அனுமன் ஜெயந்தி 30-12-2024
சூரியனுடைய வரத்தால் மேருமலை தங்கமயமாக விளங்குகிறது. அந்த மனையை கேசரி என்ற வானர அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மனைவியின் பெயர் அஞ்சனை. இவர்களின் மைந்தனே அனுமன் ஆவார். வாயு பகவானின் அருளால் தோன்றியவர் அனுமன் என்பதால் வாயுபுத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
குழந்தைப் பருவத்தில் அனுமனின் பெயர் "சுவர்ண மேரு' என்பதாகும். அனுமன் தன் தாயைப் பார்த்து, "எனக்குரிய உணவு எது?'' எனக் கேட்க, தாய் அஞ்சனை, "இங்கே சிவப்பாகப் பழுத்திருக்கும் அனைத்துப் பழங்களும் உனக்கு உணதான்'' எனக் கூறினாள்.
ஒருநாள் மலர்களைப் பறிப் பதற்காக அஞ்சனை வெளியே சென்றிருந்தாள். அப்போது தனித்துவிடப்பட்ட அனுமன் பசியாôல் அழுதார். பின், ஆகாயத்தில் சிவப்பாக இருந்த சூரியனைப் பழமென்று எண்ணி, அதைப் பிடிக்க வானில் பறந்து சென்றார்.
அது கிரகணக் காலப்
அனுமன் ஜெயந்தி 30-12-2024
சூரியனுடைய வரத்தால் மேருமலை தங்கமயமாக விளங்குகிறது. அந்த மனையை கேசரி என்ற வானர அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மனைவியின் பெயர் அஞ்சனை. இவர்களின் மைந்தனே அனுமன் ஆவார். வாயு பகவானின் அருளால் தோன்றியவர் அனுமன் என்பதால் வாயுபுத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
குழந்தைப் பருவத்தில் அனுமனின் பெயர் "சுவர்ண மேரு' என்பதாகும். அனுமன் தன் தாயைப் பார்த்து, "எனக்குரிய உணவு எது?'' எனக் கேட்க, தாய் அஞ்சனை, "இங்கே சிவப்பாகப் பழுத்திருக்கும் அனைத்துப் பழங்களும் உனக்கு உணதான்'' எனக் கூறினாள்.
ஒருநாள் மலர்களைப் பறிப் பதற்காக அஞ்சனை வெளியே சென்றிருந்தாள். அப்போது தனித்துவிடப்பட்ட அனுமன் பசியாôல் அழுதார். பின், ஆகாயத்தில் சிவப்பாக இருந்த சூரியனைப் பழமென்று எண்ணி, அதைப் பிடிக்க வானில் பறந்து சென்றார்.
அது கிரகணக் காலப் பொழுது. அதனால் சூரியனை விழுங்குவதற்கு நெருங்கிய ராகு, அனுமன் பறந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் இந்திரனிடம் சென்று கூறி, அவரை அழைத்து வந்தார்.
இந்திரன் ஏறிவந்த யானை பெரிதாக இருக்கவே, அனுமன் அதனைப் பெரிய பழமென எண்ணி யானையைப் பற்றினார்.
இதனால் கோபமடைந்த இந்திரன் அனுமனை, தன் வஜ்ராயுதத்தால் தாடையில் தாக்க, அனுமன் மயங்கி பூமியில் விழுந்தார்.
இதனைக்கண்ட வாயு, தன்னால் தோற்று விக்கப்பட்ட அனுமன் தாக்கப்பட்ட கோபத்தில் தன் செயலை நிறுத்தினார். வாயு இல்லாததால் உலக உயிர்கள் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தன. மற்றும் அமரர், தானவர், மாமுனிவர், சித்தர், வித்தியாதரர் போன்றோரும் மகோதரம் எனும் நோய் கண்டவர்கள்போல் வயிறு பெருத்து வருந்தினர்.
இவர்கள் பிரம்மதேவரிடம் சென்று கூற, அவர் வாயுவிடம் வந்தார். அனுமனை அவர் தன் கைகளால் வருட, அனுமன் மூர்ச்சை தெளிந்து எழுந்தார். பின் தேவர்கள், அனுமனுக்கு பற்பல வரங்களை வழங்கினர்.
