நமது வாழ்விற்கு வித்திட்ட முன்னோர் களுக்கு நமது நன்றியுணர்வை சமர்ப்பிக் கும் நிகழ்வு மகாளய பட்சம் ஆகும்.
இது புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களாக அனுஷ்டிக்கப் படுகிறது.
மகாளயம் என்றால் கூட்டமாக வருவது என்று பொருள். .பட்சம் என்றால் 14 நாட்களாகும்.
எல்லாவற்றிற்கும் வழியமைத்துக் கொடுத்த வள்ளுவன் தென்புலத்தார் வழிபாட்டுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார்.
நம்மைவிட்டுப் பிரிந்த நம் முன்னோர் கள் இயற்கையுடன் கலந்தபிறகு இந்த 15 நாட்கள் நாம் வாழும் சூழலையும், நமக்கு அருள் வழங்கவும், அவர் களின் மரபணுவான நம்மைக் காணவும் நம் இல்லம் தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.
மனிதர்கள் பல பிறவி எடுக்கிறார்கள் என்பதை நமது இந்து சமயம் அறிவிக்கிறது. முக்கியமாக மனிதன் பிறக்கும்பொழுது மூன்று விதமான உடல்களைப் பெறுகிறான் என்கிறது சாஸ்திரங்கள். பருவுடல், சூட்சும உடல், இதைச் சார்ந்திருக்கும் ஜீவன் ஆகியவையாகும்.
இதில் ஜீவன் தனது பாவ- புண்ணியங் களைச் சுமந்து பல பிறவிகள் எடுக்கிறது என்கின்றது சாஸ்திரங் கள்.
ஸ்தூல சரீரம் இறப் பிற்குப்பிறகு பூமியில் அழிக்கப்படுகிறது. மீதமுள்ள காரண சரீரம் நமது பாவ- புண்ணியங் களுக்கேற்ப பித்ரு உலகமாகிய சந்திர உலகத்தைச் சென்றடையும் என்று கூறப் பட்டுள்ளது.
அப்படி நமது முன்னோர்களாகிய மாபெரும் இயக்கத் திற்குப் பொறுப்பேற்ற அந்த ஆன்மாக் கள், சந்திர உலகத்திலிருந்து இந்த 14 நாட்கள் அவர்களின் மரபணுவாகிய தங்களின் வாரிசுகளுடன் இணைந்து பயணப்பட பூமியை வந்தடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
கால ஓட்டத்தின் சுழற்சியில் தர்ப்பணம், திதி ஆகியவற்றை இன்று தவிர்க்கும் மக்களின் நிலையை அவர்களின் ஜாதகத்தைக் கொண்டு பார்க்கும்பொழுது, பல குறைகள் மற்றும் இன்னல்களை சுமந்து புலம்புவதைக் காணமுடிகின்றது.
ஜாதகத்தில் சூரியன், சனி இணைவு, சூரியன் வீட்டில் சனி, சனி வீட்டில் சூரியன், மாந்தியுடன் கூடிய சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு, இணைவு போன்றவை பித்ரு மற்றும் மாத்ரு சார்ந்த அதீத வன்மத்தை எடுத்துரைக்கிறது. இதனால் இவர்கள் அனுபவிக்கும் இன்னல்களின் எல்லையும் கணக்கிடவே முடியாததாக பிரதிபலிக்கிறது.
இதனால் வீட்டில் சுப நிகழ்வுகளே அனுமதிக்கப்படாத நிலையும், விபத்து, கண்டம், பொருளாதாரக் குறைபாடு, குழந்தைகள் வழியில் பிரச்சினை ஆகியவை இவர்களின் வாழ்வியல் பயணத்தில் அதீதமாக சேர்ந்து கொண்டுள்ளது.
அதோடு சுக்கிரனோடு இணைந்த மாந்தி அந்த வம்சாவளியில் பிறக்கும் பெண்களின் வாழ்வில் பெரிய சதிராட்டத்தையே ஆடி முடிக்கிறது இவையனைத்திற்கும் காரணம் இந்த பிதுர் தோஷமே.
இந்த இன்னலிலிருந்து விடுபட ஏதாவது ஒரு வழி நிச்சயமாக நமது சாஸ்திரத்தில் அளிக்கப்பட்டிருக்கும். அப்படி அளிக்கப்பட்ட விஷயம்தான் இந்த மஹாளய பட்ச மாகும்.
அமாவாசையைக் காட்டிலும் மகாளய பட்சம் முக்கியத்துவம் வகிக்கின்றது.
