அருட் பெரும்ஜோதி தனிபெருங்கருணை.. யோகி சிவானந்தம்

/idhalgal/om/arut-perumajyothi-thaniperukarunai-yogi-sivanandam

யற்கை தன்னை ஒருபோதும் மாசுபடுத்திக் கொள்ளாது. இயற்கையில் இயற்கையாக பிறந்த மனிதன் வளர்ந்தபின் செயற்கையோடு கைகோர்த்துக் கொண்டதன் விளைவு, இயற்கையை மாசுபடுத்தும் மகா கொடிய செயலைச் செய்துகொண்டிருக்கிறான். ஒருபுறம் ரசாயன கழிவுகள், ஒருபுறம் பிளாஸ்டிக் கழிவுகள், ஒருபுறம் மனிதகழிவுகள், இன்னொரு புறம் எலக்ட்ரானிக் கழிவுகள் இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பூமியைச் சுற்றிலும் தன்னைச் சுற்றிலும் அழிவுக்கான கழிவுகளை மலைபோல் சேர்த்து, வரப்போகும் ஆபத்தை உணராமல் குவித்துகொண்டிருக்கிறான். பற்றாக் குறைக்கு தொழிற்சாலைகளின் கழிவுகள்.

அந்த கழிவுகளை மனிதனின் வாழ்வாதார மான நீர்நிலைகளில் கலந்துவிடும் கொடிய செயலையும் ஆறறிவு படைத்த மனிதனே செய்துகொண்டிருக்கிறான். இதற்கு ஒருவன் பணத்தை கொடுக்கிறான். இன்னொருவன் அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த பாதகமான செயல்களை செய்துமுடிக்கிறான்.

விளைவு, அதாவது இயற்கை இந்த இருவரையுமே சம்ஹாரம் செய்து விடும். போதாக்குறைக்கு வருடா வருடம் நாட்டில் போகிப் பண்டிகையின் சமயத்தில் பழைய விஷயங்களை அழித்து விட்டு புதிய விஷயங் களில் தன்னை ஈடுபடுத் திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ss

அந்தக் காலத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. போகிப்பண்டிகை கொண்டாடுவதற்கு ஒரு அறிவியல் காரணமும் இருந்தது. குளிர்காலம் என்பதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். தெருவில் கிடைக்கும் குப்பை கூலங்களைக் கூட்டி குவித்து அவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

அதன்காரணமாக தீங்கிழைக்கும் கொசுக்களும் பூச்சிகளும் மடிந்துபோகும். தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்துவது ஒரு வழக்கமாக இருந்தது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்'' எனும் ஒரு கருத்தியல் உண்டு. மனமும் மாசற்று இருக்கவேண்டும். வீடும் மாசற்று இருக்கவேண்டும். பழைய குப்பகளை அகற்ற இப்படி ஒரு அறிவியல் காரணமும் இருந்தது.

ஆனால் இப்போது, குறிப்பாக 1990-ஆம் ஆண்டு அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நிகழ்கின்றபோது போகிப் பண்டிகை என்பது ஒரு பொழுதுபோக்கான விஷயமாக மாறிவ

யற்கை தன்னை ஒருபோதும் மாசுபடுத்திக் கொள்ளாது. இயற்கையில் இயற்கையாக பிறந்த மனிதன் வளர்ந்தபின் செயற்கையோடு கைகோர்த்துக் கொண்டதன் விளைவு, இயற்கையை மாசுபடுத்தும் மகா கொடிய செயலைச் செய்துகொண்டிருக்கிறான். ஒருபுறம் ரசாயன கழிவுகள், ஒருபுறம் பிளாஸ்டிக் கழிவுகள், ஒருபுறம் மனிதகழிவுகள், இன்னொரு புறம் எலக்ட்ரானிக் கழிவுகள் இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பூமியைச் சுற்றிலும் தன்னைச் சுற்றிலும் அழிவுக்கான கழிவுகளை மலைபோல் சேர்த்து, வரப்போகும் ஆபத்தை உணராமல் குவித்துகொண்டிருக்கிறான். பற்றாக் குறைக்கு தொழிற்சாலைகளின் கழிவுகள்.

