இயற்கை, இயக்கம்... பூமி இயங்குகிறது, காற்று இயங்கு கிறது, பிரபஞ்சம் இயங்குகிறது, நெருப்பு இயங்கு கிறது, இயற்கை இயங்குகிறது, நீர் இயங்குகிறது. ஆனால், இறைவன் இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் அமைதியாகக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான்.
ஆனால், மனித இனமோ, தனது சுய இயக்கத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மெஷின், சிஸ்டம் என்று சொல்லி பிதற்றிக் கொண்டிருக்கிறது. மெஷினோடு சேர்ந்து மெஷினாக, மெஷினின் தன்மையோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மெஷினுக்கு உணர்வில்லை, உனக்கு (மனிதனுக்கு) உணர்விருக்கிறதா? இல்லையா? நீ ஏன் சரியாக நெறியோடு இயங்க மறுக்கி றாய்? மறக்கிறாய். இதனால் உன் மகிழ்ச்சி தொலைந்து போகிறது. நோய் பெருகிக்கொண்டே போகிறது. உறவுகள் சிதைந்துகொண்டே போகிறது. ஞாபகம் வைத்துக்கொள். அறிவு ஜெயித்துவிட்டது என்று அகந்தை கொல்லாதே! பேரறிவு எனும் சிவப்பரம் பொருள்(Wisdom) கவனித்துக்கொண்டே இருக்கிறது.
இயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, நாம் எப்படி பக்தியோடும், அன்போடும், கருணையோடும், ஒழுக்கத்தோடும், நெறிமுறைகளோடும் இயங்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்து. அதுவே உன்னை உயர்த்தும். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கண்காணிப்பாளன், அவனே மிக அற்புதமான கருணைக்கு சொந்தக்காரன். அவனே சிவன். இதைப்பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர் அருளிச்செய்ததைப் பார்ப்போம்.
"கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே'.
காவலுக்கு ஆளில்லை, கேட்பவரும் எவரும் இல்லையென்று திருட்டுத்தனம் செய்யும் இயல்புடையவர்கள் மனிதர்களில் பலர் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டு, காவல் இருக்கின்ற காப்பாளன் இல்லா இடம் உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் அவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். நடப்பவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டும், கண்காணித்துக்கொண்டும் இருக்கின் றான். அவனே சிவப்பரம் பொருள். இந்தக் காவலனை, உயிர்களைக் காத்தருளும் காப்பாளனைக் கண்டறிந்து கொண்டவர்கள் தீவினை முற்றிலும் ஒழியப் பெற்றவராவார்கள்.
எனவே, மனித இனம் நம்மை யாரும் கவனிக்கவில்லை என்
இயற்கை, இயக்கம்... பூமி இயங்குகிறது, காற்று இயங்கு கிறது, பிரபஞ்சம் இயங்குகிறது, நெருப்பு இயங்கு கிறது, இயற்கை இயங்குகிறது, நீர் இயங்குகிறது. ஆனால், இறைவன் இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் அமைதியாகக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறான்.
ஆனால், மனித இனமோ, தனது சுய இயக்கத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மெஷின், சிஸ்டம் என்று சொல்லி பிதற்றிக் கொண்டிருக்கிறது. மெஷினோடு சேர்ந்து மெஷினாக, மெஷினின் தன்மையோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மெஷினுக்கு உணர்வில்லை, உனக்கு (மனிதனுக்கு) உணர்விருக்கிறதா? இல்லையா? நீ ஏன் சரியாக நெறியோடு இயங்க மறுக்கி றாய்? மறக்கிறாய். இதனால் உன் மகிழ்ச்சி தொலைந்து போகிறது. நோய் பெருகிக்கொண்டே போகிறது. உறவுகள் சிதைந்துகொண்டே போகிறது. ஞாபகம் வைத்துக்கொள். அறிவு ஜெயித்துவிட்டது என்று அகந்தை கொல்லாதே! பேரறிவு எனும் சிவப்பரம் பொருள்(Wisdom) கவனித்துக்கொண்டே இருக்கிறது.
இயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, நாம் எப்படி பக்தியோடும், அன்போடும், கருணையோடும், ஒழுக்கத்தோடும், நெறிமுறைகளோடும் இயங்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்து. அதுவே உன்னை உயர்த்தும். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கண்காணிப்பாளன், அவனே மிக அற்புதமான கருணைக்கு சொந்தக்காரன். அவனே சிவன். இதைப்பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர் அருளிச்செய்ததைப் பார்ப்போம்.
"கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே'.
காவலுக்கு ஆளில்லை, கேட்பவரும் எவரும் இல்லையென்று திருட்டுத்தனம் செய்யும் இயல்புடையவர்கள் மனிதர்களில் பலர் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டு, காவல் இருக்கின்ற காப்பாளன் இல்லா இடம் உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் அவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். நடப்பவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டும், கண்காணித்துக்கொண்டும் இருக்கின் றான். அவனே சிவப்பரம் பொருள். இந்தக் காவலனை, உயிர்களைக் காத்தருளும் காப்பாளனைக் கண்டறிந்து கொண்டவர்கள் தீவினை முற்றிலும் ஒழியப் பெற்றவராவார்கள்.
எனவே, மனித இனம் நம்மை யாரும் கவனிக்கவில்லை என்று தவறு செய்யாதீர்கள். மிக மேலான கண்காணி- அதாவது கண்காணிப்பவன் நம்மைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறான்; கண்காணித்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால், வினை விதைத்தவன், வினை அறுப்பான்... இது பிரபஞ்ச விதி!
வினையைப் பற்றி மருத்துவ ஞானி திருவள்ளுவர் கூறியருளியதைப் பார்க்கலாம்.
"நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு'
செல்வத்தைத் தேடுவதற்கு, தீய ஊழ்லி அதாவது தீவினை வந்துற்றபோது நல்லவை எல்லாம் தீயவையாகிப் பயன்படாது போகும். நல்ல ஊழ்லி
அதாவது நல்வினை வந்துற்றபோது தீயவை எல்லாம் நல்லவையாகிப் பயன்படும்.இதுவே பிரபஞ்ச விதி, இயற்கை விதி. ஆம், இதுவே இறை விதி...
மனிதனின் மெஷின் போன்ற இயக்கத்தால் மகிழ்ச்சி தொலைந்து போனது. உதாரணமாக ஒரு கல்யாண வீட்டில் உண்மையான சந்தோஷம் இல்லை. சந்தோஷம் சம்பிரதாயமாகவே இருக்கிறது. இயற்கையான சந்தோஷமாக இல்லாததால், கல்யாண வீட்டைவிட்டு வெளியேறியதும் அவரவர் முகமும் கலையிழந்து விடுகிறது. ரேஷன் கடையில் க்யூ, சினிமா தியேட்டரில் கியூ, மெட்ரோ பயணத்திற்கு க்யூ, மொழிய் (Gift) வைப்பதற்கும் கியூ, இப்படி எல்லாம் ஒரு சம்பிரதாயமாக இருக்கிறது. இதில் எதிலும் எதார்த்தமும் அக்கறையுமில்லை.
இதைப்போலவே இறப்பு நிகழ்ந்த வீட்டிலும், எல்லாம் ஒரு சம்பிரதாயமாகவே நடக்கிறது. இழந்தவனுக்கு நெருக்கமாய் உள்ளவர்களுக்கு மட்டுமே துக்கம் உச்சமாகிறது. இந்த நிகழ்வுக்கு வருபவர்கள் ஒரு பார்வையாளர்களாகவே வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் ஒரு நிகழ்வை நாம் குறிப்பிடுகின்றோம். யோக சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஒரு வாரமாக நாம் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அவசியம் ஏற்பட்டது. காலை நேரம் மட்டுமல்ல; பெரும்பாலும் மெட்ரோ ஆரம்ப காலத் தில் பயணிகள் இல்லாமல் குறைவான பயணிகளோடவே இயங்கியது. ஆனால் தற்போது, காலை நேரம் மட்டுமல்ல, பெரும்பாலான நேரங்களில் மெட்ரோ ரயில் ஒரு சிறப்பான டவுன் பஸ்ஸைப் போன்று தினசரி நிரம்பி வழிகின்றது. நூற்றுக்கணக்கானோர் மெட்ரோவில் பயணிக்கின்றனர். ஒருவர் முகத்திலும் ஒரு சிறு புன்னகை என்பது இல்லை. கவலை தோய்ந்த முகங்கள். சரியாக, முழுமையாக, தூங்காத முகங்கள். இரவு வெகுநேரம் மொபைல் போனிலும், லேப்டாப்பிலும் நேரத்தைக் கடத்தியவர்களின் முகங்கள், அவர்களை உடல்நலக் குறைவு உள்ளவர்கள்போல் காண்பித்தது. ஷிப்ட் முறையில் வேலைகள். எந்த ஷிப்டில் வேலைக்குச் செல்கின்றனர் என்று புரியாத அளவிற்கு ஒவ்வொருவர் முகத்திலும் சோகம் வண்டி வண்டியாக மண்டிக் கிடக்கிறது. கவலை தோய்ந்த முகங்களாகக் காட்சியளிக்கின்றது.
நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. நூற்றாண்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சுதந்திர அடிமைகளாக வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். காரணம் ஒருவரிடமும் இறை பயமுமில்லை. இயற்கை பயமுமில்லை. இவை இரண்டும் இல்லாதபோது அங்கே பக்தி எப்படி இருக்கும்? உண்மை பக்தி, உன் புக்தியைத் தூண்டும்.
பக்தி எப்படி செய்வது? எதன்மீது செய்வது? இப்படி ஒரு சந்தேகம் தேவையேயில்லை! யார் யாருக்கு எந்த சாமிமீது விருப்பமிருக்கிறதோ, அந்த சாமிமீது உள்ள ஈடுபாட்டோடு பக்தி செய்தாலே அதற்கான பலன் கேட்காமலேயே கிடைத்துவிடும். இது இயற்கை விதி! கேள்வி வருகிறது. நாம் கோள்களைக்கூட (கிரகங்கள்) வணங்கலாம். அதற்கும் கேள்வி எழுகிறது. கோள்களை வணங்குவதால் என்ன பலன் என்று. உதாரணமாக விட்டமின் "உ'' எங்கு இருந்து கிடைக்கிறது என்பதில் இப்போதுதான் மக்களுக்கு ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. காரணம் கொரோனா என்னும் வைரஸ். சூரியனிலிருந்து விட்டமின் "உ'' கிடைக்கின்றது என்பதை இப்போது அனைவரும் உணர ஆரம்பித்துவிட்டனர்.
அந்த காலத்தில் நமது முன்னோர்கள் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, ஒரு துண்டைக் கொண்டு துவட்டி, ஒரு உலர்ந்த துண்டால் குழந்தையைப் போர்த்தி காலையில் சூரிய வெயிலில் காட்டுவார்கள். அதனால் அந்தக்கால குழந்தைகளுக்கு விட்டமின் "உ'' குறைபாடு இருந்தில்லை. நம் முன்னோர்கள், அக்காலத்தில் சூரிய வணக்கத்தை (நமஸ்காரம்) மேற்கொண்டனர். அதனால் விட்டமின் "உ'' குறைபாடில்லாமல் இருந்தனர்.
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு விட்டமின் "உ'' குறைபாடு உள்ளது. இப்போது நாம் புரிந்துகொள்ளமுடியும். ஒவ்வொரு கோள்களிலும் ஒரு விதமான உயிர் ஆற்றல் (ஊய்ங்ழ்ஞ்ஹ்) இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, உணர்ந்த நமது முன்னோர்கள், இதற்கான காரணங்களோடு பல வழிபாட்டிற்கான கோவில்களை உருவாக்கிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு கோவில்களிலும் ஒரு விதமான உயிர் ஆற்றல் நமது உடலையும் மனதையும் செம்மைப்படுத்தக்கூடிய வகையில் இருக்கின்றது. அதன் காரணமாகத்தான் கோவில்களில் இன்றும் வழிபாடுகள் எனும் பெயரில் பக்தி செய்துக்கொண்டிருக்கிறோம்.
பக்தி செய்வதைப்பற்றி அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் அருளிச் செய்ததைப் பார்க்கலாம்.
"புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படாது இரவும் பகலும் நின்தனையே
கருத்தில் வைத்து ஏத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே, நலம் சார் பண்பனே உன்னையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
பரம்பொருளே, இறைவனே. யாதொரு
புண்ணும் ஏற்படாத உடம்பும், குற்றம் ஏற்படாத
மனமும், பொய்மை இல்லாத ஒழுக்கமும்
பொருந்தி வாழ்வேனாக. இரவும், பகலும்
கண்ணுறங்காமல் உன்னையே கருத்தில் வைத்துப்
புகழ்ந்து வணங்க இசைகின்றேன்.
உண்ணுகின்ற வாழ்வையும், உடுக்கின்ற
வாழ்வையும் யான் பெற்றுள்ளேன். என்றாலும்
உலகத்தவரை நான் நம்பினேன் இல்லை.
எனது நண்பனாகவும், நலமே மிக்க
பண்பாளனாகவும் உள்ள உன்னையே
நம்புகின்றேன். இறைவா, சிவப்
பரம்பொருளே... என்னை கைவிட்டு விடாதே.
