மேஷம்
மேஷ ராசியில் ஜென்மத்தில் குரு அமர்ந்து 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். இதில் ராசிநாதன் செவ்வாய் 5-ல் சஞ்சாரம், அவருக்கு குருபார்வை கிடைக்கிறது. எனவே 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ராசிநாதனையும் பார்க்கிறார். உங்கள் திட்டங்களில் புதிய முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் ஓங்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் மாறும். நன்மதிப்புகள் அதிகமாகும். 5-ஆமிடத்தில் 2-க்குடைய சுக்கிரனும் 3-க்குடைய புதனும் சேர்க்கை. மாத பிற்பாதியில் ஆகஸ்ட் 18 முதல் 5-க்குடைய சூரியனும் ஆட்சி. சுக்கிரன் வக்ரம். பொருளாதாரத்தில் ஒருசில நேரம் நெருக்கடி ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் தேவைகள் பூர்த்தியாகும். 10-ஆம் தேதிமுதல் 3-க்குடைய புதன் வக்ரம் பெறுகிறார். சகோதர, தைரிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். உடன்பிறந்தவர் களால் அனுகூலமும் உதவியும் உண்டாகும். 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் 6-ல் சஞ்சாரம். 3, 6, 11-ஆமிடங்கள் செவ்வாய்க்கு நல்ல இடங்கள் என்பதால் 6-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. மாதக்கடைசியில் கும்பச்சனி மகர ராசிக்கு மாறுகிறார் (ஆகஸ்டு 24). தொழில் ஸ்தானமான 10-ல் ஆட்சி. உத்தியோகத்தில் முன்னேற்றம், தொழில்துறையில் லாபம் போன்றவற்றை 10-ல் வரும் வக்ரச் சனி நிறைவேற்றுவார். பழனிமலையில் ஸ்ரீ போகர் சித்தர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11-க்குடைய குரு 12-ல் இருப்பதால் வீண் விரயம், அலைச்சல், மனக்கவலை போன்ற சங்கடங்கள் ஏற்படும். ராசிநாதன் 4-ல் வக்ரம். 12-ல் நிற்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கிறது. சுக்கிரன் வக்ரம். 2-க்குடைய புதனும், 12-க்குடைய செவ்வாயும் சேர்க்கை. எனவே, உங்கள் திறமைகளையும் அருமை பெருமைகளையும் மற்றவர் அறிந்திருந்தாலும் உங்களது தேவைகள் நிறைவேறுவதில் தடை, தாமதங்களைச் சந்திக்கும் நிலை! 2, 5-க்குடைய புதன் 4-ல் 10-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். குடும்பத்தில் மன நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளின் நடவடிக்கையால் கவலை, வருத்தம் ஆகியவற்றைச் சந்தித்தாலும் குருபார்வை அங்கு கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி பிரச்சினைகளை சமாளித்து ஜெயிக்கலாம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் 9-க்குடைய சனி 10-ல் தர்மகர்மாதிபதி யோகம் பெறுவதால் ஏதேனும் ஒருவகையில் பூர்த்தி செய்யலாம். ராசிநாதன் வக்ரம், 2-க்குடைய புதனும் வக்ரம். 9, 10-க்குடைய சனியும் வக்ரம். எனவே, எந்த ஒரு விஷயத்திலும் போராட்டத்தைச் சந்தித்துதான் நிறைவேற்ற வேண்டிய நிலை! 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் 5-ல் மாறுகிறார். சனி, செவ்வாய் பார்வை விலகுகிறது. அது மன ஆறுதலைத் தரும். காரியங்களை பூர்த்திச் செய்யும். தேகநலனில் தெளிவு பிறக்கும்- இராணிப்பேட்டை- காட்பாடி செல்லும்வழியில் திருவலம் என்ற ஊரில் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் சஞ்சாரம். 10-ஆம் தேதிமுதல் வக்ரம் ஆரம்பம். அதிசாரமாக அட்டமத்துச்சனி நிவர்த்தி. ஆமைபோல் செயல்பட்ட உங்கள் செயல்பாடுகளில் துரிதவேகம் ஏற்படும். 7-க்குடைய குரு 11-ல் லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனைப் பிணிக்கிறார். இதுவரை செய்துவந்த தொழில்துறையில் புதியமுயற்
