தியும் அந்தமுமில்லாத ஞான சொரூபமான பரமசிவனுக்கும், இவ்வுலகில் எல்லா உயிரையும் காக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் இரண்டு மகன்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. கணபதி, கந்தனையடுத்து மாயா சக்தியின்மூலம் பிறந்த குழந்தையின் பெயர்தான் விஷ்ணுமாயா. (விஷ்ணுமாய).

அன்னை புவனேஸ் வரியை தனது தவத்தின் பயனாக தரிசனம் பெற்று, பஞ்சலோக விஷ்ணுமாயா விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தவர் தவத்திரு வேலுமுத்தப்ப சுவாமிகள். இவரால் உருவாக்கப்பட்டதுதான் ஸ்ரீ விஷ்ணு மாயா புவனேஸ்வரியம்மன் கோவில். இன்று பெரிங்கோட்டுக்கரை தேவஸ்தானம் எனும் பெயரில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக, கண் கவரும்படி தங்க நிறத்தில் ஜொலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் தினமும் பகல் 12.30 மணிக்கு விஷ்ணுமாயா, கோவில் தந்திரி வாயிலாக அருள் வாக்கு சொல்கி றார். குடும்பக் கஷ்டங்கள், மனக் கஷ்டங்கள் போன்றவற் றுக்குத் தீர்வு காண இந்துக் கள் மட்டு மின்றி பிற மதத்தினரும் தினமும் கோவிலுக்கு வருகிறார்கள்.

முன்னொரு காலத்தில் பள்ளிவேட்டைக் காக காட்டிற்குச் சென்ற பரமசிவன், காட்டில் இனிமையான குரலில் பாடியபடி ஆடிக் கொண்டிருந்த, மலயராஜாவின் மகளான (இளவரசி) கூளிவாகையைத் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. கலைகளிலும், பண்பிலும் சிறந்த கூளிவாகையை மணக்கவிரும்பினார்.

Advertisment

இதையறிந்த கூளிவாகை தான் தினமும் வழிபடும் பார்வதிதேவியிடம் இதற்கொரு வழிகாட்டுமாறு வேண்டினாள். பார்வதி தேவி கூளிவாகைக்கு, முற்பிறவியில் மனஸ்வினி என்னும் பெயரில் அவள் வாழ்ந்த தையும், விதியின் பயனாக இப்பிறவியில் பரமசிவனை தரிசிக்க நேரிட்டதையும், இதன்மூலம் புது அவதாரமொன்று ஏற்பட்டு, அதன்மூலம் மக்களைக் காக்க இருப்பதாகவும் அசரீரிமூலம் விளக்கினாள். இப்படியாக பரமசிவனுக்கும் கூளிவாகை வடிவில் வந்த பார்வதிதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர்தான் விஷ்ணுமாயா. குழந்தைக்கு காவல்காரனாகவும் வாகனமாகவும் ஒரு மஹிஷித்தை (எருமை) இருக்கும்படி பரமசிவன் செய்தார்.

ss

Advertisment

இறையம்சத்துடன் பிறந்த அழகான குழந்தையை மிகுந்த பாசத்து டன் கூளிவாகை காட்டில் ஓர் குடில் அமைத்து வளர்த்துவந்தாள்.

சிறுவயதிலேயே காட்டில் வளர்ந்ததால், காட்டில் வாழ்ந்த கொடிய மிருகங்கள் யாவும் குழந்தை விஷ்ணுமாயாவிடம் பாசமாகப் பழகிவந்தன. கொடிய மிருகங்களிடமிருந்து காட்டில் வசித்த மக்களைக் காப்பாற்றி வந்தான். குழந்தை விஷ்ணுமாயாவுக்கு ஏழு வயதிருக்கும்போது அக்காட்டிற்கு வந்த நாரத முனிவர் குழந்தையிடம், மக்களைப் பலவாறு துன்புறுத்தி, கொடுமைகள் பல செய்துவரும் ஜலந்தரன் எனும் அரக்கனை வதம்செய்யும் நோக்கத்திற்காக, பரமசிவனின் திருவினையாட்டின் பயனாக பிறவியெடுத்த குழந்தை அவனென்றும், சிவன்- பார்வதியின் புதல்வன் என்பதையும் தெளிவுபட உணர்த்தினார்.

இதைக்கேட்டு மகிழ்ந்த விஷ்ணுமாயா கயிலை சென்று சிவன்- பார்வதியை தரிசனம் செய்ய நினைத்தான். தன்னுடைய வளர்ப்புத் தாயான கூளிவாகையிடம் அனுமதி பெற்று கயிலை சென்றான். குழந்தை விஷ்ணுமாயாவைப் பார்த்த பரமசிவனும், பார்வதிதேவியும் மகிழ்ச்சியடைந்து கொஞ்சி மகிழ்ந்தனர். பரமசிவன் தன் மடியில் குழந்தை விஷ்ணுமாயாவை அமர வைத்து பல உபதேசங்களைச் செய்தார்.

