவருகிறார்கள். இந்த இனத்தாரின் தனித்துவத்தை காட்டும் வகையில் இந்த தெய்வங்களின் வழிபாடுகள் சிறப் பாக நடைபெற்றுவருகின்றன.

ஊரை காப்பது ஊர் தெய்வம். இது எல்லை தெய்வம் என்றும் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர் தெய்வம் என்றும் இதற்கு ஊர், சாமி, ஊர் தேவதை. ஊர் காவல் தெய்வம் என பல்வேறு பெயர்களில் விளங்கி வருகின்றன. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊர் தெய்வங்களுக்கு மிகவிமர்சையாக ஒற்றுமையுடன் விழாக் களை நடத்துகி றார்கள். இந்த வெகு சனம் தெய்வம் என்பது சாதி, மதம், மொழி, இனம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் சென்று வழிபடும் தெய்வமாக விளங்கிவருகின்றன.

பல இடங்களில் சிறு தெய்வங்களாக இருந்து வெகுசன மக்கள் வழிபட்டு காலப்போக்கில் பெரும் தெய்வமாக மாறி உள்ளன. இவை சிறுதெய்வ மரபிற்கும் பெரும் தெய்வ வழிபாட்டிற்கு இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாடாக உருமாற்றம் பெற்றுள்ளன. மேலும் சிறு தெய்வமாக வளர்ந்த பெரும் தெய்வங்கள் ஆதி அந்தம் இல்லாததாகவும் அவதார கடவுளாகவும் பெரும் தெய்வங்களுக்கு உறவு உடையதாகவும் சிறு தெய்வங்கள் உள்ளன. பெரும்பாலான பெருந் தெய்வங்கள் மிகப்பெரிய ஆற்றல் கொண்டவையாக மக்களின் நோய்கள், துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றை உடனடியாக நீக்கி நிவாரணம் அளிப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த தெய்வங்களின் ஆவேசம்' உக்கிரம், பழிவாங்கும் உணர்வு இவை குறைக்கப்பட்டு சாந்த குணங்கள் அமைதிகொண்ட தெய்வங்களாக மக்கள் எண்ணி வழிபடுகிறார்கள்.

நாட்டுப்புற எல்லைகாவல் தெய்வங்களுக்கு கதைகள், பழமொழிகள், பாடல்கள், நம்பிக்கைகள் என ஏராளம்... ஏராளம்... உள்ளன. தெய்வங்கள் உருவான கதையில் மனிதர்களாய் தோன்றி வாழ்ந்து மறைந்து போனவர்கள் கதை, பழி தீர்த்துக்கொண்ட கதை, தெய்வம் தற்போது உள்ள இடத்திற்கு வந்து அமர்ந்த கதை, அதன் அதிவீர, தீர, செயல்கள் பற்றிய தெய்வக் கதைகள் என கதைகளில்லாத சிறு தெய்வங்களே இல்லை. கதைகள் அனைத்தும் மக்களின் பண்பாட்டின் நம்பிக்கை யின் அடிப்படையில் தோற்றம்பெற்று வழிவழியாக மக்களின் வாய்மொழி தகவலாகத் தொடர்ந்து சொல்லப் பட்டுவருகின்றன. அப்படிப்பட்ட ஒரு கிராம தெய்வமான சடையப்பரை பற்றி தான் நாம் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.

இராமாயணகாலத்தோடு சம்பந்தப்பட்டது (நல்லூர் நாரையூர் என்பதன் சுருக்கம்) என். நாரையூர் கிராமம் இந்த கிராமம் இராமாயண காலத்திலேயே இருந்துள்ளதாக கூறுகின்றனர் கிராம மக்கள். அதற்கு காரணம் இலங்கையில் சீதையை மீட்பதற்காக இராம, லட்சுமணர், அனுமார் ஆகியோர் வானரங் களுடன் இலங்கைக்கு பாலம் அமைத்து சென்று இராவணனுடன் போரிட்டனர். போர் நீண்ட நாட்கள் நடைபெற்றதால் இலங்கை அழிந்தது. இந்தப் போர்க்கள சண்டையின்போது அங்கு வாழ்ந்த பறவை இனங் களான நாறைகள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறின. அப்படி வெளியேறிய நாரை கூட்டம் இந்த ஊரிலுள்ள ஏரி, குளக்கரை மரங்களில் வந்து தங்கின. அதன் அடிப்படையிலேயே இவ்வூருக்கு நாரையூர் என்ற பெயர் உருவானதாக கூறுகிறார்கள் வயது முதிர்ந்த கிராம முக்கியஸ்தர்கள்.

