யோக ஞானத்தில் பெரும் பேர் பெற்ற அத்ரி முனிவர்தான் அவரின் தந்தை என்பதையும்; "இறைவிகளே வியந்த கற்புக்கரசி அனுசுயாதான் அவரின் தா' என்பதையும்; ஆக்கல்- காத்தல்- அழித்தல் செய்யும் பிரம்மா- விஷ்ணு- சிவன் மூவரும் அனுசுயாவின் கற்பைச் சோதிக்க பிச்சா மூர்த்திகளாக வந்தார்கள் என்பதையும்;
"நிர்வாணமாக இருந்து அமுது படைக்க வேண்டும்' என மும்மூர்த்திகளும் கேட்க, அவர்களை குழந்தைகளாக்கி, அவர்கள்முன் நிர்வாணமாக அமர்ந்து பாலமுது படைத்தாள் அனுசுயா என்பதையும்;
"நீங்கள் மூவரும் ஒருமித்து என் வயிற்றில் ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டும் என அனுசுயா கேட்டாள்' என்பதையும், "மும்மூர்த்திகüன் வடிவமாக அத்ரி- அனுசுயா தம்பதிக்குப் பிறந்தார் தத்தாத்ரேயர்' என்பதையும் நம்பலாம்.
"அது எப்படி சாத்தியம்?' என நம்பாமலும் இருக்கலாம்.
ஆனால்....
தத்தாத்ரேயர் வாழ்க்கை யிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ எüய செய்திகள்
இருக்கிறது... வலிய செய்திகளாக.
எவரையும் எüதாக எடை போடுவது...
எதையும் எüதாக மதிப்பிடுவது...
யாரையும் அலட்சியப்படுத்துவது...
யாதையும் இகழ்ச்சி செய்வது....
இந்த மனோபாவம் இப்போதெல்லாம் நீக்கமற எங்கும் நிறைந்தே இருக்கிறது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'
-என்றார் வள்ளுவர்.
"உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலüக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.'
-ஊர்வன-பறப்பன மட்டுமின்றி ஜடப் பொருட் கüலும் கடவுளைக் காணலாம் என்கிறார் சுயசரிதை யில் மகாகவி பாரதி.
"எங்கும் பரவிநிற்கும் மெய்ப்பொருளைக் காணவேண்டுமானால் சிருஷ்டியில் அடங்கிய ஈனப் பிராணிகளையும் தன்னுடையதைப்போல் பேணும் அன்பைப் பெறவேண்டும். சகல ஜீவன்களும் நானும் ஒன்று என்று உணர முயல்கிறேன். மனிதப் பிறப்பு மட்டுமல்ல, ஊர்ந்து செல்லும் புழுவின் உயிருடனும் ஒன்றுபட ஆசைப்படுகிறேன். ஊர்ந்து செல்லும் புழுக்களும், நானும் ஒரே பரம் பொருüனின்று உண்டானோம்-
உயிரானது எந்த வடிவம் கொண்டு பிறந்தாலும் ஒன்றுதானே?' -என்றார் "சுயசரிதை'யில் மகாத்மா காந்தி.
எல்லா உயிரிலும் சமத்துவத்தைக்
யோக ஞானத்தில் பெரும் பேர் பெற்ற அத்ரி முனிவர்தான் அவரின் தந்தை என்பதையும்; "இறைவிகளே வியந்த கற்புக்கரசி அனுசுயாதான் அவரின் தா' என்பதையும்; ஆக்கல்- காத்தல்- அழித்தல் செய்யும் பிரம்மா- விஷ்ணு- சிவன் மூவரும் அனுசுயாவின் கற்பைச் சோதிக்க பிச்சா மூர்த்திகளாக வந்தார்கள் என்பதையும்;
"நிர்வாணமாக இருந்து அமுது படைக்க வேண்டும்' என மும்மூர்த்திகளும் கேட்க, அவர்களை குழந்தைகளாக்கி, அவர்கள்முன் நிர்வாணமாக அமர்ந்து பாலமுது படைத்தாள் அனுசுயா என்பதையும்;
"நீங்கள் மூவரும் ஒருமித்து என் வயிற்றில் ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டும் என அனுசுயா கேட்டாள்' என்பதையும், "மும்மூர்த்திகüன் வடிவமாக அத்ரி- அனுசுயா தம்பதிக்குப் பிறந்தார் தத்தாத்ரேயர்' என்பதையும் நம்பலாம்.
