முன்பெல்லாம் சங்கீத சபாக்கள் பேட்டை பேட்டையாக அமைத்து, மாதாமாதம் யாராவது ஒரு பாடகர்- பாடகியை அழைத்து கச்சேரி வைப்பார்கள். வருடத்துக்கு ஒருமுறை சங்கீத விழா என்று சக்திக்கேற்ப ஒரு நாள்முதல் பத்து நாட்கள்வரை பல பாடகர்- பாடகிகளுடன் நடக்கும். மேடையில் அவர்கள் பாடுவார்கள்; மற்றவர்கள் கேட்பார்கள். கூட பாடக்கூடாது.

இதேபோன்று, நாமசங்கீர்த்தனம் என்று பஜனை மடங்களில், கோவில்களில் சனிக்கிழமை,

ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை என்று பஜனை செய்வார்கள். இதனில் யாவரும் கலந்துகொண்டு பாடலாம். சங்கீதம் தெரிந்தால் பாடுவது ஸ்வரமாக- இனிமையாக இருக்கும். கொஞ்சம் தெரிந்தாலும் போதும். பாட்டு, அதன்பின் நாமாவளி என்று பகவான் நாமங்களைக் கோர்வையாகப் பாடுவார்கள். எல்லாரும் கேட்டு வாங்கிப் பாடுவார்கள். ஆனந்தமாக ஆடவும் செய்வார்கள். எவ்வாறு நாயன்மார்களில், ஆழ்வார்களில் இனபேதம் கிடையாதோ, அதேபோன்று பஜனை வழிபாட்டிலும் இனபேதம், மொழிபேதம் கிடையாது. எல்லா மொழிகளிலும் பாடல்கள் உண்டு. இந்த நடைமுறை 200 ஆண்டுகளாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் பிரபலமடைந்து விட்டது.

Advertisment

வேதத்தை பூணூல் அணிந்தவர்களே ஓதலாம் என்பது நியமம். ஏன்? ஒருசில கட்டுப் பாடுகள் தேவை. எல்லாருக்கும் வேதம், உபநிடதம் என்றால் புரியாது. பகவான் நாமம் பொது. யாவரும் ஓதி உய்யலாம்.

அதுவே நாமசங்கீர்த்தனத்தின் தனிமகிமை. நூறுபேர் கூடிப்பாட, ஒவ்வொருவருக்கும் நூறுமுறை பாடிய பயனுண்டு.

Advertisment

dd

ஜெபம் என்றால் மந்திரம், தீட்சை பெற்ற பிறகே மௌனமாக- வாய்கூட அசையாமல் செய்யவேண்டும். மந்திரம் மற்றவர் காதில் விழக்கூடாது. பஜனம், பஜனை என்றால் மற்ற வர்கள் காதில்விழக் கூறலாம். உபதேசம் வாங்கி யும் செய்யலாம்; வாங்காமலும் செய்யலாம்.

வேடனுக்கு "ராம' என்றுகூட கூற இயல வில்லை. நாரதர், "மரா என்று அடிக்கடி கூறு' என்றார். அதுவே "ராம' என்றானது.

அதனில் ஆழ்ந்து துதிக்க, புற்றுவளர்ந்து மூடுமளவுக்கு ஜெபம் நீண்டது. அந்த வேடனே பின் வால்மீகி முனிவராகி ராமதரிசனம் பெற்று, 24,000 சுலோகங்கள் கொண்ட ஸ்ரீமத் ராமாயணமே எழுதினாரே! காளஹஸ்தியில் திண்ணன் என்னும் ஒரு வேடன் மலைமீதிருக்கும் சிவ லிங்கத்தை வழிபடச்செல்வான். அபிஷேகத் திற்கான நீரை வாயில் நிரப்பிக்கொண்டு, அர்ச்சனைக்கான பூக்களைத் தன் தலை யில் செருகிக்கொண்டு, தான் உண்ணும் இறைச்சியையே நிவேதனமாக எடுத்துச்சென்று வழி பட்டான். சிவனும் ஏற்றார். சிவலிங்கத்தின் கண்களில் ரத்தம் வர, அதை நிறுத்த தன் கண்ணையே பிடுங்கிப் பதித்தான்.

