1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்கள் சூரியனை குறிக்கும் எண்கள். இந்த சூரியனின் தேவியர் நாமம் உஷாதேவி, பிரத்தியுஷா தேவி ஆகும். இந்த ஆடி மாதம், 1-ஆம் எண்காரர்கள் நிலை சற்று அலைச்சலாக அமையும். ஆடிக்காற்றில் அம்மி மட்டுமல்ல, ஒன்றாம் எண்காரர்களும் அலைவார்கள். அல்லது கடும் செலவாக இருக்கும். தாயார் சம்பந்தமாக செலவுண்டு. சிலரின் தாயார்வகையில் அலைச்சலும் இருக்கும். உங்கள் இளைய சகோதரி, இடம், வீடு மாறுவதால் அது சம்பந்த அலைச்சலுண்டு. மனை, வாகன போக்கு வரத்து அதிகரிக்கும். உங்களில் சிலரின் வாரிசுகள் வேலை கிடைத்து, வேறிடம் நகர்வர். அது சம்பந்த பரபரப்பு உண்டு. உங்கள் திருமண ஏற்பாடு நடக்கும்போது, ஏதோ ஒரு வில்லங்கம் மறைமுகமாக தோன்றும். அது யாரால், எவ்விதம் ஏற்பட்டது எனக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்த்துவிடும். இதேபோல் தம்பதிகள், மூன்றாம் மனிதரை, உங்கள் பிரச்சினைகளில் நுழைய அனுமதிக்காதீர்கள். எதிர்மறை சிந்தனை செயல்களுடன் சிலர் உங்கள் திருமண வாழ்வை சிதைக்க முற்படுவர். உங்கள் தொழிலில், யாராவது யோசனை சொல்கிறேன் பேர்வழி என வந்தால், கவனமாக இருக்கவும். ரொம்ப இடம் கொடுக்காதீர்கள். உங்கள் பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் பூர்வீக நிலம் சம்பந்த மான, வேளாண்மை விஷயம் ஒன்று உங்களுக்கு வந்துசேரும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு, சற்று தள்ளிப்போகும். அரசியல்வாதிகள் மிகவும் மாற்றத்துக்கு உள்ளாவார் கள். கலைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தொழில் கல்வியும், இடமாற்றமும் பெறுவர். குத்தகை விஷயம் விரயம் தரும். பணியாட்கள் மாறுவர். எளிதாக கிடைக்கிறதே என நீங்கள் கடன் வாங்கி விடாதீர்கள். பெரிய இன்னலில் சேர்த்துவிடும்; கவனம்தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகன் கோவில் அல்லது படத்துக்கு நெய் விளக்கேற்றி வணங்கவும். முதிய இஸ்லாமிய பெரிய வருக்கு, மருந்து சம்பந்த உதவி செய்யவும். அருகிலுள்ள சுப்பிரமணியருக்கு விளக்கேற்றவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இவரின் தேவியின் பெயர் ரோகிணி தேவி ஆகும். இந்த மாதம் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். இந்த மாதம் அரசு சம்பந்த ஒப்பந்தம் முடிவாகும். அரசு கட்டித் தரும் அடுக்கு மாடி வீடு வாங்க கையெழுத்து போடுவீர்கள். வீட்டிற்கு, மருமகன் வரும் நேரமிது. உங்கள் சொந்தத்தில் மருமகன் அமைவார். சிலரின் வாரிசுகள் வேலையின் பொருட்டு, வெளிநாடு செல்வர். இந்த எண்ணில் பிறந்த சிலர், கல்வி பொருட்டு இடம் மாறுவர். சிலருக்கு வேலை கிடைக்கும். சிலர் குழந்தைகள் சம்பந்தமாக கடன் வாங்க நேரிடும். உங்களுக்கு வரும் நல்ல செய்திகளில், சிறிது கள்ளம் இருக்கக்கூடும். தொழிலில் நல்ல மேன்மை காண்பர். இந்த மாதம் அரசியல்வாதிகள் வெகு கௌரவம் பெறுவர். இந்த எண்ணில் அரசியலுக்குள் எண்டரி கொடுக்க வெகுநாளாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் இந்த மாதம் அதற்கான சூழ்நிலை கனிந்துவருவதை காண்பார்கள். புதிதாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் கண்டிப்பாக இந்த