சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள். தங்கள் தவ வலிமையின் மூலமாக சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத பல சாகசங்களைச் செய்பவர்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு.

அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மாள்'.

சிவபெருமானையும், ஸ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் "ஸ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி சக்கரை அம்மா'வானது.

இந்தியாவில் இரண்டு இடங்களில் பெரும்பாலான புகழ்பெற்ற சித்தர்கள் பலரும் சமாதி அடைந்துள்ளார்கள். அவை சென்னை மற்றும் புதுச்சேரியாகும். அதன் காரணம் தெரியவில்லை. எங்கெல்லாமோ பிறந்த சித்தர்கள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து மகிமை பலவும் காட்டியபின் சென்னை மற்றும் புதுச்சேரியில் வந்து தங்கி அங்கேயே சமாதி அடைந்துள்ளார்கள்.

Advertisment

சக்கரை அம்மா சென்னையில், கலா ஷேத்திரா மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் சமாதி ஆலயத்தின் இடைப் பகுதியில் சமாதி யடைந்துள்ளார்.

அஷ்டமா சித்திகளில் மிக நுண்ணிய வடிவத்தை எடுக்கக்கூடிய சக்தி, உடலை லேசாக்கிக் கொள்வது, எடை அதிகமில்லாத, லேசான பொருட்களை கனமாக்குவது, செல்ல நினைக்கும் இடங்களுக்கு உடனே செல்வது, கூடுவிட்டுக் கூடுபாய்வது-

அதாவது தனது ஆன்மாவை பிற உடம்பில் செலுத்தும் சக்தி போன்ற அனைத்து சக்தி களையும் இந்த அன்னையார் பெற்றிருந்தார் எனக் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல. இவர் தனது இடுப்பில் நாகப்பாம்பு ஒன்றைக் கட்டிவைத்திருந்தார் என்றும் கூறுகிறார்கள்.

Advertisment

தெய்வீகப் பெண்மணியான சக்கரை அம்மா அவர்கள் 1854-ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேவிகாபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.

பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த அவருடைய தந்தை சேஷ குருக்கள் மற்றும் அவர் மனைவி சுந்தராம்பாள் ஆகியோருக்குப் பிறந்த ஆனந்தம்மா இளம் வயதிலேயே வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தார். ஆனந்தம் எனும் வருடத்தில் பிறந்ததனால் ஆனந்தம்மா என பெயர் வைத்தார்கள். இளம்வயதிலேயே தனது தந்தைமூலம் சிவ துதிகளைக் கற்றறிந்தார். அவருடைய வயதை ஒத்த சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடும்போதும் அவர் அவற்றில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்து, ஆலயத்துக்குச் சென்று எந்நேரமும் சில துதியை ஜெபித்து வந்ததாக வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. இந்த அன்னையின் வாழ்க்கை வரலாறும், அவர் நிகழ்த்திய அற்புத மகிமைகளும் பின்நாளில் அவருடைய ஆத்மார்த்த மான சீடராக இருந்த திரு நஞ்சுண்ட ராவ் எனும் மருத்துவர் எழுதிவைத்துள்ள நாட்குறிப்பில் இருந்து தெரிய வந்ததாம்.

இப்படியாக இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டவராக, சம்சார மற்றும் உலகப் பற்றில்லாமல் வாழ்ந்து வருகையில் அந்தக் கால ஆச்சாரத்தின்படி அவரு டைய ஒன்பது வயதிலேயே, சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவரும், அவரு டைய தாயின் உறவினருமான சாம்பசிவ சிவாச்சாரியார் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். சாம்பசிவ சிவாச்சாரியார் கோமளீஸ்வரன்பேட்டை மடத்தில் சிவாச்சார்யராக இருந்தவராம்.

ஆனந்தம்மா மிகவும் இளம் வயதில் இருந்தத னால் அவரது கணவர் விரும்பிய இல்லற சுகங் களை கொடுக்க முடியவில்லை. எனவே அவரை தனது வீட்டில் பணிபுரியும் பெண்களைப்போல வைத்துக்கொண்டு பிற பெண்களிடம் சுகம் கண்டுகொண்டிருந்த அவருடைய கணவர் விரைவில் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்.

அப்போது அந்த அன்னையாருக்கு இருபது வயதென்கிறார்கள்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்திருந்த கணவர் சாம்பசிவ சிவாச்சாரியார் மறைந்துவிட அந்தக் கால வழக்கப்படி விதவை எனக் கருதப்பட்ட அன்னையின் தலைமுடியை மழித்துவிட்டு, பாட்டிமார் உடுத்தும் நிறத்தி லான புடவைகளையே அணியவைத்தார்கள். இது அந்த தெய்வீக அன்னைக்கு வசதியாகி விட்டது. தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் இணைத்துக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டார். வீட்டினருகில் இருந்த கோமளீஸ்வரர் எனும் சிவபெருமானின் ஆலயத்திற்குச் சென்ற, மணிக் கணக்கில் தியானம் செய்து காலத்தை ஓட்டினார்.

