அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 7 - இரா த சக்திவேல்

/idhalgal/om/arunagirinathar-gandhar-alakram-7-ra-tha-sakthivel

மயிலேறும் பெருமான்!

முருகனின் வாகனமான மயிலின் வலிமையைச் சொல்லிச் சொல்லி பிரம்மித்திருக்கிறார் அருணகிரியார்.

பாடல்: 11

"குசைநெகி ழாவெற்றி வேலோ

னவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப்

பீலியின்கொத்

தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியில்வெண்

டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.'

பொருள்: கடிவாளத்தை இறுக்கி, கசையால் அடித்து ஓட்டப்படுகின்ற குதிரையின் வேகத் தைக் காட்டிலும், வெற்றிவேலைக் கைக்கொண்ட முருகப்பெருமா னால், தேவர் களையே கலங் கடித்த அசுரர் களுடைய வயிறும் குடலும் கலங்கும் படியான வேகத்தில் செலுத் தப்பட்டது மயில் வாகனம்.

மயில் தோகைகள் அதி வேகத்தால் அசைவதனால் உருவான காற்று மோதி, மகாமேரு மலையே அசைந் தது. மயில் எட்டுவைத்து நடக்கும்போது, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் துகளாகின.

அந்தத் துகள்களினால் நிரம்பி நீர்வற்றிப்போய் கடலும் தரையானது.

முருகனுக்கு மூன்று மயில்கள்!

முருகனுக்கு மூன்று மயில்கள் இருப்பதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன.

ஞானப்பழத்தைப் பெறுவதற்காக மயிலேறி உலகம் சுற்றினார் முருகன். அது மந்திர மயில் எனப்படுகிறது.

அசுர யுத்தத்தின்போது தேவர்களின் தலைவன் இந்திரனே மயிலாக மாறி, முருகனைச் சுமந்துசென்றாராம். இது இந்திர மயில் எனப் படுகிறது.

மூன்றாவது மயில் அசுர மயில்.

தேவர்களுக்குக் கடும் தொல்லை தந்துவந்த பத்மாசுரனை வதம்செய்யக் கிளம்பினார் முருகன். இதனால் அச்சமுற்ற பத்மாசுரன் கடலுக்கடியில் ஒரு மாமரமாய் மாறி ஒளிந்து கொண்டான். அதைக் கண்டறிந்து, மரத்தைப் பிளந்தார் முருகன். இரண்டுபட்ட பத்மாசுரன் முருகனிடம் சரணடைந்தான். இதனால் அவனின் ஒரு பகுதியை மயிலாகவும், இன்னொரு பகுதியை சேவலாகவும் மாற்றி, தன்வசமே வைத்துக் கொண்டார் முருகன். இதுவே அசுர மயில்.

மென்மையான சுபாவம்கொண்ட மயில் முருகனைச் சுமந்து பறந்தபோது மலைகள் நொறுங்கி, அந்தத் துகள்கள் நிரம்பி கடலே மேடானது என்றால், அந்தச் சமயத்தில் முருகன் சென்றது அசுர மயில்மீது. அசுரர் களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் அவ்வப் போது நடப்பது இயல்பாக இருந்ததே.

இந்த மூன்று மயில்களைத் தவிர இன்னொரு முருகனின் மயிலைப் பற்றியும் சொல்கிறது மகாபாரதம்.

"எதிரிகளை துவம்சம் செய்ய, மூவாயிரம் திறன்மிகு வீரக்களைக் கொண்ட தனஞ் ஜெயம்

மயிலேறும் பெருமான்!

முருகனின் வாகனமான மயிலின் வலிமையைச் சொல்லிச் சொல்லி பிரம்மித்திருக்கிறார் அருணகிரியார்.

பாடல்: 11

"குசைநெகி ழாவெற்றி வேலோ

னவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப்

பீலியின்கொத்

தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியில்வெண்

டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.'