மாதம் புது தொழில் தொடங்கிவிடுவர். கைபேசி தொலைவதால் புதிதாக ஒன்று வாங்குவீர்கள். இளைய சகோதரம், வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து வந்து, உங்களுடன் தங்குவார். வெளியூர் சென்ற பணியாட்கள் ஊர் திரும்புவர். கலை உலகை சார்ந்தவர்கள் வெகு நன்மை பெறுவர். புது வாய்ப்புகள் கிடைக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். பங்கு வர்த்தகம் நல்ல பலன் தரும். விளையாட்டுத் துறையினர் தாங்கள் பெற்ற மேன்மைமூலம் வேலை பெறுவர். ஏற்றுமதியாளர்கள், சிறிய சுணக்கம் பெறுவர். வேலையில் பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். உங்களில் ஒருசிலர் கடனை ஓரளவு திருப்பிக்கொடுக்க முடியும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: திருச்செந்தூரில் கடலாடி சுவாமி தரிசனம் செய்யலாம். பக்கத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகப் பொருள் வாங்கி கொடுத்து வணங்கவும். மசூதியில் வழிபாடு நடத்திவைக்கும் இஸ்லாமிய பெரியவருக்கு, லுங்கி வாங்கிக்கொடுக்கவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குருவை உங்கள் நாயகனாக கொண்டவர் கள். குருவின் தேவி தாராதேவி ஆவார். இந்த மாதம் அனேக நாட்கள் கடன் விஷயமாக அலைவதற்கே நேரம் சரியாக இருக்கும். வீடு வாங்க கடன் வாங்க நேரிடும். உங்கள் வேலை விஷயமாக கடன் வாங்குவீர்கள். வாரிசுகள் வெளிநாடு செல்ல கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். கல்யாணக் கடனுண்டு. பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்கக்கூடும். உங்கள் தந்தை எங்காவது விழுந்துவிட, அதற்கு பணம் தேடவேண்டும். புது வியா பாரம் ஆரம்பிக்க கண்டிப்பாக கடன் வாங்க நேரிடும். அது தள்ளுவண்டி வியாபாரமோ, பிரம்மாண்ட மல்டி ஸ்டார் வணிகமோ, கடன் வாங்கத்தான் வேண்டியிருக்கும். அரசியல் சம்பந்த கைமாற்று ஏற்படும். இவ்வளவு கடன் எனில் மீள முடியுமா, முதலில் எவன் கடன் கொடுப்பான். வட்டி கட்ட முடியுமா என கேள்விகள் எழும். ஆனால் இந்த மாதம், கடவுளின் அருளால், அரசுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். முன்பு வாங்கியிருந்த சில கடன்கள் ரத்து செய்யப்படும். அனேகமாக சுபக்கடன்களாக அமையும். எனினும் சதா கடன் விஷயமாக யோசிப்பதால் இந்த மாதம் மன அலுப்பும் சஞ்சலமும் தோன்றும். மாணவர்கள் சற்று கவனமாக, கருத்தாக கல்வி பயிலவேண்டும். சிலசமயம் படித்த படிப்பு மறந்துபோக வாய்ப்புண்டு. முக்கிய நுழைவுத் தேர்வு எழுதும் முன் மாணவர்கள் ஹயக்ரீவரை மனதார வணங்கவும். திருமண விஷயத்தை, உங்கள் தந்தை சொதப்பிவிடுவார். அரசியல்வாதிகள் கையது கொண்டு மெய்யது பொத்திக்கொண்டிருப்பது, அவர் களுக்கு நல்லது. கலைத்துறையில் உள்ளோர் எதிர்மறை விஷயங்களைச் சந்திக்க நேரிடும்; கவனம் தேவை. உஷ்ண சம்பந்த நோய் ஏற்படும். குத்தகை, ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகர்கள் சற்று சூதனமாக நடந்துகொள்ள வும். உங்கள் மாமனார், மாமியார் ஏதோ ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்திவிடுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு வஸ்திரமும், மஞ்சள் நிற மாலையும் சாற்றி வணங்கவும். அருகிலுள்ள