குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு! - கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/om/clan-deity-worship-kavita-balajiganesh

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகிறது? ஒரு பார்வை...

குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வமாகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வமென்று அலட்சியப் படுத்தக் கூடாது. அதன் சக்தி யை அளவிடமுடி யாது.

எமன்கூட ஒருவ ரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். நமது முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்களே குலதெய்வங்களாகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பவை. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

ss

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்குமேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்- அதாவது நம் தந்தைவழி பாட்டன், பாட்டிகள் வணங்கிவந்த தெய்வம்தான் நம் குலதெய்வமாகும்.

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகிறது? ஒரு பார்வை...

குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வமாகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வமென்று அலட்சியப் படுத்தக் கூடாது. அதன் சக்தி யை அளவிடமுடி யாது.

எமன்கூட ஒருவ ரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். நமது முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்களே குலதெய்வங்களாகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பவை. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

ss

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்குமேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்- அதாவது நம் தந்தைவழி பாட்டன், பாட்டிகள் வணங்கிவந்த தெய்வம்தான் நம் குலதெய்வமாகும்.

இந்த தந்தைவழி பாட்டனார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கொன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. இதன்படி பார்த்தால், குலதெய்வ சந்நிதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டி யிருக்கலாம். இன்னொரு வர் பாவமேகூட செய்திருக்கலாம். நாம் அங்குபோய் நின்று, அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியைத் தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு வடிவமைக்கப் பட்ட ஒரு விஷயம்!

விஞ்ஞான முறையில் யோசித்தால், ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய்மூலம் 23 மற்றும் தந்தைமூலம் 23 என்பதையும் அறிவோம். இதில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோமே முடிவுசெய்கிறது.

தாயிடம் ஷ்ஷ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, ஷ்ஹ் என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் ஹ் யுடன் பெண்ணின் ஷ் சேர்ந்தால் ஆண் குழந்தையும்; இருவரின் ஷ்+ஷ் சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றன என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறியுள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் ஹ் குரோமோசோம் ஆணிடம் மட்டும்தான் உள்ளது. பெண்ணிற்கு, ஹ் குரோமோசோம்கள் தந்தைவழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடமிருந்து ஹ் குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன்மூலம் வம்சம் மீண்டும் வழிவழியாக வளர்கிறது.

வழிவழியாக என்பது, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்வது...

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள். பெண் குழந்தைகளை குல விளக்காகக் காத்தனர்.

பொதுவாக 13 தலைமுறைக்குமேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ஆணின் ஹ் குரோமோசோம்கள் மிகவும் பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த ஹ் குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்றுகொண்டிருப்பதால் இன்னமும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறதாம். எனவே 13 தலை முறைக்குமேல் அது வலுவிழந்து பயனற் றுப் போய்விடும். அதனால் ஏற்கெனவே பலவீனமான ஹ் குரோமோசோம்கள் மேலும் பலவீனமடை யக் கூடாது என்பதா லும், பரம்பரை நோய் கள் தொடரக்கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கி டையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங் களை வணங்குபவர்களாக இறைவன் படைத் திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்; புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.

திருமணத்திற்குமுன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டிலுள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகிவிட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படியில்லாமல் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர் களைப் புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத் திற்கு வழிபாடு செய்யாத பெண்கள், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாக் காலங் களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்றவேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். குலதெய்வ தோஷமிருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக் கிரகம் இல்லையென்றால், ஒருவர் என்னதான் சக்திவாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்குச் சென்றாலும் எதிர் பார்த்த பலன் தருமா என்பது சந் தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். குல தெய்வக் கோவிலுக்கு உதவுங்கள்!

om010822
இதையும் படியுங்கள்
Subscribe