பொருள்: கடிவாளத்தை இறுக்கி, கசையால் அடித்து ஓட்டப்படுகின்ற குதிரையின் வேகத் தைக் காட்டிலும், வெற்றிவேலைக் கைக்கொண்ட முருகப்பெருமா னால், தேவர் களையே கலங் கடித்த அசுரர் களுடைய வயிறும் குடலும் கலங்கும் படியான வேகத்தில் செலுத் தப்பட்டது மயில் வாகனம்.

மயில் தோகைகள் அதி வேகத்தால் அசைவதனால் உருவான காற்று மோதி, மகாமேரு மலையே அசைந் தது. மயில் எட்டுவைத்து நடக்கும்போது, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் துகளாகின.

அந்தத் துகள்களினால் நிரம்பி நீர்வற்றிப்போய் கடலும் தரையானது.

முருகனுக்கு மூன்று மயில்கள்!

முருகனுக்கு மூன்று மயில்கள் இருப்பதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன.

ஞானப்பழத்தைப் பெறுவதற்காக மயிலேறி உலகம் சுற்றினார் முருகன். அது மந்திர மயில் எனப்படுகிறது.

அசுர யுத்தத்தின்போது தேவர்களின் தலைவன் இந்திரனே மயிலாக மாறி, முருகனைச் சுமந்துசென்றாராம். இது இந்திர மயில் எனப் படுகிறது.

மூன்றாவது மயில் அசுர மயில்.

தேவர்களுக்குக் கடும் தொல்லை தந்துவந்த பத்மாசுரனை வதம்செய்யக் கிளம்பினார் முருகன். இதனால் அச்சமுற்ற பத்மாசுரன் கடலுக்கடியில் ஒரு மாமரமாய் மாறி ஒளிந்து கொண்டான். அதைக் கண்டறிந்து, மரத்தைப் பிளந்தார் முருகன். இரண்டுபட்ட பத்மாசுரன் முருகனிடம் சரணடைந்தான். இதனால் அவனின் ஒரு பகுதியை மயிலாகவும், இன்னொரு பகுதியை சேவலாகவும் மாற்றி, தன்வசமே வைத்துக் கொண்டார் முருகன். இதுவே அசுர மயில்.

மென்மையான சுபாவம்கொண்ட மயில் முருகனைச் சுமந்து பறந்தபோது மலைகள் நொறுங்கி, அந்தத் துகள்கள் நிரம்பி கடலே மேடானது என்றால், அந்தச் சமயத்தில் முருகன் சென்றது அசுர மயில்மீது. அசுரர் களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் அவ்வப் போது நடப்பது இயல்பாக இருந்ததே.

இந்த மூன்று மயில்களைத் தவிர இன்னொரு முருகனின் மயிலைப் பற்றியும் சொல்கிறது மகாபாரதம்.

"எதிரிகளை துவம்சம் செய்ய, மூவாயிரம் திறன்மிகு வீரக்களைக் கொண்ட தனஞ் ஜெயம் என்கிற படையை முருகப்பெருமானுக் குக் கொடுத்தார் சிவன். வெற்றியை மட்டுமே தரும் விசேஷ மாலை ஒன்றை மருமகன் முருகனுக் குக் கொடுத்தார் விஷ்ணு. கடம்ப மான் ஒன்றின் தோலைக் கொடுத்தார் பிரம்மன். நன்கு அலங் கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு ஈட்டியைக் கொடுத்தார் தேவர்களின் அரசன் இந்திரன். பராசக்தி மங்களகரத்தைக் குறிக்கும் ஆடை ஒன்றைக் கொடுத்தாள். ஒரு குடம் நிறைய அமுதம் கொடுத்தாள் கங்கை.

ss

கடுந்தவத்தால் நவகிரகங்களில் ஒன்றாக, "வியாழன் கிரகம்' ஆனவர் பிரகஸ்பதி. தேவர் களின் குருநாதரும் இவர்தான். (ஜோதிடத்தில் குருப்பெயர்ச்சிப் பலன்கள் பிரபலமாகப் பேசப்படுகிறதே... இது பிரகஸ்பதியின் இடப் பெயர்ச்சி குறித்தே.) முருகப்பெருமானுக்கு தண்டம் எனப்படும் தடி ஒன்றைக் கொடுத்தார் பிரகஸ்பதி. (சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட துறவிகள், தங்கள் கையில் வைத்திருக்கும் கோல்தான் தண்டம்.) சூரியன் சேவல் ஒன்றைக் கொடுத்தார். அதனால் சேவற்கொடியோன் ஆனார் முருகன். கழுகு, அழகிய சிறு மயில் ஒன்றைக் கொடுத்தது.'