சுப்பிரமணியருக்கு, மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கவும். பள்ளி கூடத்தில் பணிபுரியும் இஸ்லாமிய பெரியவருக்கு, உடை வாங்கிக்கொடுங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவான் உங்கள் எண்ணின் நாயகன். இவரின் தேவி சிம்ஹிகா தேவி ஆவார். இந்த மாதம் உங்களின் பணவரவு, தகவல் தொடர்பு சார்ந்து பெருகும். உங்கள் யூட்யூப் உங்களுக்கு நல்ல பணவரவும், கௌரவமும் தேடித்தரும். உங்கள் பூர்வீக வீடு விஷய தகவல் கிடைக்கும். சிலர் உங்களின் பழைய வேலை யில் மறுபடியும் சென்று சேர்வீர்கள். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப் புண்டு. காதல் வரும். காதல் கல்யாண ஏற்பாடுகள் விரைவு பெறும். சில சினிமா, டி.வி கலைஞர்கள் விபரீதமான, மோசமான செய்திகளை எதிர்கொள்வர். உங்கள் தொழிலில் கணினி பயன்பாட்டை மேம் படுத்துவீர்கள். அரசியல்வாதிகள், தங்களின் பிறந்த இடத்தில், சிரமம் எதிர்கொள்வர். உங்கள் மாமனாரும், மாமியாரும் சில தெய்வ விஷயங்களை உங்களுக்கு ஞாபகப் படுத்துவார்கள். உங்களின் பூர்வீகம் அல்லது பழைய பணியாளர்கள் திரும்ப வந்து வேலை செய்வர். மாணவர்களுக்கு, நல்ல புத்திசாலித் தனமும், ஞாபக சக்தியும் பெருகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள், கிறிஸ்துவ நபர் களை காதலிக்க தொடங்குவர். முன்னே களவுபோன பொருட்கள் சில திரும்பக் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த ஒப்பந்தங் களை முன்பிருந்த, பழைய முறைக்கு மாற்றுவீர்கள். இந்த மாதம் முக்கியமான நோக்கத்திற்காக வெளியே செல்லும்போது, சில இடர்களை சந்திக்க நேரிடும். அது போல, இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியது, சிறிதாக உடல்நலம் குன்றினாலும் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுவிடவும். கடன் விஷயம், எதிரிகள் சார்ந்து, எதிர்மறை விஷயம் காதில் விழுந்தால், உடனே சுதாரிப்பாக நடந்துகொள்ளவும். உங்கள் காதல் விஷயத்திலும் கவனம்தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு சேவல் தானம் நல்லது. அருகிலுள்ள சுப்பிரமணியருக்கு அரளி மாலை சார்த்தி வணங்கவும். வயதான இஸ்லாமியருக்கு, பயண சீட்டு வாங்கிக்கொடுத்து உதவவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். இந்த புதன் பகவானின் தேவியின் நாமம் ஞானசக்தி தேவி ஆகும். இந்த மாதம் உங்களுக்கு லாபம் அதிகம் வரும். அதற்கேற்ப செலவும் வரும். நீங்கள் எண்ணிய எண்ணம், கொண்ட லட்சியம், மேற்கொண்ட, குறிக் கோள் எல்லாம் அழகாக, அருமையாக ஈடேறும். என்ன ஒன்று அதற்கான அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில், பல நல்ல சுப நிகழ்வுகள் நடக்கும். உங்கள் இளைய சகோதர னின் திருமணம் நடக்கும். சிலர் வீடு மாறு வீர்கள். சிலர் வீட்டை லீசுக்கு எடுப்பீர்கள். உங்களில் சிலர் ஒரு வீடு இருக்கும்போதே, இன்னொரு வீடும் வாங்க முயற்சி செய்வீர்கள். உங்கள் பெற்றோர், நெடுநாள் விரும்பிய ஒரு ஆன்மிக யாத்திரைக்கு ஏற்பாடு செய்து கொடுப்பீர்கள். மனை வாங்கும் யோகம் உண்டு. சிலர் கால் வலி அல்லது வயிற்றுவலியால் அவஸ்தைபட நேரிடும். சிலருக்கு பிற மதத்தினருடன் லைட்டா காதல் துளிர்க்கும். தம்பதிகளுக்குள், இளைய