மேஷம்
மேஷ ராசியில் ஜென்மத்தில் குரு அமர்ந்து 5-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். இதில் ராசிநாதன் செவ்வாய் 5-ல் சஞ்சாரம், அவருக்கு குருபார்வை கிடைக்கிறது. எனவே 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ராசிநாதனையும் பார்க்கிறார். உங்கள் திட்டங்களில் புதிய முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் ஓங்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் மாறும். நன்மதிப்புகள் அதிகமாகும். 5-ஆமிடத்தில் 2-க்குடைய சுக்கிரனும் 3-க்குடைய புதனும் சேர்க்கை. மாத பிற்பாதியில் ஆகஸ்ட் 18 முதல் 5-க்குடைய சூரியனும் ஆட்சி. சுக்கிரன் வக்ரம். பொருளாதாரத்தில் ஒருசில நேரம் நெருக்கடி ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் தேவைகள் பூர்த்தியாகும். 10-ஆம் தேதிமுதல் 3-க்குடைய புதன் வக்ரம் பெறுகிறார். சகோதர, தைரிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். உடன்பிறந்தவர் களால் அனுகூலமும் உதவியும் உண்டாகும். 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் 6-ல் சஞ்சாரம். 3, 6, 11-ஆமிடங்கள் செவ்வாய்க்கு நல்ல இடங்கள் என்பதால் 6-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. மாதக்கடைசியில் கும்பச்சனி மகர ராசிக்கு மாறுகிறார் (ஆகஸ்டு 24). தொழில் ஸ்தானமான 10-ல் ஆட்சி. உத்தியோகத்தில் முன்னேற்றம், தொழில்துறையில் லாபம் போன்றவற்றை 10-ல் வரும் வக்ரச் சனி நிறைவேற்றுவார். பழனிமலையில் ஸ்ரீ போகர் சித்தர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11-க்குடைய குரு 12-ல் இருப்பதால் வீண் விரயம், அலைச்சல், மனக்கவலை போன்ற சங்கடங்கள் ஏற்படும். ராசிநாதன் 4-ல் வக்ரம். 12-ல் நிற்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கிறது. சுக்கிரன் வக்ரம். 2-க்குடைய புதனும், 12-க்குடைய செவ்வாயும் சேர்க்கை. எனவே, உங்கள் திறமைகளையும் அருமை பெருமைகளையும் மற்றவர் அறிந்திருந்தாலும் உங்களது தேவைகள் நிறைவேறுவதில் தடை, தாமதங்களைச் சந்திக்கும் நிலை! 2, 5-க்குடைய புதன் 4-ல் 10-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். குடும்பத்தில் மன நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளின் நடவடிக்கையால் கவலை, வருத்தம் ஆகியவற்றைச் சந்தித்தாலும் குருபார்வை அங்கு கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி பிரச்சினைகளை சமாளித்து ஜெயிக்கலாம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் 9-க்குடைய சனி 10-ல் தர்மகர்மாதிபதி யோகம் பெறுவதால் ஏதேனும் ஒருவகையில் பூர்த்தி செய்யலாம். ராசிநாதன் வக்ரம், 2-க்குடைய புதனும் வக்ரம். 9, 10-க்குடைய சனியும் வக்ரம். எனவே, எந்த ஒரு விஷயத்திலும் போராட்டத்தைச் சந்தித்துதான் நிறைவேற்ற வேண்டிய நிலை! 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் 5-ல் மாறுகிறார். சனி, செவ்வாய் பார்வை விலகுகிறது. அது மன ஆறுதலைத் தரும். காரியங்களை பூர்த்திச் செய்யும். தேகநலனில் தெளிவு பிறக்கும்- இராணிப்பேட்டை- காட்பாடி செல்லும்வழியில் திருவலம் என்ற ஊரில் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் சஞ்சாரம். 10-ஆம் தேதிமுதல் வக்ரம் ஆரம்பம். அதிசாரமாக அட்டமத்துச்சனி நிவர்த்தி. ஆமைபோல் செயல்பட்ட உங்கள் செயல்பாடுகளில் துரிதவேகம் ஏற்படும். 