"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை; இகழ்வார்க்கு

ஏறுபோல் பீடு நடை.'

-திருவள்ளுவர்

ஒரு மனைவி, மனைவிக்கான பெருமையை விரும்பாது இருந்தால் அவள் மனைவிக்கான கடமைகளை ஆற்றமாட்டாள். அதாவது தன் கற்பை, தன் கணவனை, தன் குடும்பத்தின், குடியின் பெருமையை, திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளைக் காக்கமாட்டாள். அது அக்குடும்பத்திற்கு இகழ்ச்சியையும் வீழ்ச்சியையும் தரும். புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள் தம்மைப் பழித்துப் பேசுவோர்முன்பு தலைநிமிர்ந்து நடக்கமுடியாமல் குன்றிப் போய்விடுவார்கள்.

Advertisment

மிதிலாபுரிக்கு அருகில் சந்திராபுரம் என்ற ஊரில் வாசுதேவானந்தர் என்ற ஸ்ரீவித்யா உபாசகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவர் வேதமுறைப்படி நித்திய அனுஷ்டா னங்களைக் கடைப்பிடித்து வந்தார். இவரது அனுஷ்டானங்களையும் ஞானக்கல்வியையும் கண்டு அவ்வூர் மன்னன் உமாகாந்தன் இவரை தன் ராஜகுருவாக நியமித்தார்.

வாசுதேவானந்தரின் பிள்ளையான சம்புநாதன் தந்தையைப்போலவே சகல கலைகளிலும் திறமைசாலியாக விளங்கினார். வாசுதேவரின் காலத்திற் குப்பின் சம்புநாதன் ராஜகுருவாக விளங்கினார்.

இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந் தது. அவனுக்கு சர்வானந்தன் எனப் பெயரிட்டார். அவன் ஆலயம் சென்று அம்மையப்பனை வணங்குவதோடு புற்றுள்ள இடம் கண்களுக்குத் தென்பட் டால் அங்கு பாலூற்றி வழிபடுவான்.

Advertisment

அவன் ஆஜானுபாகுவாக இலட்சண மாக இருந்தானே தவிர கடுகளவுகூட கல்வி ஏறவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த சம்புநாதன், "தாயே உன்னை பூஜிக்கும் ஞானப்பரம்பரையில் வந்த எனக்கு இப்படிப்பட்ட பிள்ளையை கொடுத்தாயே... இதுதான் உன் திருவுள்ளமா' என அம்பிகையிடம் முறையிட்டு அழுதார்.

இந்நிலையில் ஒருநாள் அரண்மனையில் பண்டிதர்களும் ஜோதிடர்களும் கூடி, சதுர்த்தசி எத்தனை நாழிகைக்குமேல் வந்தால் அமாவாசை யாகும்... என்ற விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் சபையரங்கில் நுழைந்த சர்வானந் தன் விவாத்தின் பொருளை அறியாமல், "இன்று சதுர்த்தசியா, அமாவாசையா என்று ஏன் வாதம் செய்கிறீர்கள். இன்று பௌர்ணமி அல்லவா...'' என்றான். அதைக்கேட்டு பலரும் சிரித்தனர். சம்புநாதரோ பிள்ளையின் அறிவின்மையை எண்ணி தலைகுனிந்தார்.

அரசர், "பாலகா... எழுத்தறிவே இல்லாத நீ, இங்கு வந்ததே தவறு; சந்தர்ப்பம் தெரியாமல் பேசியது, அதைவிட பெரிய தவறு. இனி. கற்றோர் குழுமியுள்ள இடத்தில் பேசத் துணியாதே...' என்று அறிவுரை கூறினார். "இதனால் கல்வி அறிவு பெற்றபின்னரே நாடு திரும்புவேன்' எனக்கூறி வெளியே ஓடினான் சர்வானந்தன்.

பின்னாலேயே, அவன் தந்தையுடன் கல்விகற்ற தேவி உபாசகரான பூர்னானந்தரும் ஓடினார். சிறிது தொலைவில் மதங்காசிரமத்தை நெருங்கிய சர்வானந்தன் அங்கிருந்த பனை மரத்தைப் பார்த்தவுடன் கல்வி கற்க முதலில் ஏடுகளை தயாரிக்கப் போகிறேன்... என்றபடியே பனை மரத்தில் ஏறினான். அங்கு பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருந்தது. அதைப்பார்த்த சர்வானந்தன் பாம்பைப் பிடித்து பூமியில் வீசினான்.

