மேஷம்

இம்மாதம் மிக முக்கிய கிரகப்பெயர்ச்சிகளில் ஒன்றான சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. (20-12-2023). இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் ஆட்சியாக இருந்த சனி இப்போது 11-ல் ஆட்சியாக மாறுகிறார். சனிக்கு யோகம் தரும் இடங்களே 3, 6, 11-ஆமிடங்கள்தான். எனவே இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும் சனிப்பெயர்ச்சியாக விளங்கும். 10-ஆமிடத்துச் சனி பதவி பறிக்கும் என்பது பொதுவிதி. அதன்படி கெடுதலையே அனுபவித்தவர்களுக்கு 11-ஆமிடத்து சனி லாபமும் வெற்றியும் அனுகூலமும் உண்டாக்கும். கும்ப சனி 3-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும், 7-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். 11-க்குடையவர் உங்கள் ராசியைப் பார்ப்பது சிறப்பு. திறமை, செயல்பாடு, கீர்த்தியெல்லாம் சிறப்பாக செயல்படும். போட்டி, பொறாமைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் வகையில் நல்ல காரியத்தை நடத்திமுடிக்கலாம். நன்மதிப்பும் பாராட்டும் அவர்களால் உண்டாகும். 8-ஆமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள் விருத்தி உண்டாகும். சில நேரம் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். கணவன் அல்லது மனைவிவகையில் சிலருக்கு ஆதாயம் உண்டாகலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும். மதுரை திருப்பரங்குன்றத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி இதுவரை 9-ல் இருந்தார். இப்போது 10-ஆமிடத்துக்கு மாறுவதோடு ஆட்சியும் பெறுகிறார். பொதுவாக 9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பது ஜோதிடவிதி! அதேநேரம் 10-ஆமிடத்துச் சனி பதிகுலையச் செய்யும் என்பதும் ஜோதிட விதிதான்! இங்கு 10-ல் மாறினாலும் ஆட்சிபெறுவதால் பதவிமாற்றம் ஏற்பட்டாலும் அது நன்மை தரும் மாற்றமாகவே அமையும். செய்தொழிலில் மதிப்பு, மரியாதை உயரும். கும்ப சனி 3-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். 12-ஆமிடம் விரய ஸ்தானம். 4-ஆமிடம் வீடு, பூமி, வாகன ஸ்தானம். இவற்றை விற்று அதன்மூலம் பழைய கடன்களை அடைத்துவிட்டு மீதமிருக்கும் கையிருப்பைக்கொண்டு புதிய தொழில்செய்து நிரந்திர வருவாய்க்கு வழிவகை தேடலாம். தேகசுகம் தெளிவுபெறும். 7-ஆமிடத்தை சனிப் பார்ப்பதால் கணவன்- மனையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை ஏற்பட்டு விலகும். தாயார் உடல்நலனில் சௌக்கியம் உண்டாகும். மதுரை, திருபரங்குன்றமருகில் திருக்கூடல் மலையில் ஸ்ரீ சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்குசென்று வழிபடவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆனார்.

Advertisment

மிதுனம்

இதுதுரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த சனி இம்மாதம் 20-ஆம் தேதி 9-ஆமிடத்துக்கு மாறுகிறார். கடந்த அட்டமச்சனியில் பல லட்சம் நஷ்டங்களைச் சுமந்து கடன்களையும் எதிரிகளையும் வழக்குகளையும் சந்தித்தவர்கள் அதிகம்! குடியிருப்பு மாற்றம், வேலையில் இடமாற்றம் போன்றவற்றையும் சந்தித்தீர்கள். மிதுன ராசிக்கு 9-ல் வந்திருக்கும் சனி 3-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். 9-ல் மாறிய சனி உடல் நிலையில் தொல்லைகளைக் குறைத்து கால் சம்பந்தப்பட்ட உபாதைகளில் இருந்தும் நிவாரணம் அளிப்பார். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும், இவை இரண்டுமிருந்தால் எதையும் சாதிக்கும் வல்லமை பெருகும். 11-ஆமிடம் ஜெயஸ்தானம்! தொழில்துறையில் அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும். நஷ்டங்கள் லாபமாக மாற வழிவகைகள் பிறக்கும். உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் யோகத்தையும் முன்னேற்றைத்தையும் வெற்றியையும் தரும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தொழில் முதலீட்டுக்கான கடன் கிடைக்கும் வழிவகை அமையும். உங்களுக்கு ஜாமீன் கொடுக்க முக்கிய பிரமுகர்கள் உதவுவார்கள். சத்ருஜெயம் உண்டாகும். திண்டுக்கல், மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. திருவாதிரை நட்த்திரத்தில் ஜீவசமாதி ஆனவர். ரமண மகரிஷிக்கு ஆன்மிக வழியைக் காட்டியவர்.

