ஆடி பிறப்பும் பக்திப் பெருக்கும்... ஆடி மாத பண்டிகைகளின் தொகுப்பு! - ஆர் மகா

/idhalgal/om/birth-adi-will-increase-devotion-collection-festivals-adi-month-r-maha

ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை

டி மாதம் என்றதும் அனைவருக்கும் அம்மன் நினைவுதான் வரும். ஆடி என்றால் பண்டிகைகளின் மாதம் என்பது தெளிவு. ஆடி என்பது கடக ராசியில் சூரியன் செல்லும் மாதமாகும். கடக ராசி அதிபர் சந்திரன். ஒரு சந்திரனின் வீட்டில் சூரியன் செல்லும் மாதம் விசேஷம் பெறுவதில் என்ன வியப்பு.

ஆடி 1: ஆடி மாதப் பிறப்பே

பண்டிகை நாளாகும். சூரிய பகவான் கடக ராசியில் நுழையும் முதல்நாள். ஆடி மாசப் பிறப்பு அனைவரும் கொண்டாடும் நாளாகும். பொதுவாகவே தமிழ் மாத பிறப்பை சற்று விசேஷமாகக் கொண்டாடுவர். அதிலும் ஆடி மாதப் பிறப்பு என்பது இன்றும் சிறப்பானது.

ஆடி மாதம் என்பது சூரிய பகவான் கடகத்தில் சந்திரனின் வீட்டில் சஞ்சரிப் பார் எனப் பார்த்தோம். சந்திரன் அம்பாளை குறிக்கும் தெய்வம். எனவே ஆடி மாதம் தொடங்கி, முழுவதும் அம்பாள் வழிபாடு முதன்மை பெறுகிறது. கடகம் நீர் ராசி. ஆதலால் வெள்ளாமைக்கு தேவையான சமயத்தில், தேவையான நீர்வளம் கிடைக்க அம்பாளை வணங்குகின்றனர்.

ஆடி மாதம் காற்று பலமாக வீசும். (இந்த வானிலை அந்தக் காலத்தில் சரியாக வீசியது. இப்போதைய காலத்தில் வானிலையும், சூழலும் அது இஷ்டம்போல் அமைகிறது). காற்றுமூலம் நோய் பரவாமல் இருக்க, அம்மனை கும்பிட்டு, அதோடு மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்துக்கொண்டார்கள்.

ஆடி மாதம் பிறந்தவுடன், புதுமண தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். சில குடும்பங்களில் சர்க்கரை பொங்கல் அல்லது போளி அல்லது தேங்காய் பால் பாயசம் அல்லது தேங்காயை சுட்டு சுவாமிக்கு படைப்பது என ஒவ்வொருவரும் விதவிதமாகக் கொண்டாடுவர்.

aadi

இதில் ஆடி மாதம் புதுமண தம்பதி களை பிரித்துவைப்பர். இதற்கு காரணம் ஆடி மாதம் கரு தங்கினால், குழந்தை சித்திரையில் பிறக்கும். சித்திரை மாதம் என்பது ரொம்ப வெயில் கொளுத்தும் காலம். அப்போதைய உஷ்ணம் தாயையும், சேயையும் பாடாய்படுத்தும். யோசியுங்கள். அந்தக் காலத்தில் மின்விசிறி, ஏ.சி., ஏர்கூலர் என ஒரு வசதியும் கிடையாது. அதனால் பேறுகால கட்டம் சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது மின்விசிறி, ஏ.சி. இல்லாத வீடு இருக்கிறதா? எனவே இந்தக் காலகட்டத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது அவசியமா என யோசிக்கவேண்டும்.

கொஞ்சம் கூச்ச நாச்சம் பார்க்காமல், ஒரு விஷயத்தை சொல்லத்தான் வேண்டியிருக் கிறது. அந்தக் காலத்தில் புருசன், சும்மா பொண்டாட்டியை டச் பண்ணினால் அவள் கர்ப்பமாகி விடுவாள். அதற்கு இருவரும் நல்ல ஆரோக்கியமாக இருந்தனர்.

