"ந காயத்ர்யா பரம் மந்த்ரம்
நீ மாது பர தைவதம்
ந காச்யா பரமம் தீர்த்தம்
நைகாதச்யா ஸமம் வ்ரதம்.'
"காயத்ரி மந்திரத்திற்குமேல் வேறு மந்திரமில்லை; பெற்ற தாய்க்கு மேல் தெய்வமில்லை; புனித காசிக்கு (கங்கை)மேல் தீர்த்தமில்லை' என சொல்லிக்கொண்டே வந்த நமது தர்ம சாஸ்திரம்-
"அஷ்ட வர்ஷாதிக மர்த்ய
அபூர்ணாசீதி வத்ஸர
ஏகாதச்யாம் உபவஸேத்
பக்ஷயோ உபயோ அபி.'
மனிதனாகப் பிறந்தவன்- எட்டு வயது முதல் எண்பது வயதுக்கு உட்பட்டவன் இரு பட்சங்களிலும் வரும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்கிறது. காரணம் ஏகாதசி விரதத்தைவிட வேறு விரதமில்லை என்னும் பொருளில் சாஸ்திரம் கூறுகிறது. எனவேதான் ஏகாதசி விரதத்திற்கு நம் மதம் மிக முக்கியத்துவம் தருகிறது.
இவ்விரதத்தை ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மத்வர் என்னும் மூன்று முக்கியப் பிரிவினரும் ஏகாதசியன்று முழுவதும் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்து, நாள் முழுவதும் பூஜை, பாராயணம், ஜபம் என செய்வது வழக்கம். மறுநாள் துவாதசி திதியன்று காலை யில் பாரணை (உணவு உட்கொள்ளுதல்) செய்வதுண்டு. இன்னும் சிலர் ஏகாதசிக்கு முதல்நாள் தசமி திதியன்று ஒருவேளை உணவு உட்கொள்ளுதலும் உண்டு. இருபட்சங் களான வளர்பிறை, தேய்பிறை என இரண்டி லும் கணக்கிட்டால் வருடத்திற்கு 24 ஏகாதசி திதிகள் வரும் சிலசமயம் கூடுதலாக "கமலா ஏகாதசி' ஒன்று வரும்.
உணவுண்ணாமல் இறைவழிபாடு செய்வதை மனிதனுக்குதான் தர்ம சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இந்த வழக்கம் எல்லாருக் கும் பொதுவான ஒன்றாகும். இந்த வழக் கத்தை யானையொன்று சுமார் 50 ஆண்டு கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது என்பதுதான் ஆச்சரியம்! அந்த யானையின் பெயர் கேசவன். (விஷ்ணுவின் ஒரு பெயர்).
கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்குச் சொந்தமான இந்த யானை, மற்ற யானைகளைவிட வித்தியாசமான குணமும், அணுகுமுறையும் கொண்டது மட்டுமின்றி, குருவாயூரப்பனுக்கு சேவை செய்வதற்காவே பிறந்த அற்புதமான யானை என்றே கூறலாம். குருவாயூரப்பன்மீது அளவற்ற பக்தியையும் மரியாதையையும் தன் வாழ்நாள் முழுவதும் செலுத்திய இந்த யானை புனித ஏகாதசி தினத்திலேயே- அதுவும் குருவாயூர் ஏகாதசியன்று குருவாயூரப்பனுக்கு தனது கடைசி சேவையை செய்த மனத்திருப்தியில் உயிரைவிட்டது. ஏகாதசி சிறப் புத்தலங்களாக பண்டரிபுரம் (ஆஷாட ஏகாதசி), திருக்குறுங்குடி (கைசிக ஏகாதசி), குருவாயூர் (விருச்சிக ஏகாதசி), ஸ்ரீரங்கம் (வைகுண்ட ஏகாதசி) ஆகியவற்றைச் சொல்வதுண்டு. அந்த குருவாயூர் ஏகாதசி யன்றே கேசவன் உயிரைவிட்டது இறைவனின் திருவிளையாடலே!