விழுந்த பாம்பு ஒரு துறவியாக மாறி, "அடேய்... குழந்தாய் இறங்கி வா...' என்றார். முரட்டுத்தனமும், அசட்டுக்குணமும் கொண்ட சர்வானந்தன், "யார் நீங்கள்... நான் கல்வி கற்பதற்காக ஓலை எடுக்கிறேன். ஏன் தடுக்கிறீர்கள்'... என கத்தினான்.

"உனக்கு வித்யை உபதேசிப்பதற்காகவே வந்திருக்கிறேன்' என்றார் துறவி. சர்வானந்தன் குதிக்க அவனை அங்கிருந்த தடாகத்தில் முழுகச் செய்து, அவன் வலது காதில் மந்திரோபதேசம் செய்தபின் மறைந்தார் துறவி. அப்போது அங்குவந்த பூர்னானந்தர் விவரம் அறிந்து, "குழந்தாய் சர்ப்பமாக வந்தது குண்டலினி சக்தி தேவியே. அவள் கூறிய மந்திரத்தை சர்வாசனத்தில் இருந்து ஜெபம் செய்தால் ஒரு முகூர்த்த காலத்திற்குள் மந்திர சித்தி ஏற்படும். நான் குண்டலினி சக்தியை மேலேற்றி பிரேதம்போல் இருக்கிறேன். என்மேல் அமர்ந்து ஜெபம் செய்...' என்றார்.

சர்வானந்தன் அப்படியே ஜெபம் செய்து, உள் மனதில் மந்திரம் சொல்லிச் சொல்லி மௌனித்தால் வருவாயா?

தந்திர வாழ்க்கையின் தர்மத்தில் தவித்துக் கொதித்தால் வருவாயா?

இரு கண்ணில் நீர்வடிய இமைமுழுவதும் அதில் நனைய கருணை முகம் நோக்கி கைகூப்பி வணங்கினால் வருவாயோ?

உள்ளுக்குள் அழுகிறேன் உன்னையே தொழுகிறேன் கல்லுக்குள் தேரையாய் உன் கருணைக்காய் வாழ்கிறேன்.

புல்லும் புன்னைக்கும் பூபாள வேளைகளில்

சொல்லுக்குள் சிக்காத சொக்கன் ரகசியத்தை

உள்ளுக்குள் புரிய வைக்க உமையாள வருவாயா!

உரிய வரம் தருவாயா!''

"என்று தியானித்து வணங்க அம்பிகை அவருக்கு காட்சிதந்து கல்வி கேள்விகளில் வல்லவனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும் மாற்றினாள்.

ராஜசபைக்கு வந்த சர்வானந்தன் தன் வலது கையைத் துக்கி அமாவாசையன்று முழுநிலவை வரவழைத்து காட்டினான்.

தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்கு அம்மையப்பன் ஒருபோதும் தன் கருணையைப் பொழிய மறப்பதும் இல்லை.

மறுப்பதும் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குவதோடு; புகழை விரும்பு கின்ற வாழ்க்கைத் துணையை அமைத்து, வாழ்வை அழகுறச் செய்கின்றதொரு உன்னதமான திருத்தலம்தான் மணல்மேடு ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: நாகநாத சுவாமி.

இறைவி: சௌந்தர நாயகி.

விசேஷமூர்த்தி: ஆதிசேஷன், ராகு- கேது இடும்பன்.

ஊர்: மணல்மேடு.

தீர்த்தம்: நாக தீர்த்தம்.

தலவிருட்சம்: புன்னை மரம்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், காவிரி வடகரை ஸ்தலங்களில் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுவதும், ஆதிசேஷனால் பூஜிக்கப் பட்டதும், ராகு- கேதுவால் வழிபடப்பட்ட பெருமையுடன், மூர்த்தி தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு திருத்தலம்தான் மணல்மேடு நாகநாத சுவாமி திருக்கோவில்.

தல வரலாறு

ஒருகாலத்தில் இந்த இடம் புன்னை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இதன் விளைவாக இங்குள்ள நிலம் மிகவும் கனமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந் தது. புன்னை மரம் சிவ பெருமானுடன் தொடர்பு டையது.

பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேஷன் அதன் பாரம் தாங்காமல் தவித்துத் தள்ளாடினான். அப்போது தான் பலம் பெறுவதற்காக இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினான். இறைவன் அவன் முன்தோன்றி "என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க "தாங்கள் என் பெயரிலேயே இத்தலத்தில் எழுந்தருள வேண்டும்'' என்றான் ஆதிசேஷன்.

இறைவனும் அதற்கு இசைந்து இத்தலத் தில் நாகநாதன் என்ற பெயரிலேயே எழுந்தருளி னார். பூமியின் பாரத்தைத் தாங்கும் பலத் தையும் ஆதிசேஷனுக்கு கொடுத்தருளினார்.

இங்குள்ள தீர்த்தம் நாகதீர்த்தம் என்றழைக்கப் படுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் புன்னை மரம்.

திருமணக் கோலத்தில்....

ராகு- கேது இருவரும் திருமணக் கோலத் தோடு இத்தலம் வந்து தரிசித்து பேறு பெற்றனர். எனவே ராகு, கேதுவினால் தடைப்படும் திரு மணங்கள் மற்றும் அனைத்துக் காரியங் களுக்கும் பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது. மேலும் ஆதிசேஷனுக்கு இறைவன் காட்சி யளித்து அருள்புரிந்த தலம் ஆதலால் நாகதோஷம் உள்ளவர்கள் இத்தலம் வந்து பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்று தலபுராணம் சொல்கிறது.

இடும்பனின் சிறப்பு

இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என இரு மலைகளை பூஜித்து வந்திருக்கிறார் அகத்தியர். அகத்தியரின் இருப்பிடமோ பொதிகைமலை. இமயமலையில் நெடுங்காலம் தங்கமுடியாது. அதனால் கிரிகள் இரண்டையும் பொதிகைமலைக்கு எடுத்துச்செல்வது என தீர்மானித்தார். எனவே கேதாரமலை வரை கொண்டுவந்தார். அங்கே இளைப்பாறினார்.

சூரபத்மனின் நண்பன் இடும்பாசூரன் சூர பத்மனைப்போல் இல்லாமல் முருகனின் அருள்வேண்டி கேதாரமலையில் தவமிருந்தான். அவன் அகத்தியரைக் கண்டதும் ஓடிவந்து வணங்கினான். இடும்பனை ஆசீர்வதித்த அகத்தியர், "யாரை நோக்கி தவம் இருக்கிறாய்?''

என்று கேட்டார். "சூரபத்மனைப்போல நானும் அழியாமல் இருக்க முருகனை வேண்டி தவமிருக்கிறேன்'' என்றான். அகத்தியர், "முருகனின் அருள்பெற சுலபமான வழி ஒன்று கூறுகிறேன்.

சிவகிரி, சக்திகிரி இரண்டும் பெற்றோர் அம்சம். இவற்றை பொதிகை மலைவரை துக்கி வந்து உதவினால் நீ முருகனின் அருள்பெறுவாய்'' என்றார். இடும்பன் மலைகளைத் தூக்க பல விதங்களிலும் முயற்சிசெய்தான். ஆனால் முடியவில்லை. முடியவில்லையே என்றான்.

அகத்தியர் முருகனின் மூலமந்திரங்களை பக்தியோடு உச்சரித்தார். அஷ்ட நாகங்கள் கயிறுகளாக மாறின. பிரம்ம மந்திரம் ஜெபித்தவு டன் பிரம்மதண்டம் துலா தண்டமாக மாறியது. கயிறான நாகங்களை துலாதண்டத்தின் இரு முனைகளிலும் உறிகளாக கட்ட சொன்னார். மலைகளை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே தூக்கி உறியில் வைத்தான் இடும்பன்.

