மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 28-ஆம் தேதிவரை 2-ல் சஞ்சாரம். தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும், பிறகு சுய சாரமான மிருக சீரிடத்திலும் சஞ்சாரம். அவருடன் குருவும் சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்துக் காத்திருந்த தனவரவுகள் வந்துசேரும். நீண்டநாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் இம்மாதம் நடைபெறும். அது மனதிற்கு ஆறுதலைத் தரும். 2-க்குடைய சுக்கிரனும் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 5-ல் ஆட்சி. உங்கள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெறும். 11-ல் சனி வக்ரகதியில் இயங்குகிறார். ஒருசில நேரம் காரிய முயற்சிகளில் அலைச்சல்களை சந்தித்தாலும், முடிவில் ஆதாயம் உண்டாகும். மாத மத்தியில் புதனும் வக்ரநிவர்த்தி. அவர் 3, 6-க்குடையவர் 4-ல் வக்ரம் பெறுவதால் குடியிருப்பு வகையில் சங்கடம் தோன்றி விலகலாம். 12-ல் உள்ள ராகு வேலையில் ஒருசிலருக்கு இடமாற்றத் தைத் தரும். மாதக் கடைசியில் 2-க்குடைய சுக்கிரன் 6-ல் நீசம்பெறுகிறார்.

பணத்தட்டுப்பாடு ஏற்படலாம்.

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் சஞ்சாரம். தொடக்கத்தில் கேது சாரத்திலும் பிறகு சுயசாரத்திலும் சஞ்சாரம் (பூரம்). ஜென்ம ராசியில் குரு நின்று 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். அலைச்சல்களும் திடீர் பயணங்களும் ஏற்படலாம். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்துவதில் சற்று சிரமங்கள் உண்டாகலாம். சிலநேரம் வீண் கற்பனை, சிந்தனைகள் உருவாவதால் காரிய இழுபறி நிலைகளையும் சந்திக்க நேரும். 2-க்குடைய புதன் 3-ல் மறைந்தாலும் மாத முற்பாதிவரை வக்ரமாக இருக்கிறார். சகோதர வகையில் மனக்கிலேசம் ஏற்படும். குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் ஏற்படும். 10-ல் சனி வக்ரம்பெற்று சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சினைகளை சந்திக்கலாம். உங்களது அஜாக்கிரதையும் ஒரு காரணமாக அமையும். தந்தைவழியில் அல்லது தந்தையால் உதவி ஒத்தாசைகளை எதிர்பார்க்கலாம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுன ராசிநாதன் புதன் 2-ல் வக்ரமாக சஞ்சரிக்கிறார். தொடக்கத்தில் சுய சாரத்திலும், பிறகு சனி சாரமான பூரத்திலும் சஞ்சாரம். மாத மத்தியில் சுயசாரத்திற்கு மாறுகிறார். குடும்பத்தில் பணத்தேவைகள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 11-க்குடைய செவ்வாய் 12-ல் குருவுடன் சேர்ந்து மறைகிறார். உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் பிரச்சினைகளையும், சச்சரவுகளையும் சந்திக்க நேரும். 9-ல் சனி வக்ரம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட சங்கடங்களும், வில்லங்கங்களும், விவகாரங்களும் உண்டாகும். 10-க்குடைய குரு 12-ல் நிற்பதால் ஒருசிலர் உத்தியோகத்தைவிட்டு வெளியேறலாம். அல்லது உத்தியோகத்தில் இடமாற்றத்தை சந்திக்கலாம். தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். பாதகமான தசாபுக்தி நடப்பவர்களுக்கு சிக்கல் உண்டாகலாம். 2-ல் புதன் வக்ர நிவர்த்திக்குப்பிறகு குடும்பத்தில் மன அமைதிக்கு இடமுண்டு. வீண் விரயங்கள் சற்றுக் குறையும்.

Advertisment

டக ராசிக்கு 2-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.9-க்குடைய குருவும், 10-க்குடைய செவ்வாயும் 11-ல் சேர்க்கை. ஆக, தர்ம கர்மாதிபதி யோகம். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது, உத்தியோகத்தில் உயர்வு அல்லது முன்னேற்றம் போன்றவை ஏற்படலாம். அட்டமத்துச்சனி ஒருபுறம் நடத்துகொண்டிருந்தாலும், சனி 8-ல் ஆட்சி என்பதாலும் வக்ரகதியில் செயல்படுவதாலும் சாதகமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கலாம். 12-க்குடைய புதன் ஜென்ம ராசியில் வக்ரம். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். 2-ஆமிடத்தை சனி பார்ப்பதால் தன வரவுக்கு இடமுண்டு. அதேசமயம் குடும்பத்தில் சில சங்கடங்கள் நிலவலாம். குழப்பத்தையும் சந்திக்கலாம். என்றாலும் 3-ஆமிடத்தில் கேதுவும் 3-ஆமிடத்தைப் பார்க்கும் குருவும் தைரியம், தன்னம்பிக்கையை அதிகமாக்குவார். 9-ல் உள்ள ராகு குருவருளையும் திருவருளையும் தருவார். ஆன்மிகப் பயணம் அதிகமாகும். குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமண யோகமும் கைகூடும்.