சகோதரன் அல்லது பணியாட்களால் சண்டை வர வாய்ப்புண்டு. உங்கள் தந்தை ஞாபக மறதி யால், எதையேனும் தொலைத்து விட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் அவர்களின் எண்ணம் ஈடேறக் காண்பர். அதனை நிறைவேற்ற, அதிக செலவு செய்வர். இந்த மாதம் தங்களின் கௌரவத்தை நிலை நாட்டவும் தொழில் வெற்றியைக் கொண்டாடவும் நிறைய செலவு செய்வர். சிலர் பேரனை, பேத்தியை பார்க்க வெளிநாடு செலவீர்கள். சில அரசியல் வாதிகள், துறை மாற்றம் பெறுவர். உங்கள் சந்தேகம், பயம் இவற்றை தீர்த்துவைக்க, உங்களின் தாயார் சில சொத்துக்களை உங்களுக்குத் தருவார். சிலருக்கு வணிகத்தில் அரசு அனுகூலமும், அரசியல்வாதிகள் ஆதரவும் கிடைக்கும். உங்கள் மாமனார், மாமியார்மூலம் லாபமும், செலவும் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடலாம். அருகிலுள்ள சுப்பிரமணியருக்கு, பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடவும். இஸ்லாமியரின் திருமண செலவுக்கு முடிந்தவரை கொடுத்து உதவுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இவரது தேவியின் நாமம் சுகீத்தி தேவி ஆகும். இந்த மாதம் நீங்கள் மிகவும் எதிர் பார்த்த இடத்திலிருந்து பணம் வராது. ஆனால் சற்றும் நினைத்தறியா இடத்தில் இருந்து பணம் கைக்கு கிடைக்கும். உங்களின் ஒப்பந்தம், லீஸ்வகையில் பணம் வந்து சேரும். கைபேசியில் உங்களின் பதிவுகள் பணம் சம்பாதித்து கொடுக்கும். முன்பு கொடுத்திருந்த கடன் தொகை வசூலாகும். வணிகவரி சம்பந்த ரிடர்ன் தொகை கிடைக் கும். வீடு மாற நினைக்கும் வேளை, வில்லங்கம் வந்து நிற்கும். பணியாளர்கள் பணிசெய்ய முரண்டு பிடிப்பர். வீடு சம்பந்த கடன் வாங்க வேண்டியிருக்கும். அது பழுது பார்க்கும் செலவாகவும் அமையலாம். உங்களின் சில கெட்ட பழக்கம், சில சண்டையை இழுத்து விடும். சிலரின் பாதத்தில் கரும்படைபோல் தோன்றும். திருமண பேச்சுக்கள், ஒரு வதந்தி மூலம் அந்தரத்தில் நிற்கும். சிலரின் தொழி லுக்கு, தந்தை மூலதனம் கொடுத்து உதவுவார். சிலர் தொழிலில் எங்கும் கிளைகள் ஆரம்பித்து விடுவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வாழ்வில் மேன்மையையும், சிறுமையையும் ஒருங்கே பெறுவர். உங்கள் மூத்த சகோதரன், சொந்தத் தொழில் ஆரம்பிக் கக் கூடும். அதில் சில குறுக்கு வழிகளை கையாள் வார். தொழில் சம்பந்த வெளியூர், வெளிநாட்டு பயணம் உண்டு. சில கடன் பிரச்சினைகள் சட்டென்று விலகும். உங்கள் எதிரிகள். காவல்துறையின் வசம் சென்றுவிடுவதால், நீங்கள் நிம்மதி அடைவீர்கள். வெகுநாளாக பாடாய்படுத்திக்கொண்டிருந்த, சிறு கட்டி, சின்ன அறுவை சிகிச்சைமூலம் சரியாகும். இந்த மாதம், எதிர்பாராத விஷயம் எதிர்பாராதவிதத்தில் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு, சர்க்கரைப் பொங்கல், நிறைய பழங்கள் கொண்டு வணங்கவும். அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கல்கண்டுடன் வணங்கலாம். உங்களிடம் அல்லது கூட வேலை பார்க்கும் இஸ்லாமிய சகோதரருக்கு முடிந்த இனிப்பு வாங்கிக்கொடுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் கேது ஆவார். இவரின் தேவியின் நாமம் சித்ரலேகா தேவி ஆகும். இந்த மாதம் உங்களின் திருமண பேச்சுக்கள் வேகமெடுக்கும்போது, உங்களின் தாய்மாமன், வரன் வீட்டில் ஒரு கலப்பு உள்ளதாக கண்டுபிடித்து, அழும்பு பண்ணுவார். இதற்கு உங்கள் தாயும், மூத்த சகோதரியும் ஒத்து ஊதுவர்; கல்யாணம் வௌங்கினாப் பலதான். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் இளைய சகோதரன், வீடு பிரிப்பது, சொத்து சம்பந்தமாக, உங்கள் தந்தையுடன் சண்டையிடுவார். உங்கள் பணியாள், அடம்பிடித்து, உங்களை டார்ச்சர் செய்து, நிறைய சம்பளம் வாங்கிவிடுவார். வீட்டுக்கு, வாகனத்துக்கு இன்ஷுரன்ஸ் எடுப்பது பற்றி யோசிப்பீர்கள். சிலரின் வாரிசுகளின் காதல் பற்றி தெரியவரும். தம்பதி களுக்குள் சமையல், சாப்பாடு விஷயமாக அடிக்கடி சண்டை வரும். சமையல் செய்த பதார்த்தங்கள் அடிக்கடி வீணாகும். பங்கு வர்த்தகம் பல்டி அடிக்கும். பங்கு முதலீட்டில் சற்று பொறுமையாக இருக்கவும். உங்கள் வணிக இடத்தில், ஏதாவது ஒரு பொருள் காணாமல் போகக்கூடும். சிலரின் காதல் கருத்துவேறுபாடு காணும். உங்களின் ஏற்றுமதி நிறுவனத்தில் சில தரவுகள் தவறாக பதிவாகும். பதவி உயர்வின்போது, சில சிறு பிழைகள் கண்டுபிடிக்கப்படும். அதனால் சற்று தாமதம் ஆகும். கர்ப்பஸ்திரிகள் உடல் நலனில் கவனமாக இருக்கவேண்டும். வெளி நாட்டு வேலைக்கான தகவல், கைபேசியில் வந்தாலும், அங்கு போய் வேலையில் சேர்வதற்கு சிறு சிறு தடை, தாமதம் ஏற்படும். இதற்கு நீங்கள் ரொம்ப சந்தேகப்பட்டு, மிகச் சரியாக தரவுகள் தயார் பண்ணும்போது, ஏற்படும் பிழைகளே காரணமாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு, சிறு வேல் வாங்கி சார்த்தவும். அல்லது உண்டியலில் போடவும். வேல் வெள்ளியில் இருக்கட்டும். அருகிலுள்ள சுப்பிரமணியருக்கு வேல் வாங்கி உண்டியலில் போட்டு வணங்கவும். சிறு வியாபாரம் செய்யும் இஸ்லாமியருக்கு, அசைவ உணவு வாங்கிக்கொடுக்கலாம்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் சனி ஆவார். சனிபகவானின் தேவி நாமம் நீலாதேவி ஆகும். இந்த மாதம் உங்களுக்கு வரவேண்டிய பண வரவு, ஒழுங்கற்ற முறையில் தடை, தாமதத் துக்கு பிறகு வரும். ஏதோ ஒரு தொகை வந்து விடும். உங்கள் குடும்ப வாழ்வில், இளைய சகோதரன் கும்மி அடித்துவிடுவான். கைபேசியில் வரும் சில தகவல்கள், உங்களை வண்டை வண்டையாக திட்டும். சிலர் மனை வாங்குவீர்கள். சிலர் பூர்வீக மனையை விற்பீர்கள். வாகன முதலீடு உண்டு. காதல் காட்டாற்று வெள்ளமாக செல்லும்போது, இருவரில் ஒருவரின் தந்தையினால் செம மாத்து வாங்கும். அடி பின்னி எடுத்துவிடுவார். சில காதல் காவல் துறையின் கதவை தட்டும். மணமான தம்பதிகள், வாரிசுகளினால் சண்டை இடுவர். வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே, ஏனோ வெட்டு குத்து ரேஞ்சுக்கு சண்டை வந்துவிடும். சிலர் பூர்வீக சிறு தொழிலை, சொந்த வேலை தொழிலாக தொடர்வீர்கள். சிலர் வீட்டில் மருமகன் வருவர். அரசு விஷயத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளை பார்த்து சும்மா ஒரு கும்மிடு போட்டாலே, பெரிய செலவை இழுத்து விட்டுவிடுவர். அரசு வேலை இதோ கிடைத்துவிடும் எனும் நிலையில் ஒரு தடை வந்து எட்டிப்பார்க்கும். தடையின் மறுபெயர் லஞ்சம் என அர்த்தம் கொள்ளவும். அரசியல்வாதிகள் அவர்களை நல்லவர், வல்லவர் என பெரிதாக விளம்பரப்படுத் தவும் அதற்கான தரவுகளை அலைபேசி, பத்திரிகையில் பரப்பவும். நிறைய செலவு செய்வர். சினிமா காதல் ஒன்று பரபரப்பாகும். கலைஞர்கள் தாங்கள் நினைத்த லட்சியத்தை, கொஞ்சம் செலவு செய்து நிறைவேற்றுவர். சிலர் கடன் பிரச்சினை முழுமையாக தீர்வதற்கு, ஏதாவது சொத்தை விற்று கடனை தீர்ப்பர். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவர். வாழ்க்கைத்துணை நரம்பு இழுத்து, அவதிப்படுவார். பங்கு வர்த்தகம் முதலீடும், லாபமும் மாறி மாறி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு, நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கலாம். அருகிலுள்ள சுப்பிரமணிய கோவிலுக்கும் அவ்விதமே கொடுக்கலாம். பேப்பர், பத்திரிகை விற்கும் வீட்டுக்கு கொடுக்கும் இஸ்லாமிய நபரின், இரும்பு பாத்திர தேவையறிந்து வாங்கிக் கொடுங்கள். இதை செய்வதால், காதுவலி அல்லது பாத வீக்கம் வரமால் தடுக்கலாம்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். செவ்வாயின் தேவி நாமம் சக்தி தேவி ஆகும். இந்த எண்காரர்கள் எப்போதும் சற்று கரடு முரடானவர்கள். அதிலும் இந்த மாதம், பேசும் பேச்சில் விதாண்டாவாதம் இருப்பதோடு, அதன்காரண காரியம் சரியாக இருக்கும். பிறர், இவன் கோபமாக பேசினாலும், அதில் நியாயம் இருக்கிறது'' என உங்களை ஆதரிப்பர். எதிர்பாராத பணவரவுண்டு. செலவு அதை மிஞ்சி நிற்கும். வீடு, மனை, வாகனம் பற்றிய தரவுகளைப் பெறுவீர்கள். பூர்வீக அல்லது பழைய வீட்டை விற்பது பற்றிய எண்ணவோட்டம் இருக்கும். சிலர் வாடகை வீட்டிற்கு தரகரை அல்லது கைபேசியில் விசாரிப்பீர்கள். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. சிலரின் வாழ்க்கைத்துணைக்கும் அரசு வேலை கிடைக்கும். தகவல் தொடர்பு, மனித வள மேம்பாடு இவை சார்ந்த வேலைகளும் கிடைக்கக்கூடும். இப்போது வரும் வரன் உங்கள் சொந்தத்தில் அமையும். அட காதல் திருமணமும் உறவுக்குள்தான் நடக்கும். வியாபார ஒப்பந்தம் கிடைக்கும். ஏற்றுமதி யாளர்கள், முதலீட்டுக்கு ஏற்றுவாறு பண வரவு பெறுவர். வெளிநாட்டு வர்த்தகம்மூலம் இது கிடைக்கும் பணவரவு, "வரும் ஆனா வராது'' என்ற நிலையில் அல்லாடும். மாணவர் கள் நன்றாக படித்திருந்தாலும், சிலசமயம் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அரசியல்வாதி கள் தொழில் நிமித்தமாக அலைகிறேன் என்று கூறினாலும், நிஜத்தில் அவர்களின் உயிரான கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள மிக அலைச்சல் மேற்கொள்வர். சினிமா, டி.வி. கலைஞர்கள் வீடு, மனை, வாகனம் வாங்குவர். சில பெண்கள், குழந்தை தங்குவதற்குரிய, நீர்க் கட்டியை நீக்கும் கர்ப்பபை சிகிச்சையை மேற்கொள்வர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனுக்கு, செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, சஷ்டி கவசம் கூறி வழிபடவும். அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இவ்விதமே வணங்கவும். அலைந்து கொண்டே வியாபாரம் செய்யும் சிறு வணிக இஸ்லாமியருக்கு, செருப்பு அல்லது குடிக்க தண்ணீர் பாட்டில், எலுமிச்சை சர்பத் என அவரின் தேவையறிந்து வாங்கிக் கொடுங்கள்.
செல்: 94449 61845
.
_____________________
2024 ஆடி மாத கிரக நிலைகள்!
