றைவன் இருக்கின்றானா? அவன் எங்கே இருக்கின்றான்? எப்படி இருப்பான்? கடவுளும் இல்லை... ஒன்றுமில்லை! இறைவனும் இல்லை... எதுவும் இல்லை...! இப்படியெல்லாம் நாம் யாரும் பிதற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உலகில் 100 சதவிகிதம் பேர்களில் இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டுமே கடவுள் மறுப்பாளர்களாக இருக்கமுடியும்! பெரும்பான்மையான சமூகம் கடவுளை ஏற்றுக்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாடு மற்றும் பக்தி செய்யும் முறைகள் இருக்கிறது. இதில் எந்த தவறுமில்லை.

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவேண்டும். ஏனென்றால், பிரபஞ்சம் முழுக்க மிக முக்கியமான ஒன்பது கோள்கள், மிக முக்கியமான 27 நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தொகுப்பு 12 ராசிகள் ஆகவும், இதையெல்லாம் தவிர்த்து கண்ணுக்குப் புலப்படாத கோடிக்கணக்கான நட்சத் திரங்களும் நுண் துகள் களும் மில்கிவே என்று சொல்லக்கூடிய பால் வீதியும் பல்லாயிரக் கணக்கான கோள்களும் இருக்கின்றன என்பதை யெல்லாம் தற்போ தைய ஆராய்ச்சி கண்டு பிடித்து கொண்டிருக்கி றது. இது பற்றியெல் லாம் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே திருமந்திரச் சிற்பி தனது திருமந்தி ரத்தில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட் டுள்ளார். இப்போ தைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஒன்றை யும் கண்டுபிடிக் கப் போவதில்லை. இருப்பதை வைத் துக் கொண்டு மனித சமூகத்துக்கு கெடுதி விளைவிக் காத கண்டுபிடிப்புகளை அறிவியல் ஆராய்ச்சியாளர் களும் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்தால் அது பயனுள்ளது. மனித சமூகத்திற்கு கெடுதியை ஏற்படுத்தக்கூடிய எவ்வித ஆராய்ச்சியும் வேண்டியதில்லை. இப்போது இத்தகைய ஆராய்ச்சி செய்வது நமது வேலையா என்றால்? அதுவுமில்லை என்றே சொல்லலாம்.

ss

உனது கண்டுபிடிப்பு இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும். இவ்வாறு பிரபஞ்சம் முழுக்க பரவிக்கிடக்கக்கூடிய விஷயங் களோடு பஞ்சபூத சக்திகள் என்று சொல்லப் படும் நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற சக்திகளும் இந்தத் தொகுப்பிலேயே அடங்குகின்றன, இதில் ஜீவராசிகள் உட்பட மனித இனங்களும் சேர்ந்து வாழக்கூடிய பூமிப் பந்தும் அடங்கும். இவை அத்தனையும் ஒரு நொடிகூட ஓய்வென்பதே இல்லாமல் முழுமை யான இயக்கத்தில் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இப்போது மீண்டும் நாம் கேள்விக்கு வரலாம்! கடவுள் இருக்கிறாரா? இறைவன் இருக்கின்றானா? என்பதே அந்தக் கேள்வி! இதற்கு பதில் சொல்லப் போனால், நீ கடவுளைப் பார்த்தாயா? என்ற கேள்வி வரும். ஒருவருக்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கும். இன்னொரு வருக்கு கடவுள் இல்லையென்று இருக்கும். அதைப்பற்றி ஆராய்ச்சியும் தேவையில்லை. எப்போதும் கேள்வி கேட்கும் ஒரு கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். நாம் கேள்வி கேட்கவேண்டாம் என்று சொல்லவில்லை. கேட்கும் கேள்வி நியாய மானதா என்பது அவசியமாகும். கேள்வியில் நியாயம் இருக்கிறதா என்பதும் அவசிய மாகும். பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு அணுவும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த இயக்கத்திற்கு காரணம் வேண்டும். இப்போது ஒரு காற்றாடி (எஹய்) ஓட வேண்டும் என்றால் கூட சுவிட்சை போட வேண்டும். சுவிட்சைப் போட்டால் மட்டும் காற்றாடி சுற்றுமா? சுற்றாதா?... சுற்றாது, ஏனென்றால் அதை இயக்கும் விசையான மின்சக்தி தேவை. ஒரு மோட்டார் வாகனம் ஆகட்டும், இல்லை மனிதன் கண்டு பிடித்த எந்த ஒரு தானியங்கி இயந்திரமாகவோ, பொருளாக இருப்பினும் அதை இயக்க ஒரு விசை, அதாவது சக்தி தேவைப் படுகிறது. ஒரு காற்றாடியை இயக்கவேண்டும் என்றால் சுவிட்சைப்போட வேண்டும். சுவிட்சைப் போட்டால் காற்றாடி இயங்குமா? சுவிட்சைப் போடும் போது, சுவிட்சை இயக்குவது மனிதனுடைய கைகள். ஆனால் காற்றாடி இயங்க தேவையான சக்தியை மின் சக்தி கொடுக்கிறது. செயல்படும் கையை கண்களால் பார்க்கமுடியும். அதன் உள்ளே இயங்கும் மின் சக்தியை, இயக்கும் சக்தியை கண்களால் பார்க்கமுடியாது.