இந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை பெறுவதற்குள், அவனவனுக்கு நாக்கு தள்ளி நுரை வந்துவிடுகிறது. பெண் அதற்குமேல் பூஞ்சையாக இருக்கிறாள். இந்தக்கால ஆரோக்கியம் இந்த அழகில் இருக்கிறது. இந்த லட்சணத்தில், ஆடி மாசம் பிரிச்சுவேற வைக்கணுமா. வௌங்குனாப்புலதான். ஆடி மாசம் பிறந்தவுடன் புது தம்பதியைக் கூப்பிட்டு விருந்துவைத்து, அவர்கள் வீட்டுக்கு ஒன்றாக அனுப்பிவைக்கவும். ஏதோ வம்ச விருத்தி யானால் சரிதான்.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ரொம்ப அமோகமாக கொண்டாடுவார்கள். கூழ் ஊற்றும் குடும்ப வழக்கம் உள்ளவர்கள் கூழ், முருங்கைக்கீரை பொரியல், கருவாட்டுக் குழம்பு, வற்றல் என அம்மனுக்கு படைத்து விநியோகமும் செய்வார். நிஜமாகவே இந்த வழக்கம் நமது முன்னோர்களின் மூளையை பறை சாற்றுகிறது. கூழும், முருங்கைக்கீரையும் நல்ல சத்துள்ள உணவு சேர்க்கை. இதனை அம்மனை சாக்காக வைத்து, மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு புடவை சாற்றும் வழக்கம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் நதி, ஆறு, வழிபாடு செய்வது அதிகரிக்கும்.

ஆடித் தபசு

ஆடி 5- ஜூலை 21: இந்த ஆடித் தபசு திருவிழா சங்கரன் கோவிலில் மிக விமரிசை யாக நடைபெறும். சங்கர நாராயணரும் அம்பாளும் எதிர்எதிரே காட்சித்தருவர். அப்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளைப் பொருட்களை வீசுவர். இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையுண்டு.

குரு பூர்ணிமா

ஆடி 4, 5- ஜூலை 20, 21 ஜூலை 20-ஆம் தேதி மாலை 6.00 மணிமுதல், 21-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை ஆடி மாதம் பௌர்ணமி ஓடுகிறது. இதனை குரு பூர்ணிம

ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை

டி மாதம் என்றதும் அனைவருக்கும் அம்மன் நினைவுதான் வரும். ஆடி என்றால் பண்டிகைகளின் மாதம் என்பது தெளிவு. ஆடி என்பது கடக ராசியில் சூரியன் செல்லும் மாதமாகும். கடக ராசி அதிபர் சந்திரன். ஒரு சந்திரனின் வீட்டில் சூரியன் செல்லும் மாதம் விசேஷம் பெறுவதில் என்ன வியப்பு.

ஆடி 1: ஆடி மாதப் பிறப்பே

பண்டிகை நாளாகும். சூரிய பகவான் கடக ராசியில் நுழையும் முதல்நாள். ஆடி மாசப் பிறப்பு அனைவரும் கொண்டாடும் நாளாகும். பொதுவாகவே தமிழ் மாத பிறப்பை சற்று விசேஷமாகக் கொண்டாடுவர். அதிலும் ஆடி மாதப் பிறப்பு என்பது இன்றும் சிறப்பானது.

ஆடி மாதம் என்பது சூரிய பகவான் கடகத்தில் சந்திரனின் வீட்டில் சஞ்சரிப் பார் எனப் பார்த்தோம். சந்திரன் அம்பாளை குறிக்கும் தெய்வம். எனவே ஆடி மாதம் தொடங்கி, முழுவதும் அம்பாள் வழிபாடு முதன்மை பெறுகிறது. கடகம் நீர் ராசி. ஆதலால் வெள்ளாமைக்கு தேவையான சமயத்தில், தேவையான நீர்வளம் கிடைக்க அம்பாளை வணங்குகின்றனர்.

ஆடி மாதம் காற்று பலமாக வீசும். (இந்த வானிலை அந்தக் காலத்தில் சரியாக வீசியது. இப்போதைய காலத்தில் வானிலையும், சூழலும் அது இஷ்டம்போல் அமைகிறது). காற்றுமூலம் நோய் பரவாமல் இருக்க, அம்மனை கும்பிட்டு, அதோடு மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்துக்கொண்டார்கள்.

ஆடி மாதம் பிறந்தவுடன், புதுமண தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள். சில குடும்பங்களில் சர்க்கரை பொங்கல் அல்லது போளி அல்லது தேங்காய் பால் பாயசம் அல்லது தேங்காயை சுட்டு சுவாமிக்கு படைப்பது என ஒவ்வொருவரும் விதவிதமாகக் கொண்டாடுவர்.

aadi

இதில் ஆடி மாதம் புதுமண தம்பதி களை பிரித்துவைப்பர். இதற்கு காரணம் ஆடி மாதம் கரு தங்கினால், குழந்தை சித்திரையில் பிறக்கும். சித்திரை மாதம் என்பது ரொம்ப வெயில் கொளுத்தும் காலம். அப்போதைய உஷ்ணம் தாயையும், சேயையும் பாடாய்படுத்தும். யோசியுங்கள். அந்தக் காலத்தில் மின்விசிறி, ஏ.சி., ஏர்கூலர் என ஒரு வசதியும் கிடையாது. அதனால் பேறுகால கட்டம் சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது மின்விசிறி, ஏ.சி. இல்லாத வீடு இருக்கிறதா? எனவே இந்தக் காலகட்டத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது அவசியமா என யோசிக்கவேண்டும்.

