1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராஜயோக கிரகமான சூரியன் உங்கள் எண் நாயகன் ஆவார். இந்த சித்திரை மாதம் அவர் மிக மேன்மை யாக உள்ளார். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முக்கியமாக பூர்வீகமாகவே அரசியலில் ஈடுபடுவோர், மிகப்பெரிய பதவி பெறு வர். பதவி கிடைத்த பிறகு, உங்கள்மீது விழும் அநாகரிக சொற்களை ஜஸ்ட் லைக் தட் தள்ளி விட்டு, விட்டு, உங்கள் பதவியில் வேகமெடுப்பீர் கள். இந்த மாதம், நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும் அனைத்தும், ஏனோ மறைமுகமாக நடக் கும். சிலசமயம் நகைச்சுவை யாக பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு, உளறிக்கொட்டுவீர்கள். எதிரில் இருப்பவர்கள் தரும் ரியாக்ஷனை கண்டு, சாதுர்யமாக சமாளித்து விடுவீர்கள். உங்கள் இளைய சகோதரி யின், வெளி நாட்டு பயணம் சற்று தள்ளிப்போகும். உங்களுக்கு தற்போது கிடைக்கும் பெண் தொழிலாளி கள், ரொம்ப மிடுக்கோடு இருப் பர். உங்கள் தொழில் சார்ந்த, குறுந்தகவல்கள் உங்களிடம் வந்துசேர லேட்டாகும். அது ஒப்பந்தம் சம்பந்தமானதாகவும் இருக்கும். தைரியம், வீரம் எல்லாம் வெளிப்பார்வைக்கு பந்தாவாக இருப்பி னும் உள்ளே ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத்துணை வேலை கிடைக்கப் பெறுவார். உங்கள் வாழ்க்கைத்துணை கடன் வாங்கி வீடு கட்ட இயலும். வாரிசுகள்மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் பெற்றோர்கள் பார்த்து வைத்த, திருமணம் நடக்கும். உங்களுக்கு இந்த மாதம் வர இருந்த சில அவமான நஷ்டங்கள், சூரியனை கண்ட பனிபோல் மறையும். தந்தையாகும் யோகமுண்டு. தொழில் வளர்ச்சி, அரசியல் மேன்மை இவற்றை சற்று மறைமுகமாக, அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: உங்கள் பிறந்த எண் அதிர்ஷ்ட எண்தான்.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

Advertisment

பரிகாரம்: திருவனந்தபுரம் அனந்த பத்மநாதரை வணங்கவும். பிற மதத்தினருக்கு குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்க உதவவும்.

22

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கிரகங்களுள் தாயாரைக் குறிக்கும் குளிர்ச்சி சந்திரனே உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பிறந்தவுடன், உங்களுக்கு அரசுப் பணி அல்லது தனியார் வேலை என ஒன்று கிடைத்துவிடும். இதனால் கையில் பணப்புழக்கம் பெருகும். குடும்பம் மேன்மை பெறும். வாக்கில் கம்பீரம் ஓங்கும். சிலசமயம் அதிக சப்தம் அடிவாங்கித் தரும். இளைய சகோதரன், சிறு பிரச்சினைக் குப்பின் திருணம் செய்துகொள்வார். உங்கள் சங்கடம் ஏற்பட்டு சரியாகும். கண்டிப்பாக இந்த மாதம் வீடு வாங்குவீர்கள். அது மிக புதுமையான முறையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பாக அமையும். உங்கள் வாரிசும், உங்கள் வயிறும் உங்களைப் பாடாய்படுத்தி எடுக்கும். உஷ்ண சம்பந்த மாக, தலைவலி, கண்வலி பின்னி எடுக்கும். தம்பதிகளுக்குள் பிணக்கு