அந்த கழிவுகளை மனிதனின் வாழ்வாதார மான நீர்நிலைகளில் கலந்துவிடும் கொடிய செயலையும் ஆறறிவு படைத்த மனிதனே செய்துகொண்டிருக்கிறான். இதற்கு ஒருவன் பணத்தை கொடுக்கிறான். இன்னொருவன் அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த பாதகமான செயல்களை செய்துமுடிக்கிறான்.

விளைவு, அதாவது இயற்கை இந்த இருவரையுமே சம்ஹாரம் செய்து விடும். போதாக்குறைக்கு வருடா வருடம் நாட்டில் போகிப் பண்டிகையின் சமயத்தில் பழைய விஷயங்களை அழித்து விட்டு புதிய விஷயங் களில் தன்னை ஈடுபடுத் திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ss

அந்தக் காலத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. போகிப்பண்டிகை கொண்டாடுவதற்கு ஒரு அறிவியல் காரணமும் இருந்தது. குளிர்காலம் என்பதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். தெருவில் கிடைக்கும் குப்பை கூலங்களைக் கூட்டி குவித்து அவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

அதன்காரணமாக தீங்கிழைக்கும் கொசுக்களும் பூச்சிகளும் மடிந்துபோகும். தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்துவது ஒரு வழக்கமாக இருந்தது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்'' எனும் ஒரு கருத்தியல் உண்டு. மனமும் மாசற்று இருக்கவேண்டும். வீடும் மாசற்று இருக்கவேண்டும். பழைய குப்பகளை அகற்ற இப்படி ஒரு அறிவியல் காரணமும் இருந்தது.

ஆனால் இப்போது, குறிப்பாக 1990-ஆம் ஆண்டு அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நிகழ்கின்றபோது போகிப் பண்டிகை என்பது ஒரு பொழுதுபோக்கான விஷயமாக மாறிவிட்டது. இயற்கை மாறவில்லை, இயற்கையிலுள்ள மனிதன் செயற்கைக்கு மாறியதன் விளைவு பூமியானது கொடூரமான மாசுபடுதல் என்னும் மாபெரும் கொடிய தாக்குதலுக்கு ஆளாகிவிட்டது. அதனால் பூமி வெகுவேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதற்கு "லா நினோ' மற்றும் "எல் நினோ' என்று அறிவியல் பெயர் சூட்டுகிறது நவீன விஞ்ஞானம். அதன்காரணமாக வெப்பக்காற்று வீசுகிறது என்கிறது. இதனால் அண்டார்க்டிக் கடலிலுள்ள பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது. விளைவு உறங்கிக்கொண்டிருக்கும் ஜாம்பி எனும் கொடிய வைரஸ் விழித்துக்கொள்ளும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

நாம் தெரிந்தே செய்யும் ஒவ்வொரு தவறும் மிக மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை ஆறறிவு படைத்த மனித இனம் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தங்களின் மனதிலுள்ள மாசுகளையும், புக்தியிலுள்ள மாசுகளையும், உடலில் உள்ள மாசுகளையும், பகுத்தறிவு என்னும் தீயிட்டு கொளுத்தவேண்டும். அதுவே இயற்கையை காத்து நம்மையும் காப்பாற்றும். வாழ்வியல் ஞானி அருளிச்செய்த திருக்குறளைப் பார்ப்போம்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.'

ஒருவன் தன் மனதில் குற்றமில்லாதவன் ஆக இருக்கவேண்டும். அதுவே மிகச்சிறந்த அறம். மனத்தூய்மையற்ற பிறயாவும் அறம் ஆகாது. வீணான ஆரவாரத் தன்மையாகவே கருதப்படும்.

எனவே, குப்பையை தெருவில் போட்டு எரிப்பதைத் தவிர்ப்போம். பூமி உஷ்ண மாவதைத் தடுக்க நாமும் முயற்சிப்போம்.

மனதில், புத்தியில், உடலில் தேவை யில்லாமல் தேங்கியிருக்கும் குப்பைகளை பகுத்தறிவு தீயிட்டுக் கொளுத்துவோம்.

இந்த சூழ்நிலையில் சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவால் 122 மனித உயிர்கள் பலியாகிவிட்டதாக தகவல்கள் சொல்கின்றன. பலரைக் காணவில்லை என்ற தகவலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வனங்கள் பல ஏக்கர் பரப்பளவில் தீக்கிரையாகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க மனிதனை மனிதனே கொல்லக்கூடிய கொடூர செயலுக்கு ஒருபுறம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது. மறுபுறம் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா என்று நாடுகள் போர் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து கவலைகொள்ளாத இயற்கை அன்னை தன் சீற்றத்தை காட்டும்வகையில் பூகம்ப அதிர்வுகளை பூமி முழுவதும் நிகழ்த்திக்கொண்டிருக் கிறது.

