1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். அவர் மிக வலுப்பெற்று மேன்மையாக அமர்ந்துள்ளார். ஆக, இந்த மாதம் உங்களின் செயல்களில் வெற்றி மிளிரும். செயலாக்கம் வேகமெடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். எனினும் அனைத்து விஷயங்களிலும் சிறு கயமைத் தனம், கொஞ்சம் லஞ்சம், அன்பளிப்பு கலந்தே இருக்கும். இது இந்த மாதம் தவிர்க்கமுடியாதது. வார்த்தை ஜாலம் லாபம் கொண்டுவந்து சேர்க்கும். பெண் பணியாளர்கள் கிடைப்பர். இந்த மாதம் சொத்து சம்பந்தமான பரிவர்த்தனை நடக்கும். மனையைக் கொடுத்து பணமாகவோ அல்லது வேறு இடத்தில் மனையாகவோ வாங்கலாம். சிலர் உங்கள் மனையில் அடுக்கு மாடி வீடு கட்ட ஒப்பந்தம் போடலாம். பெற்றோரின் அணுசரணை நன்கு கிடைக்கும். சில பெற்றோர் தங்களது பூர்வீக நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றித் தருவர். தம்பதிகளுக்குள் சிறு சலசலப்பு தோன்றி மறையும். அல்லது வாழ்க்கைத் துணைக்கு வயிற்றில் சூட்டுவலி அல்லது அஜீரணக் கோளாறு ஏற்படும். உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. இம்மாதம் உங்களில் சிலர் பதவி உயர்வு பெறலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. சில அரசியல்வாதியின் வாரிசு மிகப்பெரிய பதவிக்கு வர வாய்ப்புண்டு. சிலர் வீட்டில் பாகப்பிரிவினை நடக்க வாய்ப்புள்ளது. பெற்றோர் நலம், பணியாளர்களின் நடவடிக்கையில் கவனம் தேவை. லஞ்சப்பண விஷயத்தில் மிக கவனம் தேவை இந்த மாதம் நேர்மறையோ, எதிர்மறையோ எதையும் சமாளிக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் பெருகும்.
சித்திரை மாதம் 7, 8, 9-ஆம் தேதிகளில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
5, 14, 23-ஆம் எண்கள் நன்மையும், 7, 16, 25-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: இந்த மாதம் கோவில்களில் விளக்கேற்றுவது நன்மை தரும். சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரப் பாராயணம் நன்று. வயதான முஸ்லிம் பெரியவருக்கு கைலி வாங்கிக்கொடுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இந்த சித்திரை மாதப் பௌர்ணமி அவருக்கு மிக விசேஷ மானது. இந்த மாதம் உங்களின் சொற்களின் காத்ரம் வலுவாகும். வாக்கு வலிமை வளமான நிலையைச் சேர்க்கும். இந்த வளம், செல்வம் பெருகச் செய்யும். மன தைரியம் அதிகரிக்கும். அதனால் இதுவரையில் தயங்கிக்கொண்டிருந்த பல செயல்களில் அதிரடியாக இறங்கி பணியாற்றுவீர்கள். தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். பிற இன, மத, பணியாளர்கள் மீண்டும் கிடைப்பர். தொழிலாளர்கள் பற்றிய கவலை தீரும். இளைய சகோதரனுக்கு வேலை கிடைக்கும். கைபேசி மாற்றுவீர்கள். தொலைக்காட்சியில் நடிப்பவர்களில் சிலர், இவருக்கு பதில் இவர் என மாற்றும் சூழல் வரும். தாயாருக்கு சற்று உடல்நலம் குன்றி, பின் சரியாகும். உங்களின் வாரிசுகளில் சிலர் வெளிநாடு செல்வர். சிலர் வெளிநாட்டிலிருந்து வேலை மாறுதல் விஷயமாக திரும்பி வருவர். உங்களின் சிலர் வேலை பார்க்கும் கம்பெனிகளின் பங்குகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு அரசுப்பணி கிடைக்கும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். திருமணங்கள் நிறைவேறும். தொழில் அல்லது வேலையில் ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. அதில் சற்று கள்ளத் தனமும் ஒளிந்திருக்கும். சிலரின் கம்பெனிகள், உங்களை சில காலத்துக்கு வெளிநாட்டுக்கு ஒப்பந்தமுறையில் அனுப்பிவைக்கும். சில குத்தகை, ஒப்பந்த தொழில்முறை- அதுவும் அரசு சார்புடையது கைகூடும். பதவி உயர்வு கிடைக் கும். சிலரின் மூத்த சகோதரியின் திருமணம் நடக்கும். இந்த மாதம் கிடைக்கும் உபரிப் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்துவிடுங்கள். அல்லது பங்குகளாக வாங்கிவிடு
