ளவையின் கூடாரத்தில் இரவு முழுவதும் ஆலோசனை நடந்தது. அதன்படி, மறுநாள் அதிகாலையில் தொடங்கும் பெருவழி பயணத்தின்போது, உளவாளிகள் கொண்டுவரும் உளவுச் செய்திகளை, எந்தெந்த இடங்களில் எந்தெந்த நேரங்களில் தன்னிடம் தெரிவிக்கவேண்டும் என்பதையும், தன் திட்டமிடப்பட்ட பயணக் குறிப்புகளையும், தனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள உளவாளிகளிடம் ஔவை கொடுத்தார். மேலும், அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்திகளை, யார் யார் மூலம் மட்டுமே தனக்கு வந்துசேரவேண்டும் என்பதையும் அவர்களிடம் தெளிவு படுத்தினார். தன்னோடு இருப்பவர்கள், எந்நேரமும் மிகுந்த எச்சரிக்கை உணர்வு டனேயே இருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.

அதன்படி, மறுநாள் அதிகாலையில் கருங்குருவிகள் கத்தத் தொடங்கிய கருக்கல் வேளையில், அதாவது அதிகாலை சுமார் 3.30 மணியளவில், கூடாரத்தைச் சுற்றியிருந்த தீவெட்டிகள் ஏற்றப் பட்டன. நேற்றிரவு தலைமைக் கண்காணி யாரிடம் ஔவை, இன்றுவரை தங்க ளோடு பயணித்து வந்தவர்களில் யார் யார் நம்மோடு பயணத்தைத் தொடரவிருக்கின்றனர், யார் யார் சந்தையூரிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லவிருக்கின்றனர் என்பதை தெளிவு படுத்துங்கள் என்றும், தம்மோடு வராமல் பிற பகுதிகளுக்குச் செல்ல விருப்பவர்களை, அவர்கள் பய ணம் மேற்கொள்ள விருக்கும் பெருவழி பாதைகளில் செல்லவிருக் கும் பெருவழிச்சாத்து குழுவினரது காக்கு வீரர்களின் கண்காணி களிடம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ss

இங்கு "பெருவழிச் சாத்து' என்னும் சொல் எதைக் குறிக்குமென் றால், சங்கக் காலத்தில் சந்தையூர்களிலிருந்தோ, பொருட்கள் உற்பத்தி யாகும் பகுதிகளிலிருந்தோ, பொருட்களை வாணிபர்கள் வாங்குவார் கள். அவற்றையெல்லாம் வட்டி என்றழைக்கப்பட்ட மூடியிட்ட மூங்கில் கூடை களில் வைத்து, மாட்டுத் தோலினால் செய்யப் பட்ட பெரிய பைகளில் வைத்து இறுகக் கட்டிக் கொள்வார்கள். இப்பைகளுக்கு பொதிகள் என்று பெயர். இப்பொதிகளை கொழுகொழுப்பான எருதுகள்மீதோ, அத்திரி என்றழைக்கப்பட்ட கோவேறு கழுதைகள்மீதோ, காளைகள் பூட்டப் பட்ட கூட்டு வண்டிகளுக்குள்ளோ ஏற்றி, பெரு நகரங்களுக்கும் துறைமுகப்பட்டினங்களுக்கும் கொண்டு செல்வார்கள்.

அவர்கள் செல்லும் வழியில், புறமலைப்பகுதி களில் அப்பொதிகளைக் கொள்ளையடிக்கவரும் வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து, தங்களை யும் பொதிகளையும் பாதுகாப்பதற்காக, ஒரு பெருவழி பாதையில் செல்லவிருக்கும் வியாபாரி கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவர்பின் ஒருவராக வரிசையாகச் செல்வார்கள். அப்போது இவர்களையும், இவர்களது பொருட்களையும் பாதுகாக்க வில், வாள், ஈட்டிகள் தாங்கிய வீரர்கள், இவ்வியாபாரக் குழுவுக்கு முன்னால், பின்னால் என இருபுறமும் இணைந்தே செல்வார் கள். இவ்வாறு வரிசையாகச் செல்லும் வியாபாரக் குழுவுக்கு "சாத்து' என்று பெயர். இவர்களை சுற்றிச்செல்லும் காவல் வீரர்கள் "காக்கு வீரர்கள்' என்றழைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஓரிடம்விட்டு வேறு வேறு இடங்களுக்கு வரிசையாக ஒன்றுகூடிச் சென்று வாணிபம் செய்பவர்களை "சாத்தனார்கள்' என்று சங்க காலத்தில் அழைத்தனர். இதுபோல் சங்கு வளையல், காதுகளில் அணியும் சிறு சிறு தங்க ஆபரணங்கள், கணையாழிகள், சிகை அலங்காரங்களுக்குப் பயன்படும் பொன் ஆபரணங்கள், முத்து, பவள, மாணிக்க மாலைகள், தண்டை, சிலம்பு, கொலுசுகள், தந்த சீப்பு, கண்ணாடி போன்றவற்றை மரப்பெட்டிகளில் வைத்து, தலை யில் சுருமாடு இட்டு தூக்கிக் கொண்டு நகர்ப்புற பெரு விழாக்கள், கிராமப்புற திருவிழாக்கள், மருத நிலப்பகுதி செல்வந்தர்களின் வீடுகள், நகர்ப்புற செல்வந்தர்களின் வீடுகள், அரண்மனைகள் போன்ற இடங்களுக்கு, தலைச்சுமையாகவே தூக்கிச்சென்று வாணிபம் செய்பவர் களை, சீர்தலைச் சாத்தனார்கள் என சங்கக் காலத்தில் அழைத்தனர். இங்கு "சீர்' என்பது பொன் ஆபரணங்கள், பொற்காசுகள், பட்டாடைகள், சீப்பு, கண்ணாடி போன்றவற்றை குறிக்கும் சங்கக் காலச் சொல்லாகும்.