பகவான் பரசுராமர் தவமிருந்த கேரள மாநிலத்தின்
"ந காயத்ர்யா பரம் மந்த்ரம்
நீ மாது பர தைவதம்
ந காச்யா பரமம் தீர்த்தம்
நைகாதச்யா ஸமம் வ்ரதம்.'
"காயத்ரி மந்திரத்திற்குமேல் வேறு மந்திரமில்லை; பெற்ற தாய்க்கு மேல் தெய்வமில்லை; புனித காசிக்கு (கங்கை)மேல் தீர்த்தமில்லை' என சொல்லிக்கொண்டே வந்த நமது தர்ம சாஸ்திரம்-
"அஷ்ட வர்ஷாதிக மர்த்ய
அபூர்ணாசீதி வத்ஸர
ஏகாதச்யாம் உபவஸேத்
பக்ஷயோ உபயோ அபி.'
மனிதனாகப் பிறந்தவன்- எட்டு வயது முதல் எண்பது வயதுக்கு உட்பட்டவன் இரு பட்சங்களிலும் வரும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்கிறது. காரணம் ஏகாதசி விரதத்தைவிட வேறு விரதமில்லை என்னும் பொருளில் சாஸ்திரம் கூறுகிறது. எனவேதான் ஏகாதசி விரதத்திற்கு நம் மதம் மிக முக்கியத்துவம் தருகிறது.
இவ்விரதத்தை ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மத்வர் என்னும் மூன்று முக்கியப் பிரிவினரும் ஏகாதசியன்று முழுவதும் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்து, நாள் முழுவதும் பூஜை, பாராயணம், ஜபம் என செய்வது வழக்கம். மறுநாள் துவாதசி திதியன்று காலை யில் பாரணை (உணவு உட்கொள்ளுதல்) செய்வதுண்டு. இன்னும் சிலர் ஏகாதசிக்கு முதல்நாள் தசமி திதியன்று ஒருவேளை உணவு உட்கொள்ளுதலும் உண்டு. இருபட்சங் களான வளர்பிறை, தேய்பிறை என இரண்டி லும் கணக்கிட்டால் வருடத்திற்கு 24 ஏகாதசி திதிகள் வரும் சிலசமயம் கூடுதலாக "கமலா ஏகாதசி' ஒன்று வரும்.
உணவுண்ணாமல் இறைவழிபாடு செய்வதை மனிதனுக்குதான் தர்ம சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இந்த வழக்கம் எல்லாருக் கும் பொதுவான ஒன்றாகும். இந்த வழக் கத்தை யானையொன்று சுமார் 50 ஆண்டு கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது என்பதுதான் ஆச்சரியம்! அந்த யானையின் பெயர் கேசவன். (விஷ்ணுவின் ஒரு பெயர்).
கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்குச் சொந்தமான இந்த யானை, மற்ற யானைகளைவிட வித்தியாசமான குணமும், அணுகுமுறையும் கொண்டது மட்டுமின்றி, குருவாயூரப்பனுக்கு சேவை செய்வதற்காவே பிறந்த அற்புதமான யானை என்றே கூறலாம். குருவாயூரப்பன்மீது அளவற்ற பக்தியையும் மரியாதையையும் தன் வாழ்நாள் முழுவதும் செலுத்திய இந்த யானை புனித ஏகாதசி தினத்திலேயே- அதுவும் குருவாயூர் ஏகாதசியன்று குருவாயூரப்பனுக்கு தனது கடைசி சேவையை செய்த மனத்திருப்தியில் உயிரைவிட்டது. ஏகாதசி சிறப் புத்தலங்களாக பண்டரிபுரம் (ஆஷாட ஏகாதசி), திருக்குறுங்குடி (கைசிக ஏகாதசி), குருவாயூர் (விருச்சிக ஏகாதசி), ஸ்ரீரங்கம் (வைகுண்ட ஏகாதசி) ஆகியவற்றைச் சொல்வதுண்டு. அந்த குருவாயூர் ஏகாதசி யன்றே கேசவன் உயிரைவிட்டது இறைவனின் திருவிளையாடலே!
