சென்னை, மடிப்பாக்கம் தெய்வானை நகரில் "அடடா அதிசயம், அற்புதம்' என்று அசரவைக்கும் அம்மன் பொம்மைகள், குதூகலிக்கவைக்கும் குழந்தைகள் பொம்மைகள், கண்களை, கருத்தைக் கவரும் ஆபரணங்கள், கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன்கூடிய கடவுள் களின் பொம்மைகள், திரும்பத் திரும்பக் காணத்தோன்றும் திருமணக் காட்சி பொம்மைகள், நம்முடன் பேசுவது போன்ற உணர்வுகளை உண்டாக்கும் உயிரோட்டமுள்ள பொம்மைகள்- இப்படி காண்போர் அனைவரையும் களிப்புறச் செய்யும் வண்ணம் அமைந் துள்ளது "ஸ்ரீ கோலாபுரி தி டால் பேக்டரி.'
இந்த கலைக்கோவிலின் அதிபர்கள் திருமதி நிஷா, ஸ்ரீகாந்த். புத்துணர்ச்சி யுடன் நம்முடன் பேசவந்த அந்த தம்பதி யிடம் அவர்களைப் பற்றியும் அவர்களின் அழகிய பொம்மைகள் தயாரிப்பு பற்றியும் ஆர்வமுடன் கேட்டோம்.
முதலில் திருமதி நிஷா ஸ்ரீகாந்த் இந்த விவரங்களைக் கூறினார்.
"நான் Dollpreneur -அதாவது பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் தொழிலதிபராக இருப
சென்னை, மடிப்பாக்கம் தெய்வானை நகரில் "அடடா அதிசயம், அற்புதம்' என்று அசரவைக்கும் அம்மன் பொம்மைகள், குதூகலிக்கவைக்கும் குழந்தைகள் பொம்மைகள், கண்களை, கருத்தைக் கவரும் ஆபரணங்கள், கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன்கூடிய கடவுள் களின் பொம்மைகள், திரும்பத் திரும்பக் காணத்தோன்றும் திருமணக் காட்சி பொம்மைகள், நம்முடன் பேசுவது போன்ற உணர்வுகளை உண்டாக்கும் உயிரோட்டமுள்ள பொம்மைகள்- இப்படி காண்போர் அனைவரையும் களிப்புறச் செய்யும் வண்ணம் அமைந் துள்ளது "ஸ்ரீ கோலாபுரி தி டால் பேக்டரி.'
இந்த கலைக்கோவிலின் அதிபர்கள் திருமதி நிஷா, ஸ்ரீகாந்த். புத்துணர்ச்சி யுடன் நம்முடன் பேசவந்த அந்த தம்பதி யிடம் அவர்களைப் பற்றியும் அவர்களின் அழகிய பொம்மைகள் தயாரிப்பு பற்றியும் ஆர்வமுடன் கேட்டோம்.
முதலில் திருமதி நிஷா ஸ்ரீகாந்த் இந்த விவரங்களைக் கூறினார்.
"நான் Dollpreneur -அதாவது பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் தொழிலதிபராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். குறிப்பாக அனைத்து பெண் தெய்வ பொம்மைகளைத் தயாரித்து, நம் நாடு மற்றும் வெளிநாட்டுப் பெண்களின் நன்மதிப்பைப் பெற்று, அவர்களின் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டதிலும் ஆனந்தம் அடைகிறேன்.
நான் பி.காம் பட்டதாரி. எக்ஸிக்யூடிவ் எம்.பி.ஏ., ஐ.ஐ.எம். லக்னோ, சிக்ஸ் சின்மா ப்ளாக் பெல்ட் போன்றவை என் கல்வித்தகுதிகள். ITES’ல் லேர்னிங் அண்ட் டெவலப்மென்ட், ப்ராசஸ் இம்ப்ரூமென்ட், குவாலிட்டி மேனேஜ்மென்ட் பணியில் பதினைந்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த அனு பவம் உண்டு.