இந்த நிலையில் கணவர் இறந்த சில காலம் கடந்து, போளூர் எனும் ஊரில் இருந்த தனது சகோதரர் வீட்டில் சென்று வசிக்கத் துவங்கியபோதுதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் நிகழத் துவங்கியது. அந்த ஊரில் நட்சத்திரக் குன்று என்ற சிறு மலை முகடு இருந்தது. அதன்மீது ஒரு ஆலயம். அந்த ஆலய மண்டபத்தில் தனிமையில் அமர்ந்தவாறு தியானத்தில் இருந்த குணாம்பா எனும் பெண் சந்நியாசினியை அன்னை ஆனந்தம்மா சந்திக்க நேரிட்டது. அன்னை ஆனந்தம்மாவுக்கு அவர் மீது ஈடுபாடு ஏற்படவே குணாம் பாவையே தனது குருவாக ஏற்றுக்கொண்டு அடிக்கடி அவரை சந்திக்கலானார். சில காலத்திலேயே அவரிடம் ஞான தீட்சை பெற்றார்.

dd

குணாம்பா அவருக்கு மிகவும் ரகசியமான ஸ்ரீசக்கர உபாசனை மந்திரத்தை உபதேசித்தார். மேலும் எங்கிருந்தாலும் அவர் தன்னை வந்து சந்திக்கும் வகையில் உடலை லேசாக்கி பறவை யைப்போல பறந்து செல்லும் லஹிமா எனும் மந்திர தீட்ஷையையும் கொடுத்தார்.

அதன்மூலம் அன்னை ஆனந்தம்மாவுக்கு எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் சக்தி கிடைத்தது. சித்தர்கள் பலரும் ஆகாய மார்கமாக பறந்து செல்லும் சித்தியைக் கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பகவான் புத்தர் முதல் பல பௌத்த பிட்சுக் கள், புத்தகயா எனும் இடத் திலிருந்து பறந்தே இலங் கைக்குச் சென்று வந்தது சரித்திர பூர்வமான உண்மை. அதைப்போலவே போகரும், அகத்தியரும் பறந்துசென்ற குறிப்புக்கள் உள்ளன. அந்த வகையில் அப்படியொரு சித்தியைப் பெற்றிருந்த ஒரே பெண்மணி அன்னை ஆனந்தம்மா என்பதாக அறிகிறோம்.

இந்த அன்னை இப்படியொரு சக்தி பெற்றவராக இருந்ததைக் காணும் பாக்கியத்தைப் பெற்றவர்களில் திரு.வி.கா என அழைக்கப் பட்ட திரு கல்யாண சுந்தர முதலியார் அவர் களே சாட்சி. அதற்கு ஆதாரமாக இது குறித்து தமத ‘உள்ளொளி’ என்ற நூலில் குறிப்பிட்டுள் ளாராம்.

ஒருமுறை அவர், இன்றைய சென்னை புதுப்பேட்டையிலிருந்த வெஸ்லி காலேஜ் எனும் கல்வி நிலையத்தின் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது, ஆனந்தம்மா ஆகாய மார்கமாய் பறந்துவந்து அந்த மொட்டை மாடியில் அமர்ந்ததாக தனது உள்ளொளி எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார். அதைக் கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் சென்னை மியூசியத்தில் தலமைப் பொறுப்பில் இருந்தவருமான ஐரோப்பியர் ஒருவர் அந்த அன்னைக்கு உடலளவில் பறவை களின் பறக்கும் சக்தி இருந்ததாகவும், அவர் பறவை இனத்தை சார்ந்த உளவியல் அமைப்பையையும், தன்மையையும் கொண்டிருந்ததாகவும் கூறினாராம்.

ஆனந்தம்மா, தனது வீட்டு மொட்டைமாடியில் தனிமையில் அமர்ந்து கொள்வதுண்டு. அப்போது பேரானந்த நிலையில் மூழ்கிப்போவார். ஒருநாள் அவர் தன்னை நோக்கி பெரும் ஒளிவெள்ளம் வந்ததைப்போல உணர்ந் தாராம். அடுத்து ஆனந் தம்மா, ஆனந்தமாக சிரிக்காத துவங்கினார். அடிக்கடி தன்னை மறந்து மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு பேய்போல சிரிப்பாராம். இப்படியாக அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டி ருந்தபோது இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது.

ஒருமுறை அவருடைய சகோதரர் நோயி னால் பீடிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியம் பார்க்க, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஆன்மிகவாதியும், மருத்துவருமான டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

அப்போது மாடியில் ஆனந்தம்மா அட்டகாசமாக சிரித்துக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு ஒரு கணம் திகைத்து நின்றவரிடம், மன வியாதி பிடித்தவர் என அவர் வீட்டினர் கூறினர். அந்த மருத்துவர் மனதில் அது உண்மையாக இருக்காது எனும் உணர்வு தோன்றியது. அவருடைய சிரிப்பு வெறும் சிரிப்பல்ல என்பதாக மனது கூறியது.