உண்டு. அது சிலருக்கு கௌரவ சம்பந்தம் அல்லது வாரிசு களின் வேண்டாத தொடர்பு சம்பந்த சண்டை நடக்கும். உங்கள் வியாபார பங்கு தாரர் முரண்பாடு கொள்வர். இந்த மாதம் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த யோகம் உங்களுக்கு திருஷ்டியை தேடிகொண்டுவரும். உங்கள் மூத்த சகோதரி ஒரு நல்ல விஷயம் கிடைத்து, இடம் மாறுவார். அரசியல்வாதி கள், அதுவும் பெண் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அரிய வாய்ப்பு கிடைக்கப்பெறுவர். இந்த மாதம் கலையுலகினர் சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்புகள், எங்காவது புண் ஏற்படச் செய்யும். இந்த மாதம் நிறைய நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எனினும் இந்த வாய்ப்புகள், உங்களுக்கும் பிறருக்குமிடையே பெரிய சுவர் எழுப்பிவிடும். சற்று தனிமையாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 11, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருப்பதி பெருமாளையும், தாயாரையும் வணங்குவது நல்லது. பணியாளர்களுக்கு, குடிதண்ணீர் வசதி செய்துகொடுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தங்கத்தின் காரகர், தர்மமிகு குரு பகவானே உங்கள் எண்ணின் நாயகர். இந்த மாதம் பிறந்தவுடன், அதிர்ஷ்டம் கூரையை பியத்துக்கொண்டு கொட்டப்போகிறது. வேலை கிடைக்கும் எனலாம். பதவி உயர்வு உண்டு என பகிரலாமா! வீடு கண்டிப்பாக வாங்குவீர்கள் என்று கூறலாமா! அரசியல் சார்ந்த மாளிகை கிடைக்கும் என பகிரலாமா! அரசியலில் பெரிய பதவி யோகம் உண்டு எனலாமா! சிறு தூர, வெகு தூரப் பயணம் உண்டு எனலாமா! செலவு அதிகம் அதிகமாக பணவரவு வந்துகொண்டே இருக்கும் எனலாமா! புது ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் எனலாமா! நிறைய முதலீடுகள் உண்டு எனலாமா! மாணவர்களின் கல்வி மேன்மை பெறும் எனலாமா! உங்கள் தயாரின் நிலை மிக உச்சம் அடையும் எனலாமா! இந்த குழந்தைகளின் தாய், புதுத்தொழில் தொடங்குவார் எனலாமா! இவர்களின் வாழ்க்கைத்துணை நல்ல வேலை பெறுவார் எனலாமா! பங்கு வர்த்தகம் பலப்படும் எனலாமா! இந்த மாதம் நிறைய நிறைய நன்மைகள் நடக்கும்போது, தம்பதி களுக்குள் மட்டும், சில பல காயம் ஏற்படும் அள விற்கு நிகழ்வுகள் உண்டா கும். இது திருஷ்டி பரிகாரம் போல் நடக்கும். தொழிலில் சிறு பின்னடைவும், பிரச்சினையும் ஏற்பட்டு சரியாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: திருவஹிந்திபுரம் ஸ்ரீஹயக்கிரவரை வழிபடவும். சண்டை போட்டு முடித்த தம்பதிகளுக்கு குளிர் பானாமோ, சூடாக டீ, காபியோ வாங்கி கொடுத்து ஆசுவாசப்படுத்துங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எதிர்மறைச் சிந்தனைகளால் எதிரிகளை திணறடிக்கும் ராகுவே உங்கள் எண்ணின் நாயகன். எப்போதுமே கொஞ்சம் தடாலடி யான ஆள்தான். இந்த மாதம் கேட்கவே வேண்டாம். இந்த மாதம் பணவரவு ஓஹோ தான். கொடுக்கல்- வாங்கல் பரபரவென்றி ருக்கும். உங்கள் மூளை ரொம்ப குதர்க்கமாக