சிவன் தரிசனம் தர, வேடன் கண்ணப்ப நாயனாரானான். ஆதிசங்கரர் சிவானந் தலஹரியில் இதனைக்குறிப்பிட்டு, "பக்தி: கிம் ந கரோதி'- "பக்தி எதைத்தான் செய்யாது' என்கிறார்.

"பக்தி' என்ற வடமொழிச்சொல்லுக்கு தமிழில் ஒருமுக அன்பு, காதல் எனலாம். அதுவேண்டும், இது வேண்டும் என்று வேண்டி பக்தி செய்தால் அதற்கு வியாபார பக்தி என்று பெயர். ஒருமுக, ஆழ்ந்த பக்தியல்ல. (இதுவே அதிகம்).

எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்யவேண்டும். எது, எவ்வளவு, எப்போது என்பது ஆண்டவன் இச்சை என்ற பற்றற்ற நிலையுடன் செய்வதே பக்தி. கண்ணன் பகவத் கீதையில் கூறுவார்: "ந மம பக்த: ப்ரணஸ்யதி'- "என் பக்தன் துன்பப்பட மாட்டான்.'

அருணகிரியார் கூறுவார்: "வேண்டிய போகம் அது வேண்டவேராது உதவும் பெருமாளே.' ரமணமகரிஷி கூறுவார்: "நடக்கவேண்டியவை உசித சமயத்தில் நடந்தே தீரும். வருவதை தூயமனதுடன் ஏற்றுக்கொள். நல்லதே நடக்கும். விசனப்படாதே!'

மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்டால், பஜனை செய்பவர்கள் விடியலில் ஊர்வலம் வந்து, ஜயதேவரின் கீத கோவிந்தம் எனும் அஷ்டபதி பாடி, "ராதா கல்யாணம்' என்று பஜனைப்பூர்வமாகச் செய்வார்கள்.

தென்னாட்டில் செய்வதுபோல் வடநாட்டில் "ராதா கல்யாணம்' பஜனைப்பூர்வமாக செய்வதில்லை.

தென்னாட்டில் செய்யும் ராதா கல்யாணத்திற்கு உயிர்நாடி- வங்காள ஜயதேவர் பூரிஜகன்னாதர்மீது இயற்றிய "கீதகோவிந்தம்' எனும் அஷ்டபதி 24 பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் எட்டு சரணங்கள் இருக்கும்; எனவே அஷ்டபதி எனப்படுகிறது. வங்காளத்தில்- பூரியில் இதனைப் பாடி ராதா கல்யாணம் செய்வதில்லை. ஐயதேவர் 12-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவர். இதனில் ராதா- ஸகி- கிருஷ்ணர் என்று மூன்று பாத்திரங்களே உள்ளன. ராதா என்கிற ஜீவாத்மா ஸகி என்கிற குருமூலம் எவ்வாறு கிருஷ்ணன் என்கிற பரமாத்மாவுடன் இணைகிறாள் என்கிற த்வைதலி அத்வைத தத்துவம் வாய்ந்த பாடல்கள். இந்தப் பாடல்களின் மேலோட்டமான பதங்களைப் பார்த்தால் விரக ரசம் நிரம்பியதாகத் தோன்றும்.

கண்ணன் ராதையை அணைந்திட பதமும் பணிந்தான். பரமாத்மா ஜீவனை உய்த்துவிட பிரயத்தனங்கள் செய்யும் உன்னத சிருங்கார ரச மாதுர்ய கிரந்தப்பாடல்கள்! ஆழ்வார்களின் பாசுரங்கள், முவ்வகோபால எனும் க்ஷேத்ரக்ஞர் பாடல்கள் சிருங்கார ரசமானவை. இதை குச்சுப்புடி, மணிப்புரி நடனங்களில் அதிகம் காணலாம். பரதலி கதகளி நடனங்களிலும் பரவியுள்ளது.