இவற்றையெல்லாம் பெரிய சதுரமான மரப்பெட்டிகளில் வைத்து, தலைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு, நாட்டின் புறமலைப் பகுதிகளைக் கடந்து செல்லும்போதோ, திருவிழாக் கூட்டங்களிலோ, இரவு நேரங்களில் வெளியூரில் தங்குகின்றபோதோ, சீர் பொருட்கள் திருடுபோக நேரிடும் என்பதால், ஓரிடத்திற்கு வாணிபம் செய்யச் செல்லும்போது, குறைந்தது பத்துபேர் சேர்ந்து வரிசையாக பல மைல் தூரங்கள் நடந்து செல்வதால், இவர்கள் "சீர்தலைச் சாத்தனார் கள்' என்று சங்கக் காலத்தில் அழைக் கப்பட்டனர். இவர்கள் சங்கறுப்பவர் களிடம் சங்கு வளை, தந்த சீப்பு, கண்ணாடி போன்றவற்றையும், பொன் ஆபரணங்களை பொற் கொல்லர்களிடமும், அரச முத்திரை யிடப்பட்ட பொற்காசுகளை அக்க சாலை என்று சொல்லக்கூடிய அரச பண்டார நாணயங்கள் செய்யுமிடத்தி லும், பண்டமாற்று முறையில் வாங்குவார் கள். இவர்களிடமிருந்துதான் ஆயர்குலப் பெண்கள், வேளாண்குடியினர், காசுகளை வாங்கி சேகரித்துவைப்பார்கள். இக்காசு களைக்கொண்டுதான் ஆயர்குலப் பெண்கள் பசுக்களையும், வேளாண்குடியினர் உழவுக்கான எருமைகளையும் சந்தையில் வாங்குவார்கள்.

அதிகப்படியான லாபத்துடன் விவசாயிகளிடம் நெற்பொதிகளை வாங்கி, பெருவழிச்சாத்தனார்களிடம் இன்னும் லாபத்தை ஈட்டி வாணிபம் செய்துவிடுவார்கள், இந்த சீர்தலைச் சாத்த னார்கள். இதேபோல் நகர்ப்புற செல்வந்த மாதர்களிடம் பழைய பொன்நகைகளைப் பெற்றுக்கொண்டு, பொற்காசுகளைக் கொடுப்பார்கள். துறைமுகப்பட்டினத்தில் வந்திறங்கும் அயல்நாட்டுக் குதிரைகள், சீனப் பட்டாடைகள், அழகுசாதனப் பொருட்கள், மதுவகைகள், ஆடல் மகளிர் போன்றவற்றை விரும்பும் செல்வந்தர்களுக்கு பொற்காசுகள் அதிகம் தேவைப்படும். அவர் களுக்கு இவர்கள் மூலம்தான் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் கிடைக்கப்பெற்றமையால், சங்க காலத்தில் இவர்கள் நல்ல பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களானார்கள். இவர்கள் வாணிபத்திற்காகச் செல்லும் பெரு நகரங்களில் இரவு தங்கிட நேரும்போது, பொருட்கள் பாதுகாப்புடன் இருப்பதற்காக, அந்நகரத்தில் தங்களுக்குச் சொந்தமாக வீடுகள் வாங்கி, பாதுகாப்பாகத் தங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட னர்.

இவர்கள் பத்துபேர் சேர்ந்து, பெரிய மனையை நகர்ப்பகுதிகளில் வாங்கி, குலச்சத்திரங்கள் முறையை முதன்முதலில் உருவாக்கினர். இவர்களில் யார் அந் நகரத்திற்குச் செல்ல நேர்ந்தாலும், ஓரிரு நாட்கள் அம்மனையில் தங்கி வாணிபம் செய்யும் பழக்கத்தை உருவாக்கினர்.