இந்த ஊரின் தெற்கு பகுதியில் ஓடகரையில் அமர்ந்துள்ளார் அய்யனார். இவருக்கு ஏவல் தெய்வமாக சடையப்பனார் கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

இவருக்கு சிறு மண்டபம் அமைத்துள்ளனர். இந்த மண்டபம் சடையப்பர் தலை வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாத அளவிற்கு மறைத்து கட்டப்பட்டுள்ளது. இவருக்கு பூஜைசெய்யும் பூஜாரி கீழே குனிந்துதான் உள்ளே நுழைந்து பூஜை செய்யவேண்டும். அதேபோல் கும்பிடும் மக்களும் கீழே குனிந்து சடையப்பரை மேல்நோக்கி பார்த்து கும்பிடவேண்டும். அந்த அளவுக்கு அந்த மண்டபம் சிறிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்குமா?

Advertisment

ff

இது குறித்து ஊர் பெரியவர் ரங்கசாமியிடம் கேட்டோம். எங்கள் ஊரிலுள்ள எல்லை தெய்வமான சடையப்பனார் உக்கிர தெய்வம் மேலும் இவர் விருத்தாசலத்திலுள்ள பெரும் தெய்வமான பழமலை நாதர் கோவிலுக்கு மேற்கிலுள்ள எல்லை தெய்வம் பழமலைநாதர் கோவிலுக்கு தெற்கே வேடப்பர். வடக்கே வெண்மலையப்பர், கிழக்கே பூமலையப்பர் மேற்கே (நாறையூர்) சடையப்பர் இப்படி திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் விருத்திகிரீஸ்வரர் ஆலயத் தின் எல்லை தெய்வமாக இருந்து பாதுகாத்துவருகிறார் சடையப்பர்.

இவர் ஒரு உக்கிர தெய்வம் கடந்த காலங்களில் சடையப்பர் திறந்து வெளியில் கம்பீரத் தோற்றத்துடன் கிழக்கு முகமாக பார்த்தபடி அமர்ந்து இருந்தார். இவர் பார்க்கும் பார்வைபடும் தூரத்திற்கு விவசாய பயிர்கள் கருகிப் போயின. இதனால் வெள்ளாமை பாதித்தது.

மேலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்த கிராமங்களில் கூரை வீடுகள் அவ்வப்போது தீப்பற்றி எரிந்தன. இதன்காரணமாக சடையப்பரின் உக்கரத்தை குறைக்கவேண்டும் என்று சிலர் சாமியாடி குறி சொன்னார்கள். அதன்பிறகு அவர் முகத்தை மறைக்கும் அளவிற்கு மண்டபம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உக்கிரப் பார்வை குறைந்து எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் சடையப்பர் பாதுகாத்து வருகிறார்.

இவர் பக்தர்கள் வேண்டிகேட்கும் வரத்தை அளிக்கிறார்.

இவரை நாடிவந்து வணங்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு மக்களையும் விவசாயத்தையும் பாதுகாத்துவருகிறார். சடையப்பர் எங்கள் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் படுத்து தூங்கும் போதுகூட தெற்கு நோக்கி கால் நீட்டி படுக்கமாட்டார்கள். காரணம், சடையப்பனார் காவல் தெய்வமாக ஊருக்கு தெற்கே உள்ளதால் அவருக்கு மரியாதை அளிக்கும்விதத்தில் அவர் வீற்றிருக்கும் திசையில் கால் நீட்டி படுப்பதில்லை. இது தற்போதும் நடைமுறையிலுள்ளது.