கடகம்

Advertisment

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் ஆட்சியாக இருந்த சனி இம்மாதம் 20-ஆம் தேதி 8-ல் ஆட்சிபெற்று மாறுகிறார். அதனால் உங்களுக்கு அட்டமத்துச் சனி ஆரம்பம்! ஏழரைச்சனியும் அட்டமத்துச்சனியும் எல்லாரையும் பயமுறுத்தி வைக்கும் சனிதான்! அகப்பட்டவனுக்கு அட்ட மத்துச் சனி என்று ஜோதிடமொழி உண்டு! அட்டமத்துச்சனி என்றாலே ஒரு கி-தான்! ஆனால் சனி கெட்ட கிரகமேயில்லை. கண்டிப்பான ஒரு தந்தையைப் போன்றவர். நியாயமான தீர்ப்பு வழங்கும் ஒரு நீதிபதியைப் போன்றவர். கும்ப சனி 3-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். 8-ல் ஆட்சிபெறும் சனி திடீர் அதிர்ஷ்டத்தையும் தருவார். 10-ஆமிடத்திற்கு 11-ல் ஆட்சிபெறுவதால் தொழில் யோகத்தையும் லாபத்தையும் தருவார். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத தன சம்பாத்தியத்தைத் தருவார். பணப்புழக்கம் இருக்கும். 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களைச் செயல்படுத்தி சுப விரயத்தைத் தருவார். ஒருசிலருக்கு சங்கடத்தைக் கொடுத்தாலும் பெரிய பிரச்சினைக்கு இடமில்லை. திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருநெல்வே- அருகில் வல்ல நாடு சென்று சாது சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். பூசம் நட்சத்திரத்தன்று ஜீவசமாதியானவர்.

dd

சிம்மம்

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த சனி இம்மாதம் 7-ல் மாறி ஆட்சிபெறுகிறார். ஏற்கெனவே சனி இருந்த இடம் மிகமிக நல்ல இடம். 3, 6, 11-ஆமிடங்கள் உபஜெய ஸ்தானங்கள் யோகமான இடங்கள். என்றாலும் சில நன்மைகள் நடந்தாலும் பல நன்மைகள் நடக்காமல் போய்விட்டது என்பதுதான் உண்மை! 7-ல் வந்திருக்கும் சனி கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், சச்சரவுகளைத் தருவார். இருவரில் யாரேனும் ஒருவருக்கு தேக சுகத்தைக் கெடுப்பார். கும்ப சனி 3-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் (1-ஆமிடம்), 10-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும் பார்க்கிறார். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துக்களினால் இருந்த வில்லங்க, விவகாரம் மறையும். லாபம் உண்டாகும். வழக்குகள் சுமூகமான தீர்வுகள் கிடைக்கப்பெறும். ஜென்ம ராசியைப் பார்ப்பதால் ஏற்கெனவே உங்கள் பேர் ரிப்பேராக இருந்த நிலைமாறி மரியாதை உண்டாகும். நாணயமாக நடந்து நல்லபெயர் எடுக்கலாம். 4-ஆமிடத்தைப் பார்க்கும் சனி நோய் நிவர்த்தியையும் ஆரோக்கிய விருத்தியையும் தருவார். உடல்நலமும் மனநலமும் தனிபலமாக செயல்படும். உடல்நலமாக இருந்தால் மனமும் நலமாக மாறிவிடுமல்லவா தைரியமும் அதிகமாகும். திருவாரூர் மாவட்டம், மடப்புரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். உத்திரம் நட்சத்திரம்- குரு பூஜை.