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை விரயஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கிறார். எனவே வீண் விரயங்கள், அலைச்சல்கள், ஒரு வேளையை இருமுறை செய்வது போன்றவற்றை சந்திக்க நேரும். 11-க்குடைய புதன் 12-ல் மறைந்தாலும் அவரும் வக்ரகதியில் செயல்படுகிறார். காரியத்தடைகள் உருவாகும். 7-ல் சனி வக்ரம்பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆண்களாக இருந்தால் மனைவிக்கும், பெண்களாக இருந்தால் கணவருக்கும் உடல்நலத்தில் வைத்தியச் செலவு போன்றவை ஏற்படும். 2-ல் கேது- குடும்பத்தில் குழப்பத்திற்கும் பஞ்சமில்லை என்பதுபோல அமையும். 10-ல் குரு இருப்பதால் உத்தியோகத்தில் குற்றங்குறை ஏற்படாது. ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஒருசிலர் வேலை மாறலாம். 9-க்குடைய செவ்வாய் 10-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே எத்தனை இடையூறுகள், தடைகள், தாமதங்கள் வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் உண்டாவதால், நம்பிக்கையோடு சமாளிக்கலாம்.

ff

Advertisment

ன்னி ராசிநாதன் கேது, சப்தம ராகு. 7-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பதுபோல நன்மைகளை அனுபவிக்கலாம். ஒருசில நேரம் கேதுவால் ஏற்படும் மன உளைச்சல்களையும், திருப்தியற்ற நிலைமைகளையும் குரு சரிசெய்வார். அவர் ராசியைப் பார்ப்பது ஒரு பலம்தானே! 11-ல் நிற்கும் சூரியனும், அவருடன் இயங்கும் வக்ர புதனும் காரியத் தடைகளை விலக்கி அனுகூலத்தைத் தருவார்கள். அரசு சம்பந்தப்பட்டவகையில் ஒத்தாசைகள் அமையும். 5, 6-க்குடைய சனி 6-ல் வக்ரம் பெறுவதால் நோய்நிவர்த்தி, சத்ருவகையில் சாதகம் போன்ற பலன்கள் உண்டாகும். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் தோன்றும். உத்தியோக உயர்வு அல்லது உயர்வுடன்கூடிய இடமாற்றம் போன்றவை அமையலாம். பிள்ளைகள்வகையில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். 7-ல் ராகு கணவர் அல்லது மனைவிமீது தேகநலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் சஞ்சாரம். என்றாலும் 11-க்குடைய சூரியன் 10-ல் வக்ரம்பெற்ற புதனுடன் சேர்க்கை. வேலையில் சரிவர செயல்பட முடியாத நிலை. அதேசமயம் 9-க்குடைய புதன் 10-ல் இருப்பதால் உங்களது தேவைகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனி 5-ல் ஆட்சிபெற்றாலும் வக்ரகதியில் இயங்குவதால் பிள்ளைகளினால் தொந்தரவுகளை சந்திக்க நேரும். அவர்கள்வகையில் செலவினங்களும் ஏற்படும். 6-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத செலவு வந்து நிற்கும். 2-க்குடைய செவ்வாய் 2-ஆமிடத்தையே பார்க்கிறார். குருவும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். மேற்கூறிய செலவினங் களை சமாளிக்க வரவும் வந்துசேரும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடைபெற்றால் அரசு உத்தியோக அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். உடன்பிறந்தவகையில் உறவுமில்லை பகையுமில்லை என்ற நிலைப்பாடுகள் அமையும். உங்களது நேர்மையும் உங்களை வழிநடத்தும்.

விருச்சிக ராசிக்கு குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு பெருமை என்றாலும், அதை முழுமையாக அனுபவிக்கமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும். காரணம் 4-ல் வக்ர சனி. எந்தவொரு நன்மையையும் அனுபவிக்க முடியாமல் தடை, தாமதம், விரக்தி போன்ற நிலைகளை உருவாக்குகிறார். மேலும் வக்ரகதியில் ராசியைப் பார்ப்பதால் (10-ஆம் பார்வை) தேக ஆரோக்கியத்தில் பாதகம் ஏற்படுத்துகிறார்.

அர்த்தாஷ்டமச் சனியல்லவா? ஒரு சிலருக்கு விபத்து அல்லது பட்ட கா-லேயே படும் என்பது போன்ற சோதனை ஆகியவற்றைச் சந்திக்கலாம். 2, 5-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதாலும், 3-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் ஒரு தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளலாம். எதை விட்டாலும் தைரியத்துடன் போராடுவீர்கள். எனவே முடிவில் காரிய வெற்றியை 11-ஆமிடத்துக் கேது தருவார். 5-ல் உள்ள ராகு ஆன்மிக சிந்தனைகளை அதிகமாக்கும். மாத மத்தியில் சூரியன் 10-ல் ஆட்சி பலம். அரசு அல்லது தனியார் துறையினருக்கு உத்தியோக அனுகூலம் ஏற்படும்.

னுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு. 5-க்குடைய செவ்வாயும் 6-ல் மறைவு. என்றாலும் மறைந்த குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் சங்கடங்களுக்கு இடமில்லை.

அதேசமயம் உயரதிகாரிகளினால் வேலை அழுத்தம்- "ஒர்க் பிரஷர்' ஏற்படலாம். 3-ல் சனி ஆட்சி, வக்ரம். நண்பர்களினால் சகாயம் எதிர்பார்க்க லாம். 9-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. பூர்வீக சொத்து சம்பந்தமான எந்த முடிவும் எடுக்கமுடியாத குழப்ப நிலைக்குத் தள்ளப்படலாம். பங்காளிப் பிரச்சினைகளும் எழலாம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பதன் அடிப்படையில் நியாயமான முறையில் நடந்துகொண்டால் சச்சரவுக்கு இடமில்லை. 4-ஆமிடத்து ராகு தன்சுகம் அல்லது தாய் சுகத்தில் மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். பூமி, வீடு, குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பது செலவென்றால், 2-ஆமிடத்தைப் பார்ப்பது தன வரவைக் குறிக்கும். எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம். குருவருளும் திருவருளும் துணைபுரியும்.

கர ராசிக்கு 2-ல் சனி வக்ரம். 5-ல் குரு நின்று ராசியைப் பார்க்கிறார்.

பொதுவாக குரு ராசியையோ லக்னத்தையோ பார்ப்பது ஒரு பலம் என்பது ஜோதிடவிதி. ஆனால் அந்த விதி இங்கு செயல்பட்டதா? என்றால் இல்லை. ஏழரைச்சனியில் பாதச்சனி நடந்துகொண்டிருப்பதால் எந்தவொரு நற்பலனையும் முழுமையாக அனுபவித்து முடியவில்லை. உதாரணமாக ஒரு புதிய ஒப்பந்த வேலை கிடைத்தால் அதைச் சரிவர செய்துமுடிக்க நல்ல சிப்பந்திகள் அமையாமல் வேலைகளில் இழுபறி நிலை காணப்படுவது- அதன்மூலம் மனது விரக்தியாதல் போன்ற பலன்கள் உண்டாகும். 8-ல் சுக்கிரன் மறைவு. அவர் 10-க்குடையவர் என்பதால் வேலையிலும் பிரச்சினை நிலவலாம். 7-ல் சூரியன், களஸ்திரகாரகனும் மறைவு. எனவே திருமணத்தில் பிரச்சினை, திருமண வாழ்வில் பிரச்சினை. 3-ல் உள்ள ராகு, 9-ல் உள்ள கேது ஜோதிட ஞானம் அல்லது பக்தி ஞானத்தைத் தருவர். சித்தர்கள் வழிபாடு பலன் தரும். மனைவி உடல்நலனில் அக்கறை காட்டவும்.

கும்ப ராசிக்கு ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சி, வக்ரம். ஜென்மச்சனி சீரழிக்கும் என்பது ஜோதிடவிதி. இங்கு ராசிநாதனே விரயாதிபதி என்பது வேதனைக்குரிய விஷயம்தான். சனி 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சகோதர- சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு உருவாகலாம். திருமண முயற்சிகள் தள்ளிப் போகலாம். சொந்தத் தொழி-ல் புதிய முயற்சிகளை ஒத்திப் போடவும். 7-ல் சுக்கிரன். பொதுவாக 7-ல் சுக்கிரன் இருப்பது களஸ்திர தோஷத்தைத் தரும். குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயத்திற்கும் குறைவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். 4-ல் உள்ள செவ்வாயும் குருவும் புதிய மனை யோகத்தையும் செய்வார்.

அதற்குண்டான கடனுதவியும் கிடைக்கும். சனி- ராகு சாரத்தில் சஞ்சரிக்கிறார். ஒருசிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படலாம். 2-ல் ராகு- குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படும். 8-ஆமிடத்தை குரு பார்க்கிறார். எதிர்பாராத யோகத்திற்கும் வழியுண்டு.

மீன ராசிநாதன் குரு 3-ல் மறைவு. 2-க்குடைய செவ்வாயும் 3-ல் மறைவு. "ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்றாகும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்' என்ற பாடலுக்கேற்ப, நினைத்த காரியத்தை செயல்படுத்த முடியாதவாறு தடை, தாமதங்கள் தோன்றும். சனி 12-ல் ஆட்சி பெறுவதாலும், தற்போது வக்ரகதியில் இயங்குவதாலும் என்ன முயற்சித்தாலும் விரயத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும் ராசிநாதன் குரு 7, 9, 11-ஆமிடங்கள் என்ற நல்ல ஸ்தானங்களைப் பார்ப்பதால் கணவர் அல்லது மனைவிவகையில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

ஜென்ம ராகு- சப்தம கேது ஒருசில நேரம் குடும்பத்தில் வாக்குவாதம், சச்சரவுகளைத் தந்தாலும். பிரிவினைக்கு இடமேதுமில்லை. பிள்ளைகள் வகையில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் சற்று தள்ளிப்போனாலும் தடைப்படாது; "லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக' நடைபெறும்.

செல்: 99440 02365