ணோ பெண்ணோ- யாராக இருந்தா லும், வாழ்வில் இறப்பைத் தரும் விபத்துகளை சந்தித்து தப்பித்து உயிர் பிழைத்து, தெய்வ சக்தி களுக்கு நன்றிசொல் லாமல் இருந்திருக்கவே முடியாது. கவிஞர், எழுத்தா ளர், நடிகர், கல்வி ஆலோச கர் சௌந்தரராஜன், கைவினைக் கலைப்பொருட்கள் செய்யும் மனைவி சசிகலா, திரைப்பட நடிகரான மகன் பிரணவ் ஆகிய மூவரையும் கோவை பீளமேடு இல்லத்தில் சென்று சந்தித்தோம்...

சௌந்தரராஜன் தனது வாழ்வில் சந்தித்த படுபயங்கர விபத்துகளிலிருந்து காப்பாற்றி, மரணத்தைத் தடுத்த மகத்தான தங்கள் குலதெய்வங்கள் மற்றும் அனுதினமும் தவறாமல் பூஜைசெய்து வழிபடும் தெய்வ சக்திகள் பற்றி மெய்சிலிர்க்க விவாரித்தார்...

அவனன்றி அணுவும் அசையாதென்பது சொல்வழக்கு. நாம் எதைச்செய்ய நினைத்தாலும் அது இறைவனின் அனுமதியின்றி நடக்காது. தெய்வசக்தியென்பது பிரார்த்தனையால் மட்டுமல்ல; நாம் இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளாலேயே பெறமுடியும்.

எங்கள் மூவரின் அனுபவத்தில் சொல்ல நிறைய இருக்கிறது.

Advertisment

அதில் சிலவற்றை சொல்கிறோம்.

tht

Advertisment

குலம்காத்து குறைதீர்க்கும் குலதெய்வ வழிபாடு

நம் குலதெய்வ வழிபாடென்பது முதன்மையான ஒன்று. ஒருமுறை நான் என்னுடைய 25-ஆவது வயதில் கோவில் சுற்றுலா சென்றிருந் தேன். திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய திருத்தலங்கிலுள்ள கோவில்களுக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்னவென் றால், காரைக்காலிலுள்ள திரு நள்ளாறு சென்று வழிபட்டு விட்டு, பிறகு நாகப்பட்டினம், கும்பகோணம் கோவில்களை தரிசித்துவிட்டு, தஞ்சாவூரில் தங்கி, திருவையாறு சென்று, அங்கிருந்த ஆற்றில் குளிக்கச் சென்றேன்.

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும்போது வெள்ளம் அதிகமாகி எதிர்திசையில் வர ஆரம்பித்தது. நான் படிகளில் இறங்கி சிறிது தள்ளி நடு ஆற்றில் சிக்கிக்கொண்டேன். அப்போது திடீரென்று வெள்ளம் அதிகரித்து நான் மூழ்கத் தொடங்கினேன்.

கால்களைக் கீழே ஊன்ற முடியாமல், நீரில் தலைக்கு மேல் வரை மூழ்கிக் கொண்டிருந்தேன். நீச்சலும் தெரியாது. அப்போது நான் எனது குலதெய்வத்தையும், குருவாயூரப்பனையும் வேண்டிக் கொண்டே இருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக அக்கரையிலிருந்து ஒரு குரல் என்னை அழைத்தது.

"ஆழம் அதிகமுள்ள அங்கு ஏன் போனாய்?' என்று கேட்டுக் கொண்டே மூன்று வாலிபர்கள் அக்கரையிலிருந்து வெள்ளத்தில் நீந்தி என் திசையை நோக்கி வந்து மூழ்கிக்கொண்டிருந்த என்னைக் காப்பாற்றிக் கரையேற்றினார்கள். நான் மறுஜென்மம் பெற்றதுபோல் இருந்தது. இதை என்னவென்று சொல்வது. நான் வேண்டிய என் குலதெய்வமும் அந்த குருவாயூரப்பனும்தான் இந்த வாலிபர்கள் உருவத்தில் வந்து என்னைக் காப்பாற்றி னார்கள்.

