மேஷம்
இம்மாதம் முழுவதும் மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் சஞ்சாரம். ஜென்ம ராகு, சப்தம கேது. தேகநலத்தில் அவ்வப்போது வைத்தியச்செலவுகள் வந்து விலகும். கணவர் அல்லது மனைவிவகை உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படலாம். இம்மாதம் 22-ஆம் தேதி மிக முக்கிய கிரகப்பெயர்ச்சியில் ஒன்றான குருப்பெயர்ச்சி உண்டாகின்றது. மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தது'' என்பது பாடல். எனவே குரு ஜென்ம ராசிக்கு வந்ததும் பாடாய்ப்படுத்தி விடுவாரோ என்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படலாம். பொதுவாக குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடங்கள்தான் சிறப்பு. அதுதான் குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். பிள்ளைகளால் நன்மதிப்பு உண்டாகும். மனக்கவலை அகலும். கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழிற்கூட்டாளிகளால் நிம்மதி ஏற்படும். குலதெய்வ வழிபாடு பலன்தரும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். தந்தைவழியில் வர வேண்டிய உதவிகளும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். 12-ஆமிடத்து ராகு அலைச்சல் திரிச்சல்களைத் தரும். 2-க்குடைய புதனும் 12-ல் இருக்கிறார். செலவுகள் சற்று அதிகமாகக் காணப்படலாம். இம்மாதம் 22-ஆம் தேதி குரு உங்கள் ராசிக்கு 12-ஆமிடமான மேஷ ராசிக்கு மாறுகிறார். அவர் 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். குடியிருப்புவகையில் இடமாற்றம் உண்டாகலாம். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். ஒரு சிலர் புதிய வீடு கட்டி. குடியேறலாம். தேக நலத்தில் வைத்தியச் செலவுகள் விலகும். புதுமனை அல்லது புதிய வண்டி வாகனத்திற்கு கடனுதவியும் கிடைக்கும். கடன் சற்று அதிகமாகவே ஏற்படலாம். அல்லது திருஷ்டி கண்ணேறு போன்றவற்றையும் சந்திக்க நேரும். சுயதொழில் புரிவோருக்கு போட்டி பொறாமைகள் உண்டாகும். அவற்றை நினைத்து மனதில் வருத்தம் நிம்மதிக்குறைவு போன்ற பலன்களை எதிர்கொள்ள லாம். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந் தால் திடீர் ராஜயோகத்திற்கும் இட முண்டு. 9-க்குடைய சனி 10-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் வழிநடத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அட்டமத்துச் சனி நடக்கிறது. 2023 டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி உண்டாகிறது. தற்சமயம் சனி கும்ப ராசியில் அதிசாரமாக பெயர்ச்சியாகியுள்ளார். ராசிநாதன் புதன் 11-ஆமிடத்தில் இருக்கிறார். காரிய ஜெயம் உண்டாகும். 7-ஆம் தேதிமுதல் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி. சில நேரம் விரயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை பெறுவதால் அவற்றை சமாளி
மேஷம்
இம்மாதம் முழுவதும் மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் சஞ்சாரம். ஜென்ம ராகு, சப்தம கேது. தேகநலத்தில் அவ்வப்போது வைத்தியச்செலவுகள் வந்து விலகும். கணவர் அல்லது மனைவிவகை உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படலாம். இம்மாதம் 22-ஆம் தேதி மிக முக்கிய கிரகப்பெயர்ச்சியில் ஒன்றான குருப்பெயர்ச்சி உண்டாகின்றது. மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தது'' என்பது பாடல். எனவே குரு ஜென்ம ராசிக்கு வந்ததும் பாடாய்ப்படுத்தி விடுவாரோ என்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படலாம். பொதுவாக குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடங்கள்தான் சிறப்பு. அதுதான் குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். பிள்ளைகளால் நன்மதிப்பு உண்டாகும். மனக்கவலை அகலும். கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழிற்கூட்டாளிகளால் நிம்மதி ஏற்படும். குலதெய்வ வழிபாடு பலன்தரும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். தந்தைவழியில் வர வேண்டிய உதவிகளும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். 12-ஆமிடத்து ராகு அலைச்சல் திரிச்சல்களைத் தரும். 2-க்குடைய புதனும் 12-ல் இருக்கிறார். செலவுகள் சற்று அதிகமாகக் காணப்படலாம். இம்மாதம் 22-ஆம் தேதி குரு உங்கள் ராசிக்கு 12-ஆமிடமான மேஷ ராசிக்கு மாறுகிறார். அவர் 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். குடியிருப்புவகையில் இடமாற்றம் உண்டாகலாம். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். ஒரு சிலர் புதிய வீடு கட்டி. குடியேறலாம். தேக நலத்தில் வைத்தியச் செலவுகள் விலகும். புதுமனை அல்லது புதிய வண்டி வாகனத்திற்கு கடனுதவியும் கிடைக்கும். கடன் சற்று அதிகமாகவே ஏற்படலாம். அல்லது திருஷ்டி கண்ணேறு போன்றவற்றையும் சந்திக்க நேரும். சுயதொழில் புரிவோருக்கு போட்டி பொறாமைகள் உண்டாகும். அவற்றை நினைத்து மனதில் வருத்தம் நிம்மதிக்குறைவு போன்ற பலன்களை எதிர்கொள்ள லாம். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந் தால் திடீர் ராஜயோகத்திற்கும் இட முண்டு. 9-க்குடைய சனி 10-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் வழிநடத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அட்டமத்துச் சனி நடக்கிறது. 2023 டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி உண்டாகிறது. தற்சமயம் சனி கும்ப ராசியில் அதிசாரமாக பெயர்ச்சியாகியுள்ளார். ராசிநாதன் புதன் 11-ஆமிடத்தில் இருக்கிறார். காரிய ஜெயம் உண்டாகும். 7-ஆம் தேதிமுதல் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி. சில நேரம் விரயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை பெறுவதால் அவற்றை சமாளித்துவிடலாம். இம்மாதம் 22-ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் குருவுக்கு நல்ல இடங்கள். அங்கு வரும் குருபகவான் மிதுன ராசிக்கு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல்படுத்தலாம். பிள்ளைகள்வகையில் நல்லவை நடைபெறும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமணயோகம் கூடிவரும் திருமணமான தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் அன்பும் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேருவர்.
கடகம்
கடக ராசிக்கு 7-க்குடைய சனி கடந்த மாதம் (மார்ச் 29) அதிசாரமாக கும்ப ராசிக்கு மாறியுள்ளார். இதை முழுமையான அட்டமத்துச் சனியாக எடுத்துக்கொள்ளமுடியாது. டிசம்பர் 2023-ல்தான் கடக ராசியினருக்கு அட்டமத்துச் சனி தன் முழுமையான பலனைச் செய்வார். இம்மாதம் 22-ஆம் தேதி கடக ராசிக்கு 9-ல் ஆட்சியாக இருந்த குரு பத்தாமிடத்துக்கு மாறுகிறார். "பத்தாமிடத்து குரு பதிமாறச் செய்யும்' என்பது ஜோதிடமொழி. ஆனால் இங்கு குரு 9-க்குடையவர். அவர் 10-ல் மாறுவது தர்மகர்மாதிபதி யோகம் என்ற ஒன்றைக் குறிப்பதால் 10-ல் வந்துள்ள குரு கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம். அவர் 2-ஆமிடம், 4-ஆமிடம் 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் திருப்தி உண்டாகும். தனவரவும் தாராளமாக ஏற்படும். தாய் சுகம், தனசுகம் தெளிவாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய வீடுகட்டிக் குடி போகலாம். கிரகப் பிரவேசம் செய்யலாம். அதற்கான வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் வாங்கலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வேலை மற்றும் உத்தியோகத்திலும் உயர்வுக்கு இடமுண்டு. அதேசமயம் போட்டிகளுக்கும் இடமுண்டு.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் இம்மாதம் 14-ஆம் தேதிமுதல் 9-ல் உச்சமாகப் பயணிக்கிறார். ராசிநாதன் உச்சம் பெறுவது ஒரு பலம். தேவைகள் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் கட்டுப்படும். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு இம்மாதம் 22-ம் தேதிமுதல் 9-ஆமிடத்துக்கு மாறுகிறார். "அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்துக் குரு' என்பது ஜோதிடப் பழமொழி. இந்த குருபெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். ஒன்றா மிடம், 3-ஆமிடம், 5-ஆமிடங்களை குரு பார்க்கிறார். திறமையும் செயல்பாடும் சிறந்து விளங்கும். கீர்த்தி, புகழ் பெருமை ஏற்படும். சகோதர சகாயம் உண்டாகும். நண்பர்களினால் நல்லுதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன் மதிப்பையும் பெறலாம். உத்தியோக உயர்வுக்கு இட முண்டு, திருமண மாகி பல வருடம் வாரிசு இல்லாமல் தவிப்போருக்கு 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வாரிசு யோகத்தைத் தருவார். வாரிசு உள்ளவர்களுக்கு நல்வாழ்வும் கைகூடும். மனதில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பெரிதாக பாதிக்காது. இம்மாதம் 14-ஆம் முதல் 12-க்குடைய சூரியன் 8-ல் உச்சமாக மாறுகிறார். குரு ராசியைப் பார்த்த பெருமையால், இதுவரை எப்படியோ குடும்பத் திலும் தொழில் வகையிலும் ஏற்பட்ட தொந்தரவுகளைத் தயக்கமின்றி சமாளித்தீர்கள். இம்மாதம் 7-க்குடைய குரு 8-ல் மறைகிறார். அவர் 2-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடங் களைப் பார்க்கிறார். குரு 8-ல் மறைவதால், எதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்ற மனக்கலக்கம் தோன்றும். கணவர் அல்லது மனைவி வழியில் சங்கடங்கள் உண்டாகும், 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அலைச்சல், ஆதாயமற்ற பயணத்தையும், வீண் விரயத்தை யும் தருவார். அதேசமயம் 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் வழிவகை உண்டாகும். இறைக்கிற கிணறு தானே ஊறும். செலவும் உண்டு; வரவும் உண்டு, 4-க்குடைய குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் தேக நலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம், அக்கறை உண்டாகும். வாகனப் பரிமாற்றத்திற்கும் இடமுண்டு.