திருவாவினன்குடி (பழநி) வரை வந்தாயிற்று. மூச்சிறைத்தது. இரு மலைகளையும் கீழே வைத்தான். பின்தொடர்ந்த அகத்தியரும் திருவாவினன்குடி முருகனை தரிசித்துத் திரும்பினர்.

dd

இளையப்பாறிய இடும்பன் மலைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட முயற்சித்தான். மலைகள் நகரவில்லை. மிகவும் பலசாலியாக இருந்தும் உன்னால் தூக்கமுடியவில்லையே என்ற குரல் கேட்டு இடும்பன் திரும்பிப் பார்த்தான். மலைமேல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கேலி செய்தான். ஆத்திரத்துடன் சிறுவன்மேல் பாய்ந்தான். சிறுவன் நகர மலைமீதிருந்து உருண்டான். கூடவே இடும்பனின் மனைவி ஓடி வந்தாள். ஆடு மேய்க்கும் துரட்டிக்கம்பு வேலாக மாற சிறுவன் குமரனாக காட்சி தந்தான்.

"முருகா, கந்தா, கடம்பா, வேலவா, கார்த்திகேயா, சுப்பிரமணியா, ஆறுமுகா எனது கணவனின் தவறை மன்னித்தருள வேண்டும். எனக்கு மாங்கல்ய பிச்சை தந்தருள வேண்டும்'' என கண்ணீர்விட்டுக் கதறினாள். முருகன் அருளால் இடும்பன் எந்த சேதமுமில்லாமல் எழுந்துவந்தான். இருவரும் முருகனை வணங்கி அவனருள் பெற்றனர்.

இடும்பா இந்த மலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இதிலுள்ள மூலிகைச் செடிகள் மக்களின் உடல்பிணி தீர்க்கும். நீ இங்கு காவல் தெய்வமாக இருப்பாய். உன்னைப்போல் காவடி தூக்கிவருபவர்களின் குறைகள் உடனே விலகிவிடும். உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்குபவர்களின் கோரிக்கை உடனே நிறைவேறும் என்று வரமளித்து அகத்தியரையும், இடும்பன் தம்பதியினரையும் ஆசீர்வதித்து மறைந்தான். பழநி செல்பவர்கள் இடும்பனை வழிபட்டு பின் முருகனை வழிபட்டு அருள்பெறுவார்கள். இது அன்றுமுதல் இன்றுவரை வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்புப்பெற்ற இடும்பன் மண்ணியாற்றங்கரையில் முருகப் பெருமானை வழிபட்டான். அதில் மகிழ்ந்த முருகப்பெருமான் இத்தலத்தில் இடும்பனுக்கு பங்குனி உத்திரத்திருநாளில் மூலமந்திர உபதேசம் செய்து அருளினார் என்று கந்தபுராணம் சொல்கிறது. எனவே இப்போதும் கொள்ளிட நதிக்கரையில் இடும்பனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன. அன்றைய தினம் காவடியுடன் ஆடி வந்து முருகப்பெருமானை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ நாகநாத சுவாமி, இறைவியின் திருநாமம் அருள்மிகு சௌந்தரநாயகி. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப் பாட்டில் இயங்கிவரும் இவ்வாலயத்தில் காரண ஆகம விதிப்படி அனுதினமும் நான்குகால பூஜைகள் முறையாக நடைபெற்று வருகிறது.

ப் தௌமிய முனிவரின் ஆலோசனை பேரில் வழிநடத்தப்பட்ட பாண்டவர்கள் தங்கள் குரு தௌமியரை வழிபட்ட தலம்.

ப் இந்த கோவில் நவகிரக தெய்வங்கள் ராகு மற்றும் கேதுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தல புராணத்தின்படி இந்த இரு வானவர்களும் தங்களுடைய திருமணத் திற்குப்பிறகு சிவபெருமான் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக தம்பதி சமேதராக இந்த இடத்திற்கு வந்து வழிபட்டு பேறு பெற்றதால் ராகு- கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப சாபதோஷம், மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகி பலனடைகின்றனர்.

ப் புன்னைமரம் ஸ்தல விருட்சம். அது மட்டுமல்ல புன்னை மரம் ஆயில்யம் நட்சத்திர விருட்சம். ஆதிசேஷனின் நட்சத்திரம் ஆயில்யம். அந்த ஆயில்யம் நட்சத்திரம் வருகிற நாளில் மாலை 6.00 மணிக்குள் புன்னை மரத்தருகில் நட்சத்திரக் கதிர் வீச்சுகள் விழுவதால் பன்னிரு ராசி நேயரும் ஆதிசேஷன், ராகு- கேது மற்றும் நாகநாத ருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகி சந்தோஷம் நிலவும்.

ப் சர்ப்பக் கிரக நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம், சுவாதி, திருவாதிரை, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்கள், ராகு காலத்தில் ஜெனனமானவர்கள், ராகு காலத் தில் ருது ஜனனமானவர்கள், ஜாதகத்தில் ராகு, கேது 2, 4, 5, 7, 10-ல் இருக்க பிறந்தவர் கள், மணல்மேடு ஈசன், அம்பாளை வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம்.

ப் சிவனுக்குரிய அனைத்து விசேஷங் களும் முறையாக நடப்பதுடன் குறிப்பாக பங்குனி உத்திரத் திருவிழா பத்து நாட்கள் விழாக்கோலம் கண்டு; திருக்கல்யாணம், ஷண்முக வேள்வி, சிறப்பு அபிஷேக அர்ச்சனை, ஸகஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாராதனை என்று வெகுவிமரிசையாக நடக்கும்.

dd

ப் மண்ணியாற்றங்கரையில் முருகப் பெருமானை இடும்பன் வழிபட்டான். அதில் மகிழ்ந்த முருகப் பெருமான் அவர்முன் தோன்றி பங்குனி உத்திரத் திருநாளன்று மூலமந்திர உபதேசம் செய்து அருளினார். இப்போதும் பங்குனி உத்திரத் திருநாளன்று கொள்ளிட நதிக்கரையில் இடும்பனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தி; காவடியுடன் வந்து, பெண்கள் திரளாக பால்குடம் எடுத்துவந்து, முருகப் பெருமானுக்கும் இடும்பனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம், வாணவேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர் மணல்மேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமவாசிகள்.

கூப்பிட்ட குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப் பெருமான் நம்முடைய துயரங்களை களைய நேரங்கள் கூடலாம். காரணம் என்னவென்றால் நம்மைவிட மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்போரின் துயரம் கண்டு களையச் சென்றிருப்பார் முருகன். அதனால் அவரின் பாதுகாவலரான இடும்பேஸ்வரன் நமை சல்லியங்களிலிருந்தும் துர்தேவதைகளால் அவதியுற்றோ ரைக் காத்திடவும், கற்று பயனில் உள்ள சுபமந்திரமது.

இதனை மனதார மும்முறை வாய்விட்டுச் சொன்னாலே போதும். பன்மடங்கு சக்தியைத் திரட்டி கதையால் தாக்குவார் துஷ்டசக்திகளை-

"சிங்காரமான திருமுடியழகும், முக அழகும்,

செஞ்சொல் வாய்மொழியழகும், காதில் குண்டலமழகும்,

நெற்றியில் சிந்தூரப் பொட்டழகும், பாங்கான சதுர்புஜங்களில்

கைகள், அழகும், மார்பில் கவசவொளியினழகும், பூண்டிடு

மிரத்தினப் பதக்கமும், திகழ் மார்பழகும், பொற்கையும்

பீதாம்பரத்தினழகும், மங்காதப் பாதச் சிலம்பினழகும்,

வலிய தண்டாயுத அழகுமய்யா, ஐம்பத்தோரட் சமோதவே

ஆடிவரும் பேய்கள் அபயமிட்டலறிப் பயந்தொடுங்கி

ஓடிடவே திருத்தணி மலையினில் விளையாடும் மந்திர ஓங்கார

சொரூபா... வங்காள மலையாள கருப்பா. இருளா

அன்பர்கள் வணங்கிடும் குலசேகரா மகிமையுள்ள முருகரிடம்

முன்பூஜை கொண்டிடும் வீரவல்லி டும்ப சுவாமியே வந்தருள்புரிகு வாயய்யனே''

என்று இடும்பன், முருகனிடம் விண்ணப்பம் வைத்தால் எப்படிப்பட்ட பில்லி, சூனியம், ஏவல், வைப்பு போன்ற தந்திர வேலைகளை முறியடித்து அவர்களை மந்திர ஜெபத்தின்மூலம் வெற்றிகண்டு அண்டியவர்களுக்கு ஆனந்த நிலையை வரவழைப்பதில் இத்தல முருகப்பெருமான், இடும்பன் மிகுந்த வரப்பிரசாதி என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான விஸ்வநாத சிவாச்சார்யார்.

