குருமடத்தில் யானைகள் மற்றும் குதிரைகளுக்கு வரும் நோய்களையும், அவற்றை குணப்படுத்தும் முறைகளையும் கற்றுத்தருவதுபோல், போர்வீரர்களைப் பாதுகாப்பதற்கான அருமருந்து செய்யும் முறைகளையும் கற்றுத்தந்தனர். இவற்றைக் கற்றுத்தரும் பகுதிகளை பண்டுதச் சாலைகள் என்றும் சேவடிச் சாலைகள் எனவும் அழைத்தனர்.
உயிர்காக்கும் நவரச செந்தூரம்!
பண்டுதச் சாலை களில், தமிழக மருத் துவத்தின் தனிச்சிறப் பான முறையில், பாதரசத்தை அடிப் படையாக வைத்துச் செய்யப்படும் மருந்து வகைகள் கற்றுத்தரப் பட்டன. பாதரசத்தை ஒன்பது வழிகளில் தயார் செய்யும் முறைகளை தொன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
முதல் முறை, பூமியிலிருந்து பாதரசத் தாதுவிலிருந்து எடுப்பது.
இரண்டாவது முறை, பூக்கள் மற்றும் தாவரங்களிலிருந்து பிரித்த உப்புகளிலிருந்து ரசத்தை எடுப்பது.
மூன்றாவது முறை, விலங்குகளின் எலும்பி லுள்ள மஜ்ஜைகளிலிருந்து ரசத்தை எடுப்பது.
நான்காவது முறை, பாசானங்களிலிருந்து ரசத்தைப் பிரித்தெடுப்பது.
ஐந்தாவது முறை, அயச் செந்தூரத்தை ரசமாக மாற்றுவது.
ஆறாவது முறை, பாறை உப்புகளிலிருந்து ரசத்தை உருவாக்குவது.
ஏழாவது முறை, உலோகங்களைப் பஸ்பங்களாக்கி, அவற்றிலிருந்து ரசத்தை உருவாக்கும் முறை.
எட்டாவது முறை, கடல் நீரிலிருந்து ரசம் தயாரிப்பது.
ஒன்பதாவது முறை, பாசான லிங்கத்தின் மீது படும் காற்றினால் படியும் ரசத்தைத் துடைத்தெடுக்கும் முறை.
இவை போன்றவற்றால் கிடைக்கும் ஒன்பது வகை பாதரசத்திற்கு நவரசம் என பெயரிட்டனர். இந்த நவரசங்களிலிருந்து மிக உயரிய மருந்து செய்தனர். போர்க் காலங்களில் விஷம் தடவப்பட்ட அம்பு, வாள், ஈட்டிகளினால் காயம்பட்டு மயக்க மடைந்த வீரர்கள், நவரச செந்தூரம் கொடுக் கப்பட்டு உயிர்காக்கப்பட்டனர். இது தமிழ் குருமடங்களில் ரகசியமாகப் பாதுகாத்து வரப்பட்ட உயர் மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.
போர் நடக்கும் இடங்களில் வாழும் விஷப் பாம்புகள், விஷ வண்டுகள், விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் கடுமை யான உடல்வலி, உடல் வீக்கம், மயக்கம் போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய நவரச மருந்து பயன்படுத்தப்பட்ட
குருமடத்தில் யானைகள் மற்றும் குதிரைகளுக்கு வரும் நோய்களையும், அவற்றை குணப்படுத்தும் முறைகளையும் கற்றுத்தருவதுபோல், போர்வீரர்களைப் பாதுகாப்பதற்கான அருமருந்து செய்யும் முறைகளையும் கற்றுத்தந்தனர். இவற்றைக் கற்றுத்தரும் பகுதிகளை பண்டுதச் சாலைகள் என்றும் சேவடிச் சாலைகள் எனவும் அழைத்தனர்.
உயிர்காக்கும் நவரச செந்தூரம்!
