டிசம்பர் மாத ராசி பலன்கள்

/idhalgal/om/december-horoscope-benefits

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் வக்ரகதியில் இயங்குகிறார். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம். மனதில் ஒருவித குழப்பம் நிலவலாம். எதிர்மறைச் சிந்தினைகள் அதிகமாகும். கணவ- மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டாகலாம். 2-க்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்ப்பதால் பொருளாதாரத்தில் தேவைகள் நிறைவேறும். 6-ஆம் தேதி தனுசு ராசிக்கு சுக்கிரன் மாறுவதால் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். 3, 6-க்குடைய புதன் 9-ல் இருக்கிறார். சகோதரவழியில் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஒற்றுமை எண்ணமும், விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப் பக்குவமும் ஏற்படும். 10-ல் ஆட்சிபெற்ற சனி உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களைத் தருவார். பணி நீக்கமடைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உண்டாகும். செவ்வாயன்று முருகனையும் துர்க்கையையும் வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ஆம் தேதிமுதல் தனுசு ராசிக்கு மாறுகிறார். ராசிநாதன் 8-ல் மறைவது நல்லதல்ல என்றாலும், அவர் 6-க்குடையவர் என்ற அடிப்படையில் மறைவதை ஒருவகையில் நல்லதாக எடுத்துக்கொள்ளலாம். விபரீத ராஜயோகங்களை எதிர்பார்க்கலாம். தடைப்பட்டு நின்ற தொழில்வகையில் சில நல்ல மாற்றங்களும் ஏற்படும். 2-க்குடைய புதன் 8-ல் மறைகிறார். அவரை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எனவே, சில செயல்பாடுகளில் வீண் விரயம் அல்லது ஒன்றுக்கு இரண்டான வேலை அமைவதுபோன்ற பலன்கள் உண்டாகும். 5-க்குடையவர் 8-ல் மறைந் தாலும் குரு 11-ல் நின்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் எண்ணிய எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். பூர்வீக சொத்துகள் இருந்தால் அவற்றில் சிறிய வில்லங்கம் ஏற்படலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாதரை வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். புதன் 4-க்கும் உடையவர். ஆகவே, தேக ஆரோக்கியம் நன்றாக விளங்கும். பணியில் உற்சாகமும் தெளிவும் பிறக்கும். அட்டமத்துசனியின் நிறைவு காலம் என்பதால் ஆரம்பத்தில் பட்ட

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் வக்ரகதியில் இயங்குகிறார். 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம். மனதில் ஒருவித குழப்பம் நிலவலாம். எதிர்மறைச் சிந்தினைகள் அதிகமாகும். கணவ- மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டாகலாம். 2-க்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்ப்பதால் பொருளாதாரத்தில் தேவைகள் நிறைவேறும். 6-ஆம் தேதி தனுசு ராசிக்கு சுக்கிரன் மாறுவதால் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். 3, 6-க்குடைய புதன் 9-ல் இருக்கிறார். சகோதரவழியில் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஒற்றுமை எண்ணமும், விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப் பக்குவமும் ஏற்படும். 10-ல் ஆட்சிபெற்ற சனி உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களைத் தருவார். பணி நீக்கமடைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உண்டாகும். செவ்வாயன்று முருகனையும் துர்க்கையையும் வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ஆம் தேதிமுதல் தனுசு ராசிக்கு மாறுகிறார். ராசிநாதன் 8-ல் மறைவது நல்லதல்ல என்றாலும், அவர் 6-க்குடையவர் என்ற அடிப்படையில் மறைவதை ஒருவகையில் நல்லதாக எடுத்துக்கொள்ளலாம். விபரீத ராஜயோகங்களை எதிர்பார்க்கலாம். தடைப்பட்டு நின்ற தொழில்வகையில் சில நல்ல மாற்றங்களும் ஏற்படும். 2-க்குடைய புதன் 8-ல் மறைகிறார். அவரை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எனவே, சில செயல்பாடுகளில் வீண் விரயம் அல்லது ஒன்றுக்கு இரண்டான வேலை அமைவதுபோன்ற பலன்கள் உண்டாகும். 5-க்குடையவர் 8-ல் மறைந் தாலும் குரு 11-ல் நின்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் எண்ணிய எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். பூர்வீக சொத்துகள் இருந்தால் அவற்றில் சிறிய வில்லங்கம் ஏற்படலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாதரை வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். புதன் 4-க்கும் உடையவர். ஆகவே, தேக ஆரோக்கியம் நன்றாக விளங்கும். பணியில் உற்சாகமும் தெளிவும் பிறக்கும். அட்டமத்துசனியின் நிறைவு காலம் என்பதால் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடை காணுவதுபோல பிற்கூறு அமையும். 12-க்குடைய சுக்கிரன் 7-ல் மாறியபிறகு மகிழ்ச்சியும் அதிகமாகும். பிள்ளைகளுக்காக சுபவிரயங்களும் உண்டாகும். அல்லது சுப முதலீடும் ஏற்படலாம். அலைச்சல் சற்று அதிகமானாலும் ஆதாயமும் கிடைக்கும். 10-க்குடைய குருவும் 8-க்குடைய சனியும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில்வகையில் வரவும் செலவும் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். பூமி, மனை இவற்றில் எடுக்கும் முடிவால் திடீர் வருமானமும் பெற வாய்ப்புண்டு. லட்சுமி நாராயணரை புதன்கிழமை வழிபடவும்.