கொஞ்சம் கூச்ச நாச்சம் பார்க்காமல், ஒரு விஷயத்தை சொல்லத்தான் வேண்டியிருக் கிறது. அந்தக் காலத்தில் புருசன், சும்மா பொண்டாட்டியை டச் பண்ணினால் அவள் கர்ப்பமாகி விடுவாள். அதற்கு இருவரும் நல்ல ஆரோக்கியமாக இருந்தனர்.

இந்தக் காலத்தில் ஒரு பிள்ளையை பெறுவதற்குள், அவனவனுக்கு நாக்கு தள்ளி நுரை வந்துவிடுகிறது. பெண் அதற்குமேல் பூஞ்சையாக இருக்கிறாள். இந்தக்கால ஆரோக்கியம் இந்த அழகில் இருக்கிறது. இந்த லட்சணத்தில், ஆடி மாசம் பிரிச்சுவேற வைக்கணுமா. வௌங்குனாப்புலதான். ஆடி மாசம் பிறந்தவுடன் புது தம்பதியைக் கூப்பிட்டு விருந்துவைத்து, அவர்கள் வீட்டுக்கு ஒன்றாக அனுப்பிவைக்கவும். ஏதோ வம்ச விருத்தி யானால் சரிதான்.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ரொம்ப அமோகமாக கொண்டாடுவார்கள். கூழ் ஊற்றும் குடும்ப வழக்கம் உள்ளவர்கள் கூழ், முருங்கைக்கீரை பொரியல், கருவாட்டுக் குழம்பு, வற்றல் என அம்மனுக்கு படைத்து விநியோகமும் செய்வார். நிஜமாகவே இந்த வழக்கம் நமது முன்னோர்களின் மூளையை பறை சாற்றுகிறது. கூழும், முருங்கைக்கீரையும் நல்ல சத்துள்ள உணவு சேர்க்கை. இதனை அம்மனை சாக்காக வைத்து, மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு புடவை சாற்றும் வழக்கம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் நதி, ஆறு, வழிபாடு செய்வது அதிகரிக்கும்.

ஆடித் தபசு

ஆடி 5- ஜூலை 21: இந்த ஆடித் தபசு திருவிழா சங்கரன் கோவிலில் மிக விமரிசை யாக நடைபெறும். சங்கர நாராயணரும் அம்பாளும் எதிர்எதிரே காட்சித்தருவர். அப்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளைப் பொருட்களை வீசுவர். இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையுண்டு.

குரு பூர்ணிமா

ஆடி 4, 5- ஜூலை 20, 21 ஜூலை 20-ஆம் தேதி மாலை 6.00 மணிமுதல், 21-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை ஆடி மாதம் பௌர்ணமி ஓடுகிறது. இதனை குரு பூர்ணிமா என்பர். மற்றும் அன்று வியாச பூஜையும் கொண்டாடப்படுகிறது.

வியாச பகவான், மகாபாரதத்தை இயற்றியவர். மேலும் பல வேதங்களையும், புராணங்களையும் உண்டாக்கியவர். இவரின் பிறந்தநாள், வியாச பூஜையாக கொண்டாடப் படுகிறது.

மேலும் இந்த குரு பூர்ணிமா நன்னாளில் "நமது குருக்களான, ஸ்ரீ சங்கராச்சாரியார், சீரடி சாய்பாபா, இராகவேந்திரர், ஸ்ரீரமண மகரிஷி, இன்னும் அருகிலுள்ள சித்தர் பீடங்களையும் அமைதியாக, பணிவாக வணங்குவது நல்லது.

குரு பூர்ணிமா அன்று விரதமிருந்து சித்தர்களை, குருக்களை வணங்குவதால், நமது அறிவு கூர்மையாகும். வாழ்வு தெளிவாகும்.

add

அமைதி உண்டாகும். வாரிசுகளின் கல்வி மேன்படும்.

ஆடி 13 ஜூலை 29 எல்லா மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும். அதில் ஆடிக் கிருத்திகை ரொம்ப விசேஷம் பெற்று, மகத்தான முறையில் கொண்டாடப்படுகிறது. ஜோதிட முறைப்படி, கிருத்திகை என்பது ஒரு சூரிய சார நட்சத்திரம். சாரநாதர் சூரியன், அன்று சந்திரனின் கடக ராசியில் சென்று கொண்டிருக்கிறார். இதனால் கிருத்திகையில் செல்லும் சந்திரனுக்கு தனது சாரநாதர் சூரியனின் சம்பந்தம் வெகுவாக கிடைக்கிறது. எனவே இந்த நன்னாளில் விரதமிருந்து முருகனை பூஜிப்பதால், நல்ல வீடு அமையும்.

