காந்தியின் குலலில் பகவானின் பாட்டு! - இரா.த.சக்திவேல்

/idhalgal/om/bhagavans-song-gandhis-kul-r-t-sakthivel

ங்காளிகள் தான்!

ஆயினும் பகையாளிகளாக நிற்கிறார்கள்!

"செம்புலப் பெயல் நீர்போல' செங்குருதியாய் மாறவிருக்கிறது குருஷேத்திரத்தின் நீண்டு விரிந்த நிலத்தின் மண்.

பூண்டோடு பகை அழிக்க சபதம் பூண்டிருக்கிறார்கள் கௌரவர்கள்.

பாவ புண்ணியத்திற்கு அஞ்சி பதைத்து நிற்கிறது பாண்டவர் படை.

"சொந்த பந்தம் கொன்றா... அதன் ரத்தம் தின்றா எங்கள் நாடு, நகரத்தை மீட்டெடுக்க வேண்டும்?' என வெதும்பி... வில்லெடுக்க வேண்டிய அர்ஜுனன், சோகச் சொல் எடுக்கிறான். அவனைத் தேற்று கிறார் தேரோட்டி கிருஷ்ணர்.

"இழிந்த உள்ளத்தின் தளர்ச்சியை விட்டுவிட்டு, போருக்காக எழுந்து நில்' என, தேர்த்தட்டில் சுணங்கி அமர்ந்த அர்ஜுனனை உத்வேகப்படுத்தி, போருக்கான நியாயத்தையும், "ஆன்மா அழிக்க முடியாதது. உடல்தான் அழியும். ஆகவே உடல்மீது பற்று வைக்காதே' என ஞானத்தையும் போதிக்கிறார். "இது நியாய தர்மமான யுத்தமே' என ஊக்கப்படுத்துகிறார். "பற்றற்ற கர்மம் யோகமாகிறது' எனத் தேற்றுகிறார்.

கிருஷ்ணரின் இந்தத் தேற்றல் முதல்வனுக்கான தேற்றல் மட்டுமல்ல... கடையனுக்குமான தேற்றல்.

போருக்கான இந்தத் தேற்றல் ஆருக்குமான தேற்றல்.

அகிலத்திற்கான தேற்றல்.

ஆன்ம பலம் தரும் தேற்றல்.

அதனால்தான் சாமான்யர்கள் முதல் சாதனை படைத்தவர்கள் வரை உலகில் எத்தனையோ கோடிப் பேர்கள் "பகவான் பாட்டு' எனப் பொருள்படும் "பகவத்கீதை' உபதேசத்தை தழுவியிருந்தார்கள்; தழுவிக்கொண்டிருக்கிறார்கள்; தழுவுவார்கள்.

"மகா பாரதம்' நடந்த கதையா?

"குருஷேத்திரப் போர்' நடந்த யுத்தமா?

பகவான் கிருஷ்ணர் இருந்தாரா?

கீதையில் வரும் வர்ணபேதம் எனும் சாதியப் பாகுபாடை கடவுள் எப்படி சொல்லியிருப்பார்? சொல்லியிருந்தால் அவர் கடவுளாவாரா?

கிருஷ்ணர் சொன்னதல்ல... அவரின் போதனையில் பிற்கால மதவாதிகள் துவேஷத்தை சேர்த்தனர்.

-இப்படி விதவிதமான விவாதங்களைக் கடந்து பார்த்தால் கிருஷ்ணரின் "பகவத் கீதை' என்பது உலகத்திற்கான உத்வேகம். ஒவ்வொரு மனிதனுக்குமான உத்வேகம்.

ங்காளிகள் தான்!

ஆயினும் பகையாளிகளாக நிற்கிறார்கள்!

"செம்புலப் பெயல் நீர்போல' செங்குருதியாய் மாறவிருக்கிறது குருஷேத்திரத்தின் நீண்டு விரிந்த நிலத்தின் மண்.

பூண்டோடு பகை அழிக்க சபதம் பூண்டிருக்கிறார்கள் கௌரவர்கள்.

பாவ புண்ணியத்திற்கு அஞ்சி பதைத்து நிற்கிறது பாண்டவர் படை.

"சொந்த பந்தம் கொன்றா... அதன் ரத்தம் தின்றா எங்கள் நாடு, நகரத்தை மீட்டெடுக்க வேண்டும்?' என வெதும்பி... வில்லெடுக்க வேண்டிய அர்ஜுனன், சோகச் சொல் எடுக்கிறான். அவனைத் தேற்று கிறார் தேரோட்டி கிருஷ்ணர்.