7-க்குடைய குரு 11-ல் லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனைப் பிணிக்கிறார். இதுவரை செய்துவந்த தொழில்துறையில் புதியமுயற்சிகள் உண்டாகும். அந்த முயற்சிகள் லாப நோக்கில் செயல்படும். 11-ல் குரு இருந்தாலும் பெரிய அளவில் முன்னேற்றத்தையும் லாபத்தையும் சந்திக்காமல் இருந்தாலும். ராசிநாதன் வக்ரத்திற்குப் பிறகு தேவைகளை நிறைவேற்றலாம். 9-க்குடைய சனி 10-க்குடைய குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் புதிய அணுகுமுறைகள் பலன்தரும். தொழி-ல் நிலவிய நஷ்டங்களை சரிசெய்யும் யுக்திகளையும் கையாளுவீர்கள். அதற்குண்டான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் 11-ல் இருக்கும் குரு தருவார். காரணம் அவர் 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். இதுவரை கூட்டாக சேர்ந்து தொழில் நடத்தியவர்களுக்கு கூட்டில் இருந்து விலகி தனித்துவம் பெறும் அமைப்பும் ஏற்படும். அப்படி தனியாகச் செயல்படும் தொழி-ல் முன்னேற்றமும் ஏற்படும். 7-ஆமிடத்து குரு 11-ல் ராகுயோடு சேர்ந்திருந்திருப்பதால் கணவன் அல்லது மனைவி தேகநலனில் வைத்தியச் செலவுக்கு இடமுண்டு. திருச்சி ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி சந்நிதி சென்று வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு இந்த மாதக் கடைசிவரை அதிசார அட்டமத்துச்சனி நடைபெறுகிறது. 2-ல் 10-க்குடைய செவ்வாய் சஞ்சாரம். சனி செவ்வாய் பரஸ்பர பார்வை. "மந்தன் சேய் பார்த்திடவும் தீது சேர்ந்திடவும் "தீது' என்பது பாடல். எனவே, எந்த ஒரு காரியமும் முழுமையாக நிறைவேறாத நிலையை சந்திக்க நேரும். 10-க்குடையவரை 10-ல் நிற்கும் குரு பார்ப்பதால் உத்தியோகம், வேலை, தொழில் இவற்றில் ஓஹோ என்று சொல்லும் அளவு இல்லையென்றாலும் ஏதோ நடக்கிறது என்ற அடிப்படையில் செயல்படும். 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் 3-ல் மாறுகிறார். தைரிய காரகன் தைரிய ஸ்தானத்தில் மாறுவதால் தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். சகோதர சகாயம் உண்டாகும். 12-க்குடைய புதன் 2-ல் வக்ரம், 11-க்குடைய சுக்கிரனும் வக்ரம். இவர்களுக்கு 8-ல் வக்ரம்பெற்ற சனியின் பார்வை. எனவேதான் தொழில் இயக்கம் செயல்பட்டாலும் லாபத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தனவரவில் திருப்தியற்ற நிலை. இவையெல்லாம் ஆகஸ்ட் 24-ல் மகரத்திற்கு சனி மாறியபின் சீராகும்; சமாளிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் அவ்வப்போது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பாதிப்புக்கு இடமில்லை. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். மதுரை- திருப்பரங்குன்றத்தில் சோமப்பா ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை (ஆகஸ்டு 18). 12-ல் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம். கடந்த ஒரு மாதமாக வரவைவிட செலவுகள் கூடுதலாக நடைபெறுகிறது. 11-க்குடைய புதன் ஜென்ம ராசியில் வக்ரம். 10-க்குடைய சுக்கிரன் வக்ரம். 9-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் சேர்க்கை. இவர்களுக்கு 7-ல் வக்ரமாக இருக்கும் சனியின் பார்வை. எனவே, ஒட்டிக்கு ரெட்டி என்று சொல்வதுபோல ஒரு முறைக்கு இரு முறை ஒரு வேலையைச் செய்யவேண்டிய நிலை உருவாகும். என்றாலும் அவற்றை நிறைவேற்றிவிடலாம். அந்த ஒரு மனதிருப்தி உண்டாகும். காரணம் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய சுக்கிரன் ஒன்றுகூடி ஜென்ம ராசியில் சஞ்சாரம் அது தர்மகர்மாதிபதி யோகம். மற்றொன்று ராசிக்கு குருபார்வை கிடைப்பது. இவற்றால் உங்கள் மதிப்பும், மரியாதையையும் காப்பாற்றலாம். அதாவது பயணத்தின் போது சாலை வேலை நடைபெற்று மாற்றுப் பாதையில் சென்றாலும் போகவேண்டிய இடத்தை தாமதமாகச் சேரவேண்டிய நிலை! 