பின்னாளில் வெளியூர் செல்லாமல், ஒரே நகரத்தில் மனையில் தங்கி, தினமும் வாணிபம் செய்யவும் பழகினார்கள். பொற்கொல்லர்களிடம் ஆபரணங்கள் வாங்கி, ஓரிடத்தில் நிரந்தர வாணிபம் செய்யும் நகைக்கடைகளை உருவாக்கி, பெருஞ்செல்வந்தர்களானார்கள்.

இதேபோல், மலைப் பிரதேசங்களில் விளையும் ஐவன நெல், தினை, மிளகு, ஏலம், தேன், புலித்தோல், மான்கொம்பு, யானைத்தந்தம் போன்ற பொருட்களை, வேட்டுவர்களிடம் பண்டமாற்று முறையில் வாங்கியும், உப்பளங் களில் உப்புக் கருவாடு போன்றவற்றையும், சுண்ணாம்பு காளவாசல்களில் சுண் ணாம்பு, கோலப் பொடி போன்றவற்றையும் வாங்கி, அவற்றைப் பொதிகளில் வைத்து, கழுதைகள்மீதேற்றி, தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங் களுக்கும் சென்று விற்பனை செய்வதை, தமது வாழ்நாள் தொண்டாகப் பாவித்து வந்தவர்களை, புதர சாத்தனார்கள் என்று அழைத்தனர்.

அரச குடும்பத்தினர், கப்பல் வெளி நாட்டிலிருந்து வந்தவுடன், அதிலிருக்கும் உயர்மதிப்புடைய பொருட்களை இறக்கு மதி செய்தவுடன் வாங்கி, குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக, கடுங்காவல் வீரர்கள் புடைசூழ, அரண்மனைகளுக்கு எடுத்துச்செல்வார்கள். இவ்வண்டிகளுக்கு அரச பண்டார சாத்து வண்டிகள் என்று பெயர்.

இவ்வாறு ஒரு சாத்துவைப் பாதுகாக் கும் பொருட்டு, கொடூரமான கொள்ளையர் களுடன் போரிட்டு படுகாயமடைந்து இறந்து விட்ட வீரனுக்கு, அவன் போரிட்ட இடத்தில் நடுகல் நட்டு, அதனைச் சாத்தனார்கள் வழிபட்டு வந்தனர். அந்தக் கல்லுக்கு காக்கு வீரன் சாமி எனப் பெயரிட்டு வணங்கிவந்தனர்.

அவனுடைய குடும் பத்தார்களுக்கு, அந்த சாத்துவைச் சேர்ந்த அனைவரும் பங்கிட்டு, செல்வங் களை ஈந்து பாது காத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பெரும் எண்ணிக்கை கொண்ட வணிகச் சாத்து, ஒரு பெரு வாணிபத்திற்காக வெகுதொலைவு செல்லவேண்டியிருந்தால், சங்கத் தமிழகத்தில் கணியர் என்ற வான் நிமித்த கரிடம், அதற்கான நல்ல நாள் குறிக்கப்பட்டு பயணம் தொடங்கிடும் அந்த நாளுக்கு முந்தைய இரவில், சாத்தனார்களின் ஆதி மூதாதைய பெண்குல தெய்வமான "சாத்தாயி' என்ற தெய்வத்திற்கு சிறப்பாக வழிபாடுசெய்து, பயணத்தின்போது இயற்கைச் சீற்றமோ, உயிரைப் பாதிக்கும் தொற்று நோய்களோ, இக்குழுவினரைப் பாதிக்காமல் காப்பாற்றி அருளுமாறு வேண்டி, தம் பயணத்தைத் தொடங்குவார்கள். ஆகவே, இப்படிப்பட்ட சாத்து குழுவினருடன், தன்னுடன் வந்தவர்களை ஒப்படைக் கும் கடமையை, ஔவையோடு வந்த தலைமைக் கண்காணியாரிடம் ஔவை கொடுத்திருந்தனால், கூடாரத்தின் தீவெட்டிகள் ஒளிவிடத் தொடங்கியதைக் கண்ட தலைமைக் கண்காணியார், ஔவையை நோக்கி விரைந்து வந்தார். அவரிடம் ஔவை, புதிதாக சந்தையூரிலிருந்து நம்மோடு இன்று பயணம் மேற்கொள்பவர்களைத் தனிக் குழுவாகப் பிரித்துவிடும்படியும், அவர்களின் நடவடிக்கைகளின்மீது முழுக்கவனம் செலுத்திவரும்படியும் அறிவுறுத்தினர்.

ஔவையாரின் கழுகுப் பார்வையை உணர்ந்துகொண்ட தலைமைக் கண்காணி யார், தன் வலக்கையை உயர்த்தி கையசைத் தார். நேசமணிகள் கலகலவென ஒலியெழுப் பத் தொடங்கின.

வரும் இதழில் மணியோசை கேட்போம்...