எங்கள் ஊரில் ஒருவரது நிலம் நீதி மன்றத்தின்மூலம் ஏலம் விடப்பட்டது. அந்த நிலத்தை ஏலம் எடுப்பதற்கு நான் முயற்சி செய்தேன். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த னர். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த நான் சடையப்பரை வந்து வணங்கி உத்தரவு கேட்டேன். அன்றிரவு நான் தூங்கும் போதுஎன்னை தட்டி எழுப்பிய சடையப்பர் எதைக் கண்டும் பயப்படாதே. துணிந்து நிலத்தை ஏலம் எடு என்று கூறினார். மறுநாள் அந்த நிலத்தை எந்தவித இடையூறும் இன்றி ஏலம் எடுத்தேன். அந்த அளவிற்கு நியாய மான கோரிக்கைகளுக்கு சடையப்பரின் உத்தரவு ஆணித்தரமானது என்கிறார் பெரியவர் ரங்கசாமி.

1978-ஆம் ஆண்டு அருகிலுள்ள நெசலூரை சேர்ந்த ஒரு கடவுள் மறுப்பாளர், கடவுள் இல்லை, கடவுளை கும்பிடாதீர்கள் என்று கிராம மக்களிடம் பிரச்சாரம் செய்த தோடு எங்கள் சடையப்பர் கோவிலில் இருந்த சாமிசிலைகளை உடைத்து போட்டு விட்டு போய்விட்டார். அப்படிப்பட்டவர் சில நாட்களிலேயே இறந்துபோனார். அவரது குடும்பத்தில் இருந்த அனைவருமே குறுகிய காலத்தில் இறந்துபோனார்கள். தெய்வ குற்றம் ஒரு குடும்பத்தையே காணாமல் செய்துவிட்டது என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

இவ்வாலயத்திற்கு வந்து அய்யனார் சடையப்பரிடம் உத்தரவு கேட்காமல் எந்த சுப காரியங்களையும் ஊர்மக்கள் செய்வது இல்லை. அதேபோல் இந்த சடையப்பரை குலதெய்வமாக வழிபடும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் இங்குவந்து உத்தரவு கேட்ட பிறகுதான் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சடையப்பர் உத்தரவு கிடைத்து அவர்கள் வேண்டுதல் நிறைவேறியபிறகு முப்பூசை பலி கொடுத்து பூஜை போடுவார்கள்.

அப்போது ஆட்டு கிடா பலி கொடுக்கும் முன்பு அதன் தலையில் தண்ணீர் தெளிப்பார்கள். அப்போது ஆடுதலையை உதரி சிலிர்க்க வேண்டும். சிலர் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் பிரச்சினைகள் இருந்தால் அந்த ஆடுகள் தண்ணீர் தெளித்தும் சிலிர்க்காது. இது ஏதோ தெய்வ குற்றம் என்பதை அறிந்த பிறகும் நீண்ட நேரம் ஆடு அப்படியே நிற்கும். உடனே நேர்த்திக்கடன் செலுத்த வேண்டியவர் சடையப்பரிடம் சென்று தீபமேற்றி என்னையும் அறியாமல் குடும்பத்தில் யாராவது தவறு செய்திருந்தால் சடையப்பரே மன்னிக்கணும். அதற்கு தண்டமாக 101, ஒரு ரூபாய் செலுத்துகிறேன். இதை ஏற்றுக்கொண்டு உத்தரவு தரவேண்டும் என்று சடையப்பர் மடியில் 101 ரூபாய் வைத்து வழிபட்டவுடன் அந்த ஆடு சிலுர்த்து எழும்.

இது பலமுறை நிகழ்ந்த நேரடி சம்பவம். இது சடையப்பரின் உத்தரவு என்கிறார் கோவில் பூசாரி ராமலிங்கம்.

தற்போதும் எங்கள் கிராமத்தில் விளையும் தானியங்களை ஆங்காங்கே நிலத்திலேயே களம் அமைத்து சேகரித்து வைப்போம். வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு நேரமில்லாததால் ஆங்காங்கே களத்து மேட்டில் நாள் கணக்கில் அப்படியே போட்டு வைப்போம். களவு போகாது. காரணம் சடையப்பர் பரிவார தெய்வங்கள் இரவு நேரங்களில் எங்களுக்கு பதிலாக தானியங்களை காவல் காக்கிறார்கள் என்பது இன்றளவும் உண்மை சம்பவம் என்கிறார்கள் கோவில் அறங்காவலர்கள் செந்தில்குமார், ராமசாமி, நாராயணன் ஆகியோர்.