பண்டுதச் சாலை களில், தமிழக மருத் துவத்தின் தனிச்சிறப் பான முறையில், பாதரசத்தை அடிப் படையாக வைத்துச் செய்யப்படும் மருந்து வகைகள் கற்றுத்தரப் பட்டன. பாதரசத்தை ஒன்பது வழிகளில் தயார் செய்யும் முறைகளை தொன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
முதல் முறை, பூமியிலிருந்து பாதரசத் தாதுவிலிருந்து எடுப்பது.
இரண்டாவது முறை, பூக்கள் மற்றும் தாவரங்களிலிருந்து பிரித்த உப்புகளிலிருந்து ரசத்தை எடுப்பது.
மூன்றாவது முறை, விலங்குகளின் எலும்பி லுள்ள மஜ்ஜைகளிலிருந்து ரசத்தை எடுப்பது.
நான்காவது முறை, பாசானங்களிலிருந்து ரசத்தைப் பிரித்தெடுப்பது.
ஐந்தாவது முறை, அயச் செந்தூரத்தை ரசமாக மாற்றுவது.
ஆறாவது முறை, பாறை உப்புகளிலிருந்து ரசத்தை உருவாக்குவது.
ஏழாவது முறை, உலோகங்களைப் பஸ்பங்களாக்கி, அவற்றிலிருந்து ரசத்தை உருவாக்கும் முறை.
எட்டாவது முறை, கடல் நீரிலிருந்து ரசம் தயாரிப்பது.
ஒன்பதாவது முறை, பாசான லிங்கத்தின் மீது படும் காற்றினால் படியும் ரசத்தைத் துடைத்தெடுக்கும் முறை.
இவை போன்றவற்றால் கிடைக்கும் ஒன்பது வகை பாதரசத்திற்கு நவரசம் என பெயரிட்டனர். இந்த நவரசங்களிலிருந்து மிக உயரிய மருந்து செய்தனர். போர்க் காலங்களில் விஷம் தடவப்பட்ட அம்பு, வாள், ஈட்டிகளினால் காயம்பட்டு மயக்க மடைந்த வீரர்கள், நவரச செந்தூரம் கொடுக் கப்பட்டு உயிர்காக்கப்பட்டனர். இது தமிழ் குருமடங்களில் ரகசியமாகப் பாதுகாத்து வரப்பட்ட உயர் மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.
போர் நடக்கும் இடங்களில் வாழும் விஷப் பாம்புகள், விஷ வண்டுகள், விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் கடுமை யான உடல்வலி, உடல் வீக்கம், மயக்கம் போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய நவரச மருந்து பயன்படுத்தப்பட்டது. உடம்பில் ஏற்பட்ட அனைத்துவகைப் புற்றுநோய்களுக்கும் நவரச சுண்ணத்தை மருந்தாகக் கொடுத்து குணப்படுத்தினார்கள். புற்றுநோய்க்கு இன்றும் நவரச சுண்ணம் ஒரு அருமருந்தாகச் செயல்படுகிறது. பழந்தமிழகத்தைத் தவிர, உலகில் வேறெந்த இடத்திலும் பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தியதில்லை.
நோய் அகற்றும் திறன் பயிற்சி!
கோட்டைகளுக்குள் அரச குடும்பத்தினரைப் பாதுகாக்கப் பயன்படும் ரகசிய சுரங்கப் பாதைகளை, அரச குடும்பத்து மெய்க் காப்பாளர்கள் மட்டுமே அறிந்து வைத்திருப் பார்கள். இவர்களுக்கு அகப்படையினர் என்று பெயர். இவர்களது உடல்நலம், ஒவ்வொரு திங்களும் குருமடத்துப் பண்டுதர்களால் ஆய்வு செய்யப்படும். இப்படையினர் தொடர்ந்து பாதுகாக்கப் படுவர்.