கன்னி

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த சனி இம்மாதம் 20-ஆம் 6-ல் மாறுவதோடு ஆட்சியும் பெறுகிறார். ஏற்கெனவே கூறியதுபோல் 3, 6, 11-ஆமிடங்கள் சனிக்கு நல்ல இடங்கள். 6-ல் வந்திருக்கும் சனி கடந்த காலத்தில் நடந்த சங்கடங்களை விரட்டியடிப்பார். சத்ரு ஜெயத்தையும், போட்டி, பொறாமைகள் விலகுதல் போன்ற நன்மைகளைத் தருவார். கும்ப சனி 3-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். 3-ஆமிடம், சகோதர, சகாய, தைரிய, வீரிய, பராக்கிரம ஸ்தானம். தெம்பு குறைந்த உங்களுக்கு இனி நம்பிக்கையும் பலமும் தைரியமும் உண்டாகும். ஊக்கமும் உற்சாகமும் பிறக்கும். 8-ஆமிடம், 12-ஆமிடம் இரண்டும் துர் ஸ்தானங்கள். 8 சஞ்சலம், விபத்து, பீடை, கண்டம், அபகீர்த்தி, போராட்டம், கௌரவபங் கம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றைப் போக்கி நன்மைகளைத் தருவார். 12 விரயம், அலைச்சல், வெளியூர் வாசம், பயணம், இடப்பெயர்ச்சி ஆகியவற்றைதருவார். திடீர்பயணம் உண்டாகும். குடியிருப்பு அல்லது வேலையில் வெளியூர் இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட ஸ்தானத்தில் கெடுபலனைக் கெடுத்து ராசிக்கு நற்பலனைத் தரும். திண்டுக்கல், பழனி சாலையில் கணக்கன்பட்டி சென்று பழநி சுவாமிகள் என்ற மூட்டை சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். சக்திவாய்ந்த மகான்.

துலாம்

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்தவர், இப்போது 5-ஆமிடத்துக்கு மாறுகிறார். 5-ல் திரிகோணம் பெறுகிறார். 4-ல் சனி இருந்தபோது ஆரோக்கியத் தொல்லை, ஆயுள்குற்றம் வராமல் தடுத்தாலும் அதற்கு நிகர் மனவேதனை போன்றவற்றைக் கொடுத்தார். தசாபுக்தி யோகமாக இருந்தவர்களுக்கு நற்பலனையும் தந்தார். 5-ல் வந்திருக்கும் சனி உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் ஈடேற்றுவார். கும்பச்சனி மூன்றாம் பார்வையாக ஏழாமிடத்தையும், ஏழாம் பார்வையாக 11-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ஆமிடம் திருமணத்தைக் குறிக்கும். 7-ல் சனி இருந்தால் தோஷம். 7-ஆமிடத்தைச் சனி பார்த்தால் தோஷ நிவர்த்தி. திருமண முயற்சிகள் கைக்கூடும். ஏற்கெனவே திருமணமாகி பிரிந்திருந்த தம்பதிகள் இனி ஒன்றுசேர்வர். 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் லாபம், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒருசிலருக்கு வீடு, நிலம் விற்று பெரும் லாபம் தேடி வேறுவகையில் சுபமுதலீடு செய்யலாம். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பேச்சுக்கும் சொல்லுக்கும் முக்கியத்துவம் ஏற்படும் என்றாலும் வார்த்தையில் கவனமும் அவசியம். பேச்சில் நிதானமும் தேவை. பொன்னமராவதி, புதுக்கோட்டை பாதையில் செம்பூதி என்றஇடத்தில் சிவந்தி-ங்க சுவாமிகள், ஏகம்மையம்மாள் ஜீவசமாதி சென்று வழிபடவும். தம்பதிகளாக ஜீவசமாதி ஆனவர்கள்.