dd

வங்காளத்தில், சாந்திநிகேதன் அருகே கேத்தூளி (கிந்துபில்வ என்றதன் மரூவுச்சொல்) கிராமத்தில், பௌல் என்னும் நாடோடிகள் போகி சங்கராந்தி மூன்று நாட்கள் பாடி மகிழும் பாடல்கள் இவை. கடைசி காலத்தில் ஜயதேவர் தங்கிய சிறு இடம் உள்ளது. அருகே நதி. சிறு ராதாகிருஷ்ணர் கோவிலும் உள்ளது. அங்கு அமர்ந்து பாடிட பக்தர்கள் இதயம் நெகிழும். மயிர்க்கூச்செரிதலுடன் தொண்டையும் பேதலிக்கும். ஸ்மரணேசுகம். (அந்த ஆனந்தம் பெற்றவன் நான்). ஜயதேவரின் அஷ்டபதியை தென்னாட்டில் பஜனை சம்பிரதாயமாக வகுத்தவர் ஸ்ரீராம அவதார- மருதாநல்லூர் வெங்கடராம சத்குரு ஸ்வாமிகள். அவரது காலம் கி.பி. 1777- 1817 என்பர். நூற்றாண்டு வருட தினமாக இப்போது அந்த மகானைச் சிந்திப்போமா. அவர் எவ்வாறு மறைந்தார்? சித்திரை மாத வளர்பிறை அஷ்டமி நாளில் (1817) தஞ்சை கணபதி அக்ரஹாரத்தில் நாமசங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்தபோது, "அதோ, ராமர் கூப்பிடுகிறார். விமானம் வருகிறது' என்றார். தேகம் மேலே போக ஆரம்பித்தது; மறைந்தது. எத்தகைய மகாபுருஷர்!

கும்பகோணம் திருவிசநல்லூர் கிராமத்தில் ஆந்திராவைச் சேர்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் என்பவர் வாழ்ந்து வந்தார். (இந்த ஊரில் ஸ்ரீதர ஐயாவாள் என்னும் சிவபக்தர் வீட்டுக் கிணற்றில் கார்த்திகை அமாவாசை தினம் கங்கை பொங்கியது. இன்றும் அந்த விழா பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.) வேங்கட சுப்பிரமணியர் வேத உபநிடதம், சாஸ்திரம் யாதும் அறிந்தவர். புரோகிதம் செய்பவர்.

அவர் பகவானை வேண்டிப் பிறந்த குழந்தைக்கு "வெங்கடராமன்' என்று பெயர் சூட்டினார்.

மூன்று வயதுவரை குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஒரு யோகி வந்து குழந்தையைப் பார்த்து, "இவனால் மகத்தான காரியம் நடக்கும்; பொறுங்கள்' என்றார்.

குழந்தையை மணஞ்சேரி கோவில் பாகவதர் என்னும் பரம ராமபக்த உபாசகரிடம் எடுத்துச் சென்று நிலையைக் கூறினர்.

அவர் குழந்தையின் காதில் "ராம' என்றுகூற,

குழந்தையும் "ராம' என்று கூறியது; பேச ஆரம் பித்தது. தகப்பனாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏழு வயதில் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் (காயத்ரி மந்திரம் ஓதுதல்) செய்ய, குழந்தை பிரம்மத்தில் லயித்துவிட்டது. ராமதரிசனமும் பெற்றது. தகப்பனாரே குழந்தைக்கு வேதம், உபநிடதம், புராணம், சாஸ்திரம், ராமாயணம் யாவையும் போதித்தார். குழந்தை ராம தியா னத்தில் ஆழ்ந்துவிடும். இதற்கு ஒரு சம்பவம்.

