கந்த சஷ்டி 7-11-2024
நமது தேசத்தில் நிறைய விரதங் களும், நோன்புகளும் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவ்வளவு விரதங்களால் நிஜமாகவே நன்மை ஏற்படுகிறதா என்றால், இதற்கு மகாபாரதத்தில் காந்தாரியின் விரதம் பதில் கூறும்.
பார்வையற்ற திருதாஷ்டிரனைத் திருமணம் செய்துகொண்ட காந்தாரி, தன் கணவனைப் போலவே தானும் பார்வையற்றவளாக இருப்பதற்காக, தன் கண்களைக் கட்டிக் கொண்டாள். இந்த பதிபக்தி நிலை, அவளுக்குள் அளப்பறிய சக்தியை உருவாக்கியது.
பாரதப் போர் சமயத்தில், தன் மகன் துரியோதன னைக் காத்து ரட்சிக்க, தனது பார்வைப் பலனைக் கொடுப்பதன்மூலம் இயலும் என நம்பிக்கை கொண்டாள்.
இதனால், துரியோதனனிடம், குளித்துவிட்டு உடையில்லாமல் தன்முன் வரச் சொன்னாள்.
இதனை அறிந்த, கிருஷ்ணர். "ஆஹா, முதலுக்கே மோசமாகிவிடுமே! இவ்விதம் காந்தாரியின் சக்திமிகுந்த பார்வை துரியோதனன்மேல் பட்டால் அவனை யாராலும் வெல்லமுடியாது; அவனுக்கு மரணம் என்பதே இல்லாமல் போய்விடும்' என எண்ணினார். இதைத் தடுக்க திட்டமிட்ட கிருஷ்ணர் துரியோதனனைப்
கந்த சஷ்டி 7-11-2024
நமது தேசத்தில் நிறைய விரதங் களும், நோன்புகளும் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவ்வளவு விரதங்களால் நிஜமாகவே நன்மை ஏற்படுகிறதா என்றால், இதற்கு மகாபாரதத்தில் காந்தாரியின் விரதம் பதில் கூறும்.
பார்வையற்ற திருதாஷ்டிரனைத் திருமணம் செய்துகொண்ட காந்தாரி, தன் கணவனைப் போலவே தானும் பார்வையற்றவளாக இருப்பதற்காக, தன் கண்களைக் கட்டிக் கொண்டாள். இந்த பதிபக்தி நிலை, அவளுக்குள் அளப்பறிய சக்தியை உருவாக்கியது.
பாரதப் போர் சமயத்தில், தன் மகன் துரியோதன னைக் காத்து ரட்சிக்க, தனது பார்வைப் பலனைக் கொடுப்பதன்மூலம் இயலும் என நம்பிக்கை கொண்டாள்.
இதனால், துரியோதனனிடம், குளித்துவிட்டு உடையில்லாமல் தன்முன் வரச் சொன்னாள்.
இதனை அறிந்த, கிருஷ்ணர். "ஆஹா, முதலுக்கே மோசமாகிவிடுமே! இவ்விதம் காந்தாரியின் சக்திமிகுந்த பார்வை துரியோதனன்மேல் பட்டால் அவனை யாராலும் வெல்லமுடியாது; அவனுக்கு மரணம் என்பதே இல்லாமல் போய்விடும்' என எண்ணினார். இதைத் தடுக்க திட்டமிட்ட கிருஷ்ணர் துரியோதனனைப் பார்த்து, "அடடா... என்னதான் தாயார் என்றா லும், நீ ஒரு வளர்ந்த மனிதன். இவ்விதம் முழுமையாக ஆடையின்றி நிற்கலாமா?'' என வினவ, அவனுக்கும் அது சரியாகத் தோன்றியது. எனவே ஒரு வாழையிலையை இடுப்பில் கட்டிக்கொண்டு தன் தாயின்முன் சென்று நின்றான்.
காந்தாரி வெகு வருடங்களுக்குப்பின் தன் கண்ணின் கட்டை அவிழ்த்து தன் புத்திரனைப் பார்க்க, அவனோ இடுப்பில் இலையுடன் நின்றிருந்தான். அவளுக்கு இது கிருஷ்ணனின் வேலை என்று புரிந்துவிட்டது. வருத்தத்துடன் மௌனமானாள்.
பாரதப் போரில், துரியோதனனை பீமன் எவ்வகையில் தாக்கினாலும் அவன் இறக்கவேயில்லை. கடைசியில் கிருஷ்ணனின் ஜாடையைப் புரிந்து கொண்ட பீமன் துரியோதனனின் தொடையில் அடித்தபோது அவன் மரணமடைந்தான்.
இதற்குக் காரணம், காந்தாரியின் விரதமும், அதனால் ஏற்பட்ட அவளின் பார்வை சக்தியுமாகும். அந்தப் பார்வை படாத இடத்தில் அடித்ததால் துரியோதனனின் பலமின்றி இறக்க நேர்ந்தது.
