"தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்

தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்

தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்

தானே தடவரை தன்கடல் ஆமெ.'

Advertisment

இறைவன் சிவனே விரிந்தகன்ற மண்ணாக வும், உயர்ந்து பரந்த வானாகவும் இருக்கிறான்.

சுட்டெரிக்கும் அக்னியாகத் திகழும் சிவனே சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். மழையாய்ப் பொழிந்து உலகின் வாட்டத்தைப் போக்கும் தாயாக இருந்து தன்னருள் புரியும் சிவனே மலையாகவும் மா கடலாகவும் உள்ளான்.

பஞ்சபூதங்களாகவும், பாருலகமாவும், பரந்த வானுலகமாகவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது பரம்பொருள் "சிவம்' என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

இதை உலகம் புரிந்துகொள்வதைப் பற்றியோ அல்லது இந்தியாவில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றோ நாம் கவலைப்படவேண்டியதில்லை. முதலில் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இல்லை யென்றால் விளைவுகள் நம்மையே சாரும்.

சுமார் 40 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, அமெரிக்காவில் மிகக் கடுமையான பனிப்பொழிவு. கடந்த ஆறுமாதங்களாக மக்கள் மிகவும் துன்ப மடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட முடியவில்லை. நியூயார்க் மற்றும் கனடாவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உட்பட கடும்பனியால் உறைந்து காணப் படுகிறது. "நாஸா' எனும் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனில் விவசாயம் செய்யமுடியும்; செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட முடியும் என்று மார்தட்டிக் கொள்கிறது. அந்த ஆராய்ச்சி நிறுவனத் தால் தனிந்த பனிப்புயலையும், உறைபனியையும் தடுக்க முடியவில்லை? அதற்கான ஆராய்ச்சியை செய்யலா மல்லவா?

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அமெரிக்கா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருவதாக தகவல்கள் வந்துகொண்டி ருக்கின்றன. சீனாவில் வருங்காலங்களில் இறப் புவிகிதம் அதிகரிக்கு மென்னும் தகவலும் கூடவே வருகிறது. கடந்த 27-12-2022 தகவலின்படி, கடந்த 30 நாட்களில் 25 கோடி பேர் புதியவகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

sivan

இதையும் மீறிய புதிய தகவலொன்று- அதாவது சுமீபா எனும் புதிய நோய்த் தோற்று பரவுவதாகக் கூறுகின்றனர். இதற்கெல் லாம் யார் காரணமென்று யோசிக்க வேண்டாமா? "வினை விதைத்தவன் வினையறுப்பான்.' இது இயற்கை விதியாகும். ஏனென்றால் இது இறைவன் வகுத்த விதி. எத்தகைய பலம் மிக்கவராலும் தப்பிக்க முடியாது. நல்லதற்கான, மக்களுக்கு நன்மைதரக் கூடிய ஆராயச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தவறில்லை. அது அழிவுக்கானதாக இருக்கும்போது, அதற்குக் காரணமானவனையே அது அழித்துவிடும்.

வேற்று கிரகங்களில் விவசாயம் செய்ய முடிமென்ற விஷயங்களைப் பரப்புவதைத் தவிர்க்கவேண்டும். இந்த பூமிப் பந்தில் ஏகப்பட்ட நிலங்கள் விவசாயம் செய்யாமல் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு இயற்கைப் பேரழிவை எவராலும் கணிக்கமுடியாது. அதை மனிதனால் தீர்மானிக்க முடியாது. இயற்கையே தீர்மானிக்கும்.

"கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என்னும் பழமொழி நினைவுக்குவருகிறது.

மருத்துவ மாமேதை திருவள்ளுவர் அருளிச் செய்துள்ளதைப் பார்க்கலாம்.

"செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.'

தான் ஒரு தீங்கு செய்யாதிருக்கவும், தன்மேல் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கு ஒருவன் தீமையானவற்றை செய்வானாயின், அச்செயல் அவனுக்குத் தப்பமுடியாத துன்பத்தைத் தரும்.