"இழிந்த உள்ளத்தின் தளர்ச்சியை விட்டுவிட்டு, போருக்காக எழுந்து நில்' என, தேர்த்தட்டில் சுணங்கி அமர்ந்த அர்ஜுனனை உத்வேகப்படுத்தி, போருக்கான நியாயத்தையும், "ஆன்மா அழிக்க முடியாதது. உடல்தான் அழியும். ஆகவே உடல்மீது பற்று வைக்காதே' என ஞானத்தையும் போதிக்கிறார். "இது நியாய தர்மமான யுத்தமே' என ஊக்கப்படுத்துகிறார். "பற்றற்ற கர்மம் யோகமாகிறது' எனத் தேற்றுகிறார்.

கிருஷ்ணரின் இந்தத் தேற்றல் முதல்வனுக்கான தேற்றல் மட்டுமல்ல... கடையனுக்குமான தேற்றல்.

போருக்கான இந்தத் தேற்றல் ஆருக்குமான தேற்றல்.

அகிலத்திற்கான தேற்றல்.

ஆன்ம பலம் தரும் தேற்றல்.

அதனால்தான் சாமான்யர்கள் முதல் சாதனை படைத்தவர்கள் வரை உலகில் எத்தனையோ கோடிப் பேர்கள் "பகவான் பாட்டு' எனப் பொருள்படும் "பகவத்கீதை' உபதேசத்தை தழுவியிருந்தார்கள்; தழுவிக்கொண்டிருக்கிறார்கள்; தழுவுவார்கள்.

"மகா பாரதம்' நடந்த கதையா?

"குருஷேத்திரப் போர்' நடந்த யுத்தமா?

பகவான் கிருஷ்ணர் இருந்தாரா?

கீதையில் வரும் வர்ணபேதம் எனும் சாதியப் பாகுபாடை கடவுள் எப்படி சொல்லியிருப்பார்? சொல்லியிருந்தால் அவர் கடவுளாவாரா?

கிருஷ்ணர் சொன்னதல்ல... அவரின் போதனையில் பிற்கால மதவாதிகள் துவேஷத்தை சேர்த்தனர்.

-இப்படி விதவிதமான விவாதங்களைக் கடந்து பார்த்தால் கிருஷ்ணரின் "பகவத் கீதை' என்பது உலகத்திற்கான உத்வேகம். ஒவ்வொரு மனிதனுக்குமான உத்வேகம்.

இந்தப் பாட்டு ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப்பாடுக்குமான பாட்டு.

அதனால்தான் ரத்தத் தெறிப்பிற்கு தயாரான இந்த யுத்தகளப் பாட்டை தனது சத்திய உத்வேகத்திற்கான பாட்டாக ஆக்கிக்கொண்டார் மகாத்மா காந்தியடிகள்-

"எல்லா தர்மசாஸ்திர நூல்களும் எரிந்து சாம்பலாகி விட்டாலும்கூட; "இந்து மதம் என்றால் என்ன? அதன் படி ஒருவர் எப்படி வாழமுடியும்? வாழவேண்டும்?' என்பதை எடுத்துச் சொல்ல ஏழுநூறு ஸ்லோகங்கள் கொண்ட, அழிக்கமுடியாத கீதை ஒன்றே போதுமானது.

"வாசித்து, வாழ்வியலுடன் இணைத்துக்கொள்ள பரிசீலனை செய்யவேண்டும்' என்கிற அக்கறை யுடன் ஒவ்வொரு இந்துவும் வாசிக்கக்கூடிய தெளிவான புத்தகம் கீதைதான்'' என்றார்.

இந்திய காந்திக்கு இந்து மத உயிர் நூலான கீதை பரிச்சயமானதே இங்கிலாந்து மண்ணில் தான்.

சர் எட்வின் அர்னால்ட் (1832- 1904) என்கிற பிரபல ஊடகவியலாளரும், கவிஞரு மான இங்கிலாந்துக்காரருக்கு "பகவத் கீதை'யின்மீது மனங்கொள்ளா ஈர்ப்பு. 1885-ஆம் ஆண்டில் இவர் ஆங்கிலத்தில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். "சொர்க்க கீதம்' என்றும் "வானுலக கவிதைகள்' என்றும் இந்நூல் அழைக்கப்படுகிறது.

பாரிஸ்டர் படிப்பிற்காக லண்டனில் இருந்த காந்தியிடம், "நீங்கள் இந்தியர் தானே. உங்களுக்கு தெரியாமலா இருக்கும்? இதோ இந்த செய்யுளின் பொருளைச் சொல்லுங்கள்' என ஆங்கில ஆன்மிக நண்பர்கள் கேட்டனர். அவர்கள் கேட்டது, ஆங்கில கீதைச் செய்யுளுக்கான விளக்கமல்ல.