கொடிய செயல்களைச் செய்துவந்த அசுரன் ஜலந்தரனை வெல்லும் உத்திகளை பரமசிவன் விஷ்ணுமாயாவுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதன்படி கயிலாயத்திலிருந்து திரும்பிய விஷ்ணுமாயா அசுரனுடன் கடுமையாகப் போரிட்டு முடிவில் வெற்றிபெற்றாள். இதைக்கண்டு விண்ணுலக தேவர்களும், பூலோகத்தில் இருந்த மக்களும் மிக்க மகிழ்ச்சியடைந் தனர்.

கேரள காட்டில் தவம்செய்த ஸ்ரீ வேலு சாமி முத்தப்பா சுவாமிக்கு அன்னை புவனேஸ்வரியும், விஷ்ணுமாயாவும் காட்சியளித்து அருள்புரிந்தனர். அதன்பயனாக விஷ்ணுமாயா வின் விக்ரகத்தை பெரிங்கோட்டுக் கரையில் பிரதிஷ்டை செய்து அருள்வாக்கு சொல்லி வந்தார். இப்படியாக நாளடைவில் விஷ்ணு மாயாவின் பெருமை வெளியுலகிற்குத் தெரிய வந்தது. இன்றைக்கு ஸ்ரீ வேலுசாமி முத்தப்ப சுவாமியின் வழியில் ஆறாவது தலைமுறை யில் வந்த ஸ்ரீ உன்னிசுவாமி கோவில் தேவஸ்தானத்தை நிர்வகித்து, தினமும் அருள்வாக்கு சொல்லிவருகிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், கிழக்குமுறி கிராமத்தில்தான் பொன்நிறமான பிரம்மாண்ட கோவில் அமைக்கப்பட்டுள் ளது. மூலவர் கருவறை தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடுத்து ஸ்ரீ வேலு முத்தப்ப சுவாமியின் சமாதி (குஷிகல்பம்) உள்ளது. இங்குதான் அசுரனிடன் விஷ்ணுமாயா போர்புரிந்த போது, விஷ்ணுமாயாவின் ரத்தத்துளிகளிலிருந்து உருவான 390 குட்டிச் சாத்தான்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த குட்டிச் சாத்தான்கள் நல்ல விஷயத்திற்கும், தீயவையிலிருந்து காக்கவும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இதுதவிர புவனேஸ் வரி, விநாயகர், ஐயப்பன், முருகன் சந்நிதி களும் உள்ளன.

இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இரவு காக்தேய பூஜை சிறப் பாக நடைபெறும். இதைக்காண பக்தர்கள் அதிகளவு வருகிறார்கள். அதேபோன்று திருவெள்ளாட்டு உற்சவம், தோற்றம்பாட்டு உற்சவத்தின்போது தரையில் விஷ்ணுமாயா, புவனேஸ்வரி உருவத்தை வண்ணக் கோலப்பொடிகளாலும், பூக்களாலும் உருவாக்கி, அதற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுவது இந்த கோவிலின் சிறப் பம்சமாகும்.

மூலவர் சந்நிதிக்குமுன்பு பெரிய கொடிமரமும், அதைத்தாண்டி வெளிப் புறத்தில் (தேவஸ்தானம் முன்பு) 51 அடி உயரத்தில் சிவன் பார்வதியுடன்கூடிய விஷ்ணுமாயாவின் சுதைச் சிற்பமும், விஷ்ணுமாயாவின் வாகனமாகிய பெரிய எருமையின் உருவச்சிலையும், 31 அடி உயரத்தில் பெரிய கழுகுச்சிலையும் (கருடாழ்வார்) நம்மை பிரமிக்கச் செய்கிறது.

தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கலாபீடம் என்கிற அமைப்பு செயல்படுகிறது. இதில் பரதநாட்டியம், கதகளி நாட்டியம், மிருதங்கம், வாய்ப்பாட்டு, சென்டை வாத்தியம் போன்றவை இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன. இதில் தேர்ச்சிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு சங்கீத பூரணா, சங்கீத பாரதி மற்றும் நாட்டிய பூரணா, நாட்டிய பாரதி என்கிற பெயர்களில் சான்றிதழ் கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர கர்நாடக சங்கீதத்தை வளர்க்கும்வண்ணம் ஆண்டு தோறும் உற்சவ சமயத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நம் வாழ்வில் ஏற்படும் துயரங்களை தீர்க்க ஸ்ரீவிஷ்ணுமாயா பகவானை வழிபட்டு தீர்வு காண்போம். கோவில் தொலைபேசி, 0487-2329000.