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். அவர் மிக வலுப்பெற்று மேன்மையாக அமர்ந்துள்ளார். ஆக, இந்த மாதம் உங்களின் செயல்களில் வெற்றி மிளிரும். செயலாக்கம் வேகமெடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். எனினும் அனைத்து விஷயங்களிலும் சிறு கயமைத் தனம், கொஞ்சம் லஞ்சம், அன்பளிப்பு கலந்தே இருக்கும். இது இந்த மாதம் தவிர்க்கமுடியாதது. வார்த்தை ஜாலம் லாபம் கொண்டுவந்து சேர்க்கும். பெண் பணியாளர்கள் கிடைப்பர். இந்த மாதம் சொத்து சம்பந்தமான பரிவர்த்தனை நடக்கும். மனையைக் கொடுத்து பணமாகவோ அல்லது வேறு இடத்தில் மனையாகவோ வாங்கலாம். சிலர் உங்கள் மனையில் அடுக்கு மாடி வீடு கட்ட ஒப்பந்தம் போடலாம். பெற்றோரின் அணுசரணை நன்கு கிடைக்கும். சில பெற்றோர் தங்களது பூர்வீக நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றித் தருவர். தம்பதிகளுக்குள் சிறு சலசலப்பு தோன்றி மறையும். அல்லது வாழ்க்கைத் துணைக்கு வயிற்றில் சூட்டுவலி அல்லது அஜீரணக் கோளாறு ஏற்படும். உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. இம்மாதம் உங்களில் சிலர் பதவி உயர்வு பெறலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. சில அரசியல்வாதியின் வாரிசு மிகப்பெரிய பதவிக்கு வர வாய்ப்புண்டு. சிலர் வீட்டில் பாகப்பிரிவினை நடக்க வாய்ப்புள்ளது. பெற்றோர் நலம், பணியாளர்களின் நடவடிக்கையில் கவனம் தேவை. லஞ்சப்பண விஷயத்தில் மிக கவனம் தேவை இந்த மாதம் நேர்மறையோ, எதிர்மறையோ எதையும் சமாளிக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் பெருகும்.
சித்திரை மாதம் 7, 8, 9-ஆம் தேதிகளில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
5, 14, 23-ஆம் எண்கள் நன்மையும், 7, 16, 25-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: இந்த மாதம் கோவில்களில் விளக்கேற்றுவது நன்மை தரும். சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரப் பாராயணம் நன்று. வயதான முஸ்லிம் பெரியவருக்கு கைலி வாங்கிக்கொடுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இந்த சித்திரை மாதப் பௌர்ணமி அவருக்கு மிக விசேஷ மானது. இந்த மாதம் உங்களின் சொற்களின் காத்ரம் வலுவாகும். வாக்கு வலிமை வளமான நிலையைச் சேர்க்கும். இந்த வளம், செல்வம் பெருகச் செய்யும். மன தைரியம் அதிகரிக்கும். அதனால் இதுவரையில் தயங்கிக்கொண்டிருந்த பல செயல்களில் அதிரடியாக இறங்கி பணியாற்றுவீர்கள். தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். பிற இன, மத, பணியாளர்கள் மீண்டும் கிடைப்பர். தொழிலாளர்கள் பற்றிய கவலை தீரும். இளைய சகோதரனுக்கு வேலை கிடைக்கும். கைபேசி மாற்றுவீர்கள். தொலைக்காட்சியில் நடிப்பவர்களில் சிலர், இவருக்கு பதில் இவர் என மாற்றும் சூழல் வரும். தாயாருக்கு சற்று உடல்நலம் குன்றி, பின் சரியாகும். உங்களின் வாரிசுகளில் சிலர் வெளிநாடு செல்வர். சிலர் வெளிநாட்டிலிருந்து வேலை மாறுதல் விஷயமாக திரும்பி வருவர். உங்களின் சிலர் வேலை பார்க்கும் கம்பெனிகளின் பங்குகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு அரசுப்பணி கிடைக்கும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். திருமணங்கள் நிறைவேறும். தொழில் அல்லது வேலையில் ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. அதில் சற்று கள்ளத் தனமும் ஒளிந்திருக்கும். சிலரின் கம்பெனிகள், உங்களை சில காலத்துக்கு வெளிநாட்டுக்கு ஒப்பந்தமுறையில் அனுப்பிவைக்கும். சில குத்தகை, ஒப்பந்த தொழில்முறை- அதுவும் அரசு சார்புடையது கைகூடும். பதவி உயர்வு கிடைக் கும். சிலரின் மூத்த சகோதரியின் திருமணம் நடக்கும். இந்த மாதம் கிடைக்கும் உபரிப் பணத்தை ஏதாவது தொழிலில் முதலீடு செய்துவிடுங்கள். அல்லது பங்குகளாக வாங்கிவிடுங்கள். இல்லை யெனில், சுத்தமாக வீணாக செலவழிந்துவிடும். இந்த மாதம் தொழில், கௌரவ விஷயம் எத்தனை மேன்மை கொடுக்கிறதோ, அத்தனை எதிர்மறை விமர்சனங்களும் வரும்.