துபாயில் வரலாறு காணாத மழை. மழைநீர் வடிவதற்கு குறைந்தது 18 நாட்களாகும் என்று தகவல்கள் வருகிறது. பிரேசிலில் பெய்த கனமழையின் காரணமாக நகரமே நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சுமார் என்பது பேர் இதுவரை இறந்துவிட்டனர். இப்போதாவது நாம் விழித்துக்கொள்ளவேண்டிய அவசியம் வந்துவிட்டது. இது ஒருபுறம் இருக்க, ஏற்கெ னவே, நாம் ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ் என்ற ஒரு அறிவியல் செய்தியை பதிவிட்டு இருந்தோம். அது இப்போது விஸ்வரூபம் எடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் மனிதவளம் கொடூரமான முறையில் அழிந்துபோகும் சூழல் உருவாகும். இதைத்தொடர்ந்து ரோபோவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பொதுநிகழ்ச்சியில் ஆர்டிபிசியல் ரோபோ மக்களை வரவேற்பதும், அவர்களை வரவேற்று உபசரித்து, காபி வழங்குவதும் போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. இதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இதன் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கக் கூடிய ஆபத்தை உணராமல் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால், இந்த உணர்ச்சியற்ற ரோபோவிற்கு அரைநாள் வாடகை பத்தாயிரம் ரூபாய். இது எவ்வளவு கொடூரமான இழிவான செயல். ஏனென்றால் மனித வளம் படிப்படியாக அழிக்கப்பட்டு, மனித இனமே தனது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தமாதிரி நிகழ்வுகளுக்கு படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினால் அது சிறந்த செயலாகும். சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? அடிப்படை கல்வி ஒன்று மட்டுமே காரணம்! அது என்ன அடிப்படை கல்வி? அதுதான் அவரவர் தாய்மொழி கல்வி, தாய்வழி கல்வியாகும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு மொழியாக எத்தனைமொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கல்வியின் அடிப்படை நோக்கம் ஒழுக்கமே.

ஒழுக்கத்தைப் பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் கூறுவதைப் பார்க்கலாம்.

"சத்தியம் இன்றித் தனிஞானம் தான்இன்றி

ஒத்த விடையம் விட்டோரும் உணர்வின்றிப்

பத்தியும் இன்றிப் பரன்உண்மை

இன்றிஊன்

பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.'

உண்மை தவ ஒழுக்கம் இல்லாமல், மெய்ஞான அறிவுமில்லாத, உடலோடும், மனத்தோடும் பொருந்தியுள்ள ஐம்புலன்கள் வழிசெல்லும் ஆசையைவிட்டு விலகும் வழியை எண்ணும் நினைப்பும் இல்லாமல், பக்தியில்லாமல், எல்லாவற்றிற்கும் மேலான ஒன்று பரம்பொருள் என்ற உண்மையை அறியும் அறிவும் இல்லாமல், உண்ணும் உணவில் ஆசை வைத்து அலையும் பைத்தியக்காரர்கள் எவரும் பிராமணர் ஆகமாட்டார்கள். சுய ஒழுக்கமும், சமத்துவமும் மிகவும் உயர்ந்த பக்தியாகும். கடந்த இதழில் பிராமணர் என்பதற்கு ஒரு தனி விளக்கம் கொடுத்திருந்தோம்.

வழி தவறிய ஒரு விலங்கு, தனது இருப்பிடத்தைவிட்டு வேறொரு இருப்பிடம் செல்லும்போதுகூட அங்குள்ள மற்ற விலங்குகள் அந்த விலங்கினை அனுசரித்து அரவணைத்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட விலங்குகள் ஆறறிவுக்கு குறைவு என்று அறிவியல் கூறுகிறது. ஆறறிவும் கூறுகிறது.

