பிரம்மாவின் பிரச்சினை தீர்த்து வைத்த பவானி ஆலயம்!

/idhalgal/om/bhavani-temple-solved-brahmas-problem

வானி மந்திர்...

இந்த ஆலயம் குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. பாவ்நகர் பகுதியிலிருக்கும் மஹுவா என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. அரபிக்கடல் இதற்கு அருகிலேயே இருக்கிறது.

இந்த இடத்திலிருந்துதான் ருக்மணியை பகவான் கிருஷ்ணர் கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்தார். துவாரகையில் திருமணம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் அன்னை புவனேஸ்வரி குடியிருக்கிறாள். அவளின் இன்னொரு பெயர்தான் பவானி. பிரம்மாவிற்கு பிரச்சினைகள் உண்டாக, அதற்கு தீர்வு காண்பதற் காக அவர் இந்த ஆலயத் திற்கு வந்திருக்கிறார்.

ss

அதைத் தொடர்ந்து அன்னை பவானி (புவனேஸ்வரி) அவரின் கஷ்டங்களைத் தீர்த்து வைத்திருக்கிறாள்.

அந்தக் காலத்தில் பெரிய அளவில் பேசப் பட்ட பல சம்பவங்களுக்கு இந்த கோவில் சாட்சியாக இருந்திருக்கிறது.

‌கடல் அருகில் இருப்பதால்

வானி மந்திர்...

இந்த ஆலயம் குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. பாவ்நகர் பகுதியிலிருக்கும் மஹுவா என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. அரபிக்கடல் இதற்கு அருகிலேயே இருக்கிறது.

இந்த இடத்திலிருந்துதான் ருக்மணியை பகவான் கிருஷ்ணர் கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்தார். துவாரகையில் திருமணம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் அன்னை புவனேஸ்வரி குடியிருக்கிறாள். அவளின் இன்னொரு பெயர்தான் பவானி. பிரம்மாவிற்கு பிரச்சினைகள் உண்டாக, அதற்கு தீர்வு காண்பதற் காக அவர் இந்த ஆலயத் திற்கு வந்திருக்கிறார்.

ss

அதைத் தொடர்ந்து அன்னை பவானி (புவனேஸ்வரி) அவரின் கஷ்டங்களைத் தீர்த்து வைத்திருக்கிறாள்.

அந்தக் காலத்தில் பெரிய அளவில் பேசப் பட்ட பல சம்பவங்களுக்கு இந்த கோவில் சாட்சியாக இருந்திருக்கிறது.

‌கடல் அருகில் இருப்பதால், அலை களின் ஆரவாரம் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

இந்த ஆலயத்திற்கு அருகில் கட்பூர் என்றொரு கிராமம் இருக்கிறது. துவாபர் யுகத்தில் அந்த கிராமம் கண்ணன்பூர் என்ற பெயரில் கூறப்பட்டது. ருக்மணியின் தந்தை பீஷ்மக் அந்தப் பகுதியின் அரசராக இருந்திருக்கிறார். கண்ணன்பூருக்கு கன்காவதி என்றொரு பெயரும் இருக்கிறது.

பீஷ்மக்கிற்கு ஐந்து மகன்கள். அவர்களில் ஒருவன் ருக்மி.

அவனின் நண்பன் சிசுபாலன் என்ற அரசன். ருக்மியும் சிசுபாலனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துமளவிற்கு நெருங்கிய நட்புடன் இருந்தார்கள்.

தன் தங்கை ருக்மணியைத் திருமணம் செய்துதருவதாக சிசுபாலனுக்கு ருக்மி வாக்குறுதி அளித்திருந்தான்.

ஆனால், சிசுபாலனைத் திருமணம் செய்துகொள்வதில் ருக்மணிக்குச் சிறிதும் விருப்ப மில்லை.

இளம் வயதிலேயே தன் கணவனாக பகவான் கிருஷ்ணனை மனதில் நினைத் திருந்தாள் ருக்மணி.

தன் மனதில் இருப்பதை எழுதி, ஒரு அந்தணர்மூலமாக கிருஷ்ணனுக்குத் தெரியச் செய்தாள் ருக்மணி. "நான் பவானி ஆலயத்திற்கு வருவேன். அங்குவந்து நீங்கள் என்னை அழைத்துச் செல்லவேண்டும்'' என்று அவள் கூறியிருந்தாள்.

தான் குறிப்பிட்ட நாளன்று பவானி ஆலயத்திற்கு வந்த ருக்மணி, பவானி அன்னையிடம் "என் கணவராக பகவான் கிருஷ்ணன் வரவேண்டும். அதற்கு நீ அருள் செய்யவேண்டும்'' என்று மனமுருக வேண்டிக்கொண்டாள். அன்னை பவானியும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். இந்தச் சம்பவம் மகாபாகவதத்தில் கூறப் பட்டிருக்கிறது.

s ருக்மணி அன்னை பவானியை வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில் அங்குவந்த கிருஷ்ணன் ருக்மணியை ரதத்தில் கடத்திக்கொண்டு செல்கிறார். இருவரும் துவாரகைக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களின் திருமணம் நடக்கிறது.

"அன்னை லட்சுமியின் இன்னொரு வடிவம்தான் ருக்மணி.

நாராயணனின் இன்னொரு வடிவமான கிருஷ்ணன்தான் தன் கணவன் என்ற விஷயத்தில் இளம் வயதிலிருந்தே பிடிவாதமாக இருந்தாள் ருக்மணி'' என்று மிகப்பெரிய பண்டிதரான மிருதுள் கிருஷ்ண சாஸ்திரி எழுதியிருக்கிறார்.

கடல் மட்டத்திலிருந்து 150 அடி உயரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பகவான் கிருஷ்ணன் காலில் அடிபட்டு, மரணத்தின் பிடியில் இருக்கும்போது, கடலில் உயரமாக அலைகள் எழுந்தன.

துவாரகையும் அருகிலிருந்த பல ஊர்களும் கடலில் மூழ்க, பவானி ஆலயம் மட்டும் ஆச்சரியப்படும் வகையில் தப்பித்தது.

ஆலயத்தில் அன்னை பவானியின் சிலை சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இங்குவரும் பெண்கள் செந்தூரத்தை அன்னைக்கு அர்ப்பணிக்கின்றனர். அதைச் செய்தால், தங்களின் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

இந்த ஆலயத்திற்கு வரும் பெண்கள் "ருக்மணிக்கு பகவான் கிருஷ்ணன் என்ற நல்ல கணவர் கிடைத்ததைப்போல, எங்களுக்கும் நல்ல கணவர் கிடைக்கவேண்டும்'' என்று அன்னை பவானியிடம் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த ஆலயத்தில் சிவலிங்கமும் இருக்கிறது.

ருக்மணியின் அண்ணனான ருக்மிக்கு இங்கு ஒரு சிலை இருக்கிறது.

ருக்மணியின் திருமணத்தை எதிர்த்தவன் என்ற காரணத்தால், அவனை யாரும் வழிபடுவதில்லை.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற் குச் செல்ல விரும்புபவர்கள், அஹமதாபாத் திற்குப் பயணிக்கவேண்டும். பயண நேரம் 32 மணிகள். அங்கிருந்து ஐந்தரை மணி நேரம் பயணித்தால், பவானி ஆலயத்தை அடையலாம்.

சென்னையிலிருந்து தினமும் "நவஜீவன் எக்ஸ்பிரஸ்' என்ற ரயில் இயங்குகிறது. அதில் நீங்கள் பயணிக்கலாம்.

om010724
இதையும் படியுங்கள்
Subscribe