மேஷம்

இந்த மாதம் மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் சஞ்சரிக்கி றார்; நீசமாகவும் இருக்கிறார். மேலும் மாதத் தொடக்கத்தில் வக்ரமும் பெறுகிறார். 2-ஆமிடத்தில் இருக்கும் குருவும் வக்ரமாக இருக்கிறார். பொருளாதாரத் தேவைகள் ஒருபுறம் நிறைவேறினாலும் மறுபுறம் தேக ஆரோக்கியத்தில் சிக்கல், சிரமங்கள் ஏற்படலாம். 5-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. எண்ணம், திட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றிலும் ஒரு நிறைவற்ற சூழ்நிலை கள் தென்படும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வகையில் கவலைகள் தோன்றி மறையும். 16-ஆம் தேதிக்குப்பிறகு சூரியன் 9-ல் மாறுகிறார். பூர்வீக இடம் சம்பந்தப்பட்ட வகையில் வழக்கு விவகாரங்கள் ஏற்படும். 2-க்குடைய சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 10-ல் சஞ்சாரம். நீசம்பெற்ற செவ்வாய் சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரனும் செவ்வாயைப் பார்க்கிறார். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் பிரிவு பிளவிற்கு இடமில்லை. கடந்த மாதம் 11-ல் நிற்கும் சனி வக்ரநிவர்த்தியானது ஒரு பெரிய ஆறுதல். அந்த ஆறுதல் இம்மாதமும் தொடரும். காரியத் தேவைகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். என்றாலும் அதுவரை மனதில் ஒரு நிம்மதியில்லாத நிலைகளை உருவாக்கும். சகோதரவகையில் சில சங்கடங்கள் உண்டாகலாம்.

பரிகாரம்: பழனி முருகனையும், அங்குள்ள போகர் ஜீவசமாதியையும் வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதத் தொடக்கத்தில் (3-ஆம் தேதி) மகர ராசியான 9-ஆமிடத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வையைப் பெறுகிறார். குரு வக்ரகதி. ராசிநாதனுக்கு குருவின் பார்வை வக்ரகதியில் கிடைப்பதால், சிலநேரம் ஆமை வேகத்தில் நடைபெற்ற காரியங்கள், செயல்பாடுகள் துரிதமாக நடைபெறும். கடந்த மாதம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிகழ்வுகள் இம்மாதம் சாதகமாக நடைபெறுமென்று எதிர்பார்க்கலாம். 12-க்குடைய செவ்வாய் 3-ல் நீசமாக இருந்தாலும், அவரும் 3-ஆம் தேதிமுதல் வக்ரம்பெறுகிறார். ராசிநாதனுக்கு செவ்வாயின் பார்வையும் கிடைக்கிறது. சகோதரவகையில் சில நன்மைகள் உண்டாகும். ஜென்ம ராசியில் குரு வக்ரம்பெற்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் இதற்குமுன் இழுபறியாக இருந்த திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறும். ஒருசிலர் காதல் அல்லது கலப்புத் திருமணம் போன்ற நிகழ்வுகளையும் சந்திக்கலாம். ஒருசிலர் 10-ல் உள்ள சனியால் உத்தியோக இடமாற்றத் தையும் எதிர்கொள்ளலாம். 7-ஆம் இடத்திலிருந்து சூரியன் மாறியபிறகு கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். என்றாலும் தேக ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவகையில் ஒருவருக்கொருவர் மாறிமாறி வைத்தியச் செலவுகளை சந்திக்கநேரும். 5-ல் உள்ள கேது வாரிசு யோகத்தைத் தாமதப்படுத்தலாம். ஆனால் தடையாகாது!

