மது தமிழர்களின் மரபியல் வாழ்வில் பல விசேஷங்களும் வழிபாடுகளும் வகுக்கப்பட்டு இருந்தாலும் உணர்வுரீதியாகவும் மனரீதியாகவும் அணுகப்படும் ஒரு வாழ்வியல் வழிபாடுதான் அமாவாசை. வருடத்தின் 12 மாதங்களிலும் அமாவாசைகள் அனுஷ்டிக்கப்பட்டாலும் மிக முக்கியமாக மூன்று அமாவாசைகள் வழிபடப்படுகின்றது. அவை; ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசைகள் ஆகும்.

எந்த ஒன்றும் இல்லாததில் இருந்தே தோன்றுகின்றது என்பது பிரபஞ்ச விதி. அதேபோல் ஒளி இல்லாமல் உதயமாகும் அமாவாசை திதியை நம் முன்னோர்கள் சிரம் மேற்கொண்டு வழிபாட்டுக்குரிய திதியாக அமைத்துக் கொண்டார்கள்.

ff

அன்பு காரகனாகிய சூரியன் மனோகாரகன் ஆகிய சந்திரனுடன் பூரணமாக கலந்து ஏதுமற்ற நிலையை அடைவதே இருளும் அருளும் நிறைந்த அமாவாசை தினமாகும் நமது இந்துக்களின் மரபியல் வாழ்வின் பிரகாரம் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். தைமுதல் ஆணி வரையிலுமுள்ள மாதத்தை உத்தராயன காலம் என்றும்; ஆடிமுதல் மார்கழி வரையிலுள்ள காலத்தை தட்சிணாயன காலம் என்றும் வரையறுத்துள்ளார்கள். உத்தராயன காலம் ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதனால் தை அமாவாசையும் தட்சிணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதனால் ஆடி அமாவாசையும் மேற்கொள்ளப்படுகின்றது. அன்று திதி தர்ப்பணம் பிதூர் வழிபாடுகளுக்கு ஏற்ற தினங்கள் என சாஸ்திரங்களும் நிகண்டுகளும் எடுத்துரைக்கின்றது.

வாழ்வியல் வழக்கப்படி நம் முன்னோர்கள் ஆடி மாத அமாவாசையன்று பிதுர்லோகத்தில் இருந்து பூலோகம் புறப் பட்டுவருவதாகவும் மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று நாம் மனம்முன் வந்து இடும் படையலை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு நாம் கொடுக்கும் சாந்தி தர்ப்பணங்களை உளமாற ஏற்று மீண்டும் தைமாத அமாவாசையில் பூலோகம் புறப்பட்டு செல்வதாக சொல்லப்படுகின்றது தை மாதம் அமாவாசையன்று பிதுர்லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருப்பதாகவும் எனவேதான் அன்றைய தினம் நீர் நிலைகளில் நம்முடைய முன்னோர்களுக்கு எள் தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்யவேண்டும். இதனால் அவர்கள் மகிழ்வுடன் நமக்கு ஆசி வழங்கி செல்வதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

நமது அன்றாட வேலைகளில் அனுப்பிலும் கால ஓட்டம் மற்றும் நாகரீக மாற்றத்தின் காரணமாகவும் நாம் செய்யும் சில தவறுகளில் ஒன்றுதான் பிதுர் வழிபாட்டை மறந்தது. சாபம் இருப்பவர்களுக்கு தெய்வத்தால்கூட துணை செய்யமுடியாது என்கின்றார்கள். தெய்வத்தின் வரத்தையே தடுக்கும் ஆற்றல் இந்த பித்ருக்களுக்கு உண்டு. இன்றைய சூழலில் ஜாதகத்தில் தோஷங்களைக் கணக்கீடு செய்யும்பொழுது பித்ரு தோஷம் தலையாய தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பிரேத தோஷமும் உருவாவதை மாந்தி, ராகு, சனி போன்றோரின் நிலையினை கொண்டும் அவர்கள் ஏற்றுள்ள பாவககளின் வலிமைகொண்டும் நம்மால் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த நிலை மனித வாழ்வில் எல்லா வகையிலும் சில நெருடல்களையும் இன்னல்களையும் தருவதை அறிகின்றோம்.

Advertisment

ku

நேரம் வரும்பொழுது திருமணமும், குழந்தை பேரு, வீடு, வாசல், வேலை, படிப்பு, குடும்ப ஒற்றுமை போன்ற மனித வாழ்வின் அச்சாணியே அசைத்து விடுகின்றது இந்த பித்ரு தோஷம். ஜாதகரீதியாக சிலருக்கு வழங்கப்படும் பரிகாரங்கள்கூட பலிப்பதில்லை. இந்த தோஷத்தின் தொடர்புகள் இருப்பதனால் சற்று நம் வாழ்வையில் முறையினை உற்று நோக்கினால் நமக்கு புலப்படும் உண்மைகளில் ஒன்றுதான் நம் குலதெய்வம் என்று நம்மால் போற்றப் படும் சக்தி. அது நமது டி.என்.ஏ. வான நம்மால் போற்றப்பட்ட முன்னோர்கள் என்று இப்பொழுது புரியும். நம் குடும்பத்தில் இருந்து காலம் சென்றவர்கள் குல தெய்வத்தின் நிழல் பாதங்களில்தான் இளைப்பாறுவார்கள் என்பது திண்ணம். எனவே பிதுருக்களின் சாபமானது குலதெய்வத்தின் இணக்கத்தையும் அறுத்துவிடும் என்பதை எண்ணத்தில் கொள்வது மிகவும் சிறப்பு.