சூரியன்
ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் அமர்ந்துள்ளார். இவர் புதன், சுக்கிரனுடன் உள்ளார். சூரியன் அரசாங்கத் தைக் குறிப்பார். இவர் தனது சொந்த வீட்டுக்கு 12-ல் விரயத்தில் உள்ளார். இதனால் நிறைய அரசியல்வாதிகள் இடம் பெயரும் நிலை ஏற்படும். அது பதவி இழப்பு ஏற்படுவதால் இருக்கலாம். புது பதவி கிடைப்பதால் இருக்கலாம். வழக்குகளால் சிறை செல்லலாம். உடல் நலமில்லாமல் மருத் துவமனை செல்லலாம். இதேபோல் நிறைய அரசு அதிகாரிக் கும் நிறைய மாற்றத்துக்கு, இடப்பெயர்ச்சி அடைவர்.
சந்திரன்
ஆடி மாதம் சந்திரன் 14, 15, 16-ஆம் தேதிகளில் சஞ்சரிக்கும்போது, கஜகேசரி யோகமும், சந்திர மங்கள யோகமும் பெறுகிறார். எனவே இந்நாட்களில் சொத்து, நிலம், மனை விலைகள் மிக அதிகமாகும். நிலம் ரொம்ப மதிப்புபெறும் (ஜூலை 30- 31, ஆகஸ்ட்- 1.) ஆடி மாதம் 18, 19, 20-ஆம் (ஆகஸ்ட் 3, 4, 5), தேதிகளில் சந்திரன் கடகத்தில் செல்வார். அப்போது நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சந்திரன் ஆடி 23, 24, 25 (ஆகஸ்ட் 8, 9, 10) இந்த தேதிகளில் கன்னி ராசியில் உலாவுவார். அப்போது நீர் சம்பந்தமான நோய் மற்றும் மனபிறழ்வு சார்ந்த பிரச்சினை அதிகரிக்கும். எனினும் கன்னி ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் பிரச்சினை பெரிதாகாது. சிறு மருந்து, மாத்திரைகளிலே குணமாகிவிடும். ஆடி மாதம் 7, 8, 9 (ஜூலை 23, 24, 25) தேதிகளில் கும்பத்தில் விரைவார். அப்போது ஒரு பெண் அரசியல்வாதி நிறைய சிக்கலை சந்திப்பார். சிலசமயம் வெளிநாடு சென்றுவிடுவார். அல்லது அரசியலை விட்டு விலகிவிடுவார். ஆடி மாதம் 9, 10, 11 (ஜூலை 25, 26, 27) தேதிகளில் மீன ராசியில் ராகுவுடன் கூடி அமர்ந்திருப்பார். அந்நாட்களில் கடலில் அதிகமான, விரைவான, வேகமான மாறுபாடுகள் காணப்படும். மக்கள் மனம் பதறும்படியான சேதாரங்கள் உண்டாகும்.
செவ்வாய்
இந்த ஆடி மாதம் முழுவது ரிஷப ராசியில், குருவுடன்கூடி குரு மங்கள யோகம் பெறுகிறார். எனவே ரியல் எஸ்டேட் சார்ந்தவர்கள் மிக யோகம் பெறுவர். நிறைய மனை விற்பனை ஆகும். சில இடங்களின் நில மதிப்பு, மதிப்பு கூட்டப்பட்டு, விற்பனை சூடு பிடிக்கும். கோவில் நிலங்கள் பாதுகாக்கப்படும். சீருடை பணியாளர்கள் பெருமையும், பட்டமும் பெறுவர். இதேபோல் இராணுவம், தீயணைப்புத்துறை, வனத்துறை இவர்களும் மிக மேன்மை அடைவர். ஏதோ ஒரு உத்தரவின் பேரில், மேற்கண்ட சீருடை பணியாளர்களுக்கு சம்பள உயர்வும், கூடவே மனையும் கிடைக்கும்.
புதன்
இவர் கடகத்தில் சூரியன், சுக்கிரனோடு உள்ளார். அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் நல்ல மேன்மை பெறும். நிறைய ஆசிரியர்கள் அரசு பள்ளி, கல்லூரியில் பணி செய்ய வாய்ப்பு பெறுவர். திரைப்படக் கல்லூரி, பத்திரிகை கல்வி, சேவை சார்ந்த கல்வி முதன்மை பெறும். மாணவர்கள் நல்ல புத்திசாலித் தனம் பெற்று சுறுசுறுப்படைவார்கள். கல்வி சுற்றுலா அதிகரிக்கும்.
