காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் புளியம்பாக்கம் ஸ்ரீ பாலாஜி சிற்பக்கலைக் கூடம் சென்ற நாம் அங்கே தன்னைப்போல் சிற்பக்கலையை முறைப்படி படித்து பட்டம் பெற்ற புதல்வர்கள் மீனாட்சி சுந்தரம் ஸ்தபதி, மகேஷ் ஸ்தபதி ஆகியோருடன் எண்பது வயதிலும் கம்பீரமாய் பணியாட்களுக்கு கட்டளைகள் இட்டு பிரமாதமான, பிரம் மாண்டமான பார்த்தாலே கை எடுத்து கும்பிட வைத்துவிடும் தெய்வ சக்தி பரிபூரண மாக நிறைந்த கடவுள் கர்ப்பகிரகம் மற்றும் பிரகாரங்களில் பிரதிஷ்டை செய்ய கடின உழைப்பில் உருவாக்கி வருவதை பார்த்து நாமும் பிரமித்து மெய்சிலிர்த்துப்போய் தலைமை ஸ்தபதி "சிற்ப கலா மாமணி' பட்டம் பெற்றவரும் விரைவில் உறுதியாக தமிழக அரசின் "கலைமாமணி' பட்டம் பெறப்போகும் பெரியவர் "டாக்டர்' எஸ். இராமகிருஷ்ண ஸ்தபதி அவர்களை முதலில் வணங்கிவிட்டு பேசத் துவங்கினோம்.
தன்னைப்பற்றி.. தன் குடும்பம்பற்றி.. பெரும் சோதனைகளில் இருந்துதான் வடித்து உருவாக்கிய தெய்வசிலைகள் நேரில் காட்சிதந்து எப்படி தங்களை பரிபூரண அருள் அற்புதங்கள் மூலம் தன்னையும் தனது குடும்பம் முழுக்க காப்பாற்றியது என்று நம்மிடம் பக்திவசப்பட்டு இப்படி விளக்கினார்...
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல ஆயிரக்கணக்கான சிறிய அளவு தெய்வ விக்ரகங்கள் முதல் பிரம்மாண்டமான பெரிய தெய்வ விக்ரகங்கள் வரை தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதற்கும், அமெரிக்கா, மலேஷியா, மொரீசியஸ், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் செய்து அனுப்பி வைத்து பெரும் வரவேற்பு பெற்று வருகிறோம்.
விஸ்வகர்மா பரம்பரையை சேர்ந்தவர்கள் நாங்கள். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கோயில் திருமாகாளம் என்ற கிராமத்தில் பிறந்த நான் எங்கள் குலத் தொழிலான சிற்பகலைமீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்டு வளர்ந்தேன். எனது விருப்பம் உணர்ந்த என் சித்தப்பா என்னை மாமல்லபுரத்தில் இயங்கி வரும் அரசு சிற்பக்கலை கல்லூரியில் நான்காண்டு பட்டயப்படிப்பு படிக்க சேர்த்துவிட்டார். அங்கே நான் சிற்ப சாஸ்திரங்களை முழுமை யாக கற்று பட்டம் பெற்றேன். என்னைப் போல் சிற்பக்கலை படிப்பை என் மூத்த மகன் மீனாட்சி சுந்தரமும், இளைய மகன் மகேஷ் இருவரும் மாமல்ல புரம் அரசு சிற்பக் கலை கல்லூரி படித்து பட்டம் பெற்று என்னைப் போல் திறமை மிக்க "ஸ்தபதி' ஆகி, என்னுடன் இணைந்து ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடம் பெருமை புகழ் ஓங்க இரவு, பகலாக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
கருங்கல்லில் சிற்பங்கள் ஆக்கு வது சாதாரண எளிதான விஷயமே இல்லை. தெய்வ சக்தி, தெய்வ அருள் பரிபூரமாக இருந்தால் மட்டுமே "ஸ்தபதி' ஆக முடியும். அப்படிப்பட்ட அரிதான ஆண்டவன் சிலையை உருவாக்கும் அற்புத ஆற்றல் தந்த அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்கிறோம்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டார்.. இரு கண்பார்வை மறைந் தாலும் காணும்வழி தந்தார்...' என்று பாடலுடன் கண்பார்வை இல்லாத பெண் ஒருவர் மாமல்ல புரம் சிற்பங்கைளை தொட்டு தடவிப் பார்த்தே ஆனந்தம் அடைவதுபோல் அந்தக்கால தமிழ் திரைப்படத்தில் காட்சி வரும். அது எங்கள் சிற்ப கலைக்கு சிகரமாய் அமைந்த பாராட்டாகும்.
