செம்மைசேர் இராம நாமம்! - பிரணவி

/idhalgal/om/caemamaaicaera-iraama-naamama-pranavi

வால்மீகி முனி வழிகாட்ட, இராமன் சரிதையைப் பாடி அழியாப் புகழும் அமரத்துவமும் பெற்ற ஆன்றோர் பலர். இவர்களுள் இராமபிரானை இசையால் பாடி மிக உன்னதமான ஒரு ஸ்தானத்தை வகிப்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். வால்மீகி முனிவர் இராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இயற்றினார்.

இதை முதல்நூலாகக்கொண்டு பிற்காலத் தில் நூல் யாத்தவர்களில் பலர் ஒருசில இடங்களில் ஒட்டியும் விலகியும், விரித்தும் குறைத்தும் தம் மனோபாவத்திற் கேற்ப தம் காவியத்தை நடத்திச் சென்றனர்.

உதாரணமாக, சீதாதேவியை இராவணன் சிறையெடுக்குமிடம். அன்னையின் திருமேனியைத் தொட்டு எடுத்துப்போனான் என்பது வால்மீகி யின் போக்கு. அரக்கர்கோன் அன்னை யைத் தொடாமல் மண்ணோடு கொண்டு போனான் என்று கூறுகிறார் கம்பர்.

துளசிதாசரோ இராவணன் தொட்டது என்னவோ உண்மை. ஆனால் அங்கே உண்மையான சீதாதேவி இல்லை. லோகமாதா மறைந்துவிட்டாள்; மாயா சீதைதான் அங்கே இருந்தாள் என்று கூறுகிறார்.

ramar

இராமபிரானைப் பற்றி பேசும் போதெல்லாம் "அழகன், வீரன்' என்ப தோடு "செப்பருங்குணத்து இராமன்' என்று சொல்வது கவிஞர் மரபு. இந்த செப்பருங்குணங்களில் எல்லாம் பிரசித்தமானது- முத-டம் பெறுவது, தஞ்சமென்று வந்தவர்களுக்கு "அஞ்சேல்' என்று அபயமளிக்கும் அருள்தன்மை. கருணாமூர்த்தியான இறைவனின் பண்பும் இதுதானே. இறைவனின் பிரதானமான பணியென்பது "துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்' என்பதுதான். அந்த இறைவனே "அபயம்' என்ற மந்திரத்தில் மயங்குபவனாக இருந்தால் உலகில் முத்தொழில் எப்படி நடக்கும்? ஒருவனிடமுள்ள நல்ல பண்பே சில சமயங்களில் அவனுக்கு சத்ருவாக அமைவதைக் காணலா

வால்மீகி முனி வழிகாட்ட, இராமன் சரிதையைப் பாடி அழியாப் புகழும் அமரத்துவமும் பெற்ற ஆன்றோர் பலர். இவர்களுள் இராமபிரானை இசையால் பாடி மிக உன்னதமான ஒரு ஸ்தானத்தை வகிப்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். வால்மீகி முனிவர் இராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இயற்றினார்.

இதை முதல்நூலாகக்கொண்டு பிற்காலத் தில் நூல் யாத்தவர்களில் பலர் ஒருசில இடங்களில் ஒட்டியும் விலகியும், விரித்தும் குறைத்தும் தம் மனோபாவத்திற் கேற்ப தம் காவியத்தை நடத்திச் சென்றனர்.

உதாரணமாக, சீதாதேவியை இராவணன் சிறையெடுக்குமிடம். அன்னையின் திருமேனியைத் தொட்டு எடுத்துப்போனான் என்பது வால்மீகி யின் போக்கு. அரக்கர்கோன் அன்னை யைத் தொடாமல் மண்ணோடு கொண்டு போனான் என்று கூறுகிறார் கம்பர்.

துளசிதாசரோ இராவணன் தொட்டது என்னவோ உண்மை. ஆனால் அங்கே உண்மையான சீதாதேவி இல்லை. லோகமாதா மறைந்துவிட்டாள்; மாயா சீதைதான் அங்கே இருந்தாள் என்று கூறுகிறார்.

ramar

இராமபிரானைப் பற்றி பேசும் போதெல்லாம் "அழகன், வீரன்' என்ப தோடு "செப்பருங்குணத்து இராமன்' என்று சொல்வது கவிஞர் மரபு. இந்த செப்பருங்குணங்களில் எல்லாம் பிரசித்தமானது- முத-டம் பெறுவது, தஞ்சமென்று வந்தவர்களுக்கு "அஞ்சேல்' என்று அபயமளிக்கும் அருள்தன்மை. கருணாமூர்த்தியான இறைவனின் பண்பும் இதுதானே. இறைவனின் பிரதானமான பணியென்பது "துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்' என்பதுதான். அந்த இறைவனே "அபயம்' என்ற மந்திரத்தில் மயங்குபவனாக இருந்தால் உலகில் முத்தொழில் எப்படி நடக்கும்? ஒருவனிடமுள்ள நல்ல பண்பே சில சமயங்களில் அவனுக்கு சத்ருவாக அமைவதைக் காணலாம். சர்வ வல்லமை படைத்த எம்பெருமான் வா-யை மறைந்து நின்று வதைத்து- "வா-யைப் படுத்தாய் அல்லை; மண் அறவே-யைப் படுத்தாய்' என்ற பழிச்சொல்லை ஏற்றதும் இக்காரணம் பற்றித்தானோ?