விவசாயம் செழிக்கும். நீராதாரங்கள் வளம் பெறும். தாய்மை வேண்டுவோர், இந்த ஆடி கிருத்திகை தினத்தில் விரதமிருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஆடி 18 ஆகஸ்ட் 3 இந்த நாள் ஆடி 18-ஆம் பெருக்கு எனப்படும். இந்த நன்னா ளில் சூரியனும், சந்திரனும் கடகத்தில் இருப்பர். கடகம் என்பது கடல், ஆறு, நதிகளைக் குறிக்கும். இந்த கடக ராசி காலபுருசனின் நான்காமிடம். இது தாய், சொந்தங்கள், சுகத் தைக் குறிக்குமிடம். இந்நாளில் நிறைய சித்ரான்னங்கள் தயாரித்து, நதி, ஆறு கரைகளில் அமர்ந்து பகிர்ந்து உண்ண வேண்டும் என ஒரு வழக்கம் வைத்துள்ளனர்.

மேலும் அன்று ஒரு முறத்தில் மங்கலப் பொருட்களை வைத்து ஆற்றில் விடும் பழக்கம் உள்ளது. புது மணத்தம்பதிகள் புதுத் தாலி பிரித்துக் கோர்க்கும் வழக்கமும் உண்டு. இன்று ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், எந்த செயல்கள் வாழ்நாள் முழுக்க செழிப்பாக இருக்க வேண்டுமோ, வளர்ச்சி அடைய வேண்டுமோ, அந்த செயல்களை மட்டும் இன்று செய்யவும். அதனால்தான் ஆடிப்பெருக்கன்று விவசாய வேலை முதலிடம் பெறும்.

ஆடி அமாவாசை

ஆடி 19, ஆகஸ்ட் 4 இன்று சூரியனும், சந்திரனும் கடக ராசியில் சங்கமம் ஆகியிருப்பர். சூரியன், காலபுருசனின் 5-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய அதிபதி. சூரியன் பித்ருக்களை குறிப்பவர். கடக சந்திரன் தாயாரை குறிப்பவர். ஒரு பித்ரு கிரகம், தாயாரை குறிக்கும் இடத்தில் நிலை கொள்ளும்போது, அந்நிலை வணங்கத்தக்கது ஆகும். எனவேதான் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி அமாவாசை அன்று நமது முன்னோர் கள், பூமிக்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது. அவ்விதம் வரும் நமது பித்ருக்களை, நாம் சுத்தமாக விரதமிருந்து உபசரிக்கும் நிகழ்வே ஆடி அமாவாசை எனப்படும். தை அமாவாசை அன்று திரும்பி சென்று விடுவார்கள்.

ஆடி அமாவாசையை, பெற்றோர் இல்லாத வர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கணவனை, மனைவியை இழந்தவர் கள் கடைப்பிடிக்கலாம். சுமங்கலிகள் கண்டிப் பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது. சுமங்கலிகளில், அமாவாசை விரதத்தை முறிக்க இரவில் சிறிது பழைய சாதத்தை கொஞ்சமாக வாயில் போட்டுக்கொள்ளும் வழக்கம் நிறைய குடும்பங்களில் உண்டு.

அமாவாசை விரதமிருப்பது பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. அவரவர் குலம், மரபு வழக்கங்கள் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படுகிறது. அவரவர் குடும்ப வழக்கம் தெரிவதற்கு, அவரவர் மாமியாரை கொஞ்சம் அனுசரித்துப் போய் கற்றுக் கொள்வது நலம். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.

aa

சில வீடுகளில் கோவிலுக்கு சென்று, தர்ப்பணம் கொடுப்பர். வீட்டில் வாழை இலையில், சுத்தமாகயிருந்து, சமையல் செய்து படையலிட்டு வணங்குவர். வாழைக்காய் ஙன்ள்ற். பூஜையறையில் பித்ரு போட்டோக்கள் வைக்கக்கூடாது. தனியிடத்தில் வைத்துக் கொள்ளவும்.

அப்புறம் முக்கியமான விஷயம், இந்த பித்ருக்கள் உயிருடன் இருந்து, உங்களை பாடாய்படுத்தியதையெல்லாம், ஞாபகப் படுத்தி, திட்டிக்கொண்டே படையல் போடாதீர்கள். இதற்கு ஆணியே புடுங்காமல் இருக்கலாம்.