சித்திரை மாதம் 9, 10, 11-ஆம் தேதிகள் நன்மை கொண்டுவரும்.
4, 13, 22, 31-ஆம் எண்களிடம் கவனம் தேவை.
1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மை தரும்.
பரிகாரம்: இந்த மாதம் பௌர்ணமி கிரிவலம் செல்வது சிறப்பு. கோவிலில் வயதான அர்ச்சகர்களுக்கு தேவையறிந்து உதவவும். கட்டட வேலை செய்யும் தொழிலாளர்களின் கைபேசி சம்பந்தமாக ஏதாவது உதவிசெய்யுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். இந்த மாதம் அவர் நற்பலன் தரத்தக்க நிலையில் உள்ளார். குழந்தை பாக்கியம் வேண்டி, வெகுகாலம் காத்திருப்போர், செயற்கைக் கருத்தரிப்புமூலம் புத்திர பாக்கியம் பெறுவர். வேலைதேடி அலுத்துப் போனவர்களுக்கு வேலை கிடைக்கும். காதல் திருமணம் நடக்கும். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகை திருமணங்களும் நடக்கும். பூர்வீக இடத் தில் வீடு கட்டலாம். அல்லது அதனை வாரிசுகளுக்குக் கொடுக்கலாம். உங்களில் சிலரது வேண்டாத பழக்கங்களை மனைவி அறிந்துகொள்வார். இந்த மாதம் உங்களுக்கு யோசனைகள் ஏறுக்குமாறாக கொப்பளிக்கும். வெளிநாட்டிலிருந்து அதிர்ஷ்ட செய்தி கிடைக்கும். தொழிலில் மிக நன்கு தெரிந்த ஒருவர் பங்குதாரராவார். பூர்வீக இடத்து சொந்தம் ஒன்று வியாபார அனுசரணைக்கு கிடைக்கும். உங்கள் மூத்த சகோதரி சற்று நோய்வாய்ப்படலாம். அல்லது வேலை கிடைக்க லாம். அரசியல்வாதிகள் வேலைப்பளுவால் அவதிப்படுவர். அது இவர்களுக்குக் கிடைக்கும் தலைமைப் பொறுப்பு அல்லது அதற்கு இணை யான பதவி அமைப்பால் அமையும். அரசு அதிகாரிகளுக்கு தங்களின் நட்பு விஷயமாகவும் கொடுக்கல்- வாங்கல் அதிகமிருக்கும். சினிமா கலைஞர்கள் பிறமொழி சார்ந்த படங்களில் நடிக்க வாய்ப்பு பெறுவர். வேலை பார்க்கும் மருமகள் வருவார். உங்களில் சிலர், வாழ்க்கைத் துணையின் வேலை, தொழிலில் பங்குபெறலாம் அல்லது முதலீடு செய்யலாம். இந்த மாதம் அதிர்ஷ்ட வாய்ப்பு பிரகாச மாக உள்ளது. அதனால் அரசியல், அரசு மற்றும் மருத்துவர்கள் இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எந்த சுப நிகழ்விலும் சின்னதாக ஒரு வேண்டாத்தனம் இருக்கும். அதனைத் தவிர்க்க இயலாது.