அமைதியாகிவிட்டார். இன்னும் சில நாட்களில் ஆனந்தம்மாவை அதே சிரித்த கோலத்தில் கோமளீஸ்வரன் ஆலயத்திலும் அவர் சந்திக்க நேரிட்டது. சற்று நேரம் அதை கவனித்த மருத்துவர் நஞ்சுண்ட ராவ் அந்த அன்னையிடம் நேரடியாகச் சென்று சிரிப்பதன் காரணம் என்ன எனக் கேட்டார். சிரிப்பதை சற்றே நிறுத்திய ஆனந் தம்மா ‘ஆன்மாவும் உடலும் வெவ்வெறானவை எனும் தத்துவத்தைக் கூறி, அவரது உடலுக்குள் உள்ள ஆன்மா பேரானந்த நிலையில் இருப்பதனால் அது ஆனந்தமாக உள்ள தனது நிலையை தன் உடல்மூலம் வெளிப்படுத்துகிறது என்று ஆன்மாவைக் குறித்து விளக்கினார். அப்போதுதான் அந்தப் பெண்மணி சாதாரணப் பெண்மணி அல்ல, தெய்வீக அன்னை என்பதை மனதாரப் புரிந்துகொண்டு அவர் காலடியில் அப்படியே விழுந்து நமஸ்கரித்தார். அன்றுமுதல் அந்த ஆனந்தம்மாவையே தனது மானசீகமான குருவாக, தெய்வமாகவே ஏற்றுக்கொண்டார் நஞ்சுண்ட ராவ்.

ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவுக்கு அந்த அன்னையின் தெய்வீக சக்தியைப் புரிந்துகொள்வதில் அதிக நாட்கள் தேவைப்படவில்லை. அவர் மனதில் அன்னை ஒரு தெய்வீகப் பெண்மணியே என்பது ஆழமாக பதிய, அதுமுதல் அவர் அந்த அன்னையின் பக்தரும், ஆத்மார்த்த சீடருமாகிவிட்டார். ஆனந்தம்மாவைப் பார்த்த முதல் நாளிலேயே அவர்மீது தன்னையறியாத ஒரு பிடிப்பு ஏற்பட்டதை உணர்ந்தார். அவர் மற்றவர்கள் கூறுவதுபோல பைத்தியமல்ல என்பதை முழுமையாக நம்பியவர், அவர் சிரிப்பதன் உண்மையான காரணம் என்னவென்பதைக் கண்டறிய முனைந்தார். பல ஆலயங்களுக்கும் தானே அந்த அன்னையை அழைத்துச் சென்றார். பின்னாளில் அவரே அந்த அன்னையின் புகழ் அனைவரிடமும் பரவக் காரணமானார்.

ஒருமுறை ரமண மகரிஷியை சந்தித்த அன்னை தன்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்ள, அவரோ அந்த அன்னை ஏற்கெனவே தெய்வத்தால் பரிபூரணமாக ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வ அன்னை எனக் கூறிவிட்டாராம். ரமண மகரிஷியை சந்திக்க ஆனந்தம்மா வானத்தில் பறந்தே சென்றார் என்றும் தகவல்கள் உண்டு. மெல்ல மெல்ல திரு நஞ்சுண்டராவைத் தவிர வேறு பலரும் அன்னையின் சீடர்களாகி இருந்தனர்.

ஆனந்தம்மாவை சந்தித்த பக்தர்கள் பலரும் பல மகிமைகளையும் அற்புதங்களையும் அந்த அன்னையிடம் கண்டிருக்கின்றார்கள்.

இன்றும் அந்த அன்னையின் சமாதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் பெண் பக்தர்களாக உள்ளதைக் காணலாம். உலக இன்பங்களில், கோலாகலங்களில் அன்னைக்கு ஈடுபாடு இருந்ததில்லை. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததில்லை. மிகவும் எளிமையானவர். ஜாதி பேதம் கிடையாது. ஏழை மற்றும் பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் அவரை யார் வேண்டுமானா லும் சென்று சந்திக்கமுடியும். யாருடைய வீட்டுக்கும் சென்று அவர்களுடன் குடும்பத் தொடர்ப்பு வைத்திருக்கவில்லை.

1899-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 1900-ஆம் ஆண்டுவாக்கில் நஞ்சுண்ட ராவ் அன்னை அவர்களை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் அழைத்துச்சென்றார். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் காட்டி அந்த நிலத்தை வாங்கிவிடுமாறும் தான் தனது பூத உடலைவிட்டு நீங்கியதும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்யவேண்டும் என்றும் அதன்பின்தான் அதே சமாதியில் என்றென் றும் இருந்துகொண்டு அனைவருக்கும் அருள் புரிந்து வருவேன் என்றும் உறுதிமொழி தந்தார்.

1901 பிப்ரவரி 28-ஆம் நாள் ஸ்ரீ சக்கரையம்மா சமாதி அடைந்ததும், அந்த இடத்திலேயே அவரை அடக்கம் செய்து, அதை ஆலயமாக மாற்றிவிட்டார்கள். அவர் சமாதிக்கு சென்று வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா அருளாசிகளை வழங்கிவருகிறார்.

அந்த ஆலயம் கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைதியான சூழலில் காணப்படுகிறது.