திருக்கோவில் அமைப்பு

சோழமண்டலத்திலே மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு என்றழைக்கின்ற இவ்வூரின் வடகிழக்குப் பகுதியில் பசுமையான சூழ்நிலையில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு, தெற்கு என்ற இரண்டு நுழைவாயில்களுடன் அமைந்துள்ளது.

ஆலயத்தின் முன்புறம் நாகதீர்த்தக்குளம் உள்ளது. கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலில் நுழைந்தால் ஒரு நீண்ட மற்றும் அகலமான வவ்வால் நெத்தி மண்டபம் உள்ளது. பலிபீடம் நந்தியைப் பார்த்தபின் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் இரண்டு துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு மேலே பல்வேறு வானவர்கள் சிவபெருமானை வழிபடுவதை சித்தரிக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளது.

உட்புறம் மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் அழகு ததும்பும் நிலையில் அருள்மிகு சௌந்தரநாயகி அருள்கிறாள்.

கருவறைக்கு முன்புறம் வடக்கு நோக்கி ஆதிசேஷனை, ராகு- கேது வணங்கிய நிலையிலும், அவர்களுக்கு எதிரில் தெற்கு நோக்கியப்படி ராகு தன் மனைவி சிம்ஹி யுடனும், கேது தன் மனைவி சித்திரலேகா வுடனும் திருமணக்கோலத்தில் மூலவர் நாகநாத சுவாமியை வணங்குகின்ற அருட் காட்சியுடன் ஆதிசேஷனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவன் நாகநாதர் சதுரவடிவிலான கருவறையில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இதனருகில் தெற்கு நோக்கியபடி நடராஜர்- சிவகாமி அருள்கின்றனர்.

மகாமண்டபத்தின் தென்பகுதியில் தலவிநாயகர் அருள்புரிகிறார்.

சுற்றுப் பிராகாரத்தில் நிருதி விநாயகர் சந்நிதியும் மேற்கு பிராகாரத்தில் திரு மாளிகைப் பத்தியில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, இடும்பன், சரஸ்வதி, கஜலட்சுமி தனித்தனி சந்நிதிகள் அமைந் துள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. வடமேற்குப் பகுதியில் தலவிருட்சம் புன்னைமரம் உள்ளது. சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலுள்ளது. வடக்கு பிராகாரத்தில் ஸ்ரீ சனீஸ்வரர், வடகிழக்கே நவகிரக சந்நிதி உள்ளது. அதனருகே இரட்டை பைரவர் உள்ளது. கிழக்கு நுழைவாயில் சூரியன், சந்திரன் சுவாமியை நோக்கிய வண்ணம் உள்ளனர்.

அடிக்கடி பாம்பு கனவில் வருகிறதா?... ராகு- கேது தோஷத்தால் திருமணத்தடையா? 5-ல் சர்ப்பகிரகங்கள் இருந்து மழலை பாக்கியம் இல்லையா? 2, 8-ல் ராகு- கேது அமர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை சந்தித்தீர்களா?.. எவரேனும் சூனியம் சூழ்ச்சிசெய்து தாங்கமுடியாத கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு... மனோபலம் நாளுக்கு நாள் குறைகிறதா?.. கவலை வேண்டாம். இவற்றிற்கெல்லாம் நல்ல தீர்வுகான மணல்மேடு வாருங்கள். சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ நாதகநாத சுவாமி, ஆதிசேஷன், ராகு- கேது, இடும்பன் மற்றும் முருகப்பெருமானை ஆயில்யம், சஷ்டி, திதி, கார்த்திகை நட்சத்திர நாளிலே தமிழ் மாதத் துவக்கத்திலோ அல்லது அடுத்து வருகின்ற ராகு- கேது பெயர்ச்சி நாளிலோ வலம்வந்து வணங்கிச் செல்லுங்கள். வளமுடன் வாழங்கள் என்று இன்முகத்துடன கூறுகிறார் விஸ்வநாத சிவாச்சார்யார்.

நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவில் மணல்மேடு (அஞ்சல்) (ராகு- கேது பரிகாரங்கள்), மயிலாடுதுறை மாவட்டம்- 609 202. பூஜை விவரங்களுக்கு- விஸ்வநாத சிவாச்சார்யார், அலைபேசி: 97894 51297.

அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து திருப்பனந் தாள் செல்லும் சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் செல்லலாம். பேருந்து வசதி நிறைய உண்டு.

படங்கள்: போட்டோ கருணா