சித்திரை 13, 14, 15-ஆம் தேதிகள் நன்மை தரும்.
8, 17, 26-ஆம் எண்கள் தீதும். 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: உங்களுக்கு அறிமுகமான பள்ளி ஆசிரியருக்கு உதவுங்கள். சிவனுக்கு தீபமேற்றுங் கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு முடிந்த உதவிசெய்யவும். சமையல் வேலை செய்யும் பெண்களுக்குத் தேவையறிந்து உதவவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண் நாயகன் ராகு. இந்த மாதம் உங்களின் பலம் வாய்ந்த எதிரிகளையும் பந்தாடி விடுவீர்கள். அதனால் அவர்கள் முற்றிலுமாக ஒதுங்கியிருப்பர். இதில் அரசியல் சம்பந்த வேலைகள் அதிகமிருக்கும். அவர்களின் அபிமானிகளை உங்கள் பக்கமாக மாற்றிக் கொள்வீர்கள். அவர்களின் சில தொண்டர்கள் உங்களை நோக்கிவருவர். உங்களின் சில தொண்டர்கள் அவர்களின் பக்கம் போவது நடக்கும். அரசு அதிகாரிகளுக்கு, உங்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுக்கும் நபர், உங்களுக்கு எதிராக வேலை செய்வார். சில மாணவர்கள் தங்களுடைய லட்சியக் கல்விப் படிப்பை அடைவர். சிலர் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து, அடையவேண்டியதை அடைவர். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் பணம் புரளும். பணப் புழக்கம் பெருகும். சகோதரன் சம்பந்தமான ஒரு வில்லங்கம், எதிர்பாரதவிதமாக சரியாகிவிடும். அதுபோல் சொத்து, மனை சம்பந்தமான ஒரு விஷயமும் சரியாகும். காவல்துறையினர் ஒரு மாறுதலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். கலப்புத் திருமணம் நடக்கும். கலைஞர்கள் சிலர் தங்களின் ஒப்பந்தம் அல்லது பிறரின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக்கொண்டு, சற்று தவிக்கநேரிடும். மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியைக் கற்கச் செல்வர். அலுவலர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கூடவே, சற்று அதிகாரிகளின் நச்சரிப்பும் கூடுதலாகும். சில களவுபோன பொருட்கள் கிடைக்கும். சிலர் தியானம், யோகா கற்றுக்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களின் ஆற்றலும், ஆர்ப்பரிப்பும் அதிகமிருக்கும். எனவே எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, சற்று அடக்கி வாசிக்கவும்.
சித்திரை 7-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக்கூடும்.
8, 17, 26-ஆம் எண்கள் தீங்கும், 5, 14, 23-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: பிறமத பாதிரியார்களுக்கும், மசூதியில் தலைமை மௌலிக்கும் தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள். நவகிரகங்களைச் சுற்றிவந்து வணங்கவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். இந்த மாதம் நடக்கும் செயல்கள், நிறைய எதிர்பாராத திருப்பங்களைக் கொடுக்கும். முதலில் சற்று துன்பமாகத் தெரிந்தாலும், முடிவு இன்பமாக- நல்லதாகவே இருக்கும். உங்கள் இளைய சகோதரன் ஒரு வில்லங்கத்தை ஆரம்பித்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியாள் வேலையைவிட்டுப் போகிறேன் என்று சொன்னாலும், அதைவிட நல்ல தொழிலாளி கிடைப்பார். கெட்ட கனவுகள் வந்தாலும், நிஜத்தில் நற்பலன் கொடுப்பதாக அமையும். உங்களில் சிலரது தாயாருக்கும், வாழ்க்கைத் துணைக்குமிடையே கௌரவப் பிரச்சினை உண்டாகி, பெரும் யுத்தம் நடக்கும். பிரிவினை ஏற்படுமளவுக்கு பிரச்சினை வெடிக்கும். இதில் நீங்கள் நடுவே மாட்டிக்கொண்டு