Advertisment

முதல்வன் 100 - பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/om/first-100-b-balajiganesh

ந்த காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். விநாயகர் எந்த வடிவிலும் இருப்பார். பிடித்து வைத்த தெல்லாம் பிள்ளையார் என்பார்கள். அப்படிப்பட்ட சிறப்புமிக்க விநாயகரைப் பற்றிய 100 அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

Advertisment

1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துகள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்றிணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும். விநாயகர் தன் கையில் பாசாங் குசத்தை ஏந்தியிருக்கின் றார். தன்னை அடக்குவார் எவரும் இலர் என்ற குறிப்பை இதன்மூலம் உணர்த்துகிறார்.

Advertisment

4. 'அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப' என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்து கிறது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளைப் பொழிகிறார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழி லையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்னும் ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகிறார்.

7. விநாயகர் தாய்- தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் 'ஆர்' என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பெயர் பெற்றார்.

8. முருகன், அம்பிகை, இராமர், கிருஷ்ணர் முதலிய இறை உருவங்கள் சிற்ப முறைப் படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப இலக்கனத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படியல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தைகூட பிடித்து வைத்தால் போதும்; பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம்- இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரைச் செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய அறுகம்புல் மிக விருப்பம். அறுகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப்பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தியன்று நாம் பூஜைசெய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். நம் கட்டைவிரல் அளவைப்போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்கவேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்திவரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்கவேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்துவருவதுடன் நைவேத்தியங்களும் செய்யவேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்துவிட வேண்டும்.

14. பார்வதிதேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்துதான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்தநிலையை டைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக் கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்- திருவண்ணாமலை தேசி

ந்த காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். விநாயகர் எந்த வடிவிலும் இருப்பார். பிடித்து வைத்த தெல்லாம் பிள்ளையார் என்பார்கள். அப்படிப்பட்ட சிறப்புமிக்க விநாயகரைப் பற்றிய 100 அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

Advertisment

1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துகள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்றிணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும். விநாயகர் தன் கையில் பாசாங் குசத்தை ஏந்தியிருக்கின் றார். தன்னை அடக்குவார் எவரும் இலர் என்ற குறிப்பை இதன்மூலம் உணர்த்துகிறார்.

Advertisment

4. 'அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப' என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்து கிறது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளைப் பொழிகிறார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழி லையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்னும் ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகிறார்.

7. விநாயகர் தாய்- தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் 'ஆர்' என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பெயர் பெற்றார்.

8. முருகன், அம்பிகை, இராமர், கிருஷ்ணர் முதலிய இறை உருவங்கள் சிற்ப முறைப் படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப இலக்கனத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படியல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தைகூட பிடித்து வைத்தால் போதும்; பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம்- இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரைச் செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய அறுகம்புல் மிக விருப்பம். அறுகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப்பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தியன்று நாம் பூஜைசெய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். நம் கட்டைவிரல் அளவைப்போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்கவேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்திவரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்கவேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்துவருவதுடன் நைவேத்தியங்களும் செய்யவேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்துவிட வேண்டும்.

14. பார்வதிதேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்துதான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்தநிலையை டைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக் கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத் திலுள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளை யார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் பெற்று மோட்சமடை வர் என்று விநாயக புராணம் கூறுகிறது.

22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அறுகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச் சனை செய்யவும் மாலையாக அணிவிக்க வும் மிகவும் உகந்தவையாகக் கருதப் படுகின்றன.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்னும் பெயரில் சிம்ம வாகனத்திலும், த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்சகல்ப கணபதி தியான மூல மந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால், வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வநிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்றுப் படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை "சோமாஸ்கந்த வடிவம்' என்றும், இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென்னிந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து, விநாயாக சதுர்த்தியன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தியன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது. வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லதென கணேச உத்தர தாயினி உபநிஷத் தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னி மரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களைத் திருமணம் செய்துகொண்டதாகப் புராணம் சொல்கிறது. வட இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத் தழுவிக்கொண்டிருப் பதை போல உருவம்கொண்ட விநாயகர் சிலை கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலம் வாழலாமென்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்குச் சென்று எட்டுக் கொழுக் கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்திலுள்ள கட்ட விநாயகர் கோவிலில், தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சிவீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்னும் சிவத்தலத்தில் எழுந் தருளியுள்ள இந்த கணபதியை வழி பட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயல்களுக்குத் துணையாக இந்த கணபதி விளங்குவார்.

34. முதன்முதலாக விநாய கருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்குநாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழி பாடு செய்து, அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்துவந்தால் மாங்கல்ய தோஷம் அகலும். திருமணத் தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்திலுள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து, இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூல நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன், வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களும் கலந்த வஸ் திரத்தை விநாயகருக்கு அணி வித்து, மூன்றுவித நைவேத்யங் களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழி பட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது தசை நடக்கும்போது அதற் குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மிக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக் குரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையறிந்து அந்த திசை நோக்கியிருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப் பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து, "நல்ல குழந்தை யைத் தரவேண்டும்' என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமிமலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதி யைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரி லுள்ள சிவன் கோவிலில் "விநாயகர் சபை' உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்தவொரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகுப் பிள்ளையார் உள்ளார். இவர்மீது மிளகை அரைத்துப் பூசி வழிபட்டால் மழை கொட்டோகொட்டென்று கொட்டுமாம்.

vv

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளை களைப் பெற்றவர்கள், அவர்களுக்குள் சண்டைகள் வராமலிருக்க விநாயகரை வேண்டிக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரைச் சுற்றிவந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம். பொதுவாக மேற்கூறிய மரங்களெல்லாம் மருத்துவகுணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களைச் சுற்றிவந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங் களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்துப் பூஜை செய்வதை கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப் பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபடவேண்டும்.