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும். டிசம்பர் 15-ஆம் தேதி தத்த ஜெயந்திவிழா நடைபெறுகிறது. கலந்துகொள்வது சிறப்பு.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் சஞ்சாரம். மாதத் தொடக்கம்வரை வக்ரகதியில் இயங்கினாலும் 4-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தியாகிறார். குரு 12-ல் வக்ரம். எனவே உத்தியோகரீதியாக, இதுவரை சம்பாதித்த நல்ல பெயரை இப்போது காப்பாற்றுவதற்கு போராடவேண்டிய சூழ்நிலை! உத்தியோக இடமாற்றம் பற்றிய சிந்தனை, உத்தியோகம் பற்றிய பயம் போன்றவை மனதில் ஒரு குழப்பத்தைத் தரும். சுறுசுறுப்பாக செயல்பட்டுவந்த உங்களால் சில நேரம் மந்தத்தன்மையும், தன்னையறியாமல் சோம்பேறித்தனமும் காணப்படும். வீண் விரயங்கள் எதிர்பாராதவிதமாக வரும். 11-க்குடைய செவ்வாய் 2-ல் வக்ரம். (3-ஆம் தேதிவரை). 12-க்குடைய சுக்கிரனைப் பார்க்கிறார். திடீர் பயணமும் அதேசமயம் ஆதாயமற்ற சூழலும் உருவாகும். பாக்கியத்தில் இருக்கும். சனி 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது. தாயார் தேகநலனில் தொந்தரவுகளைச் சந்திக்க நேரும். கால் மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். வக்ரகதியில் குரு 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனசஞ்சலம் உண்டாகும். ஒருசிலர் இடம் அல்லது வீடு வகையில் விற்பனை சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகும். வரவு இருந்தாலும் செலவும் இரட்டிப்பாக வருவது மனதை வருத்தும். பிள்ளைகள்மூலம் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் ஏற்படுவது மன ஆறுதலைத் தரும்.

பரிகாரம்: புதன்கிழமையன்று திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு செந்திரராஜப் பெருமாளையும், தன்வந்திரி பகவானையும் வழிபடவும்.