அந்த புத்தகத்துடன் சேர்த்து படித்துக் கொண்டிருந்த சமஸ்கிருத புத்தகத்தில் இருந்த சில ஸ்லோகங்களின் அர்த்தத்தை. காந்திக்கு சமஸ்கிருதம் தெரியாது அப்போது. ஆங்கிலத்திலான அந்த கீதைச் செய்யுள் நூலை வாசித்தார் காந்தி.

இதுவரை அவர் கேள்விப்பட்டிருந்த கீதை இப்போது அவரின் மனதிற்கு நெருக்கமாகத் தொடங்கியது.

"கப்பல் பயணம் நம் ஜாதிக்கு ஆகாது; லண்டனுக்குப் போய்விட்டால் அங்கே மது குடிக்காமல் இருக்கமாட்டார்கள். ஏற்கனவே அங்கே போன நம் பிள்ளைகள் மது, மாது, மாமிசம் என கெட்டுப் போய் விட்டார்கள்'.

g

-இப்படி ஆளாளுக்கு ஒன்றைச் சொல்ல காந்தியின் தாயாரும், வைணவச் சடங்குகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவருமான புத்லி பாய், மகனை லண்டனுக்கு அனுப்பத் தயங்கினார். ஆயினும் காந்தியின் குடும்பத் திற்கு பரிட்சயமான பேச்சர்ஜி சுவாமி என்கிற சந்நியாசி முன்பும், தாயார் முன்பும் "மது மாது மாமிசம் இந்த மூன்றையும் தொடமாட்டென்' என சத்தியம் செய்து கொடுத்தார் காந்தி. அதன்பிறகே லண்ட னுக்கு அனுப்பப்பட்டார்.

பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் தொழிலுக்கான பட்டம் படித்து முடித்துவிட்டு 1891 ஜூலையில் கப்பல்மூலம் இந்தியா திரும்பினார் காந்தி. துறைமுகத்தில் தன்னை அழைத்துச் செல்ல வந்த அண்ணனிடமிருந்து ஒரு துயரச் செய்தியை அறிந்தார்.

"என் தாயாரைப் பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. நான் இங்கிலாந்தில் இருந்தபோதே, என் தாயார் இறந்துவிட்டார். இதை என் சகோதரர் எனக்குத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டில் இப்பெரும் துக்கத்தின் வேதனை எனக்கு ஏற்பட வேண்டாம் என்று அவர் நினைத் திருந்தார் என்றாலும், இப்பொழுது அச் செய்தி எனக்கு கடுமையான அதிர்ச்சியையே உண்டாக்கியது.'

-தன் தாயாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றிவிட்ட சேதியைச் சொல்ல ஓடோடி வந்த மகன் காந்திக்கு, தான் தாயில்லாப் பிள்ளையாகிவிட்டோம் என்பது எத்தனை மன நெருக்கடியைத் தந்திருக்கும்?

ஆனால் அப்படி ஒரு நெருக்கடிக்கு ஆளாகாமல் காந்தி இன்னொரு தாய் மடியைத் தேடிக் கொண்டார்.

அவள் பெயர்தான் "கீதை அன்னை'.

லண்டனின் அர்னால்ட் எழுதிய ஆங்கில கீதை நூலைப் படித்ததிலிருந்து, கீதைமீது தாகம் கொண்டு, தன் தாய்மொழியான குஜராத்தி மொழியில் வெளிவந்த பல அறிஞர்களின் கீதை நூல்களை தேடித்தேடிப் படித்தார் காந்தி.

எந்த ஒரு படைப்பையும் அதன் மூல மொழியில் படிக்கும்போது, வாசிப்பவருக்கு படைப்பின் உண்மைத்தன்மை முழுவதும் கிட்டும். இந்த அனுபவம் அலாதியானது.

அதனால் சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டு, சமஸ்கிருத கீதையைப் படித்தார்.

கீதையை சாதாரணமாக வாசிக்கத் தொடங்கிய வாசக நிலையிலிருந்து, கற்கும் மாணவன் நிலைக்கு மாறி, அதற்குப்பின் கீதையைதான் அறிந்த நோக்கில் கற்பிக்கும் ஆசிரியத் தன்மையோடு திகழ்ந்தார் காந்தி.

"கீதை உபதேசத்தை எளிய மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கோடு கீதையை ஆய்ந்துணர்ந்து, கீதை பற்றிய உரைகளை நிகழ்த்தினார்; பேசினார்; எழுதினார்.

கீதையை ஆத்மார்த்தமாக உணர்ந்து, அதன் மறைபொருளை, கீதை பேசிய உள்ளார்ந்த பொருள்களைக் கண்டுணர்ந்து தான் மனவலிமையும், தியாக உணர்ச்சியும் பெற்றதோடு, மக்களும் அதைப் பெற "கீதை அன்னை' என்கிற சிறு நூலையும் எழுதினார்.