எப்படியிருந்தாலும் சரணாகதி அடைந்தவர்களுக்கு அபயமளிக்கும் அருங்குணத்தை அணிகலனாக அணிந்தவன் அயோத்திராமன். செந்தாமரைச் செல்வியை அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சிறைவைக்கிறான் இராவணன். பேராற்றல் கள் பல பெற்றிருந்த தமையனுக்கு, பிறன் மனை விரும்பாத பேராண்மையை போதிக்கிறான் விபீஷணன். தீய எண்ணம் கொண்ட இராவணன், விபீஷணன் கூறிய அறிவுரைகளை ஏற்காமல் அவனை நாடுகடத்துகிறான்.

இராமபிரானிடம் சரணடையச் செல்கி றான் விபீஷணன். அவன் ஆகாயத்தில் நின்றபடியே வானரர்களை நோக்கி, "என் மனைவி, மக்கள், உறவினர்கள் எல்லாரையும் துறந்து இராமனைச் சரணடைந்துவிட்டேன்' என்கிறான். அப்போது வானர அரசனான சுக்ரீவன் மற்றும் வானர வீரர்கள் எல்லாரும் விபீஷணனை சேர்த்துக்கொள்வது பற்றி பலவிதமாக ஆட்சேபிக்கிறார்கள்.

இராமபிரானோ சரணாகதி என்று வந்தவர்களுக்கு அபயமளிப்பதை விரத மாகக் கொண்டவனாக இருப்பதால் யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் விபீஷண னுக்கு அபயமளித்ததோடு, அவனை தன் உடன்பிறப்பென்றும் கொண்டாடி தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகள் "நின்னோடும் எழுவரானோம்' என்று ஆனந்தக் களிப் பெய்துகிறான். அத்துடன் விபீஷணனுக்கு இலங்கை அரசின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டுவதாகவும் கூறுகிறான்.

இராமபிரான் வீராதி வீரன். அவன் லோக நாயகன். அவன் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. அதர்மவாதியான இராவணனை தண்டித்து, சற்குணவானான விபீஷணனுக்கு இலங்கையின் ராஜபீடத்தை அளிப்பது இராமனுக்கு எளிதானது. ஆனால் அந்த இராவணனும் சீதாதேவியை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டால், கருணாமூர்த்தியான இராமன் அவனுக்கும் நிச்சயம் அபயமளிப்பார்.

அப்படி அளித்தபின்பு இராவணனுக்கு அரசபதவி தரவேண்டும். இலங்கை அரசைத் தருவதாக ஏற்கெனவே விபீஷணனுக்கு வாக்களித்தாகிவிட்டது. அப்படியானால் இராவணனுக்கு எதைத் தருவது? இந்த இடத்தில்தான் இராமபிரானின் வாய்மையும், சரணாகதி தத்துவமும் பிரகாசிக்கிறது. தந்தையின் வாய்மையைக் காக்க தம்பிக்கு நாட்டை ஈந்து வனவாசம் புகுந்த தசரத இராமனாயிற்றே!

வாய்மையும் மரபும் காக்க மன்னுயிர் துறக் கும் சூரிய வம்சமாயிற்றே அவன் குலம். இந்த இடத்தில் வால்மீகியும், கம்பரும் இதை அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் இதற்கான பதிலைத் தந்து பக்தர்களையும், இலக்கிய ரசிகர்களையும் பரமானந் தப்படுத்துகிறார் ஸ்ரீதியாகபிரும்மம்.

இந்தக் கேள்வியில் நாம் தடுமாறும்போது, ராமனுக்கு சொந்தமான- தற்சமயம் பரதாழ்வாரின் ஆட்சிக்குள்ளிருக்கும் ஒரு சுந்தரபூமியை நினைவுபடுத்துகிறார். அத் துடன் சிக்கலையும் அவிழ்த்துவிடுகிறார்.

"சரச சாமதான' என்ற கீர்த்தனையைப் பாடி பரவசமாகிறார் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். முதன்முத-ல் இலங்காபுரி அரசை விபீஷணனுக்கு அளித்தாகிவிட்டது. இராவணனுக்கு கோசல நாட்டை அளிப்பதன்மூலம் இராமனின் வாய்மையும் சரணாகதி தத்துவமும் காக்கப்படும். இராவணனுக்கு அயோத்தி அரசை அளித்தபிறகு இராமபிரான் இருப்பது எங்கே என்று கேள்வி எழுகிறது. அதற்கும் தியாகராஜ சுவாமிகள் அழகாக பதில் தருகிறார்.