துலாம்
துலா ராசிக்கு இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படும். குருப்பெயர்ச்சி ஜாக்பாட் அடித்த மாதிரியான யோகத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை கிணற்றில் போட்ட கல் மாதிரி ஒரு செயலும் நடைபெறாமல் தத்தளித்த துலா ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி அதிர்ஷடத்தை அள்ளித் தருவார். 7-ல் வரும் குரு கணவன்- மனைவிக்குள் அன்யோன்யத்தை தரும். தோஷத்தினால் தள்ளிப்போன திருமணத்தை நடத்தித் தருவார். குரு 1-ஆமிடம், 3-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். மேலே கூறியதுபோல குடத்துக்குள் இருந்த விளக்காக இருந்த நீங்கள் குன்றின்மேல் ஏற்றிய தீபமாக ஒளிரலாம். செய்தொழிலில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தினருக்கு வருமான உயர்வு ஏற்படும். எதையும் சமாளிக்கும் தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை பிறக்கும் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளால் நன்மையும் ஆதாய மும் உண்டாகும். தொழில் மேன்மை, காரிய ஜெயம், லாபம், முன்னேற்றம் போன்றவற்றுக் கும் இடமுண்டு. 30-ஆம் தேதிமுதல் குரு அஸ்த மன நிவர்த்தியாவதால் உங்கள் வாழ்விலும் ஒளி தீபமேற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். மாத முற்பாதியில் 10-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 14-ஆம் தேதிமுதல் 6-ல் மறைவு, உச்சம் பெறுகிறார். ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 6-ஆமிடத்து ராகு சத்ரு வகையில் போட்டி பொறாமைகளை விலக்கு வார். இம்மாதம் 22-ஆம் தேதிமுதல் 2, 5-க்கு டைய குரு 6-ல் மாறுகிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறை, மனத்தில் மகிழ்ச்சிக் குறைவு போன்றவற்றைச் சந்திக்கலாம். என்றாலும் குரு 2-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங்க ளைப் பார்க்கிறார். 10-ஆமிடம் தொழில் ஸ்தானம். சுயதொழில் புரிவோருக்கு தொழில் முயற்சிகள் வெற்றிபெறும். அதேசமயம் வரவும் செலவும் சரிசமமாக நிகழும் என்பதால் லாப நோக்கம் குறையும். 12-ஆமிடம், விரய ஸ்தானம். அதைப் பார்க்கும் குரு செலவுகளை அதிகமாக்கு வார். அதாவது தொழில் இயங்கும். லாப முன்னேற்றம் தடைப்படும். நஷ்டத்திற்கு இடமில்லை. 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்பத்தில் நிம்மதியைத் தருவார். குடும்பத்தினர் உங்கள்மீது மதிப்பும் மரியாதை யும் செலுத்துவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு 2-ல் இருந்த சனி கடந்த மாதம் 29-ல் கும்ப ராசிக்கு மாறியிருக்கிறார். இது அதிசாரப் பெயர்ச்சி. இந்த வருடம் டிசம்பர் 2023-ல்தான் சனிப்பெயர்ச்சி. அப்பொழுதான் தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நிறைவடைகிறது. இம்மாதம் 22-ல் தனுசு ராசிநாதன் குரு 4--ருந்து 5-ஆம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 5-ஆமிடம் திரிகோண ஸ்தானம். ஏழரைச்சனியின் ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை ஏமாற்றம், கவலை, மன நிம்மதிக்குறைவு போன்ற பலன்களை சந்தித்தவர்கள் இந்த வருடம் முடியும் ஏழரைச் சனி பல நன்மைகளைத்தரும். அதற்கு முன்னதாக யானை வரும் பின்னே மணி ஓசைவரும் முன்னே என்பதுபோல, இம்மாதம் வரும் குருப்பெயர்ச்சி பெரியளவில் நல்ல முன்னேற் றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. குரு 1-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். ராசிநாதனே ராசியைப் பார்ப்பது சிறப்பு. வேலையில் திறம்பட செயல்படலாம். முன்னேற்றம் காணலாம். சமயோசதமாகவும் செயல்படலாம். ஆன்மிக யாத்திரையும், இஷ்டதெய்வ பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம். தந்தைவழியே ஆதாயம், அனு கூலம் பெறலாம். உத்தியோக உயர்வால் ஊதிய உயர்வும் பெறலாம். செய்தொழிலும் லாபம் முன்னேற்றகரமாக அமையும்.