இதுவே இயற்கை.... இந்த இயற்கையே இறைசக்தி... இந்த மறை இயக்கமே மாபெரும் இறை இயக்கசக்தி. எனவே இறைவனை கண்டுபிடிப்பது நமது வேலை அல்ல. இந்த இறைசக்தி, இயற்கை சக்தி, இயக்கசக்தி நமக்கு வழங்கி அருளிய பல்வேறு உயிரினங்களை யும் சேர்த்து இயற்கை வளங்களை யும் நல்ல எண்ணங்களோடும், நல்ல சிந்தனைகளோடு நல்ல செயல்பாடுகளோடும், எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காமல் பகுத்துண்டு பல்லுயிர் போற்றுதல் எனும் உயரிய செயல்பாடே இறைவனை காணமிகவும் சிறந்த ஒரு வழியாகும். ஏனென்றால் உற்பத்தி செய்பவன். அதாவது, உலக உற்பத்திக்கு காரணமானவன் (இறைவன்). அவன் லாபம் பார்ப்பதில்லை. ஆனால் உற்பத்தி ஆனவன் (மனிதன்) லாபத்தை மட்டுமே பார்க்கிறான். இதனை ஆறாவது அறிவுக்கு உட்பட்டது, என்றும் உட்படாதது என்றும் வைத்துக்கொள்ளலாம். விவசாயி உற்பத்தி செய்கிறான், வியாபாரி லாபம் பார்க்கிறான்.

உலக உற்பத்தியின் பிரபஞ்ச பேராற்றலான பரம்பொருள் எப்படியிருக்கிறார் என்பதை அருட்பிரகாச வள்ளலார் அருளிச் செய்ததை பார்க்கலாம். அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆனஎலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்ததே கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டு கொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக்கொண்டு சலிப்பின்றிக் கண்டமெல்லாம் கடந்து நின்ற அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் ஒண்தகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

அண்டங்கள், அவற்றின் பகுதிகள், அவற்றில் வாழும் உயிர்கள், அவற்றுள் நிகழும் பொருள்கள், இவை எல்லாம் இயங்கும் இடங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இயக்குகின்ற இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான். நிறைவாம் தன் நிலைக்குள் அவற்றிற்கு இடம் கொடுத்துக் குறைவிலாது கொடுத்துக் கொண்டிருக்கின்றான். இன்னும் வந்தாலும், வருவனவற்றிற்கும் இடம் கொடுப்பவன் அவனே என்றாலும், அவன் யாதொரு மாற்றமும் அடையாதவன். பிரிவுகள் பலவும் கடந்த அண்டமாய், அதுவும் கடந்த பெருவெளியாய், அதுவும் கடந்த ஒப்பற்ற சுத்த வெளியாய், விளங்குவதும் அவனே. ஒளி பொருந்திய ஞானவெளியில் எல்லாம் வல்லவனாய், ஒப்பற்றவனாய், ஏகன் ஆகவும், அனேகனாகவும் விளங்குகின்றான். அவனே சிவம் எனும் பரம்பொருள்.