தனக்கு இயலாமல்போகவே, ஒரு நாள் வெங்கடராமனை, ஒருவர் வீட்டுக்கு சிரார்த்த கர்மா செய்துவர அனுப்பினார் தந்தை. வெங் கடராமன் போகும் வழியில் கணபதி கோவிலில் சிறிது நேரம் ராம நாம தியானத்தில் அமர்ந் தான். தன்நினைவு வர மாலை நான்கு மணி ஆகிவிட்டது. "ஆஹா! சிரார்த்த கர்மா செய்து வைக்கவில்லையே' என்று அழுதுகொண்டே வீடு வந்தான். தகப்பனார் வருந்தி, சிரார்த்தம் செய்ய வேண்டியவர் இல்லத்துக்குப்போக, வழியிலேயே இருவரும் சந்தித்தனர். இவர் மன்னிப்புக்கேட்க, அவரோ, "இல்லையே, உம் மகன் வந்து, உம்மைவிட வெகு நன்றாக செய்து தந்தானே. அதற்கு நன்றி கூறத்தான் உங்கள் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன்' என்றார்.

அப்படியாயின், வெங்கடராமன் ரூபத்தில் அயோத்யாதிபதி ராமச்சந்திரனே புரோகித ராகி சிரார்த்தம் செய்தானா என்று வியந்தார்.

வெங்கடராமனுக்குத் தகுந்த வயதில் ஜானகி என்னும் பெண்ணை மணம்முடித்து வைத்தனர்.

அயோத்தி சென்று ராமதரிசனம் பெற ஒரு குழுவாகக் கிளம்பினர். வெங்கடராமனும் அவர்களுடன் சென்றார். திருப்பதியில் அன்னமாச்சார்ய, சின்னமய்ய பாடல்களில் மெய்ம்மறந்தார். தாளப்பாக்கமும் சேர்ந்து அவர் பாடல்களையும் சேகரித்தார். அவர் களிடமே ஜயதேவரின் கீதகோவிந்த பாடல் அறிந்து மிகவும் லயித்தார்.

அப்போது அவர் கனவில் ஒரு சந்நியாசி தோன்றி, "உன்னால் ஒரு முக்கியமான காரியம் ஆகவேண்டியுள்ளது. தென்னாடு செல்க' என்று கூறினார். வெங்கடராமனும் தமிழகம் திரும்பினார்.

காஞ்சி காமகோடி மட 59-ஆவது பீடாதிபதி போதேந்திராள் சுவாமிகள், கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தாபுரத்தில் காவிரி நதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் ஜீவசமாதி அடைந்தார் என்ற விவரத்தைக் கேள்விப்பட்ட வெங்கடராமன் அங்கு சென்றார். நதியில் ஜீவ சமாதி என்பதால் நாளடைவில் அது மறைந்து விட்டது.

மதனாந்தகபுரம் எனும் மருதாநல்லூரில் வெங்கடராமன் என்னும் செல்வந்தர், தனது வீட்டையும், நாற்பது வேலி நிலத்தையும் வெங்கடராமனுக்கு அளித்து அங்கு தங்கிட வேண்டினார். அதன்படி அங்கு குடியேறினார்.

அனுஷ்டானங்களுடன் போதேந்திராள் சமாதி அடைந்த இடத்தைத்தேட முனைந்தார்.

ஜீவசமாதியான இடம் தெரியாது என்பதால் காலில் மிதிக்கக்கூடாது என்று, ஆற்றில் நீரில்லாதபோது உணவுண்ணாமல் பத்து நாட்கள் பிரயத்தனம் செய்தார். ஊர்ந்து சென்றார். காதைக் கீழேவைத்து ராமநாமம் கேட்கிறதா என்று கவனித்தபடியே நகர்ந்தார்.

ஓரிடத்தில் அவருக்கு ராமநாமம் கேட்டது! அதுவே போதேந்திராளின் ஜீவசமாதி என்று நிர்ணயித்து, ஒரு பெரிய கல்லை நாட்டிப் பூஜை செய்தார். (அத்தினம் தை மாத ஆயில்யம்). தஞ்சையில் மராட்டிய வம்சத்தவர் ஆட்சி புரிந்தனர். அவர்களது குரு சமர்த்த ராமதாசர்.