"அது எப்படி சாத்தியம்?' என நம்பாமலும் இருக்கலாம்.
ஆனால்....
தத்தாத்ரேயர் வாழ்க்கை யிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ எüய செய்திகள்
இருக்கிறது... வலிய செய்திகளாக.
எவரையும் எüதாக எடை போடுவது...
எதையும் எüதாக மதிப்பிடுவது...
யாரையும் அலட்சியப்படுத்துவது...
யாதையும் இகழ்ச்சி செய்வது....
இந்த மனோபாவம் இப்போதெல்லாம் நீக்கமற எங்கும் நிறைந்தே இருக்கிறது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'
-என்றார் வள்ளுவர்.
"உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலüக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.'
-ஊர்வன-பறப்பன மட்டுமின்றி ஜடப் பொருட் கüலும் கடவுளைக் காணலாம் என்கிறார் சுயசரிதை யில் மகாகவி பாரதி.
"எங்கும் பரவிநிற்கும் மெய்ப்பொருளைக் காணவேண்டுமானால் சிருஷ்டியில் அடங்கிய ஈனப் பிராணிகளையும் தன்னுடையதைப்போல் பேணும் அன்பைப் பெறவேண்டும். சகல ஜீவன்களும் நானும் ஒன்று என்று உணர முயல்கிறேன். மனிதப் பிறப்பு மட்டுமல்ல, ஊர்ந்து செல்லும் புழுவின் உயிருடனும் ஒன்றுபட ஆசைப்படுகிறேன். ஊர்ந்து செல்லும் புழுக்களும், நானும் ஒரே பரம் பொருüனின்று உண்டானோம்-
உயிரானது எந்த வடிவம் கொண்டு பிறந்தாலும் ஒன்றுதானே?' -என்றார் "சுயசரிதை'யில் மகாத்மா காந்தி.
எல்லா உயிரிலும் சமத்துவத்தைக் கண்டார் வள்ளுவர்.
எல்லா உயிரிலும் இறைவனைக் கண்டார் பாரதி.
எல்லா உயிரிலும் உயிரைக் கண்டார் காந்தி.
எல்லா உயிரிலும் தனக்கு ஞானத் தைப் போதித்த ஆசிரியர்களைக் கண்டார் தத்தாத்ரேயர். அது எப்படி என்பதை முடிந்த அளவு சுருக்கமாகப் பார்ப்போம்.
தன் மாமனார் சுக்கிரனால் சபிக்கப்பட்டு கிழத்தோற்றம் அடைந்த மன்னன் யயாதி, இழந்த இளமையைப் பெற தன் மூத்த மகன் யதுவிடம் இளமையைக் கேட்டார். யது மறுத்துவிட்டதால் அவனுக்கு நாடாளும் உரிமையை மறுத்து துரத்திவிட்டார் யயாதி. காட்டில் சோகமாகச் சுற்றிக்கொண்டிருந்த யது, அங்கே எவ்விதக் கவலையும் இல்லாமல் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்த தத்தாத்ரேயரைப் பார்த்து, வியந்து, "நீங்கள் எப்படி கவலையும், களங்கமும் அற்றவராய் மகிழ்வுடன் இருக்கிறீர்கள்? உங்களுக்கு இதைச்சொல்லிக்கொடுத்த குரு யார்?' எனக் கேட்டான்.
"ஆத்மாதான் எனது குரு. ஆனாலும் நான் பல உயிர்கüடமிருந்தும் பலவித ஞானங்களைக் கற்றுக்கொண்டதால் அவர்களும் எனது குருநாதர்களே. அந்த வகையில் எனக்கு இருபத்து நான்கு குருநாதர்கள்' என்று சொன்னார் தத்தாத்ரேயர்.
வியந்துபோய் விவரம் கேட்ட யதுவுக்கு உபதேசி த்தார்... இதுதான் அவதூத கீதையானது...
பூமி
இந்த மண்ணுக்கு எத்தனை கேடுகளை மனிதன் செய்தாலும், அவனுக்கு தானியங்கள் உள்üட்ட அவனது வாழ்க்கைத் தேவைகளைத் தருகிறது. பொறுமையையும், இன்னா செய்தவனுக்கு இனியவை செய்வதையும் பூமியிடம் கற்றுக்கொண்டேன்
நீர்
எத்தனை அழுக்கையும் தூய்மை செய்வது நீர். தூய்மையான ஞானி தன்னைச் சுற்றியிருப்பவர்கüன் காம, குரோத, பேராசை எனும் அழுக்குகளை சுத்தப் படுத்த வேண்டும் என்பதை நீரிடமிருந்து கற்றேன்.