மேலும் நாம் தர்மம் கொடுக்க உபயோகிக் கும் சூழலும் பொருளும் எவை எவை என்றும் அதன் தன்மைகளையும் சற்று ஆராயலாம்.

தர்பை சூரியனின் முழு காரகம்கொண்ட தாவரம் எள்ளு. சனியின் சனிபகவானின் காரகம் பச்சை அரிசி மற்றும் நீர்நிலை இவைகள். சந்திரனின் முழு காரகத்தைக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. இங்கு ஆன்மகாரகனாகிய சூரியன் தந்தையை குறிப்பதாகவும் மனோகாரகனாகிய சந்திரன் தாய்வழியை குறிப்பதாகவும் சனி இவற்றின் கர்மாவினை குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எனவே இந்த தர்ப்பணத்தின் அவசியம் நமக்கு இதன்மூலம் தெள்ளத் தெளிவாக உணர்த்தப்படுகின்றது.

திதி மற்றும் தர்ப்பணங்கள் கொடுக்கும் பொழுது ஆறு உருண்டைகள் கொண்ட அரிசி பிண்டம் வைக்கப்படுகின்றது. இது தாய், தந்தை, பாட்டனார் என்று இருவழி தோண்டல்களையும் குறித்தே ஆறு பிண்டங்கள் பிடித்து வைக்கப்படுகின்றது. இவைகள் அனைத்திலும் சூட்சுமத்திலும் சூட்சுமங்கள் நிறைந்து நம் வாழ்வின் வெளிச்சத்தை அளிக்க காத்துக்கொண்டிருக் கின்றது.

புராணரீதியாக தந்தைவழி கர்மாவை கூறுகின்ற ராகுவும் தாய்வழி கர்மாவை கூறுகின்ற கேதுவும் கடகம் மற்றும் மகரத்தில் அமர்ந்து கேது ரிக், யஜுர், சாம வேதங் களை கடகத்தில் இருந்து பயின்றதாகவும் ராகு மகரத்தில் இருந்து அதர்வண வேதத்தை பயின்றதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த தொடர்பும் நமது அமாவாசை வழிபாட்டின் முக்கியத் துவத்தினை மேலும் செம்மைப்படுத்தி கூறுகின்றது.

அதோடு கால சக்கரத்தில் பத்தாவது ராசியான மகரத்தில் சூரியன் வரும் தை மாதத்தில் மானுட ஜீவன்கள் தனது பிறப்புக் கான பத்து மாத பூர்த்தி நிலையையும் உணர்த்தி இங்கு ஜீவன்கள் புத்துயிர் பெறுவதையும் ஆன்மாக்களின் பசி தீர்க்கும் விவசாயம் செழிக்கும் மாதமாகவும் இந்த தை மாதம் குறிப்பிடப்படுவது சிறப்பிலும் பெரும் சிறப்பாகும்.

நமது ஜாதகத்தில் ஒன்று மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று ஆகிய பாகங் களில் ராகு- கேது அமர்வதும் சூரியன் சந்திரன் ராகு சூரியன் சந்திரன், கேது, சூரியனுடன் சனி ஒன்பதில் மாந்தி போன்ற பலவித கணித குறுக்கீடுகளின்மூலம் பித்ரு தோஷத் தினை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அமையப்பெற்றவர்கள் இந்த தை அமாவாசையை பயன்படுத்தி சிறு சிறு பரிகாரங்களின்மூலம் உங்கள் வாழ்வில் துன்பங்களைத் துடைத்தெறிந்து விடலாம்.

ஒரு வாழை மரத்தின்முன்பு மூன்று இலை களை போட்டு படையல் வைத்து அதனை நமது குடும்பத்தில் பிறந்த வழித்தோன்றல் களுக்காகவும் இந்த உலகத்தில் தோன்றிய மகான்கள் புண்ணிய ஆன்மாக்களுக்காகவும் இந்த உலகத்தில் ஈம காரியம்கூட செய்வதற்கு இயலாமல் இறந்த ஆன்மாக்களுக்காகவும் மூன்று இலைகளை மனதார நீந்துவிட்டு விட்டு தொட்டு வணங்கிவிட்டு வீடு திரும்புவதன் மூலம் பித்ரு தோஷத்தின் பாதிப்பில் இருந்து விலக வாய்ப்பாக அமையும்.

நீர் நிலைகளில் தர்ப்பணம் அளிப்பதும் பாவங்களுக்கு அன்னமிடுவதும் உங்களின் வலிகளை ஆற்றும் மாமருந்தாக அமையும்.

இராமேஸ்வரம் மற்றும் திருவள்ளம் சென்று தர்ப்பணம் தருவதும் பெரும் சிறப் பினை அளித்து வாழ்வில் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைக்கும்.