மகரம்
மகர ராசிக்கு இந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்படும். சனிப்பெயர்ச்சியால் 2-ஆமிடத்துக்கு மாறுவார். இந்த மாதம் 22-ல் 3-ஆமிடத்து குரு 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். அங்கு வரும் குரு புதிய வாகனம் அல்லது வாகனப் பரிவாற் றத்தை உண்டாக்குவார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியோகம் சிறக்கும். 4-ல் வரும் குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங் களைப் பார்க்கிறார். வசதி வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத கவலை ஒருசிலருக்கு நிலவலாம். அதாவது எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலைபோல என்று கூறுவது மாதிரி மனச்சஞ்சலம் ஏற்படும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வாழ்க்கையிலும் தொழிலிலும் ஒரு முன்னேற்றத்தைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். தொழில் வளத்தைப் பெருக்கு வதற்காக கடனுதவியையும் நாடலாம். அரசு உத்தியோகத்தினர் பதவியில் உயர்வைச் சந்திக்க லாம். ஒருசில நேரம் வீண் அவப்பெயருக்கு இடமுண்டு என்பதால் கவனமுடன் செயல் படுவது அவசியம். ஒருசிலருக்கு இடப் பெயர்ச்சி ஏற்படும். வீண் அலைச்சல் திரிச்சல் களும் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி கடந்த மாதம் 29-ல் ஜென்ம ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சியாக மாறி யிருக்கிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம்தான் சனிப்பெயர்ச்சி. அதிசாரத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. இதுவரை 2-ல் நின்ற குரு இம்மாதம் 22-ம்தேதிமுதல் 3-மிடத்துக்கு மாறுகிறார். 3-ல் வரும் குரு தைரிய வீர்ய பராக்கிரமத்தைத் தருவார். வேண்டிய நேரத்தில் சகாயத்திற்கும் குறைவு ஏற்படாது, நண்பர்கள்வகையில் உதவியும் கிடைக்கும். குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் பெருமையும் அனு கூலமும் உண்டாகும். கணவரின் உத்தியோகத்தால் பொருளாதார உயர்வுக்கும் இடமுண்டு, தகப்பனாருக்கு தேகநலத்தில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக சாதகமான நிகழ்வுகள் நிகழும். பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி ஏற்படும். மூத்த சகோதர- சகோதரிகளுக்கு சுபநிகழ்வுகள் அமையும். அவர்களின் அனுசரணையால் காரியத்தை சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும்.
மீனம்
"ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறை வைத்தது' என்பது பாடல். அது உங்கள் விஷயத்தில் நடந்துவிட்டது என கூறலாம். என்னதான் குரு ராசிநாதன் என்றாலும், சுதந்திரப் பறவையாக இருந்த உங்களை சிறைப் பறவையாக கடந்த ஒரு வருடம் ஆட்டிப் படைத்தார் என்பதில் ஐயம் இல்லை. வீண் அவப்பெயர், இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்பட்டது. இப்போது 2-ஆமிடத்துக்கு குரு மாறுகிறார். 2, 5, 7, 9, 11-ஆமிடங்கள் குருவுக்கு மிக நல்ல இடங்கள், அங்கு வரும் குரு பொருளாதாரத்தில் உயர்வு, தனப்ராப்தி, குடும்பத்தில் நன்மதிப்பு போன்றவற்றைத் தருவார். 2-ஆமிடத்து குரு 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 6-ஆமிடம் ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். தேகநலத்தில் ஒருசிலநேரம் சோர்வு, களைப்பைத் தரும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைத்து காரியத்தேவைகள் நிறைவேறும். சுயதொழில் புரிவோருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தனியார் துறையினருக்கு வேலையில் இடமாற்றமும் உயர்வும் அமையும். ஜனன ஜாதகத்தில் தசாபுக்தி சாதகமாக இருந்தால் திடீர் அதிர்ஷ்டத்திற்கும் இடமுண்டு.
அலைபேசி: 99440 02365