காற்று
பொருட்கüன் இயக்கத்தின்மூலம் தன் இருப்பைச் சொல்கிறது காற்று. அது எப்பொருளுடனும் இணைக் கப்பட்டதல்ல. நான் பலவிதமான மனிதர்களுடன் பயணப்பட்டாலும் எவர் மீதும் பற்றற்று இருப்பதை காற்றிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
நெருப்பு
இருளகற்றும் பிரகாசத்துடன் நெருப்பு எரிவதுபோல் ஞானஸ்தர்களும் தங்கüன் தவத்தால் ஒüரவேண்டும் என்பதை நெருப்பிடம் கற்றேன்.
ஆகாயம்
கிரகங்கள், கோள்கள், காற்றுவெü, நட்சத்திரங்கள், மேகக்கூட்டம் உட்பட ஆகாயத் தில் எவ்வளவோ அடங்கியுள்ளது. ஆனால் வானம் என்பது வெறும் வெüதான். எதனுடனுடனும் வானம் தொடர்பில் இல்லை. ஆத்மா எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் அது எதனுடனும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை என்பதை ஆகாயத்திடமிருந்து கற்றேன்.
நிலா
நிலா எப்போதுமே பூரணமானதுதான். ஆனால் அதன்மீது படரும் பூமியின் நிலையற்ற நிழல் காரணாமாக நிலா தேய்வது போலவும், வளர்வது போலவும் தோன்றுகிறது. சூழ்நிலையால் உடலின்மீது நிழல்போல தாக்கங்கள் உண்டானாலும் ஆத்மா எப்பொழுதும் பரிபூரணமானது என்பதை நிலவிடம் கற்றேன்.
சூரியன்
பல்வேறு பாத்திரங்கüல் நிரப்பப்பட்ட நீரில், பல்வேறு வடிவங்கüல் நிரம்பிய நீரில், சூரியனின் பிம்பம் பலவிதமாகத் தெரியும். ஆயினும் சூரியன் ஒன்றுதான். அதேபோல பல்வேறு உடல்கüல் தோன்றினாலும் அனைத்திலும் உள்ள பரமாத்மா ஒன்றுதான் என்பதை சூரியனிடமிருந்து கற்றேன்.
மாடப்புறா வேடன் வலையில் குஞ்சுப் புறாக்கள் சிக்கியது.
அவைகள்மீது பாசம் கொண்ட தாய்ப் புறா துக்கத்தில் வலியச் சென்று, வலையில் விழுந்தது. "இனி யாருக்காக வாழவேண்டும்?' என தந்தைப் புறாவும் வலைக்குள் வீழ்ந்தது. மாடப்புறா ஒன்றையொன்று பிரிவதில்லையே. பற்றை அறுக்காததால் தான் இந்நிலை. பற்றை அறுக்காதவர்கள் ஞானத்தை அடைய முடியாது என்பதை புறாவிடம் கற்றேன்.
மலைப்பாம்பு
உணவுக்காக நகருவதில்லை மலைப்பாம்பு. எது கிடைத்தாலும் அதில் திருப்தியடைந்து ஒரே இடத்தில் கிடக்கிறது. கிடைப்பதை உண்டு மகிழ்வுடன் வாழ மலைப்பாம்பிடம் கற்றேன்.
கடல்
பலநூறு நதிகள் கடலில் கலந்தாலும், உள்வாங்கிக் கொண்டு நிதானமிழக்காதது கடல். எத்தனை சோதனைகள், சிரமங்கள் மனதில் வந்தாலும் கலங்கிடாமல் இருக்க கடலிடம் கற்றேன்.
விட்டில் பூச்சி
விட்டில் பூச்சி எனப்படும் அந்துப்பூச்சி வெüச்ச பிரகாசத்தில் ஈர்க்கப்படுபவை. அந்த மயக்கத்தால் நெருப்பில் வீழ்ந்து எரிந்துவிடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள, நம்மை ஈர்க்கக்கூடிய மாயையான விஷயங் கüலிருந்து நம் மனதைக் கட்டுப்படுத்தினால் அந்துப் பூச்சியின் நிலை வராது என்பதை அந்துப் பூச்சி யிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
தேனீ
தேனீ ஒரே பூவிலிருந்து மொத்தத் தேனையும் உறிஞ்சுவதில்லை. ஒவ்வொரு பூவிலிருந்தும் கொஞ்சகொஞ்சமாக தேனை எடுக்கிறது. நானும் ஒரே வீட்டிலிருந்து தேவையான முழு உணவையும் பெறாமல், பல்வேறு வீடுகüலிருந்து பெற்று, பிட்சை இடுபவர்களுக்கு சிரமம் இல்லதபடி வாங்கி உண்ணுவதை தேனியிடமிருந்து கற்றேன்.
தேனெடுக்கும் வேடன்
தேனீக்கள் சிரமப்பட்டு சேர்த்த தேனை, தேனெடுக்கும் மனிதன் எüதில் எடுத்துச் சென்றுவிடுகிறான். மக்களும் அப்படித்தான் சொத்துகளைச் சேர்க்கிறார்கள். மரணதேவன் வந்து அவர்களை அழைக்கும்போது எல்லாத்தையும் விட்டுவிட்டே போகிறார்கள். சொத்து களையும், பொருட்களையும் சேர்ப்பதையும், பதுக்கு வதையும் தவறு என தேனீக்கüடமிருந்து கற்றேன்.
யானை
வேடன் தோண்டிய குழியில் பெண் யானை தவறி விழுந்தால், காமப்பித்து கொண்ட ஆண் யானை, காமுற்று, வேடர்கள் பறித்த பள்ளத்தில் விழுந்து அல்லல் படுகிறது. ஆயினும் மறுபடியும் அதே தவறைச் செய்கிறது. உடலிச்சை எண்ணங்களை அழிக்க வேண்டும் என யானையிடம் கற்றுக் கொண்டேன்.
மான்
இசையின் மீதுள்ள காதலால் வேட்டைக்காரனிடம் மாட்டிக் கொள்கிறது மான். மனதை கிளர்ச்சியடையச் செய்யும் இசையை ஒருபோதும் கேட்கக்கூடாது என்பதை மானிடம் கற்றேன்.
மீன்
இரையின் மீது பேரவா கொண்ட மீன் தூண்டில் முள் முனையில் சொருகப்பட்ட இரைக்கு சபலப்பட்டு அழிந்து போகிறது. ருசியைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன் அதற்கு அடிமையாவான் என்பதை மீனிடமிருந்து கற்றேன்.
பிங்கலா எனும் விலைமகள்
பிங்கலா என்ற நடனமாடும் விலைப் பெண், தன் திறமையால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, பொருள் பெற்று வந்தாள். ஒரு நாள் இரவு வாடிக்கையாளர்களைத் தேடிச் சோர்ந்து போனவள். அன்றைய தினம் தன்னிடம் இருந்த பொருளைக் கொண்டு திருப்தியும், நிம்மதியும் அடைந்தாள். அதீத நம்பிக்கையைக் கைவிடுவது மன நிம்மதியைத் தரும் என்பதை அவüடமிருந்து கற்றேன்.
குர்ரப் பறவை அல்லது காகம்
இறைச்சித் துண்டு ஒன்றை ஒரு காகம் அல்லது குர்ரப் பறவை கவ்வியது. அதனிடமிருந்து அதைப் பறிக்க பல பறவைகள் பின்தொடர்ந்து சண்டையிட, தன் வாயிலிருந்த இறைச்சித் துண்டை கீழே போட்டுவிட்டு, மரக்கிளையில் அமர்ந்தது. இப்போது அதற்கு அமைதி கிடைத்தது. சிற்றின்பங்களைத் தேடி ஓடும் மனிதன் பலவித துன்பங்களுக்கும் ஆளாகிறான் என்பதை குர்ரப் பறவையிடமிருந்து கற்றேன்.
குழந்தை
பால் குடிக்கும் குழந்தை கவலைகüலிருந்து விடுபட்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மான-அவமானம் என்ற வேறுபாடு தெரியாது. தன்னிலேயே ஆனந்தப்பட வேண்டும் என்ற ஞானத்தை குழந்தையிடமிருந்து கற்றேன்.