விருச்சிகம்

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த சனி இம்மாதம் 20-ஆம்தேதி 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறார். அர்த்தம் என்றால் பாதி. அட்டமத்தில் பாதி, நாலு, நாலாமிடத்துச் சனி! ஏற்கெனவே இருந்த இடம் 3 மிக நல்ல இடம் என்றாலும் அதற்குரிய யோகத்தை அடைந்தீர்களா என்பது கேள்விக் குறிதான்! 4-ல் சனி ஆட்சியாக வருவதால் அட்டமத்தில் பாதி என்பதைப் பற்றிய பயம் வேண்டாம். கும்பச் சனி 3-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கிறார். 6-ல் கடன், போட்டி, நோய், எதிரி, வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்குமிடம், 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானம் 9-ஆமிடம். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். 4-ல் நிற்பதால் தேக சுகத்தைக் கெடுக்குமோ என்ற பயம் ஏற்பட்டாலும் 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் வைத்தியச் செலவுகள் குறையும், தொழில்துறையில் நிலவிய கஷ்டங்களும் பிரச்சினைகளும் விலகும். பொருளாதாரத்தடை நெருக்கடியும் மாறும். ஜென்ம ராசியைப் பார்ப்பதால் அவப்பெயர் மாறி நற்பெயர் உண்டாகும். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளை சமாளிக்கவும் உங்களுக்கு ஆற்றல், திறமை உருவாகும். தன்னம்பிக்கை வளரும். தாயார் சுகம் தெளிவுபெறும், தொழில் வளம்பெறும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும், தத்தகிரி முருகனையும், ஸ்ரீஸ்வயம்ப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதியையும் வழிபடவும்.

தனுசு

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த சனி 3-ல் மாறுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு எட்டு வருடகாலமாக நடந்த ஏழரைச்சனி முழுமையாக விலகிவிட்டது. இதுவே பெரிய யோகம். சொத்து, சுகம், தொழில் யோகம், மனைவி யோகம் இவற்றைக் கொடுத்த சனி தாய்- தந்தை இவர்களுக்கு உயிர் இழப்பு அல்லது மேஜர் வைத்திய செலவு போன்றவற்றையும் தந்தது. கும்பச்சனி 3-ல் நின்று 3-ஆம் பார்வையாக 5-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும் பார்க்கிறார், சகோதர சகாயம், உதவி, ஒத்தாசைகளும் உண்டாகும். 5-ஆமிடமும், 9-ஆமிடமும் பூர்வபுண்ணிய ஸ்தானம். பூர்வீகச் சொத்தில் சில பிரச்சினைகளும் வில்லங்க விவகாரம் ஏற்பட்டாலும் சாதகமான தீர்வுகள் உண்டாகும். பிள்ளைகள்வகையில் நல்லவைகள் ஏற்படும். அவர்களின் எதிர்கால நன்மை கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தெய்வீக பயணமும் உண்டாகும். 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண் விரயம் ஏற்பட்டாலும் அதை சுபவிரயமாக மாற்ற வழிவகைகளை ஏற்படுத்தித் தருவார். குடியிருப்பு மாற்றம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் பலன்தரும். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று ஸ்ரீகசவன மௌனஜோதி நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். ஐப்பசி மாதம்- மூலம் நட்சத்திரம் குரு பூஜை.