47. தேரழுந்தூரிலுள்ள வழிகாட்டும் விநாயகர், திருஞான சம்பந்தருக்கு சிவாலயத் திற்கு வழிகாட்டியதால் இப்பெயரோடு விளங்குகிறார். 48. வெள்ளெருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து, அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டுவந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தை யும் அருள்பவர் ரண மோட்ச கணபதியாவார்.

50. "வி' என்றால், "இதற்கு மேல் இல்லை' எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்குமேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் "க' என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண' என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி' என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, விக்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல; பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடப்படும் சிறப்பும் இவருக்குண்டு. 53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாகப் பரவியுள்ளது.

54. சென்னை அடையாறிலுள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு, ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் இரண்டு லட்சத்து ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் விநாயகர் சிலைகள்வரை வைக்கப்பட்டலாம்.

56. தெருவுக்குத் தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங் களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் நான்காயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக் கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில், சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயப் பெருமான் கோவிலில் காட்சிதருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்னும் திருநாமத்துடன் இவர் அருள்தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகராவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறிவிட்டார்.

60. தும்பிக்கையில்லாத பிள்ளையாரை நன்னிலம்- பூந்தோட்டம் அருகேயுள்ள சிதலைப்பதியில் காணலாம். இங்கு இவர் வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை மடித்து, இடக்கையை இடக்கால்மீது வைத்து, வலக்கையை சற்று சாய்த்து அபயகரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையிலுள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்திதேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங் குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சிதருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்று பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன்கோவிலில் காட்சிதருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயம்புத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி, அகலம் 10 அடி. ஏணிப்படிமூலம் தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படு கிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந் தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலை யில் புற்று மண்ணில் சுயம்பு வாகத் தோன்றிய பிள்ளையாரின் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சிதருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் சிதம்பரம் தெற்கு வீதியிலும், திருசெங்காட்டங்குடியிலும் உள்ளன. நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகேயேள்ள அமணேசுவரர் கோவிலிலுள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளிமீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சிதருகிறார்கள்.

73. மயில்மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவிலுள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும், புலிக்கால் களும், பெண்ணின் மார்புமுடைய விநாயகர், வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி யம்மன் கோவிலிலுள்ள நவகிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலிலேள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கை யில் அமிர்த கலசத்துடனும் காட்சிதருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை யாழ்வார் என்னும் திருநாமத்துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வைக் கோளாறு உடையவர்கள், சுவாமிமலை முருகன் கோவிலிலுள்ள "நேத்ர கணபதி' எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரையடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் "தான்தோன்றி விநாயகர்' எனப் படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரை யும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1,400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதபுரி என்ற ஊரில் எட்டடி உயரத்தில் பிரம்மாண்ட நவகிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

82. ஈச்சனாரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

83. திருவாரூரில் ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்த சர்க்கரைப் பிள்ளையார் உள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபமேற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

84. தஞ்சை மாவட்டம், திருப்பனந் தூரிலிருந்து சீர்காழி செல்லும் வழியில், பந்தநல்லூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்குமென்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

85. நமது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

86. பிள்ளையார்பட்டியிலுள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தயிருப்பதை சிறப்பானதாகச் சொல்கி றார்கள்.

87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில், கிழக்கு திசையிலிருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

88. விருத்தாசலம் பழமலை நாதர் கோவிலில் பூமிக்கு அடியிலுள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்திலுள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

91. நாகை மாவட்டம், நரிமணத்திலுள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

92. நெல்லை மாவட்டம், சீவலப்பேரி யிலுள்ள இரட்டை விநாயகர்கள் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள்ளிருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கைத் துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து, வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்.

95. நெல்- மரத்தடியிலுள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

96. மற்ற கடவுள்களைவிட, விநாயகர் பலன்களை முந்திவந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

97. திண்டுக்கல் கோபால சமுத்திரக் குளக்கரையிலுள்ள 108 விநாயகர் கோவிலில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

98. "ஓம் வக்ரதுண்டாய ஹீம்' என்பதுதான் சடாக்ஷர மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

99. ராஜராஜ சோழன் சிறந்த சிவபக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையிலுள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள்ளிருக்கும் விநாயகர்களைதான் அவர் வணங்கி வந்தார்.

100. புண்ணியத்தைத் தேடி காசி மாநகருக்குச் செல்பவர்கள் அங்குள்ள அனைத்துவிதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள், சடங்குகளை முடித்துக் கொண்டு வரும்போது, முடிவில் ஒரு சிறிய ஆலயத்திலுள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால்தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.

om010822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe