சென்னை கல்லூரியில் பி.ஆர்க் முதலாமாண்டு படித்துவருபவர் ஷிவானி. முறைப்படி ஓவியம் வரையக் கற்று, பல்வேறு ஓவியங்களை வரைந்து குவித்து வரும் ஷிவானி, தெய்வீக ஓவியங்களை வரைவதில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகி றார். இத்தகைய ஓவியங்களை வரையும் போது, தான் மிகப்பெரும் சக்தியைப் பெற்றுவிடுவதாகக் கூறும் ஷிவானியிடம் பேசினோம். நம் கேள்விகளுக்கு சரளமாக பதில் கூறினார் ஷிவானி.
ஓவியங்கள் வரைவதை யாரிடம் எப்போது கற்றுக்கொண்டீர்கள்?
"என் அம்மா ஆனந்தி "கார்ட்டூன்கள்' நன்றாக வரைவார். சிறுவயது முதலே அதைப் பார்த்து எனக்கும் ஓவியம் வரைய ஆசை வந்துவிட்டது. என் அப்பா நடிகர் வையாபுரி என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வீட்டினருகில் இருந்த ஓவியம் வரையக் கற்றுத்தரும் வகுப்பில், நான் நான்காம் வகுப்பு படிக
சென்னை கல்லூரியில் பி.ஆர்க் முதலாமாண்டு படித்துவருபவர் ஷிவானி. முறைப்படி ஓவியம் வரையக் கற்று, பல்வேறு ஓவியங்களை வரைந்து குவித்து வரும் ஷிவானி, தெய்வீக ஓவியங்களை வரைவதில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகி றார். இத்தகைய ஓவியங்களை வரையும் போது, தான் மிகப்பெரும் சக்தியைப் பெற்றுவிடுவதாகக் கூறும் ஷிவானியிடம் பேசினோம். நம் கேள்விகளுக்கு சரளமாக பதில் கூறினார் ஷிவானி.
ஓவியங்கள் வரைவதை யாரிடம் எப்போது கற்றுக்கொண்டீர்கள்?
"என் அம்மா ஆனந்தி "கார்ட்டூன்கள்' நன்றாக வரைவார். சிறுவயது முதலே அதைப் பார்த்து எனக்கும் ஓவியம் வரைய ஆசை வந்துவிட்டது. என் அப்பா நடிகர் வையாபுரி என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வீட்டினருகில் இருந்த ஓவியம் வரையக் கற்றுத்தரும் வகுப்பில், நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே சேர்த்துவிட்டார். பள்ளி முடிந்ததும் மாலை நேரம் ஓவிய வகுப்பிற்கு ஆர்வமுடன் ஓடிச்சென்று ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன். முதலில் வரைந்தது முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் படம்தான். அந்த கணபதியின் படம் வரைந்தபிறகு என் மனதிற்குள் பக்தி, தெய்வ வழிபாட்டு ஈடுபாடுகள் கூடிவிட்டன. சனிக்கிழமைதோறும் தவறா மல் ஆஞ்சனேயர் கோவில்சென்று வழிபட ஆரம்பித்துவிட்டேன். அதன்பின் அம்பாள் வழிபாடும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அனைத்து தெய்வ ஓவியங்களையும் பக்தி சிரத்தையோடு இப்போதும் தொடர்ந்து வரைந்துவருகிறேன். பிறகு சென்னை காமாட்சி கலைக்கூடத்தில் பயிற்சிபெற்று ஓவியக்கலையில் பட்டமும் பெற்றேன்.
"தெய்வ ஓவியங்கள் வரைந்ததால் உங்களுக்குக் கிடைத்த மாறுபட்ட அனுபவங்கள் என்ன?
"ஒன்றா இரண்டா? பல இருக்கின்றன.
அதை தனி பக்தி நூலாகவே வெளியிடலாம். கடவுள் ஓவியங்களை வரையத் தொடங்கியது முதலே பள்ளிப்படிப்பில் எனக்கு ஆர்வம் அதிகமானது. எல்லா பாடங்களின் தேர்வுகளிலும் நிறைய மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்தேன்.
என் அப்பாவுக்கு சினிமாவில் நல்ல புகழ் தேடித்தந்த கேரக்டர்கள் கிடைத்ததும், அனைவரின் வரவேற்பைப் பெற்ற "பிக்பாஸ்' நிகழ்ச்சியில் அப்பா பங்கு பெற்றதும், நான் தினமும் முழு பக்தியுணர் வோடு விரத மிருந்து தெய்வ ஓவியங்களை வரைந்ததன் எதிரொலிதான் என்பதை உணர்ந்தேன்.
என் அண்ணன் ஷரவன் சிறந்த பல்மருத்துவராக வேண்டுமென்று பிரார்த் தனைசெய்து, அம்பாள் படம் வரைந்தேன். எங்கள் குடும்பமே மகிழும்படி என் அண்ணனுக்கு டெண்டல் கல்லூரியில் இடம் கிடைத்து அதில் படித்துவருகிறார்.
அதுபோல் கலை வாணி சரஸ்வதியின் ஓவியம் வரைந்ததால், மிகவும் கடினமான படிப்பில் சாதனை புரியவேண்டுமென்று பிரார்த்தனை செய்த எனக்கு, என் லட்சியக் கனவை நிறைவேற்றும் "ஆர்க்கிடெக்ட்' எனும் கட்டடக்கலை ஐந்து வருடப் படிப்பில் சென்னை கல்லூரியில் இடம் கிடைத்து. தினமும் ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்கி, மிகக் கடுமை யாக உழைத்து, மிகச்சிறந்த "ஆர்க்கிடெக்ட்' டாக வருவேன் என்ற மனவுறுதியுடன் படித்துவருகிறேன். இதற்கு முழுக்காரணம் நான் வரைந்த கல்விக்கடவுள் கலைவாணிதான் என உறுதியாக நம்புகிறேன்!
நானும் என் அண்ணனும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் பிழைத்து, கடும் சோதனையை- மன வேதனையை வென்றதற்கும் எனது ஆழ்ந்த பக்தியில் உருவான தெய்வ ஓவியங்களும் தெய்வ சக்திகளுமே காரணமென்று, எங்கள் குடும்பமும், உறவினர் களும், நண்பர்கள், தோழிகள் என அனைவரும் முழுமையாக நம்புகிறார்கள்.
நான் தெய்வ ஓவியங்கள் வரைந்து தெய்வங்களின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுவிட்டதாக என் அப்பா, அம்மா, அண்ணன் உறுதியாக ஒப்புக்கொள்கிறார்கள்.
அதனால்தான் சமீபத்தில் என் அப்பா, அம்மாவை இராமேஸ்வரம் சென்று வணங்கி வாருங்கள் என்றதும், இருவரும் அதனை ஆண்டவன் கட்டளையாகக் கருதி அங்கு சென்று வணங்கி வந்துவிட்டார்கள்.'
உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
"தொடர்ந்து தெய்வப் படங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரைந்து தெய்வ அருளைப் பெற்றுக்கொண்டிருக்கவே ஆசைப் படுகிறேன்.''
வையாபுரி மகள் ஷிவானி வையகம் புகழ, தெய்வ அருளோடு சிறக்க வாழ்த்தி விடை பெற்றோம்.
செல்வி ஷிவானியின் பக்தி ஓவிய தெய்வப் பணியை வாழ்த்த கைபேசி தொடர்பு எண்: 94440 88807