அவனே பரம்பொருள் சிவம் என்பதையும், சிவம் எனும் ஒன்றே என்பதையும் நாம் உணர்ந்து, அறிந்துகொள்ளவேண்டும். அருட்பிரகாச வள்ளலார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சாத்திரத்திற்கு (ஒழுங்குமுறை, ஒழுக்க நெறி) திருமந்திர சிற்பி திருமூலர் அருளிச்செய்த திருமந்திரத்தையும், தோத்திரத்திற்கு (பிரார்த்தனை, ஆராதனை) மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தையும் படி என்று வள்ளல் பெருமான் அறிவுறுத்துகிறார். இது எந்த அளவிற்கு அவசியமானதோ, அதற்கு இணையானது, வாழ்வியல் ஞானி மருத்துவ மேதை திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறளும் ஆகும். ஒழுக்க நெறிமுறைகளுடனும், பகுத்தறிவுடன்கூடிய தூய்மையான, ஆரோக்கியமான, நிம்மதியான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திருக்குறளை படியுங்கள் என்பது அடியேனின் பணிவான கருத்து. திருக்குறள் கூறுவதை பார்க்கலாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள், அதாவது ஒரு செய்தியை எவரெவர் சொல்லக் கேட்டாலும் (கேட்டதை கேட்டவாறு கொள்ளாமல்), அப்பொருளின், அதாவது அவ்விஷயத்தின் உண்மையான விவரத்தை காணவேண்டும் என்பதே அறிவு.

பக்தி செய்ய அன்புவேண்டும். உண்மை அன்பு இருந்தால்தான் பக்தி செய்யமுடியும். பின்வரும் திருக்குறள் கூறுவதை பார்க்கலாம்.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

அறம் செய்வதற்கு மட்டுமே அன்பு துணை யாக இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர்கள் அறியமாட்டார்கள். தீமைகளை களைந்து எறியவும் அவ்வன்பே துணையாக இருக்கும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது சில துயர செய்திகள் காதில் கேட்கிறது. கடந்த 28-9-2023 அன்று சோமாலியாவில் 1,400 பேர்கள் பட்டினியால் இறந்துவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க ஸ்பெயினில் கொடூரமான காட்டுத்தீயால் 20,000 பேர்கள் வெளியேற்றப்பட்டனர். 9-9-2023 அன்று மொரோக்க நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தோராயமாக 20,000 பேருக்குமேல் உயிரிழந்தனர். லிபியா நாட்டை டேனியல் எனும் புயல் தாக்கியதால் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு நகரமே நீரில் மிதக்கிறது. 20,000 பேருக்குமேல் உயிரிழந்துவிட்டனர். 20-9-2023 அன்று நியூயார்க் நகரில் வரலாறு காணாத மழை. நகரம் முழுமையாக நீரில் மிதக்கிறது. இந்த நிகழ்வு அனைத்தும் இயற்கையாக நடந்தது. இது இயற்கையும், இறைவனும் மனித இனத் திற்கு சொல்லும் எச்சரிக்கையாகும். ஆனால் இதை மனித இனம் மதிக்கவில்லை என்பதற்கு 8-10-2023-ல் பாலஸ்தீனத்திலுள்ள ஹமாஸ் அமைப்பும், இஸ்ரேல் ராணுவமும் ஒருவரை ஒருவர் ஆளில்லா ஆயுதங்கள்மூலம் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கே இருக்கிறது அன்பு? எங்கே போனது பக்தி? இங்கே குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் உலக விஞ்ஞானிகள் சந்திரனில் தண்ணீரை கண்டுபிடித்து விட்டதாக ஒரு நாட்டினர் கூறுகின்றார்கள். இன்னொரு நாட்டு விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் சந்திரனில் குடியேறிவிடலாம் என்று கூறுகின்றார் கள். இது அத்தனையும் நடைமுறை சாத்தியமா என்று பகுத்தறிவாக யோசிக்க வேண்டாமா? சந்திரனில் நாம் சாதாரணமாக நடப்பதற்கு ஈர்ப்பு விசையும், ஈர்ப்பு சக்தியும் ஒத்துழைக்குமா? சிந்திக்க வேண்டாமா? இயற்கை மீதும் இறைவன்மீதும் நம்பிக்கையும், உண்மையான அன்பும், நம்பிக்கையுடன் கூடிய உண்மை பக்தியும் இருந்தால் நமது புத்தி மகிழ்ச்சியாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், சமாதானமாக இருப்பதற்கும் வழியை கண்டுபிடிக்கும். இயற்கையில் இயற்கையாக இருக்கும் உயிரினங் கள் யாவும் மனிதனுக்கு எப்போதும் தீங்கை விளைவிப்பதில்லை. நாம் இயற்கையை அழிப்பதால் வனவிலங்குகள் நகருக்குள் உணவுக்காகவும் நீருக்காகவும் வந்து விடுகின்றன. இது யாருடைய தவறு. இயற்கை ஒருபோதும் இயற்கையை அழிக்காது. ஆனால் இயற்கை.... இயற்கைக்கு எதிரானவைகளை (செயற்கை), எதிரானவர்களை அதாவது இயற்கைக்கு கேடு விளைவிப்பவர்களை சமயம் பார்த்து சம்ஹாரம் (அழித்து) செய்துவிடும். அதுதான் இயற்கை.