19-ஆம் தேதி செவ்வாய், சனியின் பார்வையி-ருந்து விலகியப்பிறகு பொருளாதார முன்னேற்றம், புதிய தொழில் முயற்சி கைகூடுதல் போன்ற நன்மைகளை சந்திக்கநேரும். திருவாரூர் மடப்புரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ஆவணிமாத உத்திரம் நட்சத்திரத்தன்று குருபூஜை நடைபெறும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 12-ல் சஞ்சாரம். உடன் 8-க்குடைய செவ்வாயும் 9-க்குடைய சுக்கிரனும் சஞ்சாரம். மறைவு. இவர்களுக்கு சனியின் பார்வை. எனவே வீண் அலைச்சல், திரிச்சல்கள் உண்டாகும். திடீர் பயணத்தால் செலவுகள் ஏற்படும். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் குழப்பம், குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதிக் குறைவு போன்ற சங்கடங்கள் நேரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு நேர்ந்தாலும் பிரிவு பிளவிற்கு இடமில்லை. 19-ஆம் தேதி 12-ல் இருக்கும் செவ்வாய் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். சனி செவ்வாய் பரஸ்பர பார்வை விலகல் என்பதால் ஓரளவு சமாளிக்கலாம். புதன் 10-க்குடையவர். அவர் 12-ல் மறைவதால் உத்தியோக உயர்வு தாமதமாகலாம். மேலதிகாரிகளிடையே மனச்சங்கடம் உண்டாகலாம். 18-ஆம் தேதிவரை 9-க்குடைய சுக்கிரனும் அங்கு இருப்பதால் மேற்சொன்ன பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெறலாம். குரு 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார். தாயாருக்கு தேகநலன் நன்றாக இருக்கும். தாயாருக்கு வரவேண்டிய பாக்கிகள் நிலுவையில் இருந்தால் வந்துசேரும். மாத பிற்பாதியில் செலவுகள் சற்றுகூடும். திருச்சி அருகில் திருவெள்ளறை சென்று ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். கூடுவிட்டு கூடுபாயும் சித்து வேலைகள் செய்தவர்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11-ல் சஞ்சாரம். வக்ரம். அவருடன் 7-க்குடைய செவ்வாயும், 9-க்குடைய புதனும் சேர்க்கை. 10-ஆம் தேதிமுதல் புதன் வக்ரம் ஆரம்பம். இவர்களுக்கு 5-ல் வக்ரம்பெற்ற சனியின் பார்வையும், 9-ல் உள்ள குருவின் பார்வையும் கிடைக்கிறது. ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். 7-ல் உள்ள குரு திருமண யோகத்தையும் ஏற்படுத்தித் தருவார். ராசிநாதன் லாபஸ்தானத்தில் இருப்பதால் செய்தொழி-ல் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். ஜென்ம கேது சில நேரம் மனக்குழப்பத்தையும் எதிர்காலம் பற்றிய சந்தேக எண்ணங்களைத் தந்தாலும் 3-ஆமிடத்தை 3-க்குடைய குரு பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாமல் செயல்படலாம். 10-ல் இருக்கும் சூரியன் அகினி, உணவு சம்பந்தப்பட்ட துறையினருக்கு லாபகரமான நிகழ்வுகளைத் தருவார். அரசுத் துறையினருக்கு ஆதாயமும் உண்டாகும். 12-க்குடைய புதன் 11-ல் வக்ரம் பெறும் காலம் விரயத்திற்கேற்ற லாபமும் வரும். வரவேண்டிய பணம் காலதாமதமாகி வராமல் இருந்த இழுபறி நிலையும் மாறி வசூலாகும். பயணங்களும் பலன் தருமாறு அமையும். சனியின் வக்ரம் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளைத் தரலாம். திருநெல்வே- அருகில் வல்லநாடு சென்று ஸ்ரீ சாது சிதம்பர சுவாமிகள் அதிஷ்டானத்தை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் சஞ்சாரம். அவருடன் 7-க்குடைய சுக்கிரனும், 8-க்குடைய புதனும் சேர்க்கை. தொழில் வளம் இயங்கும். தடை நேராது என்றாலும் 2, 5-க்குடைய குரு 6-ல் மறைகிறார். தொழில் ஓடும். ஆனால் வருமானம் சொல்-க்கொள்ளும்படி அமையவில்லை. எங்க ஆத்துக்காரரும் கோர்ட்டுக்குப் போகிறார் என்ற பழமொழி உலவுவதைப் போல் தொழில் சம்பந்தமாக அலைய நேரிடும். 