விரதம் இருப்பதற்கான மிகுந்த பலனை இந்த மகாபாரத சம்பவம் தெளிவாக எடுத் துரைக்கிறது. ஆக, இந்த வலிமையான காரணத் தால் நிறைய விரதங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
சதுர்த்தி விரதம் விநாயகருக்கும், ஏகாதசி விரதம் விஷ்ணுவுக்கும், திரயோதசி விரதம் சிவனுக்கும், பிரதோஷ விரதம் சிவன்- பார்வதி- நந்திக்கும், பௌர்ணமி விரதம் அம்பாளுக்கும்.
கிருத்திகை விரதம் முருகனுக் கும் என விதவிதமான விரதங் களை மக்கள் கடைப் பிடிக்கி றார்கள்.
இதில் சஷ்டி விரதம் மிக முக்கியமானது. இதிலும் மகா கந்தசஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் வளர்பிறை பிரதமையில் தொடங்கி, தொடர்ந்து ஆறுநாட்கள் கடைப்பிடிக்கப் படுவதாகும்.
சஷ்டி விரதம் கொண்டாடப்படும் காரணம் நீங்கள் எல்லாரும் அறிந்ததுதான். ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயாமலத்தின வடிவமாகிய தாரகனையும் எம்பெருமான் முருகன், போரிட்டு அழித்த நிகழ்வே கந்தசஷ்டியாகும்.
பொதுவாக கந்தசஷ்டி விரதம் குழந்தைப் பேற்றுக்காக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனைக் கொண்டுதான் "சட்டியிலே இருந்தால் அகப்பையில் வரும்' எனும் முதுமொழி உள்ளது. அதாவது சஷ்டி விரதமிருந்தால் கருப்பையிலே கரு வரும் எனும் உள்ளர்த்தம் கொண்டுள் ளது.
பிள்ளை பெறுவதற்கு சஷ்டி விரதம் மேன்மையான பலன்தரும் என்பது உண்மை.
வேறு யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கவேண்டும்?
ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக இருப்பின், அவர்கள் சஷ்டி விரதம் இருக்கவேண்டும்.
நல்ல மனை வாங்க விரும்புபவர்கள் சஷ்டி விரதம் இருக்கவேண்டும்.
விவசாயப் பெருமக்கள் சஷ்டி விரதம் இருப்பின், பயிர் செழிப்பாகும்.
8-ஆமிடத்தில் செவ்வாய் இருப்பவர்கள் சஷ்டி விரதம் இருப்பின், மண வாழ்க்கை பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு நீடித்து நிலைக்கும்.
காவல்துறை, தீயணைப்புத்துறையில் பெரிய பதவி கிடைக்கவேண்டுமெனும் லட்சியம் உடையவர்கள் சஷ்டி விரதம் இருக்கவேண்டும்.
ஆடு, மாடு வளர்ப்பவர்கள் சஷ்டி விரதமிருக்க, கால்நடை பெருக்கம் ஏற்படும்.
சுரங்கத்தில் அல்லது அதுபோன்று பள்ளத்தில் வேலை பார்ப்பவர்கள் சஷ்டி விரதமிருந்தால், முருகர் அருகிலிருந்து காத்தருள்வார்.
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் கண்டிப்பாக சஷ்டி விரதம் இருக்கவேண்டும். என்னப்பன் கந்தன் மருத்துவரையும் நோயாளியையும் ஒருசேர காப்பாற்றுவார். ரியல் எஸ்டேட் சார்ந்தவர்கள் சஷ்டி விரதமிருப்பது நல்லது.
மின் ஊழியர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் இந்த விரதமிருந்தால், முருகன் மின்சாரத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பார்.
உங்கள் வீட்டில் யாருக்காவது அறுவை சிகிச்சை நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், வீட்டில் யாராவது சஷ்டி விரதம் இருங்கள்.
சஷ்டியின்போது பொதுவாக எதுவும் சாப்பிடாமல் விரதமிருப்பர். சிலர் பழச் சாறு அல்லது பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வர். சிலர் ஒருபொழுது என வகைப் படுத்திக்கொள்வர்.
இந்த சாப்பிடும்விதம் பற்றி அதிகம் மெனக்கெட வேண்டாம். எம்பெருமான் முருகனை மனதார நினைக்கிறார்களா என்பதே இதில் முக்கியம். சஷ்டி கவசம் கூறுவது, இன்னும் உங்களுக்குத் தெரிந்த முருகன் பற்றிய ஸ்தோத்திரப் பாராயணம் மிக நன்று.
2-11-2024 அன்று சஷ்டி ஆரம்பம். 7-ஆம் தேதி கந்த சஷ்டி, சூரசம்ஹாரம். முருகன் பாதம் பற்றுவோம்; வளம் பெறுவோம்.