பகவான் பரசுராமர் தவமிருந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோவில் யுகங்களாலும், மனிதர்களாலும் கணக்கிடமுடியாத வகையில் மிகப்பழமையான, புனிதமான திருக்கோவில் என்றே சொல்லலாம்.
தற்சமயம் இக்கோவில் குருவாயூரப்பன் தேவச ஸ்தானத்தார்மூலம் நிர்வாகிக் கப்படுகிறது. இக்கோவிலை "பூலோக வைகுண்டம்' என பெருமையாகக் கூறுவதுண்டு. சங்கு, சக்கரம், கதை, தாமரைப்பூ ஆகியவற்றைத் தனது நான்கு திருக்கரங்களால் ஏந்தி, குழந்தை வடிவில் கிருஷ்ணன் குருவாயூரப்பன் எனும் பெயரில் காட்சிதருகிறார். மகாவிஷ்ணு தானேதம் கரங்களால் பாதாள அஞ்சனம் (டஹற்ட்ஹப்ஹ ஹய்த்ஹய்ஹம்) என்னும் கலவையால் மூலவரைச் செய்தார் என்பது ஐதீகம். பார்வதி, பரமேஸ்வரன் அருளாலும், ஆணைக்குகிணங்கியும் மூலவரை பிரகஸ்பதியான குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாதான் கோவிலை அழகுற கட்டினார் என்பது தலவரலாறு. குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்த ஊருக்கு குருவாயூர் என்னும் பெயரும், இறைவனுக்கு குருவாயூரப்பன் என்னும் பெயரும் வந்தது.
குருவாயூரப்பனின் திவ்ய மகிமையை "ஸ்ரீமத் நாராயணீயம்' என்னும் நூலாக எழுதியவர் மேப்பதூர் ஸ்ரீ நாராயண பட்டர். (கி.பி. 1560- 1666). மகாபாரதத்தின் சாராம்சமான ஸ்ரீமத் நாராயணீயத்தை நாராயண பட்டர் 1,034 சுலோகங்களை 100 தசகங்களாகப் பிரித்து எழுதியுள்ளார். குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் ஒரு தசகம் வீதம் 100 நாட்களுக்கு எழுதி னார். கார்த்திகை மாதம் 28-ஆம் நாளில் அவர் எழுதியதை முடித்ததால் அன்றைய தினத்தை இன்றும் "நாராயணீய தினமாக' குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்த பக்திக் காவியத்தை தமது சொற்பொழிவால் (உபன்யாசம்) உலகறியச் செய்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனந்த ராம தீட்சிதர் ஆவார். அதன்பிறகு 16-ஆம் நூற்றாண்டில் பூந்தானம் நம்பூதிரி என்பவர் "ஸ்ரீகிருஷ்ணகாணாம்ருதம்', "நூற்றி எட்டு ஹரி' எனும் நூல்களின்மூலம் குருவாயூரப்பனுக்குப் பெருமை சேர்த்தார். ஸ்ரீமத் நாராயணீயத்தைப் பாராயணம் செய்தால் நீண்ட ஆயுளும், நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், மன மகிழ்ச்சியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
குருவாயூரில் குடிகொண்ட குருவாயூரப்பனுக்கு அடுத்ததாக அனைவருக்கும் நினைவில்வருவது கம்பீரமான தோற்றம்கொண்ட "கஜராஜன்' கேசவன் என்னும் ஆண் யானைதான். அதன் தியாகமும், அது குருவாயூரப்பன்மீது வைத்திருந்த பக்தியும்தான் அதனை உலகறியச் செய்தது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான- கண்ண னின் அம்சமான குருவாயூரப்பனுக்கு தங்களது பிரார்த் தனையை நிறைவேற்றித்தர வேண்டி எடைக்கு எடை துலா பாரம் தருவது போன்று, மன்னர்கள், பெரும் செல்வந்தர்கள் யானையை குருவாயூர் கோவிலுக்கு தானமாக அளிப்பது வழக்கம். அவ்வகையில் இன்றைய மலப்புரம் (மலப்பூர்) (ஙஹப்ஹல்ல்ன்ழ்ஹம்) மாவட்டத்திலுள்ள நிலம்பூர் (சண்ப்ஹம்க்ஷன்ழ்) பகுதியை அரசாண்ட சிற்றரசர் வல்லியராஜா, தன்னுடைய பிரார்த்தனையின் பலனாக குருவாயூரப்பனுக்கு நிலம்பூர் காட்டில் பிறந்துவளர்ந்த ஒரு ஆண் யானைக் குட்டியை 1922-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதியன்று காணிக்கையாக அளித்தார். அந்த சமயத்தில் யானைக்குப் பத்து வயதென கணக்கிடப்பட்டது.
