ஆருத்ரா தரிசனம்- 6-1-2023

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 28-12-2022 அன்று கொடியேற்றம் தொடங்கி நடராஜரின் ஆருத்ரா தரிச னம் காண்பதுவரை பத்து நாட்களும் சிதம்பரத்தில் விழாக்கோலம்தான்.

அம்பலவாணனுக்கு அபிஷேகம்

திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபி ஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதி ரையில் நடைபெறும் திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷே கம் நடக்கும். பிற திரு மஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

Advertisment

பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் பகலில் தங்கம், வெள்ளி மஞ்சங்களிலும், இரவு முறையே சந்திரப் பிரபை, சூரிய பிரபை, பூத வாகனம், சகோதர தரிசனம், யானை வாகனம், கைலாச வாகனம் மற்றும் குதிரை வாகனங் களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

ஆருத்ரா தரிசனத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகலில் நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்.

சிதம்பரம் ஆலயத்தில் சந்திர மௌலீஸ்வரருக்கு தினமும் ஆறுகால பூஜைகள் வெகுவிமரிசையாக நடக்கும். அப்போது கனகசபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்தபின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

Advertisment

natt

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் 9-ஆம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த்திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள் ளாக் காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் உலாவரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் திருவெம்பாவை தீபாராதனை முடிந்து ஆயிரங்கால் மண்டபம் வந்தடைய நள்ளிரவாகி விடுவதால், இரவு முழுவதும் நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில்தான் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந் தத் தாண்டவமாடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருள்வார்கள். அங்கு இரவு கடாபிஷேகம் நடைபெறும். உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம்தான்.

தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷகால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம்.

மூன்று வழிபாடு

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார்.

அருவமென்பது உருவ மற்றநிலை. உருவ மென்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை. அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்தநிலை. இம்மூன்று நிலைகளுமுள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவ நிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவ நிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள் ளனர்.

ஆனந்த நடனம் சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனையறிந்த இந்திராதி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யு முனிவர் என்று அனைவரும் கூடினர்.

அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்திகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும், "சிவசிவ' என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு ஏந்தி, நாகாபரணம் அணிந்து நின்றார்.

வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயமளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக்கொண்டி ருக்கிறார்.

அங்கப் பிரதட்சணம் செய்த அப்பர் சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம் கோவிலின் நான்கு கோபுரவாசல் வழியாக நுழைந்துள்ளனர். கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கில் திருநாவுக்கரசரும், வடக்கில் சுந்தரரும், தெற்கில் திருஞானசம்பந்தரும் வந்ததாகச் சொல்வர். இவர்களில் அப்பர் எனப் பட்ட நாவுக்கரசர், தேரோடும் வீதிகளில் அங்கப் பிரதட்சணம் செய்து நடராஜரை வழிபட்டார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம், திருநீலகண்டர், சேந்தனார் போன்ற அடியார்களின் வாழ்க்கையோடும் இக்கோவில் தொடர்புடையது.

பஞ்ச சபைகள்

ரத்தின சபை- திருவாலங்காடு.

கனகசபை- சிதம்பரம்.

ரஜிதசபை (வெள்ளி சபை)- மதுரை.

தாமிரசபை- திருநெல்வேலி.

சித்திரசபை- திருக்குற்றாலம்.

பஞ்ச தாண்டவத் தலங்கள்

ஆனந்த தாண்டவம்- சிதம்பரம், பேரூர்.

அஜபா தாண்டவம்- திருவாரூர்.

சுந்தர தாண்டவம்- மதுரை.

ஊர்த்துவ தாண்டவம்- அவிநாசி.

பிரம்ம தாண்டவம்- திருமுருகன்பூண்டி.

காட்டிடை ஆடும் கடவுள்

திருவாலங்காடு- ஆலங்காடு.

திருவெண்பாக்கம்- இலந்தைக்காடு.

திருவெவ்வூர்- ஈக்காடு.

திருப்பாரூர்- மூங்கிற்காடு.

திருவிற்கோலம்- தர்ப்பைக்காடு.

மனோதைரியம் கூடும்

ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு சிதம்பரம், திருவாரூர் போன்ற திருத் தலங்களில் ஆனித் திருமஞ்சனம் சிறப் பிப்பதுபோல் மற்ற சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் போற்றப்படுகிறது. இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழும் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

பொதுவாக கோவில்கள் என்றால் திருவிழா சமயங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். சில திருக்கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் புது தீட்சைகளில் ஒருவரான ராஜா தீக்ஷிதர் நித்தியப்படி பக்தர்களின் பசிபோக்கி வருகிறார். இயன்றவர்களிடம் உதவிபெற்று இப்பணியைச் செய்துவருகிறார். சிதம்பரம் நடராஜர் பொது தீட்சிதர்கள் சார்பில், காலை- இரவு இருவேளையும் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அமைப்பை நிறுவி, அதன்மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இதில் பயன் பெறுகிறார்கள்.

"தில்லைவாழ் நடராஜனே

எல்லையில்லா புகழ்கொண்டவனே

இல்லையென்னாது அருள்புரிபவனே

தொல்லை வினை இருள் அறுப்பவனே

அல்லல் களைந்து ஆனந்தம் தருபவனே

எல்லாம் துறந்து உன்பாதம் பணிந்தோம்.'