அமாவாசையன்று, ஆன்மாக்கள் அதிக வலிமையுடன் இருக்கும். எனவே இந்தநாளில் இறந்தவர்களை நினைத்து பூஜைசெய்வது, திதி, சிரார்த்தம் கொடுப்பது மிக நன்மை தரும்.

அமாவாசை விரதமிருப்போர் வீட்டில், அவரவர் முன்னோர்களின், ஆசீர்வாதம் பொழியப்படும். சில இக்கட்டான வேளை களில் உங்கள் குலதெய்வமும், உங்களின் முன்னோர்களும் வந்து, ஏதோ ஒரு விதத்தில் குறி காட்டுவர். இதனால் நீங்கள் சதாரித்து, உஷாராகி, கொஞ்சம் தாக்குப்பிடித்துக் கொள்வீர்கள். இதேபோல் நல்லவைகள் நடக்கப்போகும்போதும், இவ்விதம் கனவு மூலம் உணர்த்துவர்.

அமாவாசை விரதத்தின் முக்கிய நோக்கம், நமது பரம்பரை வாழையடி வாழையாக, வம்சம் தளைத்து பெருகி, நல்லபடியாக இருக்கவேண்டும் என்பதேயாகும்.

குழந்தை வரம் வேண்டுவோர், அமாவாசை அன்று கடலில் குளிக்க கூடாது என ஒரு சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் அமாவாசை அன்று வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது. மது அருந்துவதும் தவறு.

ஆடிப் பூரம்

ஆடி 22, ஆகஸ்ட் 7 ஆடி மாதம், சந்திரன் பூர நட்சத்திரத்தில் நிலைகொள்ளும் நாள் ஆடிப்பூரம் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது. சூரியன், சந்திரனின் கடக ராசியிலும், சந்திரன், சூரியனின் சிம்ம ராசி யிலும் பரிவர்த்தனையாக இருப்பர்.

ஆடிப் பூரம் என்றவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார்தான் நினைவுக்கு வருவார். அவரின் ஜென்ம தினம், ஆடிப் பூரம் அன்றே வரும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில், விஷ்ணு சித்தர் எனும் விஷ்ணு பக்தர் வெகுநாட்களாக குழந்தையின்றி தவித்தார். ஒருநாள் பெருமாளுக்கு துளசி பறிக்கும்போது, தோட்டத்தில் ஒரு குழந்தையை கண்டார்.

அவருக்கு கோதை என்று பெயரிட்டு அழைத்தார். விஷ்ணு சித்தர், தினமும் பெருமாளுக்கு துளசி மாலை கட்டி சமர்ப்பிப்பார். கோதை நாச்சியார், தினமும் அந்த மாலையை அணிந்து அழகு பார்த்து விட்டு, பின் கூடையில் வைத்துவிடுவார். இதனை ஒருநாள் வேறு மாலை கட்டி, பெருமாளுக்கு செலுத்த, பெருமாள் அதை ஏற்கவில்லை. அதன் பின்தான் கோதை நாச்சியார், லட்சுமியின் அவதாரம் என கண்டு கொண்டார்.

கோதை பிராட்டியார், பெருமாளை திருமணம் செய்ய, ஆண்டாள் திருப்பாவை, "வாரணமாயிரம்' எனத் தொடங்கும் பாமாலை என இயற்றி பாடி வணங்கி துதித்தார். பின் பெருமாளுடன் சேர்ந்து, ஐக்கியமாகிவிட்டார்.

ஆடிப் பூரம் அன்று, சிவஸ்தலங்களில் அம்பாளுக்கு, வளைகாப்பு நடத்தப்படும். இதற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம் இதுபோன்ற மங்கலப் பொருட்களை வாங்கிக்கொடுப்பர். அம்மன் கோவில்களில் அன்று வளையல் மூலமே அலங்காரம் செய்யப்படும். மேலும் அம்மன் வயிற்றில், பச்சைப் பயிறை முளை கட்டி, அதனைக் கட்டியிருப்பர். அதைப் பார்க்க, அம்பாள் கர்ப்பிணிபோல் தோற்றமளிப்பார். ஆடிப் பூரம் அன்று அம்பாளை இந்த அலங்காரத்தில் தரிசிப்பது பெரும் பாக்கியமாகும்.

இந்தக் கோலத்தில், அம்பாளை தரிசிப்ப தால், வீட்டில் கல்யாணமான பெண்களுக்கு சட்டென்று குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பிரசவம் பத்திரமாக நடக்கும். பிறக்கும் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பர்.

அன்றைக்கு கோவிலில் முளைகட்டிய பச்சைப்பயிறே, பிரதானமான பிரசாதம் ஆகும். மேலும் வளையல், தாம்பூல பிரசாதமும் வரும் அனைவருக்கும் வழங்குவர்.