குருவாயூரக்கு வந்த ஆண் யானைக் குட்டிக்கு கேசவன் எனப் பெயரிட்டு கோவில் வளாகத்தில் வளர்த்தனர். ஆரம்ப காலத்தில் பாகனின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தது. பாகன் அடித்தாலும் அடி வாங்கிக்கொண்டு அப்படியே நிற்குமே தவிர எதிர்ப்பு தெரிவிக்காது. குருவாயூர் கோவில் பணியைத் தவிர வேறு வேலைக்கோ, வேறு கோவிலுக்கோ செல்லாமல் அடம்பிடித்து வந்தது. கோவில் நிர்வாகிகள் குருவாயூரப்பனுக்கு தினமும் நைவேத்தியம் செய்யப்படும் வெண்ணெய்யை உருட்டி தொடர்ந்து 41 நாட்கள் தந்தனர். இறைவனின் பிரசாதத்தை சாப்பிடத் தொடங்கியவுடன் கேசவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
குருவாயூர் கோவிலில் தினமும் இரவில் "சுற்று விளக்கு' பிராத்தனை நடைபெறும். அதுசமயம் ஆலயத்தைச் சுற்றி நெய் அகல் விளக்கு ஏற்றப்படுவது வழக்கம். 1970-ஆம் ஆண்டில் ஒரு நாள் இதேபோன்று விளக்கேற்றியதை சரியாக அணைக்காத காரணத்தாலோ, வேறு காரணத்தாலோ திடீரென நள்ளிரவில் தீப்பற்றத் தொடங்கி யது. கோவிலின் தெற்குமூலையில் முதலில் தீப்பற்றுவதை யானைப் பந்தலில் சங்கலியால் கட்டப்பட்ட கேசவன் கவனித்துவிட்டான். அந்த நள்ளிரவில் ஊரே கேட்டுக்கும் வண்ணம் பிளிறினான்.
யானையின் சத்தத்தைக் கேட்டவுடன் கோவில் பணியாட்கள், ஊர்மக்கள் கோவில்முன்பு கூடி, தீயை அணைக்க முற்பட்டனர். தன்னுடைய எஜமானனான குருவாயூரப்பன் சந்நிதியில் தீ பரவக்கூடாது என்கிற எண்ணத்தில், இரும்புச் சங்கிலியை அறுத்துக்கொண்டு கோவில்முன்பு கேசவன் வந்துவிட்டான். தீயை அணைக்க மணல் மூட்டையை சுமந்துக் கொண்டு விரைவாக செயல்பட்டான். பொதுவாக யானைகள் தீயைக்கண்டால் பயந்து ஓடும். ஆனால் கேசவன் நேர்மாறாக செயல்பட்டதை அன்று தான் கோவில் நிர்வாகத்தி னரும், ஊர் மக்களும் உணர்ந்தனர். இந்த யானை குருவாயூரப்பனுக்காகவே பிறந்த யானை என்பதை அறிந்து அன்றுமுதல் மரியாதை கொடுக்க ஆரம்பித்தனர்.