அவர்கள் இவரது மகிமையைத் தெரிந்து தஞ்சைக்கு அழைத்தனர். அதனையேற்று வெங் கடராமன் தஞ்சை செல்ல, அவருக்கு ராஜமரியாதை செய்தனர். "என்ன வேண்டுமா னாலும் செய்ய ஆயத்தம்' என்றனர். அவர்,

"எனக்கு ராமன் கொடுப்பது போதும். கோவிந்த புரம் போதேந்திராள் சமாதி நிலைக்க ஆற்றின் திசையை மாற்றவேண்டும்' என்றார். அரசர் அவ்வாறே செய்தார். (இதன்காரணமாக நாம் இன்று கோவிந்தபுரத்தில் நன்கு அமைக் கப்பட்ட போதேந்திராளின் சமாதியை தரிசிக்க லாம். உற்சவங்கள் நடக்கின்றன.)

ஸ்ரீதர ஐயாவாளின் சிவத்துதிகள், போதேந் திராளின் நாம மகிமைத்துதிகளைப் படித்து மேன்மையுற்று, நாம பிரச்சாரம் செய்தார். அங் கெங்கும் சேகரித்த பாக்களைக்கொண்டு ஒரு பஜனை பத்ததி (வழிமுறை) ஏற்படுத்தினார். அவர் ஒரு பாட்டும் எழுதவில்லை.

தியானத் துதிகள், தோடியமங்களம் குருமீது பாடல்கள், ஜயதேவ அஷ்டபதி, நாராயண தீர்த்தர் தரங்கம், பத்ராசல ராமதாசர், புரந்தர தாசர், ப்ரம்மேந்திராள், கோபாலகிருஷ்ண பார தியார் (தமிழில் சிவன் பாடல்கள்), நாமதேவர், ஞானதேவர், துகாராம் அபங்கங்கள் என்று முதற் கட்டம். எல்லா மொழிகளிலும் பாடல்கள் உண்டு.

அடுத்த கட்டம் பூஜை. கணபதி, சரஸ்வதி,

முருகன், சிவன், பார்வதி, விஷ்ணு, மகாலட் சுமி, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், சீதை, ருக் மிணி, ராதை, பாண்டுரங்கன், ஆஞ்சனேயர் பாடல்களை, பகவானை தீபத்தில் ஆராதித்து பாடி வலம்வருதல். இது உலகை வலம்வரு வதற்குச் சமம். ராஸலீலைப் பாடல்கள், கும்மி, கோலாட்டம், மங்களம்.

மார்கழி, தையில் ராதா கல்யாணம்; பங்குனி,

சித்திரையில் சீதா கல்யாணம்; ஆவணி- ஜன் மாஷ்டமியில் ருக்மிணி கல்யாணம் செய்வர்.

மொழி பேதம், ஆண்- பெண் பேதம், சமய பேதம் என எதுவுமில்லாமல், பகவன் நாமம், பஜனம், பலன் யாவருக்கும் பொது என்று நியமித்து கிராமம் கிராமமாகச் செய்து வழிபட.

அது எங்கும் பரவியது. அவர் பெயர் மருதா நல்லூர் சத்குரு ஸ்வாமிகள் ஆனது. ஒரு நாள் வீடு தானம் தந்த வெங்கடராமய்யர், ஸ்வா மிகளை தரிசனம் செய்யச் சென்றார். அங்கு ஸ்வாமிகள் அமர்ந்த இடத்தில் சீதா ராமனா கவே தரிசனம் தந்தார். அப்போதுதான் இவர் ராமர் அவதாரம் என அவர் உணர்ந்தார். அவர் பெயரும் பச்சை கோதண்ட ராமஸ்வாமி ஆயிற்று.

மருதாநல்லூரில் அவர் வசித்த வீடு மடமாகி, நித்யப்படி பஜனைகளை அவரது வம்சாவளிகள் நடத்துகின்றனர். அவர் பாதுகையும் பூû ஜயிலுள்ளது. சித்திரை அஷ்டமியில் (ராமந வமிக்கு முன்தினம்) பூதவுடலுடன் வை குண்டம் ஏகினார். சத்குரு ஸ்வாமிகளைப் பணிந்து குருவருள், திருவருள் பெறுவோம்.

ப்