கடகம்

கடக ராசியில் 10-க்குடைய செவ்வாய் நீசம். அவர் 5-க்கும் உடையவர். ஜென்ம ராசியில் நீசம் பெறுவதால் வேலை மற்றும் தொழில்வகையில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தினருக்கு பதவி உயர்வு தள்ளிப்போகும். உத்தியோகம் அல்லது குடியிருப்பு வகையில் இடமாற்றத்தைச் சந்திக்க நேரும். அட்டமத்தில் சனி என்றாலும், அவரது சொந்த வீட்டில் ஆட்சியென்பதால் "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற பழமொழி உங்களுக்குப் பொருத்தமாக அமையும். அதேசமயம் கீழே விழுந்ததால் அடிபடுமல்லவா? சிறு சிறு காயமும் ஏற்படுமல்லவா? வேலையிலும் குடும்பத்திலும் உண்டான கெட்ட பெயரை மாற்றி நற்பெயராக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டியதாகத்தான் இருக்கிறது! 16-ஆம் தேதி முதல் 2-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. தனஸ்தானாதி பதி மறைவது பொருளாதாரரீதியான போராட்டங்களைத் தரும். 5-க்குடைய செவ்வாய் வக்ரமாக இருப்பதால் பிள்ளைகள் பற்றிய எதிர்கால பயம் ஏற்பட்டாலும், குரு பார்ப்பதால் ஒரு அனுகூலமும் உண்டாகும். 11-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ஆடை சேர்க்கை உண்டாகும். 3-ல் உள்ள கேது உடன்பிறப்புகள் வகையில் மனவருத்தம், சங்கடத்தைத் தரும். தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது. 9-க்குடையவர் 11-ல் வக்ரகதியில் இருப்பதால் பூர்வீக சொத்துவகையில் வில்லங்க விவகாரம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபாடு செய்யவும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை விருச்சிகத்தில் சஞ்சாரம். (4-ஆமிடம்). அவருடன் 2, 11-க்குடைய புதனும் சேர்க்கை. ராசிநாதனுக்கும், தனஸ்தானாதிபதிக்கும் வக்ர குருவின் பார்வை. உங்கள் செயல்பாடுகளில் வேகம் இருந்தாலும் நினைத்தபடி காரியத்தை நிறைவேற்ற இயலாது. 10-ல் வக்ரமாக இருக்கும் குரு வேலையில் அலைச்சல், டென்ஷன், தொழில்துறையினருக்கு மனக்குழப்பம் போன்றவற்றை சந்திக்க வைப்பார். 9-க்குடைய செவ்வாய் 12-ல் நீசம், 3-ஆம் தேதிமுதல் வக்ரம். பூமி, மனை சம்பந்தமாக சில விரயங்களை சந்திக்கலாம். செவ்வாய் 4-க்குடையவர் என்பதாலும் தேக ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. 3-ஆம் தேதிமுதல் 10-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் குருவின் பார்வையைப் பெறுகிறார். தொழில் இயக்கம் பாதிக்காது. முன்னமே கூறியதுபோல் மனக் குழப்பத்தால் வேலையில் சில தவறுகள் நேரலாம். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சிகரமான தகவல்களை எதிர்பார்த்தாலும், அதுவும் சில சங்கடங்களை சந்தித்தபிறகே செயல்படும். மாதப் பிற்பாதியில் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் மாறுகிறார். அது சற்று ஆறுதல் தரும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும். 2-ஆமிடத்துக் கேது குடும்பத்திலும் சில நிம்மதிக் குறைவைத் தரலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அவல் நிவேதனம் செய்து வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் சஞ்சாரம். அவருடன் 12-க்குடைய சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார். வரவும் செலவும் மாறி மாறி வந்துபோகும். "ஒரு நூறு ரூபாய் மிச்சமாகிறது; சேமிக்கலாம்' என்று எடுத்து வைத்தாலும் அதற்கும் ஒரு செலவுவந்து விரயமாகிவிடும். 4, 7-க்குடைய குரு 9-ல் வக்ரம்பெற்று ராசிநாதன் புதனையும் பார்க்கிறார்; ராசியையும் பார்க்கிறார். ஒருசிலருக்கு இடம் அல்லது வீடு வாங்கும் அமைப்புண்டாகும். அதற்கான கடன் அமைப்பும் ஏற்படும். 3, 8-க்குடைய செவ்வாய் 11-ல் வக்ரமாகவும் நீசமாகவும் இருக்கிறார். விலகிப்போன உடன்பிறந்த உறவுகள் இப்போது வந்துசேரும். அவர்களால் சகாயமும் ஏற்படும். கணவன் அல்லது மனைவிவகையில் சில சங்கடமான சூழ்நிலைகளையும் செலவுகளையும் சந்திக்க நேரும். மாதப் பிற்பாதியில் சூரியன் 4-ல் மாறியபிறகு விரயங்கள் சற்று கட்டுக்குள் இருக்கும். தனஸ்தானாதி பதியை தனகாரகன் குரு பார்ப்பதால் திடீர் தனவரவுக்கும் இடமுண்டு. சனியை செவ்வாய் பார்க்கிறார். சனியை செவ்வாய் பார்த்தாலும், செவ்வாயை சனி பார்த்தாலும் அல்லது பரஸ்பர பார்வையோ அவ்வளவு நன்மையைத் தராது. உடல்நலத்தில் நரம்பு அல்லது கால் சம்பந்தப்பட்ட வகையில் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாததாக அமையும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை நெய்தீபமேற்றி வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 4-ல் சஞ்சரிக்கிறார். தொடக்கத்தில் சூரியன் சாரம், பிறகு சந்திரன் சாரத்தில் சஞ்சாரம். மனை அல்லது வீடு வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் அந்த முயற்சி கைகூடும். 3, 6-க்குடைய குரு 8-ல் வக்ரமாக இருப்பதாலும் மற்றும் 4-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் வங்கிக்கடன் அமைப்புகளும் கைகூடும். 12-க்குடைய புதன் 2-ல் சஞ்சரிக்கிறார். அவரும் குருவால் பார்க்கப்படுகிறார். எனவே விரயங்களை சுபவிரயமாக மாற்றும் யுக்தியை மேற்கொள்வது நல்லது. அதேபோல கெட்ட ஸ்தானாதிபதி (3, 6-க்குடையவர்) 8-ல் வக்ரமடைவதால் சிலநேரம் நினைத்த காரியத்தை அடையமுடியும். செய்து முடிக்கவும் முடியும். 2-க்குடைய செவ்வாய் 10-ல் நீசம், வக்ரம். ஒருசில நேரம் பணப்பற்றாக் குறை இருக்கத்தான் செய்யும். 12-ல் உள்ள கேது அலைச்சல்களை அதிகப்படுத்தும். வெளிமாநிலத்தில் வேலை புரிந்தவர்களுக்கு சொந்த ஊரில் இடமாற்றம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படலாம். 7-க்குடையவர் நீசம் பெறுவதால் கணவரிடையே கருத்து மோதல்கள் உண்டாகலாம். யாரையும் நம்பி பண விஷயத்தில் பொறுப்பேற்க வேண்டாம். 5-ல் உள்ள சனியை 10-ல் உள்ள செவ்வாய் வக்ரகதியில் பார்க்கிறார். பிள்ளைகளால் பிரச்சினைகளுக்கு இடமுண்டு. கவனம் அவசியம்.

