டாக்டர் அரவிந்த் விஷன் கேர் ஐ ஹாஸ்பிடல் சென்னை, கும்பகோணம், ஜெயங்கொண்டான் போன்ற ஊர்களில் இயங்கிவருகிறது. இந்த மூன்று கண் மருத்துவமனைகள் தவிர கும்பகோணம் நாலு ரோட்டில் இலவச கண் மருத்துவமனை நடத்தி ஏழை, எளியவர்களுக்கும் செலவில்லாமல் கண் சிகிச்சை செய்துவரும் மனிதநேய கண்மருத்துவ மாமேதை எனப் புகழ்பெற்ற டாக்டர் வி.அரவிந்த் MS.MRCO(UK). FGEC (CANADA) அவர்களை சென்னை மேற்கு முகப்பேர் காளமேகம் தெருவிலுள்ள அவரது கண் மருத்துவமனையில் சந்தித்து பேசினோம். அவரது மகனும் உடனிருந்தார்.

தனது ஆன்மிக ஈடுபாடு மற்றும் தான் சந்தித்த தெய்வ அற்புதங்கள் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் டாக்டர் அரவிந்த்.

dd

"எனது சொந்த ஊர் கும்பகோணம். தாத்தா பெயர் வெங்கட்ராமன். அப்பா பெயரும் வெங்கட்ராமன்தான். மகன் ஸ்கந்தா எம்.பி.பி.எஸ் படிக்கிறார். அப்பாவின் தாத்தா துவங்கி நான் என் மகன் வரைக்கும் எல்லாருமே மருத்துவர்கள்தான். ஐந்தாவது தலைமுறையாக நாங்கள் மருத்துவ சேவை செய்துவருகிறோம்.

கும்பகோணம் சக்ரபாணி பெருமாள் கோவிலுக்கு சிறுவயது முதல் சென்று வணங்கிவருபவன் நான். எங்கள் கஷ்டங்களை போக்கி அருள்தரும் இஷ்ட தெய்வம் சக்ரபாணி பெருமாள். அந்த சக்ரபாணி பெருமாளை நான் சென்னை வந்தபிறகும் எனது இல்ல பூஜையறையில் வைத்து குடும்பத்தோடு தவறாமல் தினமும் வழிபட்டுவருகிறோம்.

அதிநவீன கண் சிகிச்சை சாதனங் களுடன் சிறந்த முதல்தர சிகிச்சைகள் அளித்துவரும் எனது மருத்துவமனைகளைப் புகழ்பெற வைத்த பெருமை கும்பகோணம் சக்ரபாணி பெருமாளையே சேரும். நான் அந்தப் பெருமாளை பரிபூரணமாக சரண் அடைந்துவிட்டதால், கண் மருத்துவத் துறையில் பல வெற்றிகளை, சாதனைகளைச்செய்து சிகரங்களைத்தொட எனக்கு அருள்பா-க்கிறார்.

கண்ணைப் பொறுத்தவரை முழு ஐகேர் தந்து வருகிறோம். நார்மல் செக்கப் செய்ய ஆரம்பித்து, கரு விழி மாற்று அறுவை சிகிச்சை வரை செய்கிறோம். இதில் சர்க்கரை வியாதியால் கண் நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிநவீன சிறப்பு சிகிச்சைகள் தந்துவருகிறோம். ரெட்டினா ஆபரேஷன்களை நிறைய செய்கிறோம். அது போல் கண்புரை, கேட்ராக்ட் ஆபரேஷன்கள் செய்துவருகிறோம். கண்ணாடி போடுபவர்கள் கண்ணாடி போடாமல் பார்வை தெரிய லேசர் ஆபரேஷன்கள் செய்துவருகிறோம். இவை அனைத்தையும் சக்ரபாணி பெருமாள் அருளோடு செய்துவருகிறோம்.