இதில் ஒன்றை கவனியுங்கள். நீங்கள் வாங்கிக்கொடுத்த வளையல், வேறு யாருக்கோ பிரசாதமாக செல்லும். யாரோ வாங்கிக் கொடுத்த வளையல் உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு மனித நல்லிணக்க விழாவாகவும் உள்ளது.

பூரம் என்பது ஒரு சுக்கிர சார நட்சத்திரம். சுக்கிரனின் காரகப்படி அன்று பெண்களின் விழாவாக, தாம்பூலமும் வளையலுமாக, வளைகாப்பாகவும் கொண்டாடப்படுவது வெகு பொருத்தம்தான். வைஷ்ணவ தலங்களில், ஸ்ரீ ஆண்டாள் பிராட்டியாருக்கு வெகுவிமரிசையாக விழா நடக்கும். அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக அருமையாக விழா நடக்கும்.

நாக சதுர்த்தி

ஆடி 23, ஆகஸ்ட் 8 ஆடி மாதம் வரும் சதுர்த்தி, நாக சதுர்த்தி எனப்படும். இது திதியை அடிப்படையாகக் கொண்டது. நாக சதுர்த்தி அன்று, கோவில்களில் அரச மரமும், வேப்பமரமும் சேர்ந்து இருக்கும் பீடத்திலுள்ள நாகரை வழிபடவேண்டும்.

காலையில் குளித்துவிட்டு, விரதமாக கோவில்சென்று, அங்குள்ள நாகருக்கு பாலாபிஷேகம் செய்து, பின் மஞ்சள், குங்குமம் பூசவேண்டும். கொஞ்சம் கல்கண்டு, முந்திரியை நாகரின் பாதத்தில் தாம்பூலத்து டன் வைத்து, கற்பூரம் காட்டி மனதார வணங் குங்கள். இவ்விதம் செய்வதால், குழந்தை பாக்கியம், வெகுநாள் திருமணத்தடை விலகுதல், நாகதோஷம் நீங்குதல், வீட்டில் நிம்மதி நீடித்தல் என இவை கிடைக்கும் பலன்களாகும். வடநாட்டில், மாங்கல்ய பாக்கியம் நிலைப்பதற்கு, அரச மரத்தை சுற்றி மஞ்சள் சரகு கட்டி வணங்குகிறார் கள். அரசமரம் மூன்று தெய்வங்களை உள்ளடக்கியது.

"மூலதோ ப்ருஹ்ம ரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபாய

அக்ரதோ ஸிவஸ் ரூபாயா

வ்ருக்ஷ ராஜாய நமஹ'

எனக் கூறிக்கொண்டே சுற்றிவரவும்.

கருட பஞ்சமி

ஆடி 24 ஆகஸ்ட் 9 ஆடி மாதம் வரும் பஞ்சமி, கருட பஞ்சமி எனப்படும். இது கருடரை குறித்து செய்யப்படும் வழிபாடாகும்.

காஷ்யப முனிவருக்கு, வினிதா, கத்ரு என இரு மனைவிகள் இருந்தனர். இதில் வினிதாவிற்கு ஒரேயொரு மகன் கருடர் ஆவார். கத்ரு 1,000 பாம்பு குழந்தைகளை பெற்றெடுத்தாள்.

ஒருமுறை, வினிதாவிற்கும், கத்ருவிற்கும் விச்வரைஸ் எனும் தெய்வீக குதிரையின் வால் என்ன நிறத்தில் உள்ளது என சண்டை ஏற்பட, அதில் கருடனின் தாய் வினிதா தோற்றுப் போனாள். எனவே அவள் கத்ருவிற்கு அடிமை ஆக்கப்பட்டாள். இந்த அடிமைத் தனத்தில் இருந்து வினிதாவை, விடுவிக்க, இந்திர லோகத்திலிருந்து அமிர்தத்தை கருடர் கொண்டுவந்தார். அதனை கத்ருவிடம் கொடுத்து, தன் அன்னையை மீட்டார்.

அந்த அபூர்வமான அமிர்தத்தை, தான் துளிகூட எடுத்துக்கொள்ளாமல், தன் அன்னையின் பொருட்டு கொடுத்ததைக் கண்டு விஷ்ணு பெருமகிழ்ச்சி அடைந்தார். விஷ்ணு, உனக்கு என்ன வரம் வேண்டும் என வினவ, கருடன், தங்களின் திருவடியை எப்போதும் தாங்கி சுமக்க அருள்புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதில் மகிழ்ந்த விஷ்ணு அதே வரம் கொடுக்க, அன்று முதல் கருடர் "பெரிய திருவடி' எனும் பட்டம் பெற்றார். கருடர் வேத சாஸ்திரம் கற்றவர்.