இதேபோல், நீண்டதூரம் சென்று, நீண்டநாட்கள் போர் செய்ய ஆயத்தமாக இருக்கும் வீரர்கள் அனைவரது உடல்நிலை, குருமட பண்டுதர்களால் ஆய்வுசெய்யப்பட்டு, அவர்களது உடம்பில் ஏதேனும் நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் உள்ளனவா என முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறனுக்கு, நோய் நிமித்திக பண்டுதம் எனப் பெயரிட்டிருந்தனர். இந்த உடற்கூற்று ஆய்வுத்திறனை, குருமடத்தில் பண்டுதம் பயில்பவர்களுக்குக் கற்றுத் தந்தனர்.
இவ்வாறு வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு, அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் மூலிகைகளைக்கொண்டு நோய்களை அகற்றும் திறன்களை, குருமட ஔவை மார்கள் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று கற்றுக்கொடுத்து வந்தனர்.
உடல்நலம் காக்கும் உணவே மருந்து!
நீண்டதூரப் போருக்குச் செல்ல ஆயத்த மாகும் வீரர்களின் எண்ணிக்கைக்கேற்ப, குருமடத்துப் பண்டுதர்கள் முன்கூட்டியே அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை செய்து தயார்நிலையில் வைத்திருப்பர். இவற்றைப் போர்வீரர் களுக்கான உணவுப் பொருள்களோடு சேர்த்து பத்திரமாக, போர் நடைபெறும் இடத்திற்கு அருகில் அமைக்கப்படும் சேவடிச் சாலைகளுக்கு எடுத்துச்செல்வர். இவற்றில் வெளிப்பூச்சுக் களிம்புகளோடு உள்ளே சாப்பிடும் மருந்துகளான கிரோசனம், குளிகை எண்ணெய்வகை, சூரணம், நெய், லேகியம், கியாழவகை செந்தூரம், பற்பம், சுண்ணம், மெழுகு போன்ற பன்னிரண்டுவகை மருந்துகள் குருமடத்தில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்படும்.
இம்மருந்துகள் குருவுக்கு மிகுந்த நம்பிக்கை உடையவர்களால் மட்டுமே போர்ப்பாசறை சேவடிச் சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு செல்லவிருக்கும் மருத்துவர்கள், துரிதமாகச் செயல் பட்டு குணப்படுத்தும் அனுபவம் மிக்கவர்களாக இருப்பர். இவர்கள் பண்டுதச் சேவடியார்கள் என்று அழைக் கப்பட்டனர். இவர்கள் அனைத்து தற்காப்புக் கலைகளையும் திறம்படக் கற்றவர்களாக இருப்பர். இவர்களோடு சேர்ந்து ஔவைமார்களும், மடவை மார்களும், சமையற்கலைஞர்களும் செல்வர். ஒவ்வொரு பருவ காலங் களுக்கு ஏற்றாற்போல், உடல்நலம் கெடாதவாறு படை வீரர்களுக்கு உணவுப் பொருட்களையும் கசாயங் களையும் துரிதமாகச் செய்யத் தெரிந்தவர்களாக இருப்பர். இவர்கள் கொடுக்கின்ற உணவும் மருந்தாக இருக்கும். உணவே மருந்து; மருந்தே உணவு என்ற முறையில், இவர்களால் கொண்டுசெல்லப்படும் உணவுப் பொருட்கள் இருக்கும்.
மடவை எனும் தெய்வப் பிறப்பு!
மடவை என்பவர் பூப்படையாத பெண்ணினத்தவர் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இம்மடவை யர்கள், பாசறை சேவடிச் சாலைகளிலிருந்து உலோகக் குடங்களில் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொண்டு, போருக்குச் செல்லும் தம் உறவினர் களோடு போர்க்களத்துக்குள் செல்பவர்கள்.