உயிர் காத்தாள் அம்மன்

ஒருமுறை நான் எனது பிறந்தநாளன்று நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். தரிசித்துவிட்டு திரும்பி பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். ஒரு நேரத்தில் என் நண்பன் ஒருவன் பேருந்தில் ஏறவில்லையென்று தெரிந்து, ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்துவிட்டேன். நடுரோட்டில் விழுந்து பின்தலையில் அடிபட்டுவிட்டேன். நான் மேலே செல்வதுபோல் ஒரு உணர்வு. அந்த சமயத்தில் அந்த அம்மன் ரூபத்தில் சில பெண்கள் ஓடிவந்து என்னைத் தூக்கி உட்கார வைத்தார்கள். பெரும் விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். இல்லையென்றால் அன்றே என் கதை முடிந்திருக்கும்.

thh

மீன்குளத்தி அம்மன் அருளும், குலதெய்வம் அருளும் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு மாதம் இருக்கிறபோது என்னுடைய பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்தேன். ஒரு வாரம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். அன்று நான் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு கல்யாண வேலைகளை கவனித்துக்கொண்டி ருந்தபோது, திடீரென்று முகவாதம் ஏற்பட்டு கஷ்டப்பட்டேன். அப்போது நான் என் குலதெய்வமான அம்மனையும், கொடுங்க லூர் பகவதி அம்மனையும் நினைத்துப் பிரார்த்தித்தேன்- விரைவில் குணம்பெற வேண்டுமென்று. என்ன ஆச்சரியம்! குணம் பெற்று திருமண நாளன்று முழுவதுமாகத திருமணத்திற்குத் தயாராகிவிட்டேன். முகத்தில் ஒன்றுமே செய்ய இயலாதென்று கூறிய மருத்துவர்கள்கூட ஆச்சரியப்படும்வகையில், என் முகம் சரியாகி கல்யாணம் மகிழ்ச்சியாக நடந்து முடிந்தது. குல தெய்வ சக்தியாலும், கொடுங்கலூர் பகவதி சக்தியாலும் மீண்டேன்.

வேங்டேசனாக குருவாயூரில் குடிகொண்டிருக்கும் கிருஷ்ணன்!

எங்கள் திருமணம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் எங்களுக்கு குழந்தை வேண்டி பழனி முருகனையும், குருவாயூரப் பனையும் வேண்டினோம்.

எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ஆறு மாதம் முடிந்ததும் சோறூட்டும் பிரார்த்தனையை குருவாயூரில் நடத்தினோம். அவனுக்கு பிரணவ் என்று பெயரும் சூட்டினோம். சொல்லித் தீராது வேண்டுபவர்களுக்கு அவன் தரும் அருளை.

ஐயம் தீர்த்து அருள் தரும் ஐயப்பன்

நான் ஐயப்பன் பக்தனும்கூட. 15 முறைகளுக்குமேல் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்துள்ளேன். ஒருமுறை எங்கள் மகன் ஐந்து வயதாக இருக்கும்போது, என் மனைவி வீட்டில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்தாள். அந்தசமயம் அவன் அம்மா என்று கட்டிப் பிடிக்கும்போது, கையிலிருந்த கத்தி அவன் கண்ணுக்குமேல் நெற்றியில் ஆழமாகக் கிழித்து விட்டது. ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்த வேளை யில், நான் ஐயப்பனை வேண்டி மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றேன். ஆறு தையல் கள் போட்டனர். அவன் கண்களில் படாமல் காப்பாற்றி நின்றார் அருள்தரும் ஐயப்பன்.

th

உயிர் காத்த மீன்குளத்தி பகவதியம்மன்

ஒருமுறை என் மனைவி பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுகப் பிரசவம் காலையில் நடந்து முடிந்தது. மாலை வேளையில் என் மனைவிக்கு ஏற்பட்ட உதிரப்போக்கினால் உயிருக்கு ஆபத்தான நேரத்தில், நாங்கள் எங்கள் மீன்குளத்தி பகவதி அம்மனை வேண்டிப் பிரார்த்தித்தோம். அவள் உயிரைக் காப்பாற்றிய னாள் அன்னை.

ஆபத்தில் காத்த அம்மனும் அப்பனும்

ஒருமுறை நானும் மனைவி யும் மகனும் இருசக்கர வாகனத்தில் இரவு சுமார் எட்டுமணியளவில் கோயம் புத்தூரிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் தோட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் பஞ்சராகிப் பழு தாகிவிட்டது. இரவு நேரம். என்ன செய்வதென்று தெரிய ô மல் அந்த இருட்டில் நின்று கொண்டிருந்தபோது சில மைல் தூரம்வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தும், அப்போது ஒரு வயதான பெரியவர் எங்களை அழைத்து என்னவென்று கேட்டார். நாங்கள் நடந்ததைச் சொன் னோம். இரவு நேரமென்ப தால் அவரை சரியாகக்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்ன அற்புதம்!