இந்திரன், "என் வஜ்ராயுதத்தால் இவன் தாடை முறிந்து, பின் சரியானதால் இவனுக்கு அனுமன் என்ற பெயர் வழங்கப் படும்'' (கன்னம்- அநு; அது பிளந்து மீண்டும் ஒன்று சேர்ந்ததால் அனுமன்) எனக்கூறி, தங்கத் தாமரை மாலையைக் கொடுத்தார்.
சூரியன், என் ஆற்றலில் நூறில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுக்கிறேன். அத் துடன் சகல சாஸ்திரங்களையும் நானே கற்பிக்கிறேன்'' என அருளினார்.
வருணன், "நீரால் எப்போதும் இவனுக்கு மரணம் உண்டாகாது'' என வரம் கொடுத்தார்.
எமன், "என் காலதண்டத்தினால் இவனுக்கு மரணம் கிடையாது. ரோகம் வராது. போரில் மனோதைரியம் குறையாது'' என வரம் தந்தார்.
குபேரன், "கதாயுதத்தால் இவனுக்கு ஆபத்து உண்டாகாது'' என அருளினார்.
சிவபெருமான், "மகனே, என் சூலம் முதலிய ஆயுதத்தால் உனக்கு ஆபத்தில்லை. என்னுடைய அஸ்திரங்களால், உனக்கு மரணம் உண்டாகாது'' என வரமருளினார்.
இந்த வரங்களால் மகிழ்ந்த பிரம்மதேவர், "உலக உயிர்களுக்கு அபயதானம் செய்வான். பகைவர்களுக்கு காலனைப் போன்று திகழ்வான். போரில் தோல்வி என்ற ஒன்றே கிடையாது. நினைத்த வடிவங்களை எடுக்க இயலும். நினைத்த இடங்களுக்குச் செல்வான். இவனுடைய போக்கைத் தடுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
இவனுடைய புகழ், காலம் உள்ளவரையில் இருக்கும். பிரம்ம தண்டத்தாலும் மரணம் ஏற்படாது. இராவணனுடைய இலங்கை நகரை இவன் தீக்கிரையாக்குவான். இராமரது அருளால், பிரம்ம பதவியை அடைவான். மற்றும் சிரஞ்சிவி பதவியை அடைவான்'' எனக் கூறி ஆசிர்வதித்து மகிழ்ந்தார்.
அனுமன் குழந்தையாக இருக்கும்போது ரிஷிகளிடம் சேட்டை செய்ய, அவர்கள், "உனக்கு உன் வரங்கள் மறந்துபோகவும், தெரியாமலும் இருக்கட்டும்'' என சாப மிட்டனர்.
இந்த சாப பலத்தினால் அனுமனுக்கு வாலியைக் கொல்லும் எண்ணம் வரவில்லை.
பின் ஜாம்பவான் அனுமனுக்கு அவரது வரங்களையும், வீரத்தையும் எடுத்துக் கூறியபிறகுதான் அனுமன் தன் பலத்தையும் வீரத்தையும் உணர்ந்துகொண்டார். இந்த பலத்தைக்கொண்டு இராமருக்கு பலவிதத்தில் சேவைகள் புரிந்தார்.
எனவே, பலம், புத்தி, வேகம், பணிவு, தைரியம், விவேகம் வேண்டுபவர்கள், ஆஞ்சனேயரை வணங்கவேண்டும். அனுமனை வெற்றிலை மாலை, செந்தூரம், பழங்கள், வெண்ணெய், துளசி போன்றவற்றுடன் இராமநாமம் கூறியும் வணங்க, அஞ்சனை மைந்தன் அனுமன் நாம் விரும்பியதெல்லாம் அருள்வார்.
அனுமன் ஜெயந்தியன்று "ராமஜெயம்' என்று முடிந்த அளவிற்கு எழுதுங்கள். நன்மை பல பெருகும். அனுமனை தரிசித்து. பூஜித்து மேன்மையடையுங்கள். அன்று "அனுமன் சாலிஸா' பாராயணமும், சுந்தர காண்டம் பாராயணமும் மிக விசேஷமாகும்.