காந்தியின் கீதை வியாக்யானம் குஜராத்தியில் வந்தது. அவரின் கீதைப் பேச்சும், எழுத்தும் பெரும் நூலாகவும் அப்போது வந்துள்ளது.

கீதையின் ஸ்லோகங்களுக்கான விளக்க நூலை முழுமையாக எழுத வேண்டும் என்கிற அழுத்தமான எண்ணம் "ஒத்துழையாமை இயக்க' போராட்டத்திற்காக ஆங்கிலேயே அரசால் சிறைப்பட்ட காலத்தில்தான் காந்திக்கு ஏற்பட்டிருக்கிறது.

தன் தாயை எண்ணி மனம்மருகும் போதெல்லாம் கீதையைப் படிப்பது காந்தியின் வழக்கம். ஒருகட்டத்தில் தன் தாயைவிட கீதையை அதிகமாக நினைத்துக்கொண்டே இருந்தார்.

கீதையின் சாரம் என்பது இந்து மதத்திற் கானது மட்டுமல்ல, மதத்திற்கு அப்பாற்பட்டு பொதுவானதாகத் திகழ்வது அதன் தாத்பரியம் என உணர்ந்து கொண்டதால் கீதா உபதேசத்தை பரப்புரை செய்பவர் போலவே ஆனார்.

"கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்கிற கீதையின் சிந்தாந்தம் மேம்போக்குப் பார்வையில் ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அதன் உள் ரகசியத்தை காந்தி விவரிக்கும் விதம், கீதையோடு அவர் எத்தனை தூரம் இயைந்திருக்கிறார் என்பதை அறியவைக்கிறது. அவர் சொன்னதை வாசிக்கிறவர்களில் பெரும்பான்மையோர் ஒவ்வொருவரும் தனக்காகச் சொல்லப் பட்டதோ... என வெட்கப்படுகிற அளவிற்கு இருக்கிறது காந்தியின் இந்த வியாக்யானம்.

இதோ....

"கர்மத்தின் பலனைத் துறப்பது எனில், அவ்விதம் தியாகம் செய்பவனுக்குப் பலனே கிடைக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. அவ்வாறு அர்த்தம் செய்து கொள்ள கீதை இடம் கொடுக்கவில்லை. துறவு என்பதற்கு, பலனில் சிறிதும் ஆசை யில்லாமல் இருப்பது என்றே பொருள். உண்மையில் யார் பலனைத் துறக்கிறானோ, அவன் ஆயிரம் மடங்கு அதிகமாக பலனைப் பெறுகிறேன். கீதையில் குறிப்பிட்டுள்ள துறவு, நம்பிக்கைக்கு சிறந்த சோதனையாகும். எப்போதும் பலனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பவன், தன் கடமையைச் செய்வதற்கான உறுதியை அடிக்கடி இழந்துவிடுகிறான். அவன் பின்னர் பொறு மையிழந்து கோபத்துக்கு இடம் கொடுப்பதுடன், தகுதியற்ற காரியங்களையும் செய்யத் தொடங்குகிறான். அடிக்கடி அவன் ஒரு காரியத்தை விட்டுவிட்டு மற்றொன்றைச் செய்வதும், அதையும் விட்டுவிட்டு வேறொன்றைச் செய்வதுமாக நிலையற்றவனாக ஆகிவிடுகிறான். அவன் எதிலும், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதில்லை. பலன்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன், புலன்களுக்கு அடிமைப்பட்ட ஒரு மனிதனைப் போல் ஆகிவிடுகிறான்.'

-இப்படிச் சொன்ன காந்தி....

"கீதை, சூத்திரங்கள் அடங்கிய ஒரு நூல் அல்ல. அது கவிதை வடிவிலான, மகத்தான தரும நூலாகும். நீங்கள் அதை எவ்வளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அவ்வள வுக்கு, அதிலிருந்து அற்புதமான அர்த்தங் களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அது சாதாரண மக்களுக்காக இயற்றப்பட்டுள் ளது' என்றார்.

பகவத் கீதை எனும் பகவானின் பாடலை பாமரனுக்குமான பாட்டாகவே பாடிக் காட்டினார் காந்தி.

நீங்கள் கீதையைப் பாடலாம் அல்லது பாடமல் இருக்கலாம்.

நீங்கள் கீதையை உங்கள் குரலில் பாடலாம் அல்லது காந்தி குரலில் பாடலாம்.

இதெல்லாம் உங்கள் விருப்பம்.

ஆனால் ஒன்று...

நீங்கள் பாடுவதாக இருந்தால்... உபதேச பாட்டு போதும். யுத்தம் நமக்கெதற்கு?

ஏனென்றால் கீதையின் உட்குறியீடு ஒரு போதும் யுத்தத்தை ஆதரிக்கவில்லை.

om010723
இதையும் படியுங்கள்
Subscribe