இதுவே இயற்கையான இறைவிதியாகும். மேலும் ஒரு வருத்தமான தகவல். இந்த வருடம் தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் உற்பத்தி அதிகம். ஆனால் விலை வீழ்ச்சியடைந்துவிட்டது. அதனால் இதை உற்பத்திசெய்த விவசாயிகள் விளைந்த முட்டைகோஸ்களை ரோட்டில் வீசியெறிந்தனர். அவர்களின் உழைப்பு வீணான வேதனையில் செய்த செயல் இதுவென்றாலும், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு, அந்த மாவட்ட மக்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம். உணவை வீணடிக்கக்கூடாதென்பது நமது பணிவான கருத்து.

இது ஒருபுறமிருக்க, கேரளாவில் 30-12-2022 அன்று பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக சுமார் 7,500 வாத்துகள் அழிக்கப்பட்டன. இது எவ்வளவு கொடிய செயல். ஒருபுறம் உணவையழிப்பதும், இன்னொருபுறம் உயிரையழிப்பதும் பகுத்தறிவான செயலாகாது. சீனாவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேர் புதியவகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்ற னர். இதனால் அத்தனைப் பேரையும் கொல்ல முடியுமா?

இயற்கையுள்ளிருக்கும் இறைவன் இப்போதும் இதையெல்லாம் அமைதியாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான். நாம் ஜீவகாருண்யத்துக்கு சொந்தக்காரர்கள்.

கடந்த ஐம்பது வருடங்களாக நமது உணவை விஷமாக்கியது யார்? கிருமிகள் அழிகிறதோ, இல்லையோ- மனித இனம் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி அழிகிறது. இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மட்டும் அதனைப் பணமாக மாற்றுகின்றனர். அதனால் என்ன பயன்?

கொடைக்கானல், உதகையில் கடுங்குளிர். பனிக்காலம் ஜனவரியில் முடியும். ஆனால் நிலை என்ன? உதகையில் உறைபனி, கடுங்குளிர், 30 செல்சியஸுக்குக் கீழே சென்றது.

உத்தரகாண்ட் பகுதியில் வீடுகளில் விரிசல் உண்டாகிறது. பூமி உள்வாங்குகிறது. 150 வீடுகள் காலி செய்யப்படுகிறது. இந்நிலைûயில் நாஸா வெளியிட்ட புதிய தகவல்; ஒரு புதிய கோள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது; அதில் மனிதர்கள் வாழமுடியுமென்று கூறுகிறது! இதற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நமது பூமிப் பந்தில் 84 லட்சம் ஜீவராசிகள்- அதாவது உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் ஐந்தறிவுக்குக் கீழுள்ளவை உணவைப் பற்றியோ, நோயைப் பற்றியோ எந்த நினைப்பும் இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் மனித இனமோ ஆறறிவு என்று சொல்லிக் கொண்டு, இருப்பதை விட்டுவிட்டு பறக்கிறவற்றுக்கு வழிதேடிக்கொண்டிருக்கிறது.

ஏனிந்த அவல நிலை? அன்பும் கருணை யும் இல்லாததுதான். உயிரை அழிக்கலாமா? உணவை அழிக்கலாமா? திருக்குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.'

கிடைத்ததைப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்துத் தானும் உண்டு பலவகை உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலைமையானதாகும்.

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.'

தேடிய உணவைப் பிறர்க்கு கொடுக்காமல் தாமே தனித்து உண்ணுதல் என்பது, உறுதியாக பிச்சை எடுத்தலைவிட தீயதாகும்.

அன்பும் கருணையும் இறைபக்தியும் இருந்துவிட்டால் போதும்; இங்கு யாருக்கும் எந்தத் துன்பமும் வராது. வந்தாலும் அது தொலந்துபோகும். இறைப்பற்று உண்மையாக உள்ள ஒருவனுக்கே இயற்கைமீது பற்றுண்டாகும்.

அத்தகைய இறைவனின் இயல்பைப் பற்றி திருமந்திரம் கூறுவதைப் பார்ப் போம்.