Advertisment

ss

கடந்த 25 ஆண்டு களாக சென்னை மற்றும் கும்பகோணத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கண் சிகிச்சை களை செய்துள்ளோம்.

எங்கள் குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி. இன்னொரு குல தெய்வம் விஷ்ணுபுரத்தி லுள்ள மாரியம்மன். நன்னிலம் அருகே உள்ளது. எங்கள் பிசியான மருத்துவப் பணிகளுக்கு நடுவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தோடு இந்த இரண்டு குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட்டுவருவோம்.

Advertisment

எனது இஷ்ட தெய்வம் கும்பகோணம் சக்ரபாணிதான். சக்ரராஜா என்றழைப்போம். கும்பகோணத்தில் மட்டும்தான் சக்ரபாணிக்கு தனிக்கோவில் உள்ளது. அந்த சக்ரபாணிக்கு பின்னாடி நரசிம்மர் கிடையாது. மற்ற கோவில்களில் சுதர்சன சக்ரபாணி பின்னால் யோக நரசிம்மர் இருப்பார். சக்கரத்தாழ்வார் என்றும் சொல்வது உண்டு. இவரை வழிபட்டு வந்ததால் என் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. என் அம்மாவிற்கு இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் ஒரு கட்டி இருந்தது. சிகிச்சை பெற ஆஸ்பத்திரி சென்றோம். தைராய்டில் இருந்துவந்த புற்றுநோயாக இருக்கலாம் என்று அந்தக் கட்டியை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் ஆபரேஷன் செய்து அகற்றினார்கள். பிறகு அந்தக் கட்டியை பரிசோதித்தபோது அது புற்றுநோய் கட்டி அல்ல என்று டெஸ்ட் ரிசல்ட் வந்து எங்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது. நான் மருத்துவம் படித்திருந்ததால் அம்மாவிற்கு அயோடான் என்ற ரத்தநாளம் வெடித்திருந் தால் அம்மா உயிருக்கே ஆபத்து வந்திருக்கும் என்று அறிந்தேன். அம்மாவிற்கு கேன்சர் இல்லை என்று ஆரம்பம் முதலே சக்ரபாணி என் மனதிற்கு உணர்த்திவிட்டார். அதனை டாக்டரான என் அப்பாவிடம் சொன்னபோது முத-ல் அவர் நம்பவில்லை. என் பெரியப்பா அங்கே கேன்சர் டாக்டர். அவரும் மற்ற டாக்டர்களும் என் அம்மாவிற்கு கேன்சர் என்று சொன்னபோது நான் உறுதியாக சக்ரபாணி தெய்வம் என் மனதில் சொல்-விட்டார். இது நிச்சயம் கேன்சர் இல்லை என்று உறுதியாக கூறி னேன். டெஸ்ட் ரிசல்ட் வந்து அம்மாவிற்கு புற்றுநோய் கட்டி இல்லை சாதாரண கட்டிதான் என்று தெரிந்ததும் எல்லாரும் கும்பகோணம் சக்ரபாணி யின் பேரருளை வணங்கி நன்றி சொன்னார்கள். நானும் மெய்சி-ர்த்து என் இஷ்ட தெய்வம் சக்ரபாணிக்கு மனம் உருக நன்றி கூறினேன். அம்மாவிற்கு வந்த கட்டிகள் மருந்து தரப்பட்டு கரைக்கப்பட்டது. சக்ரபாணி அருளால் இருபது வருடங்களுக்குமுன்பு இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டு என் அம்மா இப்போது அப்பாவுடன் சிறப்பாக சதாபிஷேகம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்.

ஒருமுறை நான் ரயில் பயணம் செய்யவேண்டி இருந்தது. அதற்கான முன்பதிவும் செய்திருந்தேன். ஆனால் ஒரு பெரும்புயல் காரணமாக அந்த ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டது. நான் ஆபத்தில் இருந்து தப்பினேன். அப்போது என்னைக் காப்பாற்றியவர் சக்ரபாணிதான் என நம்புகிறேன்.