தவிப்பீர்கள். உங்கள் தந்தை இந்தப் பிரச்சினையை சரிசெய்துவிடுவார். இந்த மாதம் பணவரவு நன்றாக இருப்பினும், சிலசமயம் உங்கள் பணம் வேறொருவரிடமிருந்து உங்கள் கைக்கு எட்ட தாமதமாகும். மனை விஷயங்களில் கவனம் தேவை. கூடிய மட்டும் இந்த மாதம் மனை, வீடு விஷயங்களில் சற்று கவனமாக இருக்கவும். வாரிசுகளிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். பங்குப் பத்திரங்களில் யோசித்து செயல்படவும். கலப்பு மணம் நடக்கும். அதுவும் கலாட்டா கல்யாணமாக நடக்கும். அரசு விஷயங்களில் அதிக கவனம் தேவை. அரசியல்வாதிகள் தங்கள் குறுக்கு புத்தியில் கவனமாக இருத்தல் அவசியம். சிலர் உங்களு டன் பழகி, உங்கள் காலை வாரிவிடக்கூடும். இதனால் கௌரவ பாதிப்பு ஏற்பட்டாலும், அதனையும் பின் ஒரு மாதிரியாக சமாளித்து விடுவீர்கள். அரசு அதிகாரிகள் மாற்றங்களை சந்திப்பார்கள். இந்த மாதம் நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம், சிரத்தையோடு இருப்பின், வரும் மைனஸ்களை, ப்ளஸ்ஸாக மாற்றிவிடலாம். பழகும் ஆட்களிடம் சுதாரிப்புடன் நடந்துகொள்ளுங்கள்.
சித்திரை மாதம் 19, 20, 21-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
4, 13, 22, 31-ஆம் எண்கள் தீமையும், 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: நரசிம்மரை வணங்கவும். கிரகண நேர தானம் நன்று. வேதம் பயிற்றுவிக்கும் பாடசாலை ஆசிரியர்களின் தேவையைக் கேட்டறிந்து உதவவும். இவர்கள் அதிகம் வெளியே அறியப்படாதவர்களாக இருப்பர்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன். இந்த மாதம் திருமணம் நிச்சயமாகும். இந்த மாதம் நடைபெறும் இந்த எண்காரர்களின் திருமணத்தில் திடீர் திருப்பமாக மணப்பெண், மணமகன் மாற்றப்படும் நிலைமை ஏற்படும். சில காதல் திருமணங்கள் கடைசி நேரத்தில் நிறுத்தப்படும். பணவரவில் சரளமுண்டு. வியாபார முதலீடு அதிகரிக்கும். அது கொஞ்சம் கடன் பணமாகவும் அமையும். பிற இனப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இளைய சகோதரனின் திருமணம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். மருமகன் வரும் நேரமிது. வந்த மருமகன் சண்டை பிடிக்கும் காலமிது. இந்த மாதம் நடக்கும் வாரிசுகளின் திருமணத்தில் அரசியல் கலப்பும், இனக் கலப்பும் மிகுந்திருக்கும். நிறைய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரம் தொடங்குவீர்கள். மனையைப் பிரித்து விற்கும் தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களுக்கு எல்லாம் நல்லவிதமாக நடந்தாலும், ஏதோ வொரு குறை இருப்பதாக மனம் அலைபாயும். அரசியல்வாதிகளின் நண்பர்கள், கூட இருப் போர், நைச்சியமாகப் பேசிவருவோர் இந்த மாதம் இவர்மீது அபாண்டமான குறையைக் கூறி, இவரை வெளியே தலைக்காட்டாமல் செய்துவிடுவர். இவர் அவர்களிடம் மாட்டிக் கொண்டு, கெஞ்ச வேண்டியிருக்கும். கலைஞர் கள் தங்கள் எதிரிகளிடமும், தங்கள் உடல் நலனிலும் கவனமாக இருக்கவேண்டும். கோவில் களுக்குச் செல்லும்போது நகைகள்மீது கவனம் இருக்கட்டும். அரசு சார்ந்த வரி போன்ற கட்டணம் கட்டும் போது, தாமதமின்றி செலுத்தி விடுங்கள். அபராதத் தொகை கட்ட வேண்டிவரும். முக்கிய மாக. வணிகம், கடை வைத்திருப்போர் சற்று முன் முயற்சியுடன் கட்டணம் செலுத்திவிடுங்கள். இந்த மாதம் ஆள் பழக்கம் அதிகரித்தாலும் அதில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சித்திரை 4, 5, 6-ஆம் தேதிகள் நன்மை தரக் கூடும்.