இந்த உலகமே அவனது சாம்ராஜ்ஜியம். இந்த சாம்ராஜ்ஜியத்தில், இராமநாமத்தை தாரக மந்திரமாகக் கொண்ட பக்தகோடிகளின் நெஞ்சக்கோவி-ல் நிலைத்திருப்பான் இராமன். ஆடாத உயிரனைத்தையும் ஆட்டுவிக்கும் அண்ணல், அன்பு நெஞ்சத்துள்ளே அடங்கியிருப்பான் என்கிறார் தியாகபிரும்மம். இதையே ஆழ்வாரும்,

"உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்

என்னையும் உன்னில் இட்டேன்

வெள்ளத்து உள்ளான் வேங்கடத்து மேயவனே

உள்ளத்து உள்ளான் என்று ஓர்'

என்று உருகிப்பாடுகிறார்.

இராமாயணம் என்ற மாபெரும் இதிகாசத்தில் சரணாகதி என்பது அச்சுறு ஆணியாக கோக்கப்பெற்றுள்ளது. இராமாயணம் ஒரு பெரிய ரதம். ரதம் நிற்க வேண்டுமானால் சக்கரங்கள் அவசியம். சக்கரத்திற்கு கடையாணி மிக முக்கியம். இராமாயணத்திற்குக் கடையாணியாகக் கோத்துநிற்பது சரணாகதி தத்துவமே!

இராமாயணத்தில் பாலகாண்டம் தொடங்கி, உத்தரகாண்டம் வரை சரணாகதி நிறைந்து இருப்பதைக் காணமுடிகிறது. பாலகாண்டத்தில் பகவானிடம் தேவதைகள் அடைந்த சரணாகதி, அந்த பாலகாண்டத்திலேயே தசரதர் பரசுராமரிடத்தில் அடைந்த சரணாகதி, அயோத்யா காண்டத்தில் இராமரிடத்தில் லக்ஷ்மணன் அடைந்த சரணாகதி, ஆரண்ய காண்டத்தில் மகரிஷிகள் எல்லாரும் இராமனிடத்தில் அடைந்த சரணாகதி, கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் இராமனிடத்தில் அடைந்த சரணாகதி, சுந்தர காண்டத்தில் திரிசடை சீதாதேவியிடத்தில் அடைந்த சரணாகதி, யுத்த காண்டத்தில் விபீஷணன் இராமரிடத்தில் அடைந்த சரணாகதி, உத்தர காண்டத்தில் எல்லா தேவதைகளும் இராமனிடத்தில் அடைந்த சரணாகதி.

இப்படியாக "சரணாகதி'யானது இராமாயணத்தில் அச்சுறு ஆணியாக கோக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பலன் இருந்தது. ஸ்ரீராமன் பூலோகத்தில் வந்து அவதாரம் செய்ததால் பலன் இருந்தது. அதனால்தான் கொல்லத்தகுந்த குற்றம் புரிந்தாலும் சரணாகதி அடைந்த வர்களைக் காட்டிக்கொடுப்பதில்லை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. "சரணாகதி' அடைந்தவன் எப்படிப்பட்ட குற்றங்கள் செய்திருந்தாலும் அவனை காப்பாற்றியே தீரவேண்டுமென்று வேதம் வ-யுறுத்துகிறது. இதை மெய்ப்பிக்கவே பகவான் இராமாவதாரம் எடுத்தான்.

இதையே தேசிகன் சுவாமிகளும்

"அபயப்ரதான ஸாரம்' என்று எழுதியுள்ளார். தர்மமே இராமனாக அவதாரம் எடுத்தது.

அந்த சக்கரவர்த்தித் திருமகனின் பரிபூரண அனுக்ரகம் எல்லாருக்கும் இருக்கவேண்டும். வேதங்கள் இராமநாமத்தின் பெருமையைக் கொண்டாடுகிறது. ஸ்ரீஆதிசங்கரரும் "பரமமான உயர்ந்த பிரம்ம ரூபமான ராமநாமாவை பஜிக்கிறேன்' என்று நான்கு முறை சொல்கிறார். "காச்யாம் மரணம் முக்தி' என்பார்கள். (காசியில் மரணமுற்றால் முக்தி அடையலாம்.) எதனால் முக்தி? காசி க்ஷேத்திரத்தில் உறையும் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் அங்கு மரிப்பவர்களுடைய செவியில் இராமநாத்தைச் சொல்வதனாலே.

இராமநாமத்தின் மகிமையை கம்பன், வா-வதைப் படலத்தில் மிக அழகாகச் சொல்கிறார். இராமபிரான் அம்பில் அவன் நாமத்தைக் கண்டதை அழகாக விவரிக் கிறார்.

"மும்மை சால் உலகுக்கெல்லாம்

மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப்பெரும் பதத்தை தானே

இம்மையே எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்.'

ஸ்ரீராமபிரானிடத்தில் சரணடைந்து

அவனுடைய அருளைப் பெறுவோம்.

om010522
இதையும் படியுங்கள்
Subscribe