நான், என் மனைவி, இரு மகன்கள், இரு மருமகள்கள், நான்கு பேத்திகள், ஒரு பேரன் என்று இப்போதும் பதினோறு பேர்களுடன் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன், சந்தோஷமுடன் வாழ்ந்து வர மூலகாரணமே நாங்கள் முழு மூச்சுடன், முழு ஈடுபாடுடன் கடுமையான கட்டுப்பாடுகள், விரதங்கள் இருந்து இரவு பகலாக கடுமையாக உழைத்து உருவாக்கிய இப்போதும் உருவாக்கி வரும் பேசும் தெய்வ விக்ரகங்களின் அருள் கடாச்சம்தான் மூலகாரணமாக இருக்கிறது.
கூட்டுக்குடும்பங்கள் மிக அரிதான ஒன்றாகி விட்ட இந்த காலத்திலும் எங்களைப் போல் வாழும் சில கூட்டுக் குடும்பங்களை பார்த்து பலரின் திருஷ்டி.. கண் படத்தான் செய்யும். ஆனால் எந்த திருஷ்டி யும் எங்களை பாதிக்காமல், எங்கள் குல தெய்வம் தேவ கோட்டை அருகில் உள்ள "பனஞ்ச்காலல்' என்ற கிராமத்தில் வடிவம் இல்லாமல் அருவமாய் இருந்து அருள்மழை பொழிந்து எங்கள் குடும்ப காவல் தெய்வ மாக இருந்து குல தெய்வமாக "சிலக்கட்டி அம்பாள்' கோவில் திகழ்ந்து வருகிறது. அந்த குல தெய்வம் பல இக்கட்டான சோதனையான நேரங்களில் எங்களை காப்பாற்றி கருணை மழை பொழிந்து வருகிறாள்.
அந்த வடிவம் இல்லாத பீடத்திற்கு அபிஷேகங்கள் செய்து வணங்கி வருகிறோம்.
ஒவ்வாரு வருட சித்ரா பௌர்ணமி தினத்திலும் குடும்பத்தில் உள்ள பதினோறு பேர்களும் தவறாமல் சென்று எங்கள் குல தெய்வ வழிபாடு செய்து வருகிறோம். பீடத்திற்கு சகலவித அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து வழிபடுவோம். மற்ற துர்க்கை அம்மன், தேவதைகள் உள்ள அங்குள்ள ஆலயங்கள் சென்றும் வழிபட்டு திரும்புவோம்.
பத்து கிலோ முதல் பத்தாயிரம் கிலோ வரைகூட இருக்கும் சிறிய, பெரிய விக்ரகங்களை உருவாக்கிய பிறகு நேரில் சில தெய்வங்கள் என் கண்களுக்கு மட்டும் தெரியும்படி தோன்றி என்னை, என் குடும்பத்தை, என் பரம்பரையை நன்றாக இருக்கும்படி வாழ்த்தும்போது புல்லரித்துப்போய் ஆனந்தத்தில் அழுதே விடுவேன். சாஷ்டாங்கமாக அந்த தெய்வ சிற்பங்கள் காலடியில் சரணாகதியாக விழுந்து உடல் சிலிர்க்க, உள்ளம் பூரிக்க இரு கண்களிலும் கண்ணீர் கொப்பளிக்க நன்றி சொல்வேன். அதை பார்த்து என் மகன்கள் இருவரும், மற்ற பணியாளர்களும் விழுந்து கும்பிட்டு வேண்டு வார்கள்.
எல்லா கோவில்களிலும் ஓரிரு தெய்வ சிலைகள் இருந்தாலே கோவிலை கடந்து செல்பவர்கள் உள்ளே செல்லாவிட்டாலும் வணங்கியபடியே செல்வார்கள். அப்படி இருக்க எங்கள் வாலாஜாபாத் ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலை கூடத்தில் ஏராளமான தெய்வ சிற்பங்கள் தயார் நிலையில் பல ஊர் திருக்கோயில்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் எங்கள் சிற்ப கலை கூடத்தை நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் கார்கள், பஸ்களில் கடந்து செல்லும் பக்தர்கள், பொது மக்கள் அனைவரும் உள்ளே வராமல், கைகளை கூப்பி கும்பிட்டபடியே செல்வதை பார்த்து கோவிலில் இருக்கும் ஆத்ம திருப்தி, மன நிம்மதி, சந்தோஷம் தினமும் எங்களுக்கு கிடைத்து வருகிறது.
பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகளை நாங்கள் உருவாக்கி உள்ளம் மகிழ்ந்த வேளையில் கொடிய உயிர்க்கொல்லி நோய் கொரோனா உலகையே உலுக்கி படுவேகமாக பரவி பல உயிர்களை பலி வாங்கிய படுபயங்கர வேதனையான, சோதனையான நேரம் வந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் நான், என் மனைவி, இரு மகன்கள், இரு மருமகள்கள், நான்கு பேத்திகள், ஒரு பேரன் எல்லோருக்குமே ஒட்டுமொத்த எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிர் பயத்தில் குலைநடுங்கி போய் விட்டோம்.
தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. கடுமையான தொடர் காய்ச்சல் என்று எங்கள் குடும்பமே கொரோனா வால் ஒரே நேரத்தில் சூறையாடப்பட்டது. படாதபாடு பட்டுப்போனோம். எங்கள் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வந்து மற்றவர்களுக்கு வராமல் இருந்திருந்தால் மற்றவர்களுக்கு அவர்கள் உதவி இருப்பார்கள். எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் "கொரோனா' ஒரே நேரத்தில் வந்து எல்லோரையும் படுத்த படுக்கை ஆக்கியதால் திணறிப்போனாம்.
நான் உருவாக்கிய பிரம்மாண்ட பிள்ளையார் முன்பு கஷ்டப்பட்டு நடந்து போய் அவர் காலில் விழுந்து எங்கள் குடும்பத்தில் எல்லோர் உயிரையும் காப்பாற்று விநாயகா.. அற்புதம் நிகழ்த்து என்று கதறி அழுதேன்.
எங்கள் சிற்பக்கூட அனைத்து தெய்வங்கள் காலில் விழுந்தும் அழுது தொழுதேன். எங்கள் குலதெய்வ அம்மனையும் மன்றாடி வேண்டினேன்.
அப்போது மகா கணபதி எனக்கு மட்டும் காட்சி தந்து என் பெயர் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தோடு சென்று அட்மிட் ஆகிவிடு... நானும் எல்லா தெய்வங்களும் உங்களை காப்பாற்றுகிறோம் என்று உறுதி தந்து மறைந்தார்.
ஆனால் அந்த நெருக்கடியான நேரம் ஆஸ்பத்திரிகளில் ஒரு கொரோனா பேஷண்ட்கூட அட்மிட் செய்யவே முடியாத அளவு எல்லா மருத்துவமனைகளும் ஏராளமான கொரோனா நோயாளிகளுடன் நிரம்பி வழிந்தது.
எனக்கு தெரிந்த பல விஐபிக்களிடம் சிபாரிசு செய்ய கெஞ்சினோம். அப்போது ஒரு கொரோனா பேஷண்டிற்கே ஐந்து லட்சம் அட்மிட் ஆகும் முன்பே கட்ட சொன்னார்கள்.
வேறு வழியின்றி எங்கள் வீட்டு பெண்களின் நகைகளை விற்றும், அடமானம் வைத்தும் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து விநாயப் பெருமான் சொன்ன அருள் வாக்குப்படி கடைசியில் திருச்சி அருகே கற்ப விநாயகர் மருத்துவமனையில் எங்கள் எல்லோரையும் அட்மிட் செய்து மிக சிறந்த கொரோனா நீக்கும் சிகிச்சை அளித்து பரிபூரண குணம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.
மகாகணபதி, எங்கள் குலதெய்வம், மற்ற எங்கள் சிற்பக்கலைக்கூட தெய்வங்கள் அருளில் எங்கள் குடும்பத்தில் உள்ள பதினோறு பேர்களும் உயிர் பிழைத்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து மறுஜென்மம் பெற்று மறுவாழ்வு வாழ்ந்து வருகிறோம்.
இப்படி எங்கள் சிற்பக்கூட அனைத்து தெய்வங்களுக்கும் இருக்கும் அற்புத சக்தி அறிந்து பலரும் எங்களிடம் தொடர்ந்து ஆர்டர்கள் தந்து தெய்வ விக்ரகங்களை பெற்று வருகிறார்கள்.
என்னுடன் பணியாற்றி எனது புதல்வர்கள் மீனாட்சி சுந்தரம், மகேஷ் இருவருக்குமே தெய்வச் சக்தி பரிபூரணமாக கிடைத்து விட்டது. எனது இரு புதல்வர்களின் மகத்தான ஸ்தபதி ஆற்றல் அருளுடன் இன்றும், எதிர்காலத்திலும் பல திருக் கோயில்களுக்கு இந்தியா முழுக்கவும், வெளிநாடு களுக்கும் தெய்வ விக்ரகங்களை ஆகம விதிப்படி அபார சக்தியுடன் உருவாக்கி திருக்கோயில்களில் அவைகளை அமைய வைத்து வேண்டிவரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற வைக்கும் அற்புதமான ஆன்மிக பணியை தொடர்ந்து செய்வேன்.
எண்பது வயது மூத்த ஸ்தபதி எஸ்.ராமகிருஷ்ண ஸ்தபதியின் ஆன்மீக தொண்டு தொடர ஆண்டவன் அருள் வேண்டி விடைபெற்றோம்.
தொடர்புக்கு: 94434 33810
படங்கள்: விஜயா கண்ணன்