இவர்களது தியாகம் அளப் பரியது. இவர்கள் சுறுசுறுப்பாக செயல் படக்கூடியவர்கள். தங்களது அண்ணனோ, தம்பியோ, மாமனோ, தந்தையோ போர்க்களம் புகுகின்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து செல்வார்கள். போர்க்களத் தில் எதிரிகளின் படைக்கருவிகளுக்கு சிக்கிவிடாமல் தப்பித்துச் செல்லும் தற்காப்புத் திறன்களை குருமடத்தில் பயின்றவர்கள். இவர்கள் போர்க்காலங் களில், பாசறைகளில் கவச உடை தரித்து, தங்கள் உறவினனோடு செல்லத் தயார்நிலையில் இருப்பார்கள்.
சேவடிச் சாலையில் தயார்செய்யப்பட்ட ஊக்கமருந்து நிறைந்த குடத்தினை ஔவையார் எடுத்துவந்து, மடவை ஒருத்தியின் கைகளில் கொடுத்து வாழ்த்துப்பா பாடுவார். அதில் அவளது இந்த மடவைப் பிறப்பே இந்நாட்டுக்கான வெற்றியை நிலைநாட்டுவதற்கான தெய்வப் பிறப்பு என வாழ்த்தி, இவள் புகழ் இம்மண் இருக்கும்வரை வாழும் என வாழ்த்தி, மங்கல வெற்றித் திலகமிட்டு, நீயே இம்மண்ணின் தெய்வம் என வணங்கி அனுப்புவாள்.
அமிர்தசஞ்சீவினிலி நாள் முழுவதும் புத்துணர்ச்சி!
தமிழகத்தில் மடவைப் பெண்ணிற்குக் கற்றுத்தந்த இந்த போர்த்தந்திர உத்திகள், "அங்கம் பூரா' என்ற பெயரோடு இலங்கையில் இன்றும் உயிர்ப்போடு கற்றுத்தரப்படுகிறது. இதனை வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, இலங்கையில் களப்பணியாற்றியபின், கிண்ணி மங்கலத்திலுள்ள ஏகநாதர் குருமடத்தில் இக்கலை கற்றுத் தந்ததற்கான தடயம் உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
இம்மடவைப் பெண்ணானவள் போர்க்களம் புகும்போது, இப்பணிக்காகத் தன்னை ஈன்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும், தன்னை வளர்த்த குருவுக்கும், தனக்கு வாய்ப்பளித்த மன்னவனுக்கும் நன்றிகூறி வணங்கி, தன் உறவினனோடு போர்க்களம் புகுவாள். தனது படை வென்றால் அவளே வெற்றிச்செல்வியாக பறைசாற்றி மகிழ்வாள். போர்க்களத்தில் தன் உறவினனோடு அருகிலே இருந்து, அவன் களைப்படையும் வேளையில், தன் கைகளிலிருக்கும் ஊக்கமருந்துக் குடுவையைத் தன் உறவினனிடம் கொடுத்து, அவன் அதை அருந்தும்வரை அவனைச் சுற்றிலும் பகைவர் நெருங்காதவாறு பாதுகாப்பாள். ஊக்கமருந்தை அருந்திய வீரனுக்கு யானை, குதிரையைக் கண்டு சிறிதும் சலனமாகாத அளவுக்கு மனம் குதூகலித்து வெறியேறி வெற்றித் தாண்டவமாடும். யானையின் துதிக்கையில் ஏறி அம்பாரியிலுள்ள எதிரியைத் தாக்குமளவுக்கு ஊக்கமளிக்கும். இம்மடவைப் பெண் போர்க்களத்தில் சோர்வடையாமல் செயல்பட, அவளுக்கு அன்று அதிகாலையிலேயே "முன்னீர் கலக்கஞ்சி' கொடுக்கப்படும்.