ஆனால் அவை கூட்டம் கூட்டமாக சண்டை போடுவதில்லை. இது எனது இடம், அது உனது இடம் என்ற பாகுபாடு இல்லை. ஒரு வனத்தில் சிங்கங்களும், வரிக்குதிரைகளும், சிறுத்தைகளும், பல்வேறு வகை மான்களும், பல்வேறு வகை மிருகங்களும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனித இனம், ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது ஈவு இரக்கமின்றி பல உயிர்களை வெடிப் பொருட்களின் மூலமாகவும், ஏவுகணைகளின் மூலமாகவும் காவு வாங்குகிறது. போர் போர் என்று சொல்லிக்கொண்டு வன்முறை வெறியாட் டம் போடுகின்றன.

இப்படித்தான் இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி ஒரு மாபெரும் போரை நிகழ்த்தினார். முடிவில் அவர் பிணங்களின்மீது நடக்கவேண்டிய அவலம் ஏற்பட்டது. அதனைப் பார்த்து அவரது மனம் தாளொண்ணாத துயரத்தை அனுபவித்தது. அதன்பிறகே அவர் ஜீவகாருண்யத்தின் பக்கம் தனது நிலைப்பாடு கொண்டார். அதன்விளைவாக சாலையோரங்களில் மரங்களை நட்டார். உயிர்வதை தவிர்த்தார். இப்படி மனித உயிர்கள் பல நாடுகளில் போர் எனும் பெயரில் பலியாவது இயற்கைக்கும் இறைவனுக்கும் பிடிக்காத ஒன்று. இந்த பரந்த உலகத்தில் ஜீவகாருண்யத்தை, பரஸ்பர அன்பை, மிக உயர்ந்த கருணையை போற்றும் ஒரு கல்வியே நமது அடிப்படைக் கல்வி.

அதுவே தாய்மொழி கல்வி. தமிழ்வழி கல்வி. அந்த கல்வியே நமக்கு ஜீவகாருண்யத்தையும், உயர்ந்த ஒழுக்கத்தையும், மிக உயர்ந்த கருணையையும், ஒருமைப்பாட்டையும், சமதர்மத்தையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், உயிர்வதையையும் தடுப்பதாக அமைந்த ஒன்றாக இருக்கிறது.

உயிரின் மகத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், திருமந்திர சிற்பி திருமூலர் அருளிச்செய்த திருமந்திரத்தை படிக்கவேண்டும். அதில் உயிரைப் பற்றியும், உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும், மன ஆரோக்கியத்தைப் பற்றியும், இறை பக்தியைப் பற்றியும், மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியும், ஜீவகாருண்யத்தைப் பற்றியும் மிகத்தெளிவாக அருளிச் செய்துள்ளார்கள். மனமாசு அற்று இருந்தால், இனம் மாசுபடாது இருக்கும். இறைவனுடைய அருள் ஆசி எப்போதும் நம்முடனே இருக்கும் என்பதை தனது ஒவ்வொரு பாடலிலும் வலியுறுத்தியுள்ளார். திருமந்திரப் பாடல் ஒன்றை பார்ப்போம்.

"சத்தியமும் தவம் தான்அவன் ஆதலும்

எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்

ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்

பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.'

அழிவற்ற சத்தியமும், உண்மை பொருளும், மெய்யான தவமும் சிவப்பரம் பொருளே ஆகும். ஆகையால், நாம் நினைத்த படி சென்று, துன்பத்தைத் தேடித்தரும் ஐம்புலன்களையும் அடக்கி, உணர்வோடும் நினைவோடும், உயிர் உள்ளபோதே வினைத் துயர் நீங்கப் பந்த பாசங்களைவிட்டு ஒழித்தவர் பிரம்மம் (இறைத்தன்மை) ஆவார்.

அவரைப் பின்தொடர்ந்துவந்த அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜீவகாருண்யத்தையும், ஜீவ ஒழுக்கத்தையும் மிக அழகாக பதிவிட்டுள்ளார்கள். வள்ளலாரையும் கற்போம், வளமான, நலமான, ஒழுக்கத்துடன்கூடிய மகிழ்ச்சி கரமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக மாறுவோம்.

அருட்பெருஞ்சோதி.... அருட்பெருஞ்சோதி....

தனிப்பெருங்கருணை.... அருட்பெருஞ்ஜோதி....

ஒளியே தெய்வம்.... உலகே சுபிட்சம்...!

om010724
இதையும் படியுங்கள்
Subscribe