பூர்வ ஜென்மத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் குருவாயூர் கோவிலுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்த கேசவன், ஏகாதசி தினத்தன்று உணவு உட்கொள்ளாமல் இருப்பதென்பது ஒரு ஆச்சரியமான விஷயம். அதற்கு எப்படிதான் இந்த உணர்வு வந்ததோ? அதேபோல் விரதம் அனுசரிக்க வேண்டுமென்னும் எண்ணமும் எப்படி வந்ததோ? குருவாயூரப்பனுக்கே வெளிச்சம்!
குருவாயூர் கோவிலில் நடைபெறும் சீவேலி (நங்ங்ஸ்ங்ப்ண்) நிகழ்ச்சியைக் காணக் கண்கோடி வேண்டும். அந்த சமயத்தில் (சுவாமி புறப்பாடு) யானையின் முன்புறம் தங்க நிறத்தில் கேரள கலாச்சாரப்படி அழகிய வேலைப்பாடுமிக்க நெற்றிப்பட்டம் என்னும் ஆபரணத்தைக் கட்டி, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, நெய் தீபங்கள் (தீவட்டி) ஏற்றி பணியாட்கள் முன்செல்ல, யானை அழகாக ஆடி அசைந்தாடி கழுத்தில் கட்டிய மணியோசையுடன் கம்பீரமாக உலாவரும். இதுபோன்று சீவேலி நிகழ்ச்சியிலும், முக்கியமான பண்டிகை நாட்களிலும் நடைபெறும் யானை உலாவின்போது, மற்ற யானைகளைவிட கேசவன் யானையின் கம்பீரத்தோற்றம் அனைவரையும் ஈர்க்கும். உற்சவர் விக்ரகத்தை ஏந்திவரும் அர்ச்சகருக்கு மட்டுமே தன்னுடைய முன்னங்காலை மடக்கி முதுகில் ஏற உதவுவான். அதேசமயத்தில் பின்புறம் உட்கார வேண்டியவரை, முன்புறமாக ஏற அனுமதிக்க மாட்டான். பின்னங்கால் வழியாக ஏற உதவுவான். தன்னை தினமும் கவனித்துக்கொள்ளும் பாகனைக்கூட தனியாக முன்புறம் ஏறவிடாது. குருவாயூரப்பனுக்கு மட்டுமே முன்புறம் சாய்ந்து சேவை செய்யும் வைராக்கியத்தைக் கொண்டவன் கேசவன். குருவாயூர் கோவிலைத் தவிர அருகே இருக்கும் கோவிலுக்கோ, நிகழ்ச்சிக்கோ போகாது.
இப்படியாக தினமும் குருவாயூரப்ப னுக்குத் தொடர்ந்து 54 ஆண்டுகள் சேவைசெய்து வந்த கேசவனுக்கு வயோதிக்கத்தால் உடல்நிலை சற்று குன்றியது. இருந்தாலும் கேசவன் குருவாயூரப் பனுக்குச் செய்யும் சேவையை நிறுத்தவில்லை. 1976-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நவமியன்று கேசவன்மீது எப்பொழுதும்போல உற்சவர் விக்ரகத்தையும் தங்கத் திடம்பையும் ஏற்றியபோது, சிறிது நேரத்தில் நடக்க முடியாமல் தடுமாறியது. இதைக்கண்ட கோவில் பணியாட்கள் பதறிப் போயினர். விக்ரகத்தை வேறு யானைக்கு உடனடியாக மாற்றினார்கள்.
மிகவும் சோர்ந்த நிலையில் அன்றும், மறுநாள் தசமி திதியன்றும் கேசவன் காணப்பட்டான். கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். ஏகாதசி திதியன்று பாத்திரத்திலிருந்து மூன்றுமுறை தண்ணீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு குருவாயூரப்பன் கோவில் பக்கம் தும்பிக்கையால் துதித்தவாறே நின்ற நிலையில் உயிரைவிட்டது. (2-12-1976). கேசவனின் இறப்பு கேரள மக்களை மிகவும் பாதித்தது. கேசவ னின் படத்தை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடத் தொடங்கினர். வைதீக முறைப்படி கேசவனின் இறுதிச் சடங்கை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
தேவஸ்தான அலுவலகத் திற்கு எதிரேயுள்ள தங்கும் விடுதியில் கேசவனின் சிலையை 3.2 மீட்டர் உயரத்திற்கு தத்ரூபமான நிர்வாகத்தினர் செய்தனர்.