பரிகாரம்: வியாழக்கிழமை நவகிரகத்திலுள்ள குருபகவானை வழிபடவும்.

rass

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம். 3-ஆம் தேதிமுதல் வக்ரம். ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. ராசிநாதன் 9-ல் இருப்பது நன்மைதான் என்றாலும் குரு 7-ல் வக்ரமாக இருந்து ராசியைப் பார்ப்பதால் உடல்நலத்தில் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பொருளாதார சூழ்நிலை சற்று அதிகரிக்கும். பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் அல்லது வேலைப்பாடுகள் தாமதமாகலாம். புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்படலாம். 4-ஆமிடத்து சனி செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் மன சங்கடங்கள், தாயாருக்கு சுகக்குறைவு உண்டாகும். பாதிப்புகளுக்கு இடமிருக்காது; பயம் தேவையில்லை. 12-க்குடைய சுக்கிரனும் 3-ல் மறைவு. கெட்டவன் கெட்ட இடத்தில் மறைவது நன்மைதானே! வெளியூர் அல்லது வெளிமாநிலத் தொடர்பு நல்லமுறையில் நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு. பெண்வகையில் உதவி ஒத்தாசையும் உண்டாகும். 11-ஆமிடத்துக் கேது- அவரைப் பார்க்கும் ராகு காரிய அனுகூலத்தைத் தருவார்கள். மாதப் பிற்பாதி 10-க்குடையவர் 2-ல் இருப்பதால் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தளர்வு, தாமதம் ஏற்படலாம். பூர்வீகம் சம்பந்தப்பட்ட சொத்துவகையில் சஞ்சலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் யாவும் சற்று நிதான வேகத்தில் செயல்படும். பிள்ளைகள்வகையில் நிலவிய மனக்குறைவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை யம்மனுக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 6-ல் வக்ரமாக சஞ்சரிக்கிறார். 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில், உத்தியோகம் இவற்றில் சில மாறுதல்களைச் சந்திக்க நேரும். ஒரு சிலர் இடமாற்றத் தையும் எதிர்கொள்ள நேரிடும். மறைமுகமாக தொல்லைகள் தந்தவர்கள் தானாக விலகுவர். 3-ல் சனி வக்ரநிவர்த்தியாகிவிட்டதால் சற்று ஆறுதல் அடையலாம். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். 4-ஆமிடத்து அதிபதியான குரு வக்ரம் பெறுவதால் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் இடுப்பு அல்லது கால் சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் உணடாகலாம். உறவினர்கள் வகையிலும் மனவருத்தம், சங்கடம் நிகழும். பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கு இடமிருக்காது. கையில் பணம் முழுவதும் செலவாகும் தருணம் அடுத்த பணம் புரளும். பெரியோர்களின் ஆலோசனைக் கேட்டு நடப்பது முக்கியமான ஒன்றாகும். உடன்பிறந்தவகையில் தாமரை இலைபோல் தண்ணீராக இருப்பது அல்லது பேச்சுவார்த்தையில்லாமல் இருப்பது உங்கள் மனம் சார்ந்தது. ஒன்று நிச்சயம். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை,' "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற பழமொழிக்கிணங்க நடந்துகொள்வோருக்கு நன்மைகளை முடிவில் தரும். செவ்வாய் 5-க்குடையவர். அவர் 8-ல் நீசம்பெறுவதால் சில நேரம் விரயங்களைத் தவிர்க்கமுடியாது. அதை சுபவிரயமாக மாற்றி அமைத்துக்கொள்வது சிறப்பு. தாயாருக்கு கால் சம்பந்தமான தொல்லைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: காலபைரவருக்கு நெய் தீபமேற்றவும். மனத்திற்குப் பிடித்த ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பது ஒருவகையில் கடைசிக்கூறு என்பது ஆறுதல். வக்ரமும் நிவர்த்தியானது மேலும் ஆறுதல். 3-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவர் வக்ரகதியிலும் சஞ்சரிக்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். 5-ல் இருப்பதால் பிள்ளைகள்வழியில் கல்வி, திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகளுக்காக விரயம் உண்டாகும். அது சுபவிரயமாகும். 4-க்குடைய செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடும்பச் செலவு அதிகமாகும். அவர் 3-ஆம் தேதிமுதல் வக்ரம்பெறுவதால் பணப்பற்றாக்குறை உண்டாகும். அதேசமயம் வாகனம் பழுதுபார்ப்பது, வீட்டை சீர்த்திருத்தம் செய்வது போன்ற வேலைகளும் ஏற்படும். 8-க்குடைய சூரியன் 12-ஆமிடத்தில் மாதப் பிற்பாதியில் மாறுகிறார். முடிந்தளவு வாகனவகையில் சற்று கவனம் தேவை. தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீண்டநாள் நிறைவேறாமலிருந்த பிரார்த்தனை நிறைவேறுவதற்கான அமைப்பு வரும். குடும்ப உறவுகளிடம் பக்குவமும் நிதானமும் தேவை. செவ்வாய் சனியைப் பார்ப்பதால், திருமண வயதையொட்டிய ஆண் அல்லது பெண்களுக்கு காதல் மற்றும் கலப்புத் திருமணம் ஏற்பட வாய்ப்புள்ளது. குரு 7-ஆமிடத்தைப் பார்த்தால் பெற்றோர் சம்மதத்துடனும், இல்லாவிட்டால் தன் விருப்பப்படியும் திருமணம் நிகழும். 10-ஆமிடத்தை வக்ரச் செவ்வாய் பார்க்கிறார். உத்தியோகத்தில் நன்மதிப்பு உண்டாகும். காரிய அனுகூலமும் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகுதீபமேற்றி வழிபடவும். ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் ஜென்மத்தில் சஞ்சாரம் 3-க்குடைய செவ்வாய் 6-ல் நீசம். 3-ஆம் தேதிமுதல் வக்ரம். அவர் ஜென்ம ராசியையும் பார்க்கிறார். கழுவின் மீனில் நழுவின மீன்போல, பிரச்சினைகளுக்கு மத்தியில் சிக்கியிருந்தாலும் சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள், கும்ப லக்னத்துக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று என் தந்தை கூறியிருந்தாலும், அது எல்லாருக்கும் பொருந்தாது என்றும் கூறுவார். உடன்பிறப்புகள் வழியில் செலவுகள் கூடும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். 2-க்குடைய குரு 4-ல் வக்ரமாக இருப்பதால் பூமி, மனை வகையில் முதலீடு செய்யும் யோகம் ஒருசிலருக்கு உண்டாகும். வேறுசிலர் வாடகை வீட்டிலிருந்து ஒத்தி வீடு மாறும் அமைப்பும் ஏற்படும். தாய் உடல்நலனில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கால் சம்பந்தமான தொல்லைகள் ஏற்படும். ஒருசிலர் சரும வியாதிவகையில் மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளலாம். 9-க்குடைய சுக்கிரன் 12-ல் சஞ்சாரம். ஆடை, அலங்கார ஆபரணச் சேர்க்கை சம்பந்தமாகவும் செலவுகள் செய்யலாம். தேவையில்லாத பொருட்களை ஆடம்பரத்திற்காக வாங்குவதைக் கைவிடுவது நல்லது. ஒருசிலர் உத்தியோகத்தில் தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் மேலதிகாரிகளின் வெறுப்புக்கும் ஆளாகலாம். 9-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாய் பாகப்பிரிவினைகளில் இழுபறி நிலையை உருவாக்குவார்.