சடையப்பரை சாதி, மதம் கடந்து அனைத்து சமூகத்தி னரும் வந்து வணங்கி செல்கிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் குறிப்பாக தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும்போது சடையப்பர் உத்தரவு இல்லாமல் செய்வது இல்லை. குறிப்பிட்ட நாள் விடிகாலை 3.00 மணி அளவில் சடையப்பர் ஆலயத்திற்கு வருவார்கள். இங்கே அமர்ந்து சூடமேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டபிறகு ஒரு இடத்தில் அமர்ந்து தங்கள் விரும்பும் இடத்தில் பல்லிசகுனம் (குறி) கேட்பார்கள். அவர்கள் விரும்பும் இடத்தில் பல்லி எழுப்பும் சத்தமே சடையப்பனாரின் உறுதியான உத்தரவு அதை ஏற்று திருமண காரியங்களை செய்து வருகிறார்கள். அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் வாழையடி வாழையாக வாழ்ந்துவருகிறார்கள்.

சடையப்பருக்கு நேர்த்திக்கடனாக குதிரைகளை வாங்கிவிடுகிறார்கள். அந்த குதிரைகள் இப்பகுதியில் எங்கு வேண்டுமானால் செல்லும் யாரும் அதை தடை செய்வது இல்லை. ஒருமுறை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் வயலில் மேய்ந்து சடையப்பர் குதிரைகளை காலால் உதைத்து துரத்தியுள்ளார். அன்றே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்றும் அவருக்கு ஏற்பட்ட நோய் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் அவர் தனது தவறை உணர்ந்தார். அவரை சடையப்பர் ஆலயத்திற்கு வந்த அவர் சடையப்பரிடம் மன்னிப்பு கேட்டார். செய்த தவறுக்கு ஈடாக அவரே குதிரையை விலைக்கு வாங்கி நேர்த்திக்கடனாக செலுத்தினார். அதன்பிறகு அவர் நோய் நீங்க பெற்று நலமானார்.

இப்படி தவறு செய்பவர்களையும் தண்டித்து திருத்துவார். அப்படிப்பட்ட அய்யனார், சடையப்பர், தன்னிடம் வந்து வணங்கும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கி வருகிறார்கள். திருமணம் நடைபெறாமல் காத்திருக்கும் ஆண்கள்- பெண்கள், திருமணமாகி நீண்டநாள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், நியாயமான பிரச்சினைகளுக்காக நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தவர்கள், படித்துவிட்டு வேலை தேடுபவர்கள், வெளிநாடு சென்று சம்பாதிக்க நினைப் பவர்கள் இப்படி அனைவரது வேண்டுதல்களையும் தேவைகளையும் நீதிமானாக இருந்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள் அய்யனாரும் சடையப்பரும்.

இங்குள்ள ஐயனாரையும் சடையப்பரையும் தேடிவந்து வணங்குவோர்க்கு வாழ்வில் குறை ஏதும் இருக்காது என்கிறார்கள் ஊர்மக்கள். வாரம்தோறும் புதன்கிழமை அய்யனாருக்கும் சடையப்பருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அய்யனார் இவரின் ஏவல் தெய்வங்களாக அபிஷேக சடையப்பர், அலங்கார சடையப்பர், விநாயகர் மற்றும் அய்யனார் சிலையை யானை, குதிரை வாகனங்கள் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக முன்னோர் சிலைகள் உள்ளன. மேலும் இவ்வூரில் செல்லியம்மன், ஆஞ்சனேயர், முருகன், மாரியம்மா வரதராஜப் பெருமாள், சிவன், சிதம்பரேஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன.

அய்யனாரிடம், சடையப்பரிடம், வேண்டுதல் வைப்ப வர்கள் தங்கள் பிரச்சினைகளை, வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி சடையப்பனார் எதிரிலுள்ள சூலாயுதத்தில் கட்டவேண்டும். அதன்பிறகு சில நாட்களில் சில வாரத்தில், சில மாதங்களுக்குள் அவர்களது கோரிக்கைகளை சடையப்பனாரும் ஏவல் தெய்வங்களும் நிறைவேற்றிவருகிறார்கள்.

அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் வேப்பூரில் இருந்து கிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. என்.நாறையூர் சடையப்பனார், கோவில், வேப்பூரில் இருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தொடர்பு எண்: 96985 03026- 99421 93806.