"செய்தாள் அறிவன் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்காள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொடிச்செய்வன்

மைதாழ்ந்து இலங்கு மணிமிடற் றோனே.'

அண்டங்களையெல்லாம் படைக்கச் செய்தவனாகிய இறைவன், வளமெல்லாம் தரும் கடல் சூழ்ந்துள்ள இவ்வுலகில் நடப்பது எல்லாவற்றையும் அறிவான். பொழுதெல்லாம் பொய்யே பேசிக் கொண்டும், புகழுரை செய்து தற்பெருமை பாராட்டிக்கொண்டும் திரியும் மனிதர்களே, நீங்கள் உண்மையே பேசுவது என்று உறுதி செய்து கொண்டால், வானுலக தேவர்களும் வந்து வணங்கச் செய்வான் அவன். கருநீலமணி போன்ற கழுத்தையுடைய இறைவன் பொய்க்கதை பேசாது. மெய்யன்பு பூண்ட அடியார்க்கு, வானவரும் வந்து தொழும் அருட்பேற்றை வழங்குவான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதுவே சிவப் பரம்பொருளின் இயல்பு நிலையாகும்.

எனவே பேசுவதில் பொய்யைக் கலப்படம் செய்யக்கூடாது. உண்ணும் உணவில் விஷத்தைக் கலப்படம் செய்யக்கூடாது. செய்யும் தொழில் துரோகத்தைக் கலப்படம் செய்யக்கூடாது. நட்பின் தூய்மையில் கலப்படம் செய்யக்கூடாது. மனைவியின் அன்பிலும், கணவனின் அன்பிலும் ஏமாற்று வதைக் கலப்படம் செய்யக்கூடாது. கல்வியில் வரலாற்றைத் திரித்துக்கலப்படம் செய்யக்கூடாது. குரு, போதிப்பதில் கலப்படம் செய்யக்கூடாது. மனித உறவில் உண்மையில் கலப்படம் செய்யக்கூடாது.

இந்த பரந்த உலகில் பட்டினிச் சாவுகள் நடந்தாலும், தீ நுண்கிருமிகளின் தாக்குதல் நடந்தாலும், போர் எனும் வன்முறை நடந்தாலும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அது நமது தென்னகத்தையும், தமிழ்நாட்டையும் பெருமளவு பாதிக்காது. ஏனென்றால் இத்தகைய அநீதிகளை சம்ஹாரம் செய்யும் பரம்பொருள் சிவன் நம்முடனே வாசம் செய்துகொண்டிருக்கி றான். உலகம் எத்தகைய பாதிப்புகளில் சிக்கித் தவித்தாலும் அது நம்மை பாதிக்காது. அப்படி தீமைகள் நம்மை பாதிப்படையச் செய்யாமலிருக்கவும், அதிலிருந்து நமமைத் தற்காத்துக்கொள்ளவும் திருமந்திரம் சொல்லும் உபாயத்தைப் பார்ப்போம்.

"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி

இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு

கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்

விளைக்குந் தவம்அறம் மேற்றுதுணை யாமே.'

வினைப்பயனால் வந்த இப்பிறவியும், வாழ்வும் பெரிய கடலாகும். இதில் நாம் திளைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த பிறவித் துயர்க்கடலை விட்டொழிய நமக்குத் தோணிபோல உதவ இரண்டு வழிகள் இருக்கின்றன. நாமும், நம்மைச் சார்ந்த சுற்றத் தாரும், எல்லையற்ற புகழுடையவனான பரம்பொருளின் திருவடித் துணைக்கொண்டு, துறவு நிலையிலே மேற்கொள்ளும் தவம் ஒன்று. மற்றது, இல்லறத்திலே இருந்து செய்யும் தருமங்கள் ஆகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா. வினை விதைத்தால் வினை அறுவடை செய்தே ஆக வேண்டும். எனவே அரனைத் துதித்து அறம் பல செய்வோம். சிவப் பரம்பொருளின் கருணையோடு ஆரோக்கியமான வரம் பல பெறுவோம்.