பரிகாரம்: பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டை பாதையில் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு ஒருபுறம் ஏழரைச்சனியில் விரயச்சனி. மறுபுறம் 2-க்குடைய செவ்வாய் நீசம். 3-ஆம் தேதி முதல் வக்ரம். எதையும் திட்டமிட்டபடி செய்யவியலாத நிலை. "ஒன்று நினைக்கின் அது. ஒழிந்திட்டொன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்' என்ற பாடலுக்கேற்ப நாம் நினைத்ததெல்லாம் நடப்பது ஈசனின் செயல்தானே! ஜென்ம ராகு மனக்குழப்பத்தை தாராளமாகத் தருகிறார். ஜென்ம ராசிநாதன் குரு 3-ல் மறைந்து வக்ரமாகவும் இருக்கிறார். என்னதான் உடன்பிறந்த வகையில் நீங்கள் உண்மையுடன் நடந்தாலும், அங்கே உங்களுக்கும் உங்கள் உண்மைக்கும் மதிப்பில்லாதது மனவருத்தத்தை நிகழ்த்தும். பண நெருக்கடி, பற்றாக் குறை போன்றவற்றை சந்திக்க நேரும். ஒருசிலருக்கு வரவேண்டிய பாக்கிசாக்கிகளும் வசூலாகாமல் தலை வலியை உண்டுசெய்யும். 2-க்குடையவர் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண் விரயமும் உண்டாகும். 7-ல் கேது- கணவர் அல்லது மனைவிவகையில் சௌக்கியக் குறைவு நேரும். 3, 8-க்குடைய சுக்கிரனை குரு பார்க்கிறார். அக்காலகட்டம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாதப் பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பார். சில நல்ல தகவல்கள் வந்துசேரும். பிள்ளைகள்வகையில் நிலவிய மனவருத்தம் விலகும். செவ்வாய் நீசம், வக்ரம். (5-ல்). இது எப்படி சாத்தியம்? பூச நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சரித்து விரய ஸ்தானத் தில் இருக்கும் சனியையும் விரயஸ்தானத்தையும் பார்ப்பதால், பிள்ளைகள்வகையில் சுபகாரிய விரயங்கள் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

செல்: 99440 02365