வியாழன்
குருபகவான், ரிஷபத்தில் அமரிக்கையாக அமர்ந்துள்ளார். இவருடன் செவ்வாயும் சேர்ந்துள்ளார். ரியல் எஸ்டேட் என்னும் பூமி விற்பனை, பணப் புழக்கத்தை எங்கும் பரப்பும் சீருடை சார்ந்த கல்வியில் சேர மாணவர்கள் மிக ஆர்வம் காட்டுவர். ஏதோ ஒரு காரணத்தால், கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். காவல் துறையின் உதவியால், சில சுவாமி விக்ரகங்கள், வெளிநாட்டிலிருந்து, நம் நாட்டிற்கு திருப்பி கொண்டுவரப்படும். கோவில்கள் நிறைய காணிக்கை பெறும்.
சுக்கிரன்
இவர் கடக ராசியில் சூரியன், புதனோடு அமர்ந்துள்ளார். இந்த ஆடி மாதம் நிறைய காதல் திருமணம் நடக்கும். நிறைய படிக்கும் மாணவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், டைம் பாஸ் பண்ணுவதற்கு காதலித்து கல்யாணம் பண்ணிக்கொள்வர். மாணவர்களாக சேர்ந்து, பரீர்ட் சார்ந்த முறையில், சிறு சிறு படங்கள், குறுகிய நேரத்தில், கொஞ்ச முதலீட்டில் சினிமா படம் எடுப்பர். அது அனைவராலும் விரும்பபடும். சில படங்கள் அரசின் ஆதரவையும் பெற்றுவிடும்.
சனி
சனிபகவான் கும்ப ராசியில், ராகுவின் சாரத்தில் வக்ரகதியாக அமர்ந்துள்ளார். இதில் ராகு சனி சாரத்தில் உள்ளார். சார பரிவர்த்தனை பெறுகிறார்கள். இவர் காலபுருசனின் 11-ஆம் வீட்டில் உள்ளார். எனவே அரசியலில் நிறைய நிறைய மாற்றம், சலசலப்பு, பெயர்ச்சி உண்டாகும். நிறைய அரசியல்வாதிகளின் பொய்மை விலகி மெய்மை வெளிப்படும். தொழில்கள் லாபத்தில் நஷ்டம், நஷ்டத்தில் லாபம் எனும் விதத்தில் ஓடும்- ஏனோ நிறைய அரசியல் வாதிகள், பெரிய பெத்த மனிதர்கள், வெளியூர், வெளிநாடு அல்லது கடலுக்கு நடுவில் ஒளிந்து வாழ்வர்.
ராகு
இவர் மீனத்தில், வக்ரம்பெற்ற சனி சாரத்தில் நின்றுகொண்டு இருக்கிறார். இவர் என்ன செய்யப்போகிறார் என திகிலாக உள்ளது. கடல் சார்ந்த பதட்டத்தை உருவாக்கு வார். கப்பல், படகுகளை சுழலவைத்து வேடிக்கை பார்ப்பார்.
கேது
இவர் கன்னியில் சந்திர சாரம் எடுத்து உட்கார்ந்துள்ளார். மக்களுக்கு கொஞ்சம் சளி தொந்தரவு பிரச்சினை தருவார். நிறைய வீட்டு கடன், மனை லோன், வாகன இன்ஸால்மென்ட், காணாமல் போன கிணற்றை கண்டுபிடிக்க கடன் என மானாவாரியாக செயல்பட செய்வார். இந்த மாதம் குரு, செவ்வாய் சேர்க்கை இருப்பதால், திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.
வானிலை
இந்த ஆடி மாதம் நெருப்பு ராசிகளில் எந்தக் கிரகமுமில்லை. நீர் ராசியான கடகத்தில், நீர் கிரகமான சுக்கிரன் சென்று கொண்டுள்ளார். கூடவே காற்று கிரகமான புதனும் உள்ளார். குருபகவானும் நீர் கிரகமான விருச்சிகத்தை பார்க்கிறார். எனில், கடும் மழை பொழியுமா என்றால், அவ்வாறு பெரியளவு மழை இருக்காது. தேவையான அளவு, கட்டுப்பாடான முறையில் மழை அளவு அமையும். கடலில் ஏதேனும் சலனம், மழை போன்று தோன்றும். ஆடி மாதம் சுமார் மழை, காற்றுடன் சென்றுவிடும். எனினும் சந்திரன் கடகம், மீனம் ராசிகளில் செல்லும் நாட்களில் மட்டும் கடும் மழை பெய்யக்கூடும்.