ஆண்டுதோறும் மண்டல காலத்தில் "குருவாயூர் ஏகாதசி' (கார்த்திகை மாத சுக்லபட்சம்) அன்று கேசவனின் நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் கோவில் யானைகள் வரிசையாக உலா வந்து அஞ்சலி செலுத்தும். கேசவனின் தியாகத்தைப் போற்றும் விதமாக "கஜராஜன்' எனும் விருதை 1973-ஆம் ஆண்டு வழங்கினார்கள்.
முன்னர் கஜேந்திரன் (யானை) காலை முதலை கவ்விக்கொண்ட சமயத்தில் மகாவிஷ்ணு கஜேந்திரனுக்கு வைகுண்ட பதவி அளித்ததுபோல, கேசவனுக்கும் குருவாயூரப்பன் வைகுண்ட பதவியை அளித்து ரட்சித்தான்!
கோவில் நிர்வாகத்தை கவனித்துவரும் குருவாயூர் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் கே.பி. மோகன்தாஸ் கோவிலைப்பற்றியும், கேசவனைப் பற்றியும் கூறும் போது, "கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் வரலாற்றில், கேசவனுக்கு தனியிடம் உண்டு. இன்று தேவஸ்தானம்மூலம் 44 யானைகளை புன்னத்தூர் கொட்டா (டன்ய்ய்ஹற்ட்ன்ழ் ந்ர்ற்ற்ஹ) எனும் இடத்தில் இயற்கையான சூழ்நிலையில் நன்றாகப் பராமரிக்கிறோம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து சௌகரியங்களையும் சிறப்பாகச் செய்து வருகிறோம். கொரோனா சமயத்தில் இப்பகுதி மக்களின் நலனுக்காக, ஏழை எளிய மக்களின் அன்றாடத் தேவைக் கான உணவுப் பொருட் களை தேவஸ்தானம்மூலம் இலவசமாக மாதந்தோ றும் வழங்கினோம். இதில் இப்பகுதியைச் சார்ந்த சுமார் 30 ஆயிரம் குடும்பங் கள் பயன்பெற்றன.
கேசவனின் தியாகத் தைப் போற்றும் வண்ணம் ஸ்ரீவல்சம் (நழ்ண்ஸ்ஹப்ள்ஹம்) தங்கும் விடுதி முன்பு பெரிய சிலை 1982-ஆம் ஆண்டு, அன்றைய கேரள முதல்வர் கே. கருணாகர னால் திறக்கப்பட்டது. அதேபோல் கேசவனின் தந்தங்கள் கோவில் சந்நிதி முகப்பின்மேல் பாதுகாத்து வருகிறோம். கொரோனா கால கட்டத்தில் தேவஸ்தான மருத்துவமனைமூலம் பலர் இலவசமாக சிகிச்சைப் பெற்று பயனடைந்தனர். அந்த சமயத்தில் ஆயுர் வேத கல்லூரியின் பங்களிப்பு போற்ற வேண்டிய செயலாகும். தினமும் இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவஸ்தான கமிட்டி சிறப்பாக சேவை செய்து வருகிறது'' என பெருமையாகக் கூறினார்.
திருப்பதி என்றால் லட்டு, பழநி என்றால் பஞ்சாமிர்தம்போல குருவாயூர் என்றால் பால்பாயசம்! குருவாயூரப்பனை வணங்கி நோயற்ற நல்ல வாழ்வு கிடைக்கப் பெறுவோ மாக! அவனை வணங்கி, அவனது நைவேத்திய பால் பாயசத்தை சுடச்சுட அருந்தி மகிழ் வோம்!