7, 16, 25-ஆம் எண்கள் தீயதும், 9, 18, 27-ஆம் எண்கள் நல்லதும் கொணரும்.
பரிகாரம்: திருமணம் செய்துவைக்கும் புரோகிதர்களின் தேவையைக் கேட்டறிந்து உதவவும். பணியாளர்களுக்கு சட்ட உதவி தேவையெனில் உதவி செய்யுங்கள். கருட பகவானுக்கு விளக்கேற்றி வணங்குங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது. இந்த மாதம் ஏதோவொரு காரணத்திற்காக அரசியல்வாதிகளை சந்திக்க நேரிடும். அது நீங்கள் விரும்பாத சந்திப்பாகவே அமையலாம். சில வியாபார விஷயங்கள், நிலப் பரிவர்த்தனை வாரிசுகளின் கல்வி, கோவில் சார்ந்த விஷயம், கடைத் திறப்பு விழா, பயணங்கள் பற்றிய விஷயம் என ஏதோ ஒன்றுக்காக அவர்களிடம் போய் நிற்கவேண்டியிருக்கும். அதன் வெற்றி யென்பது, நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர் கள் என்பதைப் பொருத்து அமையும். சிலர் காவல்துறையின் உதவியை நாடவேண்டிவரும். குடும்பத்தில் நீங்கள் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு நடக்கும் அனேக விஷயங்கள் வெளிப்படைத் தன்மையின்றி, மறைமுகமாக- ரகசியமாக நடக்கும். இதிலிருந்து லஞ்சம் கொடுக்கல்- வாங்கல் அதிகமிருக்கும் என புரிந்துகொள்ளலாம். வெளிநாட்டுப் பயணம் நன்மை தரும். மன தைரியம் நேர்மை யான முறையில் அல்லாது மறைமுக, எதிர்வழியில் அதிகரிக்கும். எனவே இந்த மாதம் எந்த விஷயத்தையும், ஒரு கை பார்த்துவிடலாம். என முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். இந்த மனவுறுதி, நிறைய ஆட்களுடன் பழக்கம், சந்திப்பு ஏற்படுத்திக்கொடுக்கும். சில வெற்றிகளும், சில தோல்விகளும் சகஜம். இளம் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. வேண்டாத அவமானம் ஏற்படக்கூடும். சிலருக்கு வேலை கிடைக்கும். வாரிசு பாக்கி யம் சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை, செயற் கைக் கருத்தரிப்பு போன்றவை மேற்கொள்வீர் கள். இந்த மாதம் வெற்றி, தோல்விகள் மாறிமாறி வருவதால் மனநிலையை சீராக நடத்தவும். அரசியல் அடிமட்டத் தொண்டர்களையும், அரசு அலுவலகங்களில் கீழ்மட்டப் பணியாளர் களையும் நன்கு கவனித்தால், உங்கள் வேலைகள் படு சுறுசுறுப்படையும்.
சித்திரை 7-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக் கூடும்.
6, 15, 24-ஆம் எண்கள் தீமையும், 8, 17, 26-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: சூரிய நாராயணரை வணங்கவும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். இந்த மாதம் உங்கள் பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். கையில் பணம் இருந்துகொண்டேயிருக்கும். அது உங்கள்வீட்டு வாடகையாக இருக்கலாம். அல்லது வீட்டுக்கடன் தொகையாக அமையலாம். வேண்டாத தைரியம் வீறிட்டெ ழும். இந்த தைரியம் வெளிநாட்டு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கலாமா எனும் உத்வேகம் மிகும். பயண பாதகங்களும், அரசாங்க விதிமுறைகள் உங்களின் பயணத்திற்கு ஒத்து வாராததும் பிறகுதான் தெரியும். வீட்டுக்கடன் வாங்கி, பத்திரப் பதிவு செய்யும் நிலையில், அங்குள்ள அதிகாரிகள் ஆயிரம் குறை கண்டுபிடிப்பர். தாயின் உடல்நலனில் அக்கறை தேவை. உங்கள் வீடு, தோட்டம், வாகனம் என அனைத்தும் அரசு சட்டங்களுக்குள் வரவில்லையென செய்திவரும். பெண் வாரிசுகள் வேலை கிடைத்து, வேறிடம் அல்லது வெளிநாடு செல்வர். பங்குகள் கவலை கொடுக்காது. சினிமா கலைஞர்கள், தங்களின் சம்பளத்துக்கு பதிலாக வீடு, மனை போன்று பெற்றுக் கொள்வர். வேலையும் வெற்றியும் சேர்ந்தே கிடைக்கும். உங்கள் பெற்றோரை பயணங்களின்போது காயம்படாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அரசியல்வாதிகள் மக்களுக்கு வீட்டுக்கடன் சம்பந்த வசதி செய்துகொடுப்பர். மேலும் வேலைவாய்ப்பு முகாம்களில் நிறைய பங்கேற்பர். உங்கள் மூத்த சகோதரர் உங்கள் பெற்றோரின் நலனில் பங்கேற்பார். சமையல் கலைஞர்கள் தங்கள் எல்லை தாண்டியும் வாய்ப்பு பெறுவர். சிலர் சக சமையல்காரருக்கு ஒத்தாசை செய்யும்விதமாக, பணி பரிமாற்றம் செய்துகொள்வர். இந்த மாதம் அரசியல்வாதி, அரசு சார்பு உபத்திரவம் வரும். கவனமாக இருக்கவும்.