கடகம்

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 5-ல் கேந்திரம் பெறுகிறார். (டிசம்பர் 16-ஆம் தேதிமுதல்). 10-க்குடைய செவ்வாய் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில் மற்றும் வேலை, உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் மாறும்; மறையும். செவ்வாய் 11-ல் வக்ரமாக இருப்பதால் காரிய ஜெபம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கைக்கு இடமுண்டு. பணிபுரியும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோகத்தைப் பொருத்து தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணியாளராக வாய்ப்புண்டு. 3, 12-க்குடைய புதன் 6-ல் இருப்பதால் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புரீதியாக சில முயற்சிகள் கைகூடும். நண்பர்கள்வகையில் சகாயமும் ஒத்துழைப்பும் கிடைக்கும். விலகிய சொந்தங்களும் வந்து இணையும் சூழல்களும் அமையும். திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 2-க்குடைய புதன் 5-ல் கேந்திரம் பெறுகிறார். 5-க்குடைய குரு 8-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். அலைச்சல், திரிச்சல்கள் அதிகமானாலும் அதற்குரிய வரவும் வந்துசேரும். தாய்மாமன்வழி உறவினரால் ஒரு ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். 6-ல் சனி ஆட்சி. கடன் சுமை குறையும். கடந்தகாலத்தில் இழுபறியாக இருந்த சில காரியங்கள் வேகமாக நடைபெறும் முயற்சிகள் அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். தொழில், வாழ்க்கை இவற்றில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சொத்து விற்பனையில் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். சாண் ஏற முழம் வழுக்கிய நிலை மாறும். நன்மதிப்பும் ஏற்படும். விநாயகரை ஞாயிற்றுக்கிழமை வழிபடவும்.

dd

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். 4-க்குடைய குரு ராசியைப் பார்க்கிறார். உங்களது வேலையில் திறமையாக செயல்பட்டு காரிய ஜெயமடைவீர்கள். 5-ல் ஆட்சிபெறும் சனி மனத்திட்டங்களை செயல்படுத்துவார். பிள்ளைகள்வழியில் சுபகாரிய செலவுகள் வந்துசேரும். குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் ஒருசிலருக்கு கணவரால் ஆதாயம் அதிகமாக விளங்கும். ஒருசிலர் கணவருக்குத் தெரியாமல் சிறு சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடலாம். தவணைத்திட்டத்தில் மனை வாங்குவது அல்லது ஆபரணம் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சினை விலகும். 9-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய புதனும் 4-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகம் எனும் ப்ளஸ் பாயின்ட்! புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் விருச்சிகத்தில் (2-ஆமிடம்) இருந்தாலும், 6-ஆம் தேதிமுதல் 3-ல் மாறுகிறார். 12-க்குடைய விரயாதிபதி புதனுடன் சேர்க்கை. 3-ஆமிடம் தைரிய, வீரய, சகோதர சகாய ஸ்தானம். அங்கு ராசிநாதன் வருவதால் முயற்சிகளில் பலன் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். 11-க்குடைய சூரியன் 16-ஆம் தேதிமுதல் 3-ல் மறைவதால் உத்தியோகவகையில் ஒருசில விஷயங்களில் காரியானுகூலம் தாமதப்படலாம். குரு 6-ல் நின்று 12-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்ப்பதால் வரவும் செலவும் சரிக்குசரியாக நிகழும். சிலநேரம் வரவைவிட செலவு அதிகமாகும். 4-ல் சனி. தேகநலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வந்துவிலகும். ஜென்ம கேது அவ்வப்போது சோர்வுகளைத் தருவார். வெள்ளிக்கிழமை விநாயகருக்கு செம்பருத்தி மாலை சாற்றி வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் வக்ரமாக இருக்கிறார். ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது ஒரு பலம்தான். தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவாகும். 5-ல் குரு ஆட்சிபெற்று பார்ப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும். 16-ஆம் தேதிமுதல் சூரியன் 2-ல் மாறியபிறகு தொழிலில் ஒருமுன்னேற்றம் ஏற்படும். அவற்றை விரிவுபடுத்துவதற்கான கூட்டணி முயற்சிகளும் கைகூடும். எதிர்பார்த்த தொகையும் கிடைக்கும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் அமைந்தால் லாபம், ஜெயம் ஏற்படும். புதிய வாகன முயற்சிகள் அமையும். 3-ஆமிடத்து சனி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்துவார். செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை வழிபடவும்.