2-க்குடைய குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவு நன்றாக இருக்கவேண்டுமே என்ற சந்தேகம் எழலாம்? அவர் 12-ஆமிடத்தையும் பார்க்கிறார் அல்லவா? வரவு வந்தாலும் செலவும் முன்னாடி வந்து நிற்கும். என்றாலும் ராசிநாதன் குரு பார்ப்பதால் அது ஒரு பாதுகாப்பாகவும் அமையும். மதிப்பு, மரியாதை, நாணயம் கெடாமல் காப்பாற்றப்படுவீர்கள். ஆகஸ்ட் 24-ல் சனி மகர ராசிக்கு மாறியபின் புதிய முயற்சிகள் கைகூடும். 18-ஆம் தேதிமுதல் சூரியன் 10-ல் ஆட்சி. உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டும் நன்மதிப்பும் கிடைக்கும். 19-ஆம் தேதிமுதல் ராசிநாதன் செவ்வாய் 11-ல் பலம் பெறுவதும் நன்மையே! தேகநலம் நன்றாக இருக்கும். வைத்தியச் செலவுகள் குறையும். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலை அடிவாரத்தில் கட்டிக்குளம் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். கேட்டை நட்சத்திரத்தன்று குரு பூஜை.
தனுசு
தனுசு ராசிக்கு அதிசார ஏழரைச்சனி நிவர்த்தி. இம்மாதம் மீண்டும் ஆகஸ்ட் 24-ல் கும்ப சனி மகரத்திற்கு மாறுவதால் ஏழரைச்சனி நடப்பு. டிசம்பர் 20-ல்தான் சனிப்பெயர்ச்சி. அதுவரை ஏழரைச்சனி நடக்கிறது. ராசிநாதன் குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்ப்பதால் அந்த பலத்தால் வாழ்க்கையை ஓட்டலாம். 3-ல் உள்ள சனி வக்ரம்பெற்று செவ்வாய் அவரைப் பார்க்கிறார். சனியும் செவ்வாயைப் பார்க்கிறார். பிரஸ்பரம் பார்வை நல்லதல்ல. உடன் பிறப்புகள்வகையில் காரணமே இல்லாத மனவருத்தம், கருத்து வேறுபாடு போன்றவை தோன்றலாம். சகோதர- சகோதரிக்கிடையே அந்நியர் கருத்துக்கு இடம் தராமல் நேரடியாகப் பேசுவதன்மூலம் ஒற்றுமைக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம். நண்பர்களிடையே ஒற்றுமை இருந்தாலும் தாமரை இலை தண்ணீர்போல பட்டும் படாமலேயே செயல்படுவீர்கள். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற கருத்தை மனதில் கொண்டு நீங்கள் நடந்துகொண்டால் உறவும் பலப்படும்; உதவி ஒத்தாசையும் உண்டாகும். 9-க்குடைய சூரியன் 8-ல் மறைந்தாலும் 9-ஆமிடத்தைக் குரு பார்ப்பதால் சொத்து சம்பந்தமான வில்லங்க விவகாரம் ஒருமுடிவுக்கு வரும். தொழில்துறையினருக்கு கூட்டு முயற்சியில் இருந்து தனியாக செயல்பட வாய்ப்புகள் அமையும் திண்டுக்கல் அருகில் கவசனம்பட்டி சென்று ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 2-ல் ஆட்சி, வக்ரம். 4, 11-க்குடைய செவ்வாய் 8-ல் சஞ்சாரம். சனி, செவ்வாய் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். மந்தன் சேய் பார்த்திடவும் தீது சேர்ந்திடவும் தீது என்பது சந்திர காவிய விதி! எனவே, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல வரவு வருவதற்கு முன்பாக செலவும் வந்து நிற்கும். எனவே, குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் உருவாகலாம். பொருளாதாரச் சிரமங்களை சந்திக்க நேரும். 3-க்குடைய குரு 4-ல் நின்று 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல் பூமி அல்லது வாகனம் போன்ற யோகம் அமையலாம். அது கடன்மூலமாக அமையும். ஒருசிலர் வாடகை வீட்டில் இருந்து ஒத்தி வீட்டுக்கு குடி போகலாம். சொந்த வீடு வாங்குவது சம்பந்தமாக கடன் முயற்சியை மேற்கொள்ளலாம். 