ஒருமுறை காஞ்சி மகா பெரியவரை காண மும்பை சென்றிருந்தோம். ஆப்பிள் பழங்கள் வாங்கிச் சென்று தந்து அவரை வணங்கி ஆசிபெறலாம் என்று முதல் நினைத்தோம். பிறகு அதை ஏனோ மறந்துவிட்டோம்.

ஆனால் காஞ்சி மகா பெரியவரை நாங்கள் சென்று வணங்கியபோது "ஆப்பிள் வாங்க வில்லையா? என்று அவர் சைகையில் கேட்டதும் நாங்கள் அசந்து போய்விட்டோம். நாம் மனதிற்குள் நினைத்து பேசி முடிவுசெய்து மறந்தது இவருக்கு எப்படி அவரது ஞான திருஷ்டியில் தெரிந்தது என்று வியந்து போனோம். ஆப்பிள் பழங்களை வாங்கி காஞ்சிபுரம் வேத பாடசாலை மாணவர்களுக்கு தரச்சொன்னார். அதன்படியே செய்து மனநிறைவு பெற்றோம். இப்போதுகூட அந்த காஞ்சி மகானை நினைத்து வணங்குகிறோம்.

ss

எனது இல்ல பூஜையறையில் நான் கல்லூரியில் படிக்கும் காலம்முதல் ஞானசரஸ்வதி விக்ரகம், சக்ரபாணி விக்ரகங்களை வைத்து வழிபட்டு வருகிறேன்.

கண் ஆபரேஷன்கள் செய்வதில் சிறு தவறு கூட நடந்துவிடாமல் வெற்றிகரமாக செய்து முடிக்க வைப்பது சக்ரபாணி பெருமாளின் பேரருள் என்றே நான் கருதுகிறேன்.

விஷே தினங்களில் அருகிலுள்ள கோவில் களில் அன்னதானம் செய்ய பொருட்கள் தந்து வருகிறோம்.

எல்லாரும் இங்கே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகுதான் வெளிநாட்டு தேர்வுகளை எழுதுவார்கள். ஆனால் நான்தான் முதன்முதலாக இந்தியாவில் கண் மருத்துவ படிப்பு படித்து முடிப்பதற்கு முன்னாடியே லண்டனில் படித்து தேர்ச்சி பெற்றேன். இதன்பிறகுதான் இந்திய கண்மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவில் சர்டிபை ஆகி லேசர் சிகிச்சை செய்த முதல் இந்திய கண் மருத்துவர் என்ற பெருமையும் எனக்கு உண்டு. கண்ணில் எல்லா பார்வையையும் கரெக்ட் செய்து நார்மல் பார்வை வருமாறு முதன் முத-ல் செய்தேன். இளம் கண் மருத்துவர் என்ற பி.சிராய் அவார்டு பெற்றுள்ளேன். ஆல் இந்தியா ஆப்தமாலஜி சொசைட்டியில் இருந்து பெஸ்ட் ரிசர்ச் பேப்பர் அவார்டு பெற்றேன். ஆப்தமாலஜி அண்ட் விஷூவல் சயின்ஸ் அவார்டும் பெற்றுள்ளேன். இவையனைத் தையும் சக்ரபாணி அருளால்தான் பெற்றேன்.

கும்பகோணம் சக்ரபாணி பெருமாளின் பரிபூரண அருளுடன் கண் மருத்துவ மேதை டாக்டர் அரவிந்த் மென்மேலும் பல கண் மருத்துவத்தில் அதிநவீன சிகிச்சைகள் செய்து சாதனைகள் புரிய வாழ்த்தி விடைபெற்றோம்.

கண் டாக்டர் வி.அரவிந்த் தொடர்புக்கு:

88073 95008.

சந்திப்பு மற்றும் படங்கள்: ஸ்ரீ வித்யா