இந்த சூழ்நிலையில் இங்கு தமிழ்நாட்டில் சினிமாத் தொழிலில் இருப்பவர்கள் வயது மூப்படைந்த பிறகு கல்விக்கு உதவி செய்கிறேன், இல்லாதவர்க்கு உதவி செய்கிறேன் என்று ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். தன் துறையில் உள்ளவர்களுக்கு அவர்கள் உதவி செய்யமுடியாதபொழுது, உதவும் மனம் இல்லாதபொழுது மக்களுக்கு எப்படி சேவை செய்யமுடியும்! ஒரு படத்தின் நடனக்காட்சியில் நடித்த துணை நடனக் கலைஞர்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்று தெருவில் வந்து கதறுகிறார்கள். இன்னும் ஒரு நிகழ்வு ஒரு உயரம் குறைவான நடிகர், இன்னொரு உச்ச நடிகரின் படத்தில் நடித்தவர் வறுமையின் காரணமாக தெருவில் கிடக்கின்றார். ஆனால் இவர்கள் எல்லாம் மக்களுக்குச் செய்கிறேன் என்று மாறு தட்டிக் கொள்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது அன்பு? அன்பு எங்கே போனது? இந்த இடத்திலே திருமந்திரச் சிற்பியின் திருமந்திரத்தில் கூறியுள்ள, "யாவர்க்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை'' பாடல் நினைவுக்கு வருகிறது. அதே வேளையில் பழைய பக்தி படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஒரு பாடலும் நினைவுக்கு வருகிறது. "உலகம் சமநிலை பெறவேண்டும், உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்''.

இதற்கு இறைவன்மீது அளப்பரிய பக்திவேண்டும். பக்தி செய்ய பிற உயிர்கள்மீது அன்புவேண்டும். எனவே கடவுள் எங்கே இருக்கிறார்? என்ன செய்துகொண்டிருக்கி றார்? இதுபோன்ற ஆராய்ச்சியை தவிர்த்து விட்டு நீ யார்? உனது வேலை என்ன? உனது சமூக அக்கறை என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் ஒவ்வொருவரும் அக்கறையோடு சிந்திக்கவேண்டும்! பிற உயிர்கள்மீது அன்பு காட்டவேண்டும்.