யோசிக்கும். செயல்கள் அதிரடியாக அமையும். யார் எக்கேடு கெட்டுப்போனாலும், நான் புடிச்ச பொண்ணை கல்யாணம் செய்வேன் என திருமணம் செய்வீர்கள். அரசியலில் அதகளம் செய்வீர்கள். தேர்தலில் நிற்பதற்கு முன்பே, வெற்றிவிழா கொண்டாடிவிடு வீர்கள். யாருக்காவது கடன் வேணுமா, என் கிட்ட வாங்க என கூப்பிட்டு, கடன் கொடுத்து, பின் கும்மாங்குத்து குத்துவீர்கள். வாடகைக்கு இருந்த வீட்டை, உங்கள் பெயருக்கு மாற்றிவிடுவீர்கள். பெண்களிடம் ரொம்ப சில்மிஷம் பண்ணக்கூடாது. மனை வாங்கப்போகிறேன் என, அந்த பகுதி ரியல் எஸ்டேட் ஆட்களை மயங்கிவிழச் செய்துவிடுவீர்கள். உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கவே இந்த மாதம் சரியாகிவிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: திருநீர் மலை நரசிம்மரை வணங்கவும். பொது இடங்களில், நல்ல மண் பானையில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கல்வியறிவு நுணுக்கம் கொண்ட புதனே உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் உங்கள் செயல்கள் சற்று தேங்கி, பின் தெளியும். சந்திக்கும் நபர்கள், முதலில் சுணங்கி, பின் நட்பாவர். திருமணம் தடுமாறி, பின் நிலைக்கும். காதல் சண்டையிட்டு பின் மலரும். வியாபாரம் சற்று தடுமாறி பின் வெற்றி நடைபோடும். பணவரவு சூப்பராக அமையும். இளைய சகோதரனுடன் மனப்பிணக்குண்டு. பணியார் பாரமுகம் காட்டுவார். தாயார் உடல்நிலை சற்று கெட்டு, பின் சரியாகிவிடுவார். வீடு, மனை, வாகன விஷயம் முதலில் சறுக்கி பின் எதிர்பாராதவகையில் சரியாகும். அரசு விஷயங்கள் முதலில் திகைக்கச் செய்து, பின் சீராகும். அரசியல்வாதிகள், அவர்களுக்கு ஏற்படும் பின்னடைவை வெற்றிப்படியாக மாற்றிவிடுவர். பாதத்தில் சுளுக்கு பிடித்து பின் நல்லபடியாகும். உங்களில் சிலருக்கு தந்தை அல்லது தாத்தாவாகும் வாய்ப்புண்டு. இந்த மாதம் வரும் வீண் செலவுகள் எல்லாம் விலகிவிடும். அவை சுபசெலவாகவும் மாறும். மனை, வியாபார முதலீடு உண்டு. மாமியார், குடும்பத்தில் சற்று வில்லங்கம் செய்வார். உங்கள் மாமனார் உடல்நிலை சற்று சீர்கெடும். பங்கு வர்த்தகம் பொருட்டு கடன் வாங்க நேரிடும். கலைஞர்கள் வேறுமொழிப் படங்களில் மேன்மை காண்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: ஒப்பிலியப்பனை வணங்கலாம். சமையல் செய்யும் பெண்களுக்கு, நல்ல குடிதண்ணீர் வாங்கிக்கொடுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அழகும் வசீகரமும்கொண்ட சுக்கிரனே உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் உங்களுக்கு வெகு யோகமானதாக அமைகிறது. வேலை கிடைக்கும். செல்வம் வளரும். பேச்சில் உறுதி தென்படும். குடும்பம் சீர் பெறும். நல்ல பணியாளர் கிடைப்பார். சிலருக்கு அரசாங்கமே பணியாளர், கைபேசி என வழங்கும். இளைய சகோதரன், அரசு வேலை பெறுவார். வீடு வாங்கும் யோகம் வரும். தாயார் குலதெய்வ வழிபாட்டில் ஒன்றிவிடுவார். கல்வி சிறக்கும். நம்பிக்கை துளிர்க்கும். இதுவரையில் நல்ல வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர் கள், பதவி உயர்வுபெறுவர். சிலர் சம்பள பாக்கி வரக்காண்பர். சிலரின் சம்பள தொகை அதிகரிக்கும். வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து செல்வர். சிலரின் சேவைகள் பாராட்டு பத்திரம் வாங்கிக் கொடுக்கும். காதல் திருமணம் கண்டிப்பாக நடக்கும். இப்போது வரும் மருமகன் பெரிய அரசு ஊழியராகவோ அல்லது அரசியலில் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ இருப்பார். மறுமணம் வேண்டுவோர் நல்ல வேலை பார்க்கும் பெண் கிடைக்கப்பெறுவர். இந்த மாதம், உங்களுக்கு ஒரு எதிர்பாராத யோகம் உண்டாகும். இந்த மாதம், உங்களின் அத்தனைக் கடனும் அடைந்துவிடும். கூடவே வியாபார விருத்திக்கு, புதுக்கடனும் கிடைக்கும். இந்த மாதம் மிக நல்ல பலன்கள் கொடுக்கும் சூழ்நிலை உள்ளதால், இந்த எண் ஜாதகர்கள் தங்களின் வெகுநாளைய முயற்சிகளை செயல்படுத்துவதில் வெகு முனைப்பு காட்டவேண்டும்; வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட எண்கள்: அனைத்து எண்களும்.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: மலைமீது அமர்ந்துள்ள கனக துர்க்கையை வழிபடுவது நலம். அருகிலுள்ள மகாலட்சுமியை தாயாரை விளக்கேற்றி வணங்கவும். குளம், ஆற்று மீன்களுக்கு மொச்சை கலந்த சாதம் போடுங்கள். அலைந்து திரிந்து பணிபுரியும் பெண்களுக்கு குடிக்கும் இனிப்பு பானம் வாங்கிக்கொடுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ஞானகாரன், கேது உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம், உங்களிடம் பழகுகிறவர்கள் அனைவரும் வெகு எம்டனாக இருப்பர். நீங்கள் ஒரு அடி பாய்ந்தால் அவர்கள் 16 அடி பாய்ந்து பெப்பே என்பர். இதனால் நீங்கள் வெகு முயற்சியும், நிறைய செலவும் செய்தால், உங்கள் விஷயங்களில் வெற்றி தென்படும். அதுவும் சில கலையுலக ஆட்கள், உங்களை ஏமாற்றும்விதமாக சில செயல் களில் ஈடுபட, அதிலிருந்து தப்பித்து வெளி வருவதற்குள், போதுமடா சாமி என்கிறாகி விடும். இவ்வளவு சிரமப்படணுமா எனில், உங்களின் சிரமங்கள் பணமாக மாறி கொட்டும். எனவே முழு முனைப்பு காட்டுவீர் கள். மேலும் இந்த மாதம் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் அணுசரனை இன்றி நடந்து கொள்வர். வாரிசுகள் உங்களோடு கருத்து மோதல் கொள்வர். வேறு சிலர் புது வணிகம் தொடங்க அனைத்து முன்னேறபாடுகளும் செய்வர். அதனால் வரும் அலைச்சல்கள் சிரமத்தையும் மீறி மகிழ்வையே தரும். இந்த மாதம் சற்று கலப்பு, காதல் திருமணம் நடக்கும். தம்பதிகள் வீடு விஷயமாக சண்டை இட நேரிடும். உங்களின் சிலரின் வாழ்க்கைத்துணை வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வார்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருக்கச்சி- அத்தகிரி பெருந் தேவி தாயாரை வணங்கவும். அருகிலுள்ள விநாயகரை இனிப்புடன் வணங்கவும். குடும்பத்தினருக்கு அவ்வப்போது பழச்சாறு செய்துகொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ஸ்த்ரமும், உறுதித்தன்மையும் உடைய