கருட பஞ்சமியன்று, விஷ்ணு ஸ்தலங்களி லுள்ள கருடருக்கு நெய்விளக்கேற்றி, வழிபட வேண்டும். நிறைய பழங்கள் கொண்டும் வணங்கலாம்.

கருட பஞ்சமியன்று, விரதமிருந்து வழி பட்டால், பாம்பு பயம் இருக்காது. நாக ஸ்பரிஷம் தவிர்க்கப்படும். சிலர் எப்போதும் பில்லி சூனிய வகைகளை நினைத்து பயந்து கொண்டேயிருப்பர். அவர்கள் கருட பஞ்சமியன்று, கருடரை மனதாரா வழிபட, அவர்களை பீடித்த குற்றம் குறைகள் விரட்டி யடிக்கப்படும். திருஷ்டி தோஷம் நீங்கும். சில குழந்தைகள் எப்போதும் பயந்து கொண்டே, சொங்கி மாதிரி இருப்பர். இந்த குழந்தைகளை கருட பஞ்சமி அன்று கருடர் சந்நிதிக்கு அழைத்துச்சென்று, நெய் தீபமேற்றி வழிபட்டால், நாளடைவில் அவர் கள் நேர்மையான தைரியசாலிகளாக மாறிவிடுவர்.

இந்த கருட பஞ்சமி வழிபடுவோருக்கு பின்னொரு முக்கிய பலனுண்டு. கருடர் தனது தாயார்மேல் அதிக அன்பு பூண்டு, அமிர்தம் எடுத்துவந்தார் அல்லவா! அதுபோல் இந்த கருட பஞ்சமி விரதமிருந்து வழிபடுவோர் வீட்டில், தாய்- மகன் பரஸ்பரம் பாசத்துட னும், அன்புடனும் விளங்குவர்.

கருடனை, கருட கவசம், கருட தண்டகம், கருட காய்த்ரி கூறி வழிபடவும்.

வானில் கருட பகவானை காண்பது மிக அதிர்ஷ்டம் தரும் நிகழ்வாகும். ஏனெனில் கருடனை காண்பது விஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது என்பது போல் ஆகும்.

வரலட்சுமி விரதம்

ஆடி 31 ஆகஸ்ட் 16 ஒவ்வொரு வருடமும்

ஆடி மாத வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதமாக கொண்டாடப்படும்.

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முன்வரும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப் படுகிறது.

வரலட்சுமி விரதம் என்பது, முழுக்க மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைப்பதற் கான பண்டிகையாகும்.

வரலட்சுமி பூஜைக்கு முதல்நாளே வேலைகளை ஆரம்பித்துவிடுவர். வீடு சுத்தப் படுத்துதல், தேவையான பொருட்களை வாங்கி சேமிப்பது என வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேலும் சுத்தபத்தமாக இட்லிக்கு அரைத்து வைத்துக்கொள்வர்.

வரலட்சுமி விரதத்தன்று, அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் செய்து, பூஜை வேலை களை ஆரம்பிக்க தொடங்குவர்.

பூஜையறையை சுத்தம்செய்து, மாக்கோலம் இட்டு, சுத்தமான மனையில் கோல இழை இழுத்து, வைக்கவேண்டும்.

மனையின்மேல் வாழையிலையில் சிறிது அரிசி, மஞ்சள், புஷ்பம் கலந்து பரப்பினார் போல் தூவி விடவும்.

இதன்மேல் கலசத்தில் அரிசி அல்லது நீர் நிரப்பி, அதில் மாவிலை சொருகி தேவியின் முகத்தை வைக்கவேண்டும். நிறைய வெள்ளை நிற மலர்கள் மற்றும் துளசி பன்னீர் புஷ்பம் என சேர்த்துக்கொள்ளவும். அம்பாளுக்கு, அழகாக அலங்காரம் செய்யவேண்டும். வீட்டில் நகைகள் இருந்தால் அதனை தாயாருக்கு அணிவிக்கவும்.

வீட்டில் நகை இல்லையா. நோ ப்ராப்ளம். விரலி மஞ்சளை, மஞ்சள் சரடில் கோர்த்து கட்டி, மஞ்சள் மாலையாக அணிவித்து விடவும்.

அம்பாளுக்கு அலங்காரம் ஆயிற்று.

அடுத்து நைவேத்தியம். பால், தயிர், தேன், நெய், சுத்தமான தண்ணீர் அதில் இரண்டு துளசி இலையும் ஏலக்காயும், பானகம்.