அருட்பிரகாச வள்ளலார், இவ்வாறு இறைவனிடம் பக்தி செ ய்கின்றார். இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். இறைவனிடம் அவர் எதையும் கேட்கவில்லை. மாறாக, மனதளவிலும், உடலளவிலும் குற்ற மற்றவனாக நான் வாழவேண்டும். அத்தகைய வாழ்க்கையையே நான் விரும்புகின்றேன்.
அதற்கு நீயே உதவவேண்டும். இவ்வாறு அவரது பக்தியும் பிரார்த்தனையும் இருக்கிறது. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இறைவன் படைப்பில் எந்த ஒரு உயிரினமும் இறைவனிடம் எதுவும் கேட்பதில்லை! ஆனால் பகுத்தறிவு பெற்ற மனித இனமாகிய நாம் மட்டுமே இறைவனிடம் தினசரி ஏதாவது, எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கிறோம். உன்னை படைத்தவனுக்கு உனக்கு என்ன செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்று தெரியும்! நீ உன் கடமையைச் சரியாகச் செய்யவேண்டும். கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே... அது தானாகவே கிட்டும். எல்லாம் இறைவனின் விருப்பம். எல்லாம் உன் செயல் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் வேண்டும். அதுவே உயர்ந்த பக்தி. சிறந்த பக்தி. மேலும் வள்ளலாரின் இன்னுமொரு ஒரு பாடலைப் பார்க்கலாம்.
"ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான் பெறும் தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெரும் தெய்வமும் தவமும்
வான் பெறு பொருளும் வாழ்வும்
நற்றுணையும் மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே
நம்பினேன், கைவிடேல் எனையே.'
உடம்பு பெற்றுள்ள உயிர், உயிரிலுள்ள உணர்ச்சிகள், உணர்ச்சிகளில் தலையாய அன்பு, ஊக்கம், உண்மை ஆகியவை எல்லாம் நீயே. என்னைபெற்ற தாயும் தந்தையும், தனிப்பெரும் தெய்வமும், நான் செய்யும் தவமும் நீயே. வான் உலகில் பெறக்கூடிய பொருளும், அங்கு வாழும் வாழ்வும், நல்ல துணையும், என் அன்பு மனைவியும், பெயர்க்குரிய பிள்ளைகளும், எனக்கு உறவும் நான் பெறக்கூடிய நட்பும் பிற யாவும் நீயே. இப்படி எல்லாம் நீயே என்று உறுதியாக நம்பி வாழும் என்னைக் கைவிட்டு விடாதே! காப்பாற்றுங்கள் இறைவனே, சிவப் பரம்பொருளே, பிரபஞ்ச பேரருளே...
இவ்வாறு உள்ளம் உருகி பக்தி செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார். இது போன்ற உள்ளத்தில் எழக்கூடிய, தோன்றக்கூடிய நல்ல சிந்தனையும், உண்மையான- தூய்மையான எண்ணமுமே மிகச்சிறந்த பக்தியாக மாறும். அதுவே மிக அற்புதமானவகையில் சிவப்பேரருளாக நமக்கு நேர்மறையானவகையில் எதிர் வினையாற்றும். இதைப்பற்றி தெய்வப்புலவர், வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர் அருளிச்செய்ததைப் பார்க்கலாம்.
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.'
பிறருக்கு தீங்கானவற்றை முற்பகலில் செய்தால் அதன்விளைவாக அவ்வாறு தீங்கு செய்தவர்க்கு, தீயவை பிற்பகலில் அவர் செய்யாமல், தாமாகவே வந்து சேரும்.
இறைவன் எங்கெல்லாம் இருக்கிறான்- எப்படி பத்தி செய்யவேண்டும் என்பதை அவ்வையார் தன் அவ்வைக் குறளில் கூறி அருளிச்செய்ததை பார்ப்போம்.
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள்.'
பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் முழுவதையும் கடவுளாக, இறைத்தன்மை உடையதாக எண்ணி அவை எல்லாவற்றிலும் அன்பு பாராட்டுவதைக் கடமையாக நீ நினைவில் கொள்ளவேண்டும்.
இதுவே உயரிய இறைபக்தியாகும். ஆகையால் இறைவன் அருளிச்செய்த அறிவில் பகுத்தறிந்து பரம்பொருளின்மேல் பக்தி செய்வோம். அளப்பரிய சக்தி பெறுவோம். ஆனந்த ஆரோக்கிய வாழ்வில் அகம் மகிழ்வோம்.