கன்னிப் பெண்
அவüன் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவளைப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர். அவர்களுக்கு உணவு படைக்க நெல் குத்தியபோது, அவüன் கண்ணாடி வளையல்கள் சத்தமிட "இவள் மிகவும் ஏழ்மையான வீட்டுப் பெண். உதவிக்குக்கூட ஆüல்லாதவள்' என நெல் குத்தும்போது சத்தமிடும் வளையல்கள் காட்டிக் கொடுப்பதாக எண்ணி, கைக்கு ஒரு வளையல் வீதம் மட்டும் அணிந்துகொண்டாள். இப்போது சத்தம் இல்லை. பலரிடையே வாழ்வது கருத்து வேறுபாடு மற்றும் சண்டையை உருவாக்கும். அதனால் துறவியோ, சந்நியாசியோ தனிமையில் இருக்க வேண்டும்.
பாம்பு
கரையான் கட்டிய புற்றில்தான் தனக்கான இடத்தை பாம்பு அமைத்துக் கொள்கிறது. ஒரு துறவி தனக் கென்று இருப்பிடம் கட்டிக்கொள்ளக்கூடாது. பிறர் கட்டிய கோவில்கள், மண்டபங்கள், குகைகüல்தான் தங்கவேண்டும். இதை நான் பாம்பிடம் கற்றுக் கொண்டேன். .
கைவினைக் கலைஞர்
ஒரு கைவினைக் கலைஞர் அம்பு தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் உரிமையாளர் வந்து, கொஞ்ச நேரம் முன்பு நமது மன்னன் நம் கடை முன் வந்து நின்றாரா? எனக்கேட்டார். "நான் கவனிக்கவில்லை' என்று சொன்னார் கைவினைக் கலைஞர். அவரின் கவனம் முழுக்க வேலையில் மட்டுமே இருந்தது. மனதை ஒருமுகப்படுத்தும் தன்மையை அந்தக் கலைஞனிடமிருந்தே கற்றேன்.
சிலந்தி
சிலந்தி தன் வாயிலிருந்து வரும் நீண்ட இழைகளால் தனக்கான வலையை உருவாக்குகிறது. ஆயினும் ஒரு கட்டத்தில் அது தன் சொந்த வலையிலேயே சிக்கிக் கொள்கிறது. அப்படித்தான் மனிதனும் தன் ஆகாத எண்ண வலையில் சிக்கிக் கொள்கிறான். ஞானிகள் பொருள் முதல்வாத உலக எண்ணங்களை விட்டுவிட்டு பிரம்மத்தையே நினைக்க வேண்டும் என்பதை சிலந்தியிடம் கற்றேன்.
குளவி
மூர்க்கமான ஒரு குளவி வண்டு, ஒரு அப்பாவிப் புழுவை தூக்கி வந்து, தன் கூட்டில் வைத்து, அதைக் கொட்டிக் கொட்டி துன்புறுத்துகிறது. இப்படி குளவியை எண்ணிப் பயந்த புழு, எந்நேரமும் குளவியைப் பற்றியே நினைத்து, நினைத்து, ஒரு கட்டத்தில் தானே குளவியாக ஆகிவிடுகிறது. ஒரு மனிதன் எந்த வடிவத்தை தொடர்ந்து நினைக் கிறானோ, அவன் காலப்போக்கில் அந்த வடிவத்தை அடைகிறான். எண்ணம் போல் வாழ்க்கை. உடல்பற்றை விட்டு முக்தியையே நினைத்தால் மோட்சம் கிடைக்கும் என்பதை குளவி வாயிலாக புழுவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
வழியெங்கும் தான் கண்ட கடல் போன்ற பிரமாண்டத்தையும், புழு போன்ற சாதாரணத்தையும் உற்று நோக்கி, அவற்றிடமிருந்தும் பாடம் கற்றுக் கொண்டு, அவர்களை வாத்தியார்களாகக் கொண்ட தத்தாத்ரேயரின் செயலில் அசந்து போனான்யது.
பாதையெல்லாம் பாடங்கள் இருக்கிறது; இன்றும் கூட!
வழியெங்கும் வாத்தியார்கள் இருக்கிறார்கள்; இன்றும் கூட!
தேடல் உள்ள மனதுடன் கவனித்தவர்கள் கண்களுக்கு மட்டுமே வாத்தியார்களும் தெரிவார்கள்...
பாடமும் புரியும்!