தாம்பூலம் மஞ்சள், தங்க நாணயம் அல்லது வெள்ளி நாணயம் அல்லது பத்து ரூபாய் அல்லது ஒரு ரூபாய் நாணயம்.

வாழை, ஆப்பிள், திராட்சை, மாதுளை இதில் மாதுளை பழம் ரொம்ப விசேஷம்.

உலர் பழங்கள், ஏலக்காய், கிராம்பு, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், வடை, சுண்டல், கொழுக்கட்டை, தயிர் சாதம் மற்றும் சித்ரான்னம், நெல்லிக்காய் இனிப்பு அவல், சாதாரண அவல், இட்லி என இவை தவிரவும் உங்களால் எத்தனை பிரசாதம் தயார் பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணுங்கள். நிறைய பட்சணங்கள் வீட்டில், சுத்தமாக மடியாக தயார்செய்து, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யவேண்டும் என ஆசைபடுங்கள். இந்த ஆசை, இத்தனையும் தயாரிக்கவேண்டிய செல்வத்தை கொண்டுவந்து சேர்க்கும். பின் உங்கள் வீடு தன்னிச்சையாக சுபிட்சமாகி விடும்தானே!

மகாலட்சுமி தாயார் சுக்கிரனை குறிப்பார்.

சுக்கிரனை சுபமான இடத்தில் நல்ல இனிப்புகள், சுவையான பழங்கள், மணமான பூக்கள், அழகான நகைகள், ஆடம்பர ஆடைகள், கலகலப்பு, நிறைவு இவை எல்லாம் வரிசை கட்டி நிற்கும்.

எனவே வரலட்சுமி விரதமிருந்தால், மனதார உண்மையான பக்தியுடன் பின்பற்றினால், உங்கள் வாழ்வு எத்தனை கீழாக இருப்பினும், வாழ்வில் வெளிச்சம் பரவி, மிக மேன்மை யானதாக மாறிவிடும்.

ஆடி மாத கனகப்பொடி

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை, கனகப் பொடி என்ற ஒன்றை சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். இது உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் கலந்து, தோசைக்கல்லில் சுட்டு எடுத்து செய்வதே கனகப்பொடி எனப் படும். இது சில குடும்பங்களில் பின்பற்றப் படுகிறது.

மேலும் ஆடி மாதம், கஞ்சி தயாரித்து குடிக்கும் வழக்கமிருந்தது. பழைய அரிசியில் நிறைய தண்ணீர் விடவும். அதில் அதிமதுரம். ஜிரகம். சிவப்பு வெங்காயம், திரிகடுகு, திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றா முட்டி, கடலாடிவேர் என இவற்றை சமமாக எடுத்து, இடித்து, ஒரு துணி மூட்டையில் கட்டி, அதை கஞ்சியுடன் நன்றாக கொதிக்க வைத்து, பிழிந்து அருந்துவதே ஆடிக் கஞ்சி யாகும். இது இருமல், அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

ஆடியிநிதி

ஆடி 31-ஆம் தேதி- ஆகஸ்ட் 16 இது ஆடி மாதக்கடைசி நாளாகும். இதனை ஆடியிநிதி அல்லது ஆடியநிதி என கூறுவ துண்டு. இதனை அனைத்து மக்களும் கொண்டாடுவதில்லை.

சூரியபகவான் கடக ராசியில் இருந்து கிளம்பும் நாளிது. அடுத்த நாளில் அவர் தனது சொந்த வீடான சிம்மத்தில் நுழைந்து விடுவார். இரு ராசிக்குமிடையில் சந்தியில் நிற்கும் நாளிது. சூரியன் பித்ருக்களைக் குறிக் கும். 5-ஆமிடமான சிம்மத்திற்கு நுழையும் முன்பான நாள் ஆடியிநிதி நாளாகும்.

இதற்கு மக்கள், தெய்வத்துக்கு படைப் பதைவிட, அதிக சுத்தமாக விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த ஸ்வீட், கார வகைகள், வடை போன்றவற்றை செய்து ஆடி 31-ஆம் தேதி மாலை அந்தி சாயும் சந்தி நேரத்தில், படைத்து உளமார வணங்கு கின்றனர். கூடவே முன்னோர்களுக்கு அவசிய மான வேஷ்டி, புடவை, ரவிக்கை, துண்டு சேர்த்து படைத்து வழிபடுகின்றனர்.

இந்நிகழ்வை, பொங்கல் மற்றும் ஆடியிநிதி அன்று கடைப்பிடிப்பர். இதன்மூலம் முன்னோர்கள், வீட்டில் கூடவே இருந்து வழி நடத்துவதாக நம்புகின்றனர்.

om010724
இதையும் படியுங்கள்
Subscribe