முன்னீர் கலக்கஞ்சி: நம் பழந்தமிழ் குருமார்கள், நமது உடலிலுள்ள உயிரணுக் களுக்குள் இருக்கும் நுண்ணுயிர்க் கூறுகளைத் தெளிவாக அறிந்தவர்களாக இருந்தனர். நம் உடலிலுள்ள அணுக் களின் உயிர்சக்தி 21 தனிமங்களின் துணையால் இயங்கி களைப்படையாமல் செயல்படுவதைக் கண்டறிந்தனர். அந்த 21 தனிமங்களின் கூறுகளை உணவு வாயிலாக ஒருவனுக்கு அருந்தக்கொடுத்தால், அவை ஒருநாள் முழுவதும் களைப்படையாமலும், நுண்ணறிவோடு மூளை இயங்கும் வல்லமையையும் கொடுக்கும். இத்தகைய ஆற்றலைக் கொடுக்கும் கஞ்சிக்கு முன்னீர் கலக்கஞ்சி எனப் பெயரிட்டிருந்தனர்.
இங்கு முன்னீர் என்பது, ஒரு பெரிய மண்பானையில் பத்துப்படி பசும்பாலைக் காய்ச்சி, அது தயிராக மாறுவதற்கு முதல்நாள் இரவில் உறையிடுவர். மறுநாள் அதிகாலையில் அதைத் திறந்து பார்த்தால், அத்தயிர்ப் பானையின் மேற்பகுதியில் தெளிந்த நீரும், அதனடியில் கெட்டித் தயிரும் இருக்கும். அது சுமார் ஒருபடி இருக்கும். அந்தத் தெளிந்த நீருக்கு முன்னீர் என்று பெயர். இதை அப்பானையிலிருந்து பனைமர ஓலையைக் கூம்பாகக் குடைந்து கட்டி, எடுத்துக்கொள்வார்கள். இதேபோல், முதல்நாள் இரவு நாட்டு தானியவகை ஒன்பதையும் அவித்து, நாட்டுப் பயறுவகை ஒன்பதையும் அவித்து, மா, பலா, வாழையைப் பிசைந்து ஊறிய கள், பனங்கள் ஆகியவற்றை இட்டுக் கடைந்து, அதை மடவைப் பெண்ணிடம் கொடுத்து குடிக்கச் செய்வார்கள்.
இந்த முன்னீர் கலக்கஞ்சி அருந்தி ஒரு நாழிகை கடந்ததும், அது உடனடியாக சீரணிக்கப்பட்டு நம் உடல் முழுமையும் உள்ள உயிரணுக்களுக்குள், 21 அங்க உயிர்சக்தியாக மாறிக்கொண்டே இருக்கும். இது ஒருநாள் முழுமைக்கும், அதாவது 60 நாழிகைகளுக்கு சிறிது சிறிதாக சக்தி அளித்துக்கொண்டே இருக்கும். இதுவொரு அமிர்த சஞ்சீவினியாகச் செயல்படுவதால், மூளைப்பகுதி சோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் போர்க்களத்தில் மடவைப் பெண்ணின் ஆற்றல் அதிகப்படியாகச் செயல்படும். இவள் போரின் தன்மையை நுணுக்கமாக ஆய்ந்தறியும் திறன் கொண்டவளாகவும், தன் ரகசிய செய்கைகளால் தன் உறவினனை வழிநடத்துபவளாகவும் விளங்குவாள்.
அவள் காட்டும் அறிக்கை சமிக்ஞைகளை போர்க்களத் தூதுவர்களாக இருப்பவர்கள், தம் மன்னர் சொல்லும் செய்திகளாக மாற்றி, கள நிலவரங்களை அரசனுக்குத் தெரிவிப்பர். மன்னர்தம் பாசறையின் அருகிருக்கும் சேவடிச் சாலைகளில் எவ்வளவு மருந்துப்பொருட்கள் தேவை என்பதை கண்காணிகள் தெரிவிப்பர். களத்திற்குள் இருக்கும் செவிலியர்களாகச் செயல்படுபவர்கள் இம்மடவையர்களே!
இம்மடவையின் தியாகங்களும், வெற்றிக்குத் துணையாய் செயல்படுவதும் வரும் இதழில்!
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்