மகரம்

மகர ராசிநாதன் சனி இதுவரை ஜென்ம ராசியில் நின்று படாதபாடு படுத்திவிட்டார். ராசிநாதன் என்றாலும் பாரபட்சமில்லாமல் வாட்டி வதைத்துவிட்டார் என்றேகூட சொல்லலாம். தலைக்கு மீறிய கடன், போட்டி, பொறாமை, வீண் விரயம் போன்றவற்றைச் சந்திக்க வைத்தார், இப்போது 2-ல் வருவதால் இது பாதச்சனி என பொருள்படும். பெரிய நன்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரிய கெடுதல் நேராது என்று கூறலாம். தனவரவு ஏற்படும். கும்பச் சனி 3-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 8-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்குச் சனியாக வீடு, மனை பாக்கியம், வாகன யோகம், தாய்வழி அனுகூலம், வாக்கு, வித்தை ஆகியவற்றைத் தருவார். 8-ஆமிடம் விபத்து, விசனம், ஆயுள், கவலை ஆகிய பலனைக் குறிக்கும். ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தீர்க்காயுள் உண்டு, சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும் உயிர்ச் சேதம் அல்லது அதற்கு சமமான பொருட்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் லாபம் வெற்றி ஏற்படும். வில்லங்கம், விவகாரம், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றியும், காரிய ஜெயமும் தேர்வில் வெற்றியும் ஏற்படலாம். கும்பகோணம் குடவாசல்வழி சேங்கா-புரம் தத்தாத்ரேயர் கோவி-ல் கார்த்தவீர்யார்ஜுண யந்திரம், ஸ்ரீ ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கும்பம்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் விரய ஸ்தானத்தில் இருந்த சனி இம்மாதம் 20-ஆம் தேதி ஜென்மத்தில் ஆட்சியாக வருகிறார். இதுவரை ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தது. இனி ஜென்மச்சனி ஆரம்பம், இன்னும் ஐந்து வருடம் ஏழரைச் சனி பாக்கி இருக்கிறது. ஜென்மச் சனி சீரழிக்கும் என்பது பொதுவிதி இங்கு சனி ராசிநாதன் என்பதால் விதிவிலக்கு உண்டு. ஜென்மச்சனி 3-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரிய, சகோதர ஸ்தானம். சகோதரவகையில் நிலவிய பகையும் வருத்தமும் மாறும். தன்மைபிக்கையும் அதிகமாகும். 7-ஆமிட என்பது மனைவி ஸ்தானம். 7-ல் சனி நின்றால் தோஷம். சனி பார்த்தால் காலதாமதமான திருமணம். குரு 3-ல் நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் குரு பார்க்கக் கோடி குற்றம் நீங்குமல்லவா!? முதல் சுற்று அல்லது இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ஜாதக தசாபுக்தி பாதமாக இருந்தால் மனைவியைப் பிரிந்துவாழ வேண்டிய நிலை! 10-ஆமிடம் தொழில் ஸ்தானம். உத்தியோக மேன்மை ஏற்படலாம். புதுமுயற்சிகளில் நன்மை உண்டாகும், குடும்பப் பொறுப்புகள் கூடுதல் ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு தொழில் அல்லது குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். பொன்னமராவதி, புதுக் கோட்டை பாதையில் குழிபிறை அருகில் பனையூர் ஒடுக்கத்தில் ஞானி சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். சதயம் நட்சத்திரம்- குரு பூஜை!

மீனம்

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த சனி இம்மாதம் 20-ஆம் தேதி 12-ல் மாறுகிறார். எனவே ஏழரைச்சனி ஆரம்பம். 11-ஆமிடம் சனிக்கு நல்ல இடம் என்றாலும் அக்காலகட்டம் பெரிய நன்மைகளை பலரும் அடையவில்லை என்பதே அனுபவம்! முதல் சுற்று- மங்குசனி, இரண்டாம் சுற்று- பொங்குச் சனி, மூன்றாம் சுற்று- மரணச் சனி என்பது விதி! 12-ல் வரும். சனி வீண் விரயம், அலைச்சல், இடமாற்றம், அலைக்கழிப்பு போன்ற பலன்களைத் தருவார். கும்பச்சணி 3-ஆம் பார்வையாக 2-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். 2-ஆமிடம், வாக்கு, தனம், குடும்பம் இவற்றைக் குறிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அதற்காகக் கடனும் வாங்க நேரிடும். பழைய கடனை அடைக்கவும் புதிய கடன் வாங்குவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் நோய் நொடி விலகும். வைத்தியச் செலவு குறையும். வம்பு, வழக்கு வியாஜ்ஜியங்களில் தீர்ப்புகள் காலதாமதமாகும். ஒருசில நேரம் உட-ல் மந்தநிலை காணப்படும். 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தந்தை உள்ளவர்களுக்கு தந்தையின் தேகநலன் பாதிக்கப்படலாம். தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பிரிவினைக்கு இடமில்லை. வெளியூர், வேலை பலன்தரும். முயற்சியும் கைகூடும். சிங்கம் புணரியில் வாத்தியாரய்யா என்ற ஸ்ரீ முத்துவடுகநாதர் சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். அலைபேசி: 99440 02365