சனிபகவானே உங்களின் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் பணப் புழக்கம் நிறைந்த மாதமாக அமையும். அரசியல் சார்ந்த பணப் பெருக்கமாக இருக்கலாம். வீடு, மனை, தோட்டம் விற்ற பணமாக அமையலாம். சிலரின் மூத்த சகோதரனின் மூலமாக பணம் பெறலாம். முதலீட்டுகளின் லாபமாகவும் அமையலாம். இந்த மாதம் ஒன்று வீடு, வாகன முதலீடு இருக்கும். அல்லது வீட்டை விற்கும் எண்ணம் இருப்பின் அதனை விற்றுவிட இயலும். தொழில் சம்பந்தமான குறுந் தகவலை பெறுவீர்கள். வேலைக்கான ஆர்டர் கையில் அல்லது அலைபேசியில் கிடைக்கும். உங்களுக்கு இப்போது கிடைக்கும் வேலை தகவல் தொடர்பு சம்பந்தம் கொண்டிருக்கும். உங்களில் கலையுலகில் கால் பதித்து பிரபலமாக விரும்புகிறவர்களின் கனவு பலிக்கும். ஏற்கெனவே உள்ள கலையுலகினர் ஏதோ ஒரு வகையில் மிக புகழ்பெறுவர். அவர்களைப் பற்றிய செய்தி எங்கும் காணப் பெறும். காதல் விஷயங்கள் அனேகரை விரும்பி இழுக்கும். உங்களில் சிலர் விளம்பர துறையில் கால்பதிப்பீர்கள். மாணவர்கள் மறதிக்கு ஆளாவர். அரசியல்வாதிகள், தங்கள் பேச்சுத்திறமையால் நினைத்ததைச் சாதிப்பர். வீடு, மனை விஷயமாக விற்க, வாங்கும் போது, அதன் டாக்குமெண்ட் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சனேயகரை வழிபடவும். வயதானவர்களுக்கு, தண்ணீர் கேன் விஷயமாக உதவவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வீரமும், தீரமும் நிறைந்த செவ்வாய் உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். வாழ்வின் அதிர்ஷ்டம் மிகுந்த மாதமாக, இம்மாதம் அமைகிறது. திருவருளும், குருவருளும் சேர்ந்தே அமைகிறது. எனவே நல்லன எல்லாம் நல்லவிதமாக கைகூடும். வேலை கிடைக்கும். அதில் வெளிநாட்டு சம்பந்தம் இருக்கும் அல்லது வெளிநாட்டு வேலை அமையும். உயர் கல்விக்கு, வெளிநாட்டு, பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்து இருந்த வர்கள், அது சார்ந்த நல்ல தகவலை பெறுவீர்கள். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். சிலர் பூர்வீகத்தில் நிலம், வீடு வாங்க ஆசைப்பட்டால், அது இம்மாதம் நிறைவேறும். தொழில் தொடங்க உத்தேசம் உள்ளோர், அவ்வகையில் தொழில் தொடங்க ஆயத்தங்களை விறு விறுப்பாகச் செய்வர். ஏற்கெனவே தொழில் தொடங்கி, நடத்திக்கொண்டி ருப்பவர்கள், ஒரு இன்னலை எதிர்பார்த்தி ருக்க, அதற்கு மாறாக நல்லவிதமான பலனே நடக்கும். வாரிசு வகையில் மகிழ்ச்சியான நிகழ்வுண்டு. சிலர் மருமகன் வரப்பெறுவர். சிலர் தாத்தாவாகும் யோகமுண்டு. அரசியல் வாதிகள், தகுதியான, பதவி பெறுவர். கலைஞர் கள் மிக கீர்த்தி பெறுவர். இந்த மாதத்தினை அருமையாக பயன்படுத்திக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண்கள்: அனைத்து எண்களும்.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: திருநீர்மலை நரசிம்மரை வணங்கவும். வேலை செய்யும் ஆட்களுக்கு நல்ல குடிதண்ணீர் வாங்கிக்கொடுக்கவும்.

செல்: 94449 61845