சித்திரை 21, 22, 23-ஆம் தேதிகள் நற்பலன் கொடுக்கக்கூடும்.
1, 10, 19, 28-ஆம் எண்கள் தீமையும். 9, 18, 27-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: வயதானவர்கள் கீழே விழுந்துவிட்டால், ஓடிச்சென்று உதவவும். ஆஞ்சனேயரை செந்தூரம்கொண்டு வணங்குங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். இந்த சித்திரை உங்களுக்கு எதிர்பாரத சர்ப்ரைஸ் இனிமைகள் தரப்போகிறது. வெற்றிச் செய்திகள் விரைந்து வரும். கைபேசியில் நல்ல குறுஞ்செய்தி கிடைக்கும். நல்ல பணியாளர் கிடைப்பார். இளைய சகோதரம்வகையில் ஒரு நினைத்தே பார்க்காத நன்மை கிடைக்கும். அது உங்கள் வேலை அல்லது ஒப்பந்த விஷயமாக அமையலாம். திருமணமாகும். பண விஷயம் நன்கு அமையும். வாரிசு யோகம். சற்று மருத்துவ ஆலோசனைக் குப்பின் கிடைக்கும். பங்கு வர்த்தகம் சிறக் கும். முதலீடு அதிகரிக்கும். வாரிசுகளில் சிலர் வெளிநாடு செல்லக்கூடும். சிலரின் வாரிசுகள் கண்டிப்பாக திருமணம் நடக்கப் பெறுவர். வரும் வரன், கொடுத்து வாங்கும் விதத்தில் அமைவார். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்கள் சிலர் வெளிநாடு செல்வர். ஒப்பந்த வேலை அமையும். பணியாளர்களுடன் இருந்துவந்த மோதல் மறையும். ஆன்மிகப் பயணம், வெளிநாட்டு சுற்றுலா உண்டு. தொழில் முதலீடு உண்டு. உங்கள் மருமகன், உங்களிடம் அதீத அக்கறை காட்டுவார். அவர் மூலம் சில பங்குப் பரிவர்த்தனை, வெளிநாட்டு அனுகூலம் என பெறுவீர்கள். அல்லது அதன் சார்ந்த சிக்கலைத் தீர்க்க உதவுவார். உங்கள் மாமனார், நிலத்தைக் கொடுத்து வீடாக, வணிக இடமாக மாற்றும் வாய்ப் புள்ளது. இந்த மாதம் உங்களுக்குத் தொல்லை கொடுத்த விஷயங்களை சிறுமுயற்சி எடுத்தாலும் சரியாகும் சூழல் உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சித்திரை 1, 2, 3-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
4, 13, 22, 31-ஆம் எண்கள் கெடுதலும், 8, 17. 26-ஆம் எண்கள் நன்மையும் தரும்.
பரிகாரம்: அறிவு சார்ந்து பணியாற்றும் கணக்காளர், ஆசிரியர் போன்றவர்களுக்கு உதவுங்கள். பிற இன பள்ளி ஆசிரியர்களுக்கு உதவவும். நரசிமமர் வழிபாடு நன்று.
செல்: 94449 61845