19-ஆம் தேதிமுதல் செவ்வாய் கன்னி ராசியில் மாறியப்பிறகு சனி செவ்வாய் பார்வையி-ருந்து விலகல் ஏற்படுவதால் ஓரளவு சமாளிக்கும் ஆற்றல் நேரும். 6-க்குடைய புதன் 8-ல் மறைவு. 10-ஆம் தேதிமுதல் வக்ரம். தனியார் கடன் அல்லது வங்கிக்கடன் அமையும். எது எப்படி இருந்தாலும் 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப்படாது- திருவள்ளூர், திருத்தணி பாதையில் ஆற்காடு குப்பம் சென்று ஸ்ரீ அனுமந்தராய சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம். வக்ரமாகவும் இருக்கிறார். 3-க்குடைய செவ்வாய் 7-ல் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். சனியும் செவ்வாயை பார்க்கிறார். இருவரின் பரஸ்பர பார்வை நல்லதன்று. தேக ஆரோக்கியத்தில் தொல்லையும், மருத்துவச் செலவும் உண்டாகும். புதிய முயற்சிகள் தொடங்கும் திட்டத்தினை தள்ளிவைப்பது நல்லது. ஏழரைச்சனியில் அதிசார ஜென்மச்சனி நடைபெறுகிறது. வக்ரம் பெற்ற சனி 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் பிரச்சினைகளையும் இடைஞ்சல்களையும் சந்திக்கலாம். 2-க்குடைய குருவை சனி பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கு இடமில்லை என்றாலும் சேமிப்பு என்ற ஒன்றை செயல்படுத்த இயலாத நிலை! வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். 5-க்குடைய புதனை குரு பார்க்கிறார். பிள்ளைகள்வகையில் நல்லவைகள் ஏற்படும். அவர்களின் மேற்படிப்பு முயற்சிக்கான திட்டங்கள் பலன்தரும். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். 9-ல் கேது இருப்பதால் தகப்பனார்வழியில் ஆரோக்கியத் தொல்லைகள் நிலவினாலும் குரு பார்ப்பதால் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் பனையூர் ஒடுக்கத்தில் ஞானி சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். பூரட்டாதி நட்சத்திரத்தன்று குருபூஜை.
மீனம்
மீன ராசிநாதன் குரு 2-ல் ராகுவோடு சஞ்சாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குரு தனவரவைத் தந்தாலும் 12-ல் உள்ள வக்ரச் சனி விரயங்களையும் கூடவே தருவார். அதிசாரமாக ஏழரைச்சனி. இம்மாதம் 24-ஆம் தேதி சனி கும்பத்தி-ருந்து மீண்டும் மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார். டிசம்பர் 20-ல் வரும் சனி பெயர்ச்சிதான் வாக்கியப்படி முறையான சனிப்பெயர்ச்சி. 12-க்குடையவர் அங்கு வக்ரம் பெறுவதாலும் ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது ஊர்மாற்றத்தைத் தரும். குடியிருப்பு வகையிலும் இடமாற்றம் ஏற்படலாம். 4-க்குடைய புதன் 6-ல் மறைந்தாலும் குருவின் பார்வையைப் பெறுகிறார். தொழில் நிமித்தமாக பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். 6-ஆமிடத்தை குரு பார்ப்பதால் அதற்குண்டானவகையில் கடனும் ஏற்படும். 9-க்குடைய செவ்வாய் 6-ல் இருந்தாலும் 10-க்குடைய குருவின் பார்வையைப் பெறுகிறார். அது தர்மகர்மாதிபதி யோக அமைப்பு வழிநடத்தும். புதன் 7-க்குடையவர். அவர் 6-ல் மறைந்தாலும் குரு பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். சச்சரவுகள் ஏற்பட்டாலும் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று சனீஸ்வரரையும் ஆஞ்சனேயரையும், தத்தாத்ரேயர், தத்தகிரி முருகன், ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதி ஆகியவற்றை வழிபடவும். அலைபேசி: 99440 02365