இவ்வாறு மகாபாரதத்தின் சல்லிய பருவம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறகடித்த சேவல்!

முருகப் பெருமானின் வெற்றிக்கொடியான சேவல், தனது சிறகை அசைத்தபோது என்ன நடந்ததென அருணகிரியார் சொல்கிறார்.

பாடல்: 12

"படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகை யென்னுந்

தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்

துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்

இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.'

பொருள்: எதிரிகளை அழிக்கும் ஆற்றல்

பொருந்திய படைகளைக் கொண்ட முருகப்

பெருமானிடம் பணிந்த, முருகனது

அருளால் வலிமை மட்டுப்படுத்தி வைக்கப்

பட்டிருக்கிற ஜெயக்கொடியான சேவற்கொடி

யின் சேவலானது, சிறகை அடித்துக்கொள்ளும்

போது சமுத்திரம் கிழிந்து உடைபட்டது;

அண்டமாகிய உலகத்தின் முகடுகள் உதிர்ந்தன; நடசத்திரக் கூட்டங்கள் நிலை தடுமாறின; குன்றங்களாகிய மலைகளும், மகாமேரு மலையும் பிளவுபட்டன.

கொக்கரக்கோ என கூவுவது ஏன்?

முருகனின் வேல் வீச்சால் இருகூறான அசுரன் பத்மாசுரன் மயிலாகவும் சேவலாக வும் மாறி, கோபத்துடன் முருகனைத் தாக்க முயன்றான். ஆனால் முருகன் அவற்றின்மீது அன்பு காட்டவும், அவை நெகிழ்ந்தன.

தனது தேருக்குக் கொடி யாக இருக்கும்படி சேவலை ஆசிர்வதித் தார். தன் வாழ்க்கைக்கு விடியல் கிடைத்து விட்டதாக "கொக்க ரக்கோ' எனக் கூவி மகிழ்ந் தது சேவல்.

அசுரனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேவர்களை மீட்கச் செய்த முருகன், வருண பகவானை அழைத்து, "உலகத்தின் இறுதிநாளில் உலகத்தை நீ எப்படி உண்பாயோ... அதுபோல சூரபத்மனின் நகரமாகிய அசுரர்கள் வாழும் மகேந்திரபுரத்தை உண்'' எனச் சொன்னார்.

அப்படியே வருணன் கடும் மழையாகப் பொழிந்து அந்நகரை அழித்தார்.

பத்மாசுரனை அழிக்கும் போரில் முருகனுக்கு மயில்வாகனமாக உருமாறியிருந்தார் இந்திரன். அந்த இந்திர மயிலைவிட்டு இறங்கி, பத்மாசுர மயில்மீது ஏறியமர்ந்து திருச்செந்தூர் புகுந்தார் முருகப்பெருமான்.

சேவல் "கொக்கரக்கோ' என்று கூவுவதன் பின்ணணி என்ன என்பதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன.

மலையாகவும் கிரௌஞ்சப் பறவையாகவும் உருமாறி இம்சித்துவந்த கிரௌஞ்ச அரக்கன் அகத்தியரின் சாபத்தால் ரூபம் மாறமுடியாதபடி மலையாகவே நின்றான். இந்த மலை கர்நாடகத்தில் துளுமொழி இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. இந்த மலைக்குப் பின்புறம் கடலில் மகேந்திரபுரம் தீவில் சூரபத்மன் (பத்மாசுரன்) அரண்மனை கட்டி ஆண்டுவந்தான். அவனும் தேவர்களுக்குக் கொடுமைபுரிந்தவன். அவனுடைய அரண் மனைக்குப் பாதுகாவலாக கிரௌஞ்ச அரக்க மலை இருந்தது. முதற்போரில் கிரௌஞ்ச மலையை நொறுக்கிய முருகன், அதன்பிறகு பத்மாசுரனைப் பிளந்து மயிலாகவும், சேவலாகவும் ஆக்கினார்.