அதுவே இயற்கைக்கும் பிடிக்கும். இறைவனுக்கும் பிடிக்கும். உண்மை அன்பே சிறந்த பக்தி. உயர்ந்த சுய ஒழுக்கமே மிகச்சிறந்த ஆன்மிகம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம். சுய ஒழுக்கத்தில் சிறந்து, சுயநலத்தை கலைந்து பக்தியில் சிறப்போம். சக மனித இனத்தை அழிக்கும் கண்டுபிடிப்பு தேவையற்றது. மனிதநேயத்தை காக்கவும், மனித சமூகத்திற்கு சுயநலமில்லாமல் அன்பு செலுத்துவது மட்டுமே மிக உயரிய செயலாகும்.

பக்தியும், அன்பும் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி பின்வரும் திருமந்திரம் கூறுவதை பார்க்கலாம்.

ஈட்டிய தேன்பூ மனம் கண்டு இரதமும் கூட்டிக்கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரத்திட்டு அதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்டவாறே.

ஒரு பூவில் தேன் நிறைந்து இருப்பதை, அந்தப் பூவின் வாசத்தைக் கொண்டே அறிந்து கொண்டு வண்டு வந்துவிடும். பூவில் இருக்கக்கூடிய தேனை அந்த வண்டு சேகரித்துக் கொண்டு போய் ஒரு மரக்கொம்பில் கூடுகட்டிப் பாதுகாக்கும். (இதுவே கொம்புத் தேன்) இப்படி தேனீக்கள் சேகரித்து சேர்த்த தேனடையை மனிதர்கள் தீப்பந்தம் கொண்டு கொளுத்தித் தேனீக்களை விரட்டி ஓட்டிவிட்டுத் தேனைத் தாங்கள் எடுத்துக்கொள்வார்கள். அதுபோலவே, ஒருவர் தேடித்திரட்டிய செல்வத்தையும் வலிய வர் ஒருநாள், அச்செல்வம் அத்தனையும் பெரும் செல்வம் உடையவர் அபகரித்துக்கொள்வர். அதாவது தேன்கூடு மற்றவர் கண்ணில் படும்படி காட்டப்பட்டது. அதுதான் இருப்ப தைக் காட்டிக்கொடுத்தது. எனவே அந்தத் தேனானது தேனீக்களின் கைவிட்டு போயிற்று. அதைப்போலவே ஈட்டிய செல்வமும் ஒருநாள் அவரின் கையைவிட்டு போய்விடும். இதுவே எதார்த்தம்.

இதைப் புரிந்துகொண்டு இல்லாத வர்களுக்கு இயன்றதைக் கொடுத்து உதவிசெய்வதே சிறந்த அன்பாகும். இது நாம் அறியாமலே, இறைவன்மீது பக்தி செய்ய, செலுத்த காரணமாக அமையும். இச்செய்கையின்மூலம் இறைவனின் கருணை நம்மீது பரவும். இதில் சந்தேகம் வேண்டாம். எனவே உண்மை பக்தி அன்புடன் செய்யும் அறத்திலே உள்ளது. எப்படி பக்தி செய்யவேண்டும் என்பதை கீழ்வரும் திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம். ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை ஈரம் உடையவர் காண்பர் இணையடி பாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்கு புக்காரே சிவப்பரம் பொருளை அடையவேண்டும் என்கின்ற பேரன்பு, ஆசை, சலிப்பில்லாத முயற்சி உடையவர்கள் அவனைக் காணப் பெறுவார்கள். மனதில் இரக்கம், அன்பு (ஈரம்) கொண்டவர்கள் இறைவனது திருவடிகளைக் காணும் பேறுபெறுவார்கள். இந்த இரண்டும் இல்லாத துன்பச்சுமையையும், துயர வினைகளையும் தொடர்ந்து சுமப்பவர்கள் இந்த உலகத்தில் அதில் தொடரும் பிறப்பையும் இறப்பையுமே காண்பார்கள். இவர்கள் அன்பில்லாத கொடிய துன்பவழியில் சென்று, துயரக் காட்டில் தவிர்ப்பார்கள். எனவே அன்பு செய்பவருக்கும், அறம் செய்பவருக்குமே இறைவனை காணும் இன்ப நிலைக் கிட்டும்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு வோம். எல்லாமாக இருக்கும் ஏகன், அநேகனின் அன்பருளை அள்ளிக்கொள்வோம்.