அந்த பெரியவர் "நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பஞ்சர்போட்டுத் தருகி றேன்' என்று சொல்லி, அரை மணி நேரத்தில் பஞ்சர் போட்டுத் தந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதை நாங்கள் வழிபடும் அம்ம னும், குருவாயூர் அப்பனும்தான் வந்து பார்த் தார்கள் என்று சொன்னால் மிகையல்ல.

thh

தெய்வ சக்தியும் பிதுர்கள் சக்தியும்

ஒருமுறை நான் எனது இருசக்கர வாகனத் தில் அலுவலக வேலையாக சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். மாலை சுமார் 5.20 மணியளவில் நல்ல டிராபிக் உள்ள சாலை.

அதில் வந்துகொண்டிருந்தேன். அப்போது என் பின்னால் வந்த டெம்போ என் பின்னால் இடித்துத்தள்ள, நான் முன்னாலிருந்த ஆட்டோவின் பின்புறத்தில் மோதி தூக்கி எறியப்பட்டு மேலே சென்றுவந்து நடுரோட் டில் விழுந்தேன். என் வாகனம் டெம்போ வேனில் பாதி உள்ளே சென்று நசுங்கி முற்றி லும் சேதமானது. நான் தூக்கியெறியப் பட்டபோது என்னை யாரோவந்து என் இரு தோள்களைப் பற்றியதுபோல் உணர்ந்தேன். என்னை இடித்த வாகன ஓட்டுநர் பிரம்மை பிடித்ததுபோல் நின்றுகொண்டிருந்தார். இடித்த வேகத்தில் நான் ஆளே காலி என்று நினத்து என்னை விசாரித்துக்கொண்டிந்தனர்.

தப்பிக்க வழியே இல்லை என்றார்கள். எனக்கு ஒரு ஊசிமுனை அளவுகூட காயமோ சிராய்ப்பு களோ இல்லை. நான் உயிர் பிழைத்தது நான் வணங்கும் தெய்வங்கள் மற்றும் மூதாதையர் மற்றும் பிதுர்களின் ஆசிகளுமின்றி வேறில்லை.

சில நாட்களுக்குப்பிறகு இது விஷயமாக நாங்கள் எங்கள் ஜோதிடரிடம் சென்று கேட்டோம். அப்போது அவர் சொன்னது எங்களை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. அவர், "நீங்கள் இப்போது உயிருடன் இருக்கீறீர்கள் என்றால் அது நீங்கள் காலையில் வணங்கும் தெய்வங்களின் சக்தியும் உங்களின் பிதுர் களின் சக்தியால் மட்டுமே. நீங்கள் உடல் முழுவதும் சேதமடையும் தருணமாக அது இருந்தது. அதிலிருந்து உங்களைக் காப்பாற் றியது உங்கள் பிதுர்களின் ஆசீர்வாதம் ஒன்றே' என்றார்.

அவர் கூறியபோது நாங்கள் ஆச்சர்யத்துடன் தெய்வங்களை வணங்கி நின்றோம்.

ஒவ்வொரு நாளுமே எங்களை வழிநடத்திச் செல்வது அந்த தெய்வப் பிரார்த்தனைகளும் தெய்வ சக்தியுமென்றால் மிகையல்ல. சாதாரண மான குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு நல்ல நிலையில் வந்ததற்குக் காரணம் தெய்வங்களின் பிரார்த்தனைதான். நாங்கள் எங்களின் வேண்டு தல்களையெல்லாம் தெய்வத்தின் காலடியில் வைத்துப் பிரார்த்தனை செய்தோம்.

நாங்கள் இன்று காரில் செல்லும்வகையில், நல்ல வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ்ந்து வருகிறோமென் றால் அது தெய்வத்தின் சக்தியின்றி வேறில்லை. எனது மகன் கலைத்துறையில் ஈடுபட்டுவருகி றான். சினிமாவில் நடிக்கவேண்டுமென்ற அவனுடைய ஆர்வம் நிறைவேறியது. அவனு டைய எல்லா முயற்சியும் தெய்வத்தின் சக்திதான். எனது மனைவியின் கைவினைப் பொருட்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இவையனைத்தும் தெய்வ சக்தியாலும் எங்கள் பிரார்த்தனையினாலும் நடந்தது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

இவரைப் பாராட்ட, வாழ்த்த கைபேசி எண்: 94430 57262.