அந்த மகிழ்ச்சியில்தான் "கொக்கரக்கோ' என சேவல் கூவியது.

"கொக்கு' என்றால் துளுவ மொழியில் மாமரத்தைக் குறிக்கும்; "அறு' என்றல் சூரனை இரண்டாக முருகன் அறுத்த தைக் குறிக்கும்; "கோ' என்றால் அரசன், தலைவன், இறைவனைக் குறிக்கும். "மாமரத்தைப் பிளந்த அரசனே' எனப் பொருள் வரும்படியாக, சேவலான சூரன் "கொக்கரக்கோ' என கூவுவ தாகச் சொல்லப்படுகிறது.

யாமிருக்க பயமேன்!

திசைகள் செவிடாகுமா? ஆகும்; அதுவும் எட்டுத் திசைகளும் செவிடானது என்கிறார் அருணகிரியார்.

பாடல்: 13

"ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணி சேர்

திருவரைக் கிங்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்

வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப்

பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே.'

பொருள்: ஒப்பற்ற பரமசிவனிடத்தில் பாக முடையாளாகி, அவரின் ஒருபாதியான பார்வதி யின் மகனான குமரன், தன் இடுப்பில் அணிந் திருந்த அரைஞாண்கொடியின் மணிச் சத்தங் களைக் கேட்டமாத்திரத்தில் அசுரர்கள் திடுக் கிட்டு அஞ்சினார்கள்; திசைகள் எட்டின் காது களும் அடைத்தன; அந்த திசைகளிலிருந்த மலை களும், தங்கநிற சிகரம் கொண்ட மேருமலை யும் அதிர்ந்தன. இதனால் அரக்கர்களுக்கு அஞ்சித் திரிந்த தேவர்களின் அரக்க பயம் நீங்கியது.

மதுரையின் பஞ்சம் தீர்த்த மேருமலை!

மேருமலை என்பது புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் மலை.

மகாமேரு என்றும் மந்திரமலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது. இமயமலை யில் இருப்பதாகக் கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமுதம் எடுக்க பாற்கடலைக் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும், இம்மலையின் கீழுள்ள பாதாள உலகிலிருக்கும் நாகலோகத்தில் வசிக்கும் பாம்பினங்களின் அரசியான வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.

தெய்வலோகங்களும், தேவலோகமும் மேருமலையின் உச்சியில் இருப்பதாக இந்துமத நம்பிக்கை. பூமிக்குள்ளிருந்து மிக ஆழத்தில் உருவாகி, பூமிக்கு வெளியே உயர்ந்த மலைச் சிகரமாக மேரு உள்ளது. சூரிய உதயத்தின் போது நிஜமான பெரும் தங்கப் பாறை அடுக்கு களாகவே மேருவின் சிகரம் ஜொலிக்கும் என்கிறார்கள் யாத்ரீகர்கள். ஆனால் பயணமாக அம்மலைக்குச் செல்ல வழியில்லை. இமய மலைத் தொடரில் திபெத் நாட்டின் பகுதி யிலுள்ள மானசரோவர் ஏரிக்கரையிலிருந்து பார்த்தால் பொன்மயமாக ஜொலிக்கிறது மேருவின் சிகரம். (பௌத்தர்களுக்கும் மேரு புனிதமான மலையாக உள்ளது.)

உக்கிரபாண்டிய மன்னன் மதுரையை ஆட்சிசெய்தபோது பஞ்சம் ஏற்பட, சிவனின் ஆலோசனையால் மேருமலை சென்று, அங்கிருந்த தங்கக் களஞ்சியத்திலிருந்து ஓரளவு தக்கத்தை எடுத்து வந்து மதுரை மக்களின் பசி போக்கினான் என திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய சிறப்புக்குரியது மேருமலை.

"மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி

மேவுமதன் மேலுலகில் வீறுமர சாட்சி

சேருமதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி

செப்பலரி தாம்இதற்கென் றப்பன்அருள் சாட்சி.'

(வள்ளலாரின் "திருவருட்பா' கண்புருவப் பூட்டு- 6)

மேருமலையின் உச்சி உயர்ந்து தெரிகிறது. அவ்வுச்சியில் உலகிலேயே சிறப்புவாய்ந்த அரசாட்சி நடக்கிறது. அங்கே கண்ணில் தெரிகிறது பல நிகழ்வுகள் காட்சிகளாக. அவற்றை விளக்கிச் சொல்லவியலாது. அந்த ஆட்சியின் காட்சிக்கு சாட்சி சிவனருளின் ஆசி.

இவ்வாறு மேருமலைச் சிகரம் குறித்து வள்ளலார் பாடியிருக்கிறார்.

"முருகனின் சேவற்கொடி சிறகுகள் படபடத்ததால் மேரு அசைந்தது' என அருணகிரியார் சொல்லியுள்ளார்.

இதன் மூலம் முருகப்பெருமானின் குறும்பும், வலிமையும் பக்தர்களை வியக்கவைக்கிறது.

கந்தா காப்பாற்று!

"ஐந்து பேர்களும் சேர்ந்து கூத்தாடுகிறார்கள்; அவர்களிடமிருந்து, என்னை மீட்டெடு' என கந்தனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார் அருணகிரியார்.

பாடல்: 14

"குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த

இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்குவெற்பும்

அப்பாதி யாய்விழ மேருங் குலங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.'

பொருள்: எட்டுத் திக்குகளிலும் இருந்த எட்டு மலைகளையும் பாதியாய் இடிந்துவிழச்செய்த, மேருமலை குலுங்கச் செய்த, தேவர்களை மகிழச்செய்த, தனது ஈராறு கரங்களால் கையொலி எழுப்பிய சண்முகனே! இந்த உலகத்தில் பாசம் எனும் வாழ்க்கையில் ஐம்புலன்கள் கூத்தாடுகிறன்றன; அந்தப் புலன்களின் பிடியில் சிக்கிக்கிடக்கிற, அதிலேயே உழன்றுகொண்டிருக்கிற, பாசமுள்ள நெஞ்சம்கொண்ட என்னை அதிலிருந்து மீட்டு ஈடேற்று.

இப்படித்தான் அமைகிறது பந்தபாசம் ஒரு காட்டில் குடில் அமைத்துத் தவமிருந்து வந்தார் முனிவர். குடிலுக்குள் எலித் தொல்லை அதிகமிருந்தது. எலிகளை அழிக்க பூனை ஒன்றை வளர்த்தார். பூனைக்கு உணவு வேண்டுமே. அதற் காக பசுமாடு ஒன்றை வாங்கிப் பால் கறந்து பூனைக்குத் தர ஏற்பாடுகள் செய்து, பசுமாடு வாக்கி னார். பசுவுக்குப் புல் கொண்டு வரவும், பசுவைப் பராமரிக்க வும் ஒரு ஆள் வேண்டுமே.

அதற்காக ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். முனிவருக்கு அந்தப் பெண்ணின்மீது மோகம் உண்டானது.

விளைவு... பற்றுகளை அறுத்த முனிவர், இல்லற பந்தத்திற்கு ஆட்பட்டார். ஒன்றின் தொடர்ச்சியாக; மற்றொன்று ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக இல்லற வாழ்க்கையில் ஈடுபடு கிறான் மனிதன்.

ஐம்புலன்களின் செயல்பாடுகளால் உண்டாகும் பந்தமும், பாசமும் விட்டொழிக்க முடியாததாக இருக்கிறது. அதனால்தான், "கூத்தாடும் ஐம்புலன்களின் பிடியில் சிக்கிக்கிடக்கிற என்னை மீட்டெடு' என முருகப் பெருமானிடம் கோரிக்கை வைக்கிறார் அருணகிரியார்.

(பாட்டு வரும்)

om011224
இதையும் படியுங்கள்
Subscribe