சிறுவயது முதலே பொம்மைகள் தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம். ஸ்ரீகாந்த் அவர்களைத் திருமணம்செய்து, இப்போது லண்டனில் எம்.எஸ் படித்துவரும் மகள் ஹர்ஷிதா மற்றும் பத்து வயதுள்ள பள்ளியில் படிக்கும் கிருதிஹ் ப்ரஹலாக் இருவரும் பிறந்தபிறகு, கணவன், மகள், மகன் மூவரின் பூரண ஆதரவுடன், நிறைந்த சம்பளம் வாங்கிய நல்ல வேலையை பலர் தடுத்தும் கேட்காமல் தைரியமாக விட்டுவிட்டு, 2017-ஆம் ஆண்டில் இந்த பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தைத் துவங்கினோம். பன்னிரண்டு பெண்களுக்கு நேரடியாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதன் தொடர்பான வேலைவாய்ப்பும் தந்து, கடந்த ஏழு வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் குடும்பத்தினரின் தீவிர தெய்வ பக்தியாலும். இந்த தெய்வ பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்துவரும் வருமானத்திலும் ஆத்ம திருப்தியுடன் வாழ்ந்துவருகிறோம்.
தொடர்ந்து ஸ்ரீகாந்த் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.
"ஆடை பாதி, அலங்காரங்கள் மீதி என்று எங்கள் தயாரிப்பில் அனைத்து பொம்மைகளும் ஜொலிக்கின்றன. எங்களின் அழகிய கிருஷ்ணர் பொம்மை வாங்கிய ஒரு பெரியவர், அதை தனக்குப் பிறந்த குழந்தைபோல் நினைத்து தன்னிடம் எப்போதுமே வைத்திருப்பதாகவும், மனக் குறைகளை, சந்தோஷங்களை அதனுடன் பேசுவதாகவும், தூங்கும்போதுகூட அதை அருகில் வைத்திருப்பதாகவும் கூறினார். மனம் நெகிழ்ந்து போனோம்.
ஒரு ஐ.ஏ.எஸ் கலெக்டர் எங்களிடம் வாங்கிய முருகப் பெருமான் பொம்மையை எப்போதுமே தன்னுடன் வைத்திருப்பது பற்றிக் கூறி, நிறைவாகலி மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பல வருடங்களாக குழந்தை பிறக்காமல் வருந்திய தம்பதிக்கு, எங்கள் பாலகிருஷ்ணர் பொம்மை வாங்கிய சில மாதங்களிலேயே குழந்தை பிறந்து. "உங்கள் பாலகிருஷ்ணர் பொம்மை வாங்கியதால்தான் எங்களுக்கு பாலகன் பிறந்தான்' என்று நன்றி கூறியதை மறக்கமுடியாது.
இதுபோல் எங்களிடம் பொம்மைகள் வாங்கிச் செல்லும் பலரும் "உங்கள் பொம்மைகள் தெய்வசக்தி உடையது' என்று பாராட்டுகிறார்கள்.
எண்பது வயது மூதாட்டி ஒருவர் எங்களிடம் ஆண்டாள் பொம்மை வாங்கி முப்பது நாளும் பாசுரம் பாடி பூஜைசெய்து மகிழ்ந்தார்.
ஒரு பெண்மணி துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை ஆர்டர் தந்ததால், கொண்டுபோய் அவர் சொன்னபடி அந்த வீட்டின் பூஜையறையில் வைத்த மறுநிமிடமே அந்தப் பெண்ணிற்கு சாமி வந்து, இருபது நிமிடம் பக்தியில் புல்லரிக்க வைத்துவிட்டார். வேப்பிலை பறித்துவந்து அந்த சகோதரி கையில் தந்து சாந்தப்படுத்தினோம்.''
திருமதி. நிஷா ஸ்ரீகாந்த் நிறைவாக இந்த தகவல்களைக் கூறினார்.
"மத்திய அரசின் சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் செயல்பட்டுவருகிறோம். கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளோம். ஏராள மான விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுள்ளோம். 2000-க்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவசமாக பொம்மை தயாரிப்புக் கலையை நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் கற்றுத்தருகிறோம். களிமண் பொம்மைகள் கீழே விழுந்து உடைந்துவிடும் என்பதால், நாங்கள் காட்டன் துணி மற்றும் பஞ்சால் தயாரித்து வழங்கும் பொம்மைகளை நவராத்திரி கொலுவில் வைக்க ஆர்வமுடன் ஆர்டர் தருகிறார்கள்.
இதனை வெற்றிகரமாக நல்ல பெயருடன் தொடர்ந்து செய்வதே எங்கள் எதிர்கால லட்சியம்!'' திருமதி நிஷா, ஸ்ரீகாந்த் தம்பதிக்கு வாழ்த்துக்கூறி விடைபெற்றோம்.
தொடர்பிற்கு கைபேசி எண்: 95518 32000