தனுசு

ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி. 7-க்குடைய புதன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக விளங்கும். 2-ல் உள்ள சனி பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவார். குரு 10-ஆமிடத்தையும், 12-ஆமிடத்தையும் பார்ப்பதால் தொழில் நிமித்தமாக சில விரயங்கள் ஏற்படலாம். அதை சுபவிரய முயற்சியாக மாற்றியமைக்கலாம். 5-க்குடைய செவ்வாய் 6-ல் மறையும்போது சொத்து, பூமி சம்பந்தமான பாகப் பிரிவினையில் சுமூக முடிவு ஏற்படலாம். இடமாற்றங் கள் எதிர்பாராதவிதமாக அமையும். அத்துடன் அலைச்சலும் சற்று அதிகமாக இருக்கும் தேகசுகம் தெளிவுபெறும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவர் 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது. மனைவிவகையில் கணவனுக்கும், கணவன்வகையில் மனைவிக்கும் சகாயம் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் பலன் தரும். அரசு உத்தியோகஸ் தர்களுக்கு இடப்பெயர்ச்சியும் பதவி உயர்வும் ஏற்படலாம். 4-க்குடைய செவ்வாய் 5-ல் வக்ரம் பெறுவதாலும், 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தேகநலனில் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். சொத்துகள் விற்பனையாவதில் தாமதம் உண்டாகும். சொந்த பந்தங்களினாலும் சங்கடமும் வருத்தமும் ஏற்படலாம். 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் இணைவதன்மூலம் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமும், ஆஞ்சனேயருக்கு நெய்தீபமுமேற்றி வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி விரயஸ்தானத் தில் சஞ்சரிக்கிறார். அதேசமயம் தனஸ்தானாதிபதி 2-ல் ஆட்சிபெறுகிறார். விரயங்கள் கூடுதலாகவே இருந்தாலும் அவற்றைச் சரிக்கட்ட வருமானமும் வந்துகொண்டிருக்கும். அதனால் காரியத் தடைகள் ஏதும் வராது. இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றில் நாட்டம் உண்டாகும். 3-ல் உள்ள ராகு எதையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சலைத் தரும். வீண்விரயங்களை சுபவிரயமாக மாற்றும் யுக்திகளைக் கையாளுங்கள். விரயச்சனி வீண் விரயமாகாது. 4-ல் செவ்வாய் வக்ரம் பெறுவதால் அடிக்கடி தேக நலனில் பாதிப்பு உண்டாகும். 6-ஆமிடத்தை சனி பார்ப்பதால் கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 10-ல் உள்ள சூரியன் அரசுப் பணியாளர்களுக்கு சாதகமான பலன் தரும். உடன்பிறந்தவகையில் சில சங்கடங்கள் ஏற்படலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம். 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். என்றாலும் 2-க்குடைய செவ்வாய் 3-ல் வக்ரகதியில் செயல்படுகிறார். வருமானப் பற்றாக் குறை ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கவேண்டிய சூழல் உருவாகும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகள்வகையில் இன்னல்களும் இடைஞ்சல்களும் ஏற்படும். பணப் பொறுப்பைக் கையாள்பவர்கள் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். 2-ஆமிடத்து ராகு சிலநேரம் குடும்பத்தில் குழப்பங்களைத் தரலாம். எனினும் ஜென்ம குரு அவற்றை சமாளிக்கும் ஆற்றலைத் தருவார். 11-ல் சனி ஆட்சி. எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் முடிவில் சாதகமான முடிவுகள் நிகழும். செலவுகளை சுருக்கி சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாழக்கிழமை ராகு- கேதுவை வழிபடவும்.

om011222
இதையும் படியுங்கள்
Subscribe