1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் நீங்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் நன்மையாகவும் லாபமாகவும் அமையும். தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, வழக்கு வரும் வாய்ப்புள்ளது. எனவே நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றமில்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். செய்துவரும் தொழிலை அப்படியே செய்துவரவேண்டும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வராது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் இராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். வியாபாரிகள் அதிகக் கொள்முதல் செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். மனைவியால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத்தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

Advertisment

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத்திலும் மதிப்பு கூடும். இதுவரை உங்களை வாட்டிவதைத்த கடன் தொந்தரவு குறையும். தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்துசேரும். வீட்டில் இதுவரை இருந்தவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் தாய், தந்தையர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாக செயல் படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்கள் உயர்படிப்பு எண்ணம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் எதிர்பாராத பதவிகளை தலைமையின் பாராட்டுடன் பெறுவார்கள். ஒருசிலருக்கு இருந்துவந்த நோய் நீங்கும்.

Advertisment

dd

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் எப்போதும் சிந்தித்து செயல்படுவீர்கள். இந்த மாதம் உங்களது சிந்தனைகளை செயலாக்கிக் காட்டுவீர்கள். கலைத்துறை யில் பணியாற்றுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அனைத்துத் தரப்பு தொழில்புரி வோருக்கும் இந்த மாதம் கூடுதல் வரவுகள் வரும். அதேபோல கூடுதல் செலவுகளும் வந்துசேரும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக எளிதாகக் கடன் கிடைக்கும். உங்களைவிட்டுப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். பிள்ளைகளால் பெற்றோர் மனமகிழ்ச்சி அடையும் மாதம். குடும்பத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். தொழிலதிபர்கள், புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். எதிர்பார்த்தபடி வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். உடல்நிலை தெம்பாக இருக்கும். ஒருசிலருக்கு சிறு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனங் களில் செல்லும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேணடும். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வேலைப்பளு கூடும். ஒருசிலருக்கு திடீரென கட்டாய மாறுதல் வரும். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் வேலையில் சேர்வது நல்லது. அந்த மாறுதல் இடம் சிறப்பானதாக இருக்கும். ஒருசிலருக்கு வீடுகட்டும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் மனவுறுதி கொண்டவர்கள். இந்த மாதம் எடுத்துக்கொண்ட காரியம் அனைத் திலும் வெற்றியையே காண்பீர்கள். ஒரு சில மாணவர்கள் தேர்வில் முதல் மதிப் பெண்களைப் பெற்று தமிழகம் முழுவதும் பாராட்டைப் பெறுவார்கள். எதிர்பார்த்தபடி உயர்படிப்பும் கைகூடும். பெற்றோர் ஆதரவுண்டு. உடல்நிலையை சற்று கவனித்துக்கொள்ள வேண்டும். எதிர்பார்த்ததைவிட பணவரவுகள் கூடுதலாகக் கிடைக்கும். அரசு ஊழியர் களுக்கு வரவேண்டிய சலுகைகள் கேட்காமலேயே வந்துசேரும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் நிதானத் துடன் செயல்படவேண்டும். காவல்துறை வழக்குகள் வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் அலுவலகத்தில் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் இந்த மாதம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்களுக்கு உயர்படிப்பு கைகூடும். இதுவரை விலகியிருந்த சொந்தம் உங்கள் வீட்டில் பெண் எடுக்க அல்லது கொடுக்க சம்மதித்தால் யோசித்துச் செய்யுங்கள். சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஏற்று முதலாளிகள் உரிய வசதி செய்வார்கள். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கை.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் சமயோசிதமாகப் பேசும் திறமை உள்ளவர்கள். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியம் இனிதே நடைபெறும். உடல்நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறி, நல்ல நிலைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டபடி நடக்கும். திருமணமாகாமலுள்ள இளைஞர்களுக்கு திடீர் திருமணம் நடக்கலாம். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். உடன்பிறந்த மூத்த சகோதரி உங்களுக்கு எதிராக வரக்கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாணவர்கள் பிடிவாத குணம் அதிகரித்து பெற்றோ ருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். வியாபாரிகள் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொண்டால் நல்ல லாபம் வரும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையை நினைத்தபடி விரிவுபடுத்தலாம். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வேலைப்பளு கூடும். கலைத்துறையினர் ஏற்றம் பெறும் மாதம். ஒருசிலர் வாகனத் தில் விபத்துகளை சந்திக்க நேரலாம். கவனமாகச் செல்லவேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்தவர்களால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்துமுடிப்பீர்கள். வியாபாரிகள், இரட்டிப்பாக லாபம் பெறுவீர்கள். ஓட்டலில் பணி செய்வோர் திட்டமிட்டபடி தனியாகத் தொழில் துவங்கும் வாய்ப்புகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். இதுவரை சென்றுவரமுடியாத தெய்வதரிசனப் பயணம் தடையின்றி நடக்கும். பெற்றோர் உடல்நிலையில் மருத்துவச் செலவுகளைக் கொண்டுவரும். உங்களை நேசித்த நண்பரைப் பிரியவேண்டிவரும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணம் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். களவுபோக வாய்ப்புள்ளது. தொழிலதிபர்- தொழிலாளிகள் பிரச்சினை சுமுகமாக நீங்கும். லாபம் குறையாது. புதிய யுக்திகளைக் கையாண்டு பொருட்களை விற்பனை செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்களின் உயர்படிப்பு திட்டம் நிறைவேறும். அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிட்டும். மனதுக்குத் தெம்பளிக்கும் வகையில் மாறுதல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் செயலால் மற்றவர்கள் பயன்பெறும் மாதமிது. பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும் மற்றவர்கள் உங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். அதனால் சிரமத்தை அடைவீர்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தொழில்விருத்தி செய்வார்கள். மறைமுக எதிரிகளால், வியாபாரிகள் லாபம் குறையும் நிலையை அடைவார்கள். எனவே நிதானமான வியாபாரம் நன்மையைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குறைவு வரக்கூடும். எனினும் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். வெளிவட்டாரத் தொடர்புள்ளவர்களின் காரியம் வெற்றிபெறும். அரசியல்பிரமுகர்கள் திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து பொதுமக்கள் பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேறு ஊருக்கு மாறுதலில் சென்று, மீண்டும் நினைத்த இடத்திற்கு வருவார்கள். அரசாங் கத்தில் எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைக்கும். காவல்துறையில் பணிபுரிவோர் கூடுதல் வேலைப்பளுவை சந்திப்பார்கள். புதிதாகத் திருமணமான தம்பதியர் இருவீட்டாராலும் போற்றப்படுவார்கள். இதுவரை பெற்றோருக்கு அடங்காமல் இருந்துவந்த பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக்கேட்டு நடப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் எப்போதுமே வேலைகளை சுணக்கமின்றி செய்வீர்கள். இந்த மாதம் முழுவதும் பொருளாதாரம் உயரும். தடைப்பட்டுவந்த சுபகாரியம் நடைபெறும். விலகிச் சென்றவர்கள் வந்துசேர்வார்கள். மற்றவர்களுக்காக செலவுசெய்யும் நீங்கள் குடும்பத்தாரையும் நினைப்பீர்கள். தொழிலாளிகள் தொழிற்சாலைகளில் ஆர்வமுடன் உழைப்பார்கள். எனவே தொழிலாளர் பிரச்சினை மாறும். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். இதுவரை இருந்துவந்த நோய் உபாதைகள் குறையும். உங்கள் பேச்சைக் கேட்காமல் இருந்துவந்த குழந்தைகள் இனி பேச்சைக்கேட்டு நல்லபடியாக நடப்பார்கள். வியாபாரிகள் அலைச்சலை சந்தித்தாலும், அலைச்சலுக்கேற்றவாறு வருமானம் கூடும். அரசு ஊழியர்கள் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதோடு, அதிகாரிகள் பாராட்டையும் பெறுவார்கள். தற்காலிகப் பணிநீக்கத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வரும். அரசாங் கத்திலிருந்து வரவேண்டிய பாக்கிகளும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வியை அடைவார்கள். திருமணமாகி குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதியருக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் வரும். பெண்களுக்கு வரவேண்டிய பூர்வீகச்சொத்துகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் மதிப்பு, மரியாதை யுடன் வாழ்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களை வாட்டிவதைத்த உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வேலையில்லாமல் உள்ள சில படித்த இளைஞர்கள் இராணுவம் போன்ற அரசுத் துறைகளுக்குச் செல்வார்கள். குடும்பத்தாரால் பெண்கள் பாராட்டப்படுவார்கள். பணவரவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல் செல்வாக்கு கூடும். புதுமனைப் புகுவிழா, திருமணம் போன்ற சுபகாரியங்களில் அரசியல் பிரமுகர்கள் தலைமையேற்று நடத்துவார்கள். ஆன்மிகச் சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு பணியைச் செய்வார்கள். இதுவரை ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, அரசாங்கத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைகள் (அரியர்ஸ்) கிடைக்கும். புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டு படிப்பு கைகூடும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174