சந்திர, மாதத் துவக்கம் 12 ராசிகளில், இந்த புரட்டாசி மாதம் ஆறாவது சரிபாதியாகிய உத்திர நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் சூரியன் நுழைந்து, சந்திரன் பூரணமாக பூரட்டாதி நட்சத்திரத்தில் 180 டிகிரியில் எதிரெதிராக நிற்கும்பொழுது சந்திர உலகம் எனப்படும் பிதுர் உலகம் நமது பூமிக்கு நெருக்கமாக வருவதாக, நம் மாபெரும் சக்தியான முன்னோர்கள் கணித்து, அதற்குத் தகுந்த வழிபாட்டின்மூலம் அவரவர் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழிவகுத்துக் கொடுத்துள்ளனர்.
இதுவரை திதி அல்லது தர்ப்பணம் கொடுக்கமுடியாமல் இருப்பவர்கள் இந்த 14 நாட்களை நழுவவிடாமல் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி என்னென்ன விஷயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
முதல் நாள்- எல்லா செல்வங்களும் வந்தடையும்.
இரண்டாம் நாள் துவிதியை- மகப்பேறு சார்ந்த பிரச்சினைகள் தீரும்.
மூன்றாம் நாள் திரிதியை- நினைத்தது நிறைவேறும்.
நான்காம் நாள் சதுர்த்தி- பகைவர் களிடமிருந்து தப்பித்தல்.
ஐந்தாம் நாள் பஞ்சமி- செல்வம் சேரும். நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் வாங்கமுடியும்.
ஆறாம் நாள் சஷ்டி- புகழ் கிடைக்கும்.
ஏழாம் நாள் சப்தமி- சிறந்த பதவிகளை அடைதல். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் அஷ்டமி- சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைக்கும்.
ஒன்பதாம் நாள் நவமி- திருமணத் தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத் துணை அமையும்.
பத்தாம் நாள் தசமி- நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல். எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
11-ஆம் நாள் ஏகாதசி- படிப்பு, விளையாட்டு, கலையில் தேர்ச்சி, 12-ஆம் நாள் துவாதசி- தங்க நகை சேர்தல்; விலை உயர்ந்த ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
13-ஆம் நாள் திரயோதசி- பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை.
14-ஆம் நாள் சதுர்த்தசி- ஆயுள் விருத்தியாகும். பாவம் நீக்கும். எதிர்காலத் தலைமுறைக்கு நன்மையை அளிக்கும்.
பதினைந்தாவது நாள் அமாவாசை. இந்த புரட்டாசி அமாவாசையில், பெரிதாக யார் கண்ணுக்கும் புலப்படாத இடத்தில் ஒரு மரத்தின் அடியில் மூன்று இலைகளைப் போட்டு, அதில் உணவை வைத்து, முதல் இலை தங்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், இரண்டாம் இலை இந்த உலகத்தில் பிறந்த மகான்கள், முனிவர்கள், ரிஷிகளுக்காகவும், மூன்றாவது இலை இந்த உலகத்தில் பிறந்து ஈம காரியம் செய்யமுடியாத ஆன்மாக்களுக்காகவும் என்று மனதாரக் கூறி சிறிய வழிபாட்டை மேற்கொள்ளும்பொழுது, இவர்களின் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை பிரச்சினை களுக்கும் தீர்வு தரும். சந்திர உலகத்தில் வசிக்கும் எல்லா ஜீவன்களும் உறுதுணை யாகவும் வழிகாட்டியாகவும் இருந்து நன்மையளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
புராணத்தில் வலியை மட்டுமே சுமந்து வாழ்ந்த கர்ணன் உயிர் நீத்து பிதுர் உலகம் சென்றபிறகு உணவு கிடைக்காததால், இந்த மஹாளய பட்சத்தில் பூமிக்கு வந்து மறைந்திருந்து, தங்களின் பிதுர் வம்சத்தினருக்கு உணவளித்து இன்னலைத் தீர்த்துக் கொண்டதாக புராணத்தில் சான்றுகள் கூறப் படுகின்றன.
அதேபோன்று மாபெரும் ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனின் இணைவு கன்னி ராசியில் நிகழும்பொழுது காலமாற்ற சுழற்சியில் பெரும் சாந்தத் தன்மையை அளிக்கும். நீசத்தை நோக்கிச் செல்லும் சூரியன் இறுதியாக ஒளி கிரணங்களை கன்னி ராசியிலேயேதான் முழுக்க பிரதிபலிக்கச் செய்வார். இந்த ஒளியானது அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இருளை அகற்றும் வல்லமை வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நதிக்கரை ஓரங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் இன்னும் சில நீர் நிலைகளின் அருகிலும் தர்ப்பணங்கள் செய்து அவரவர் வம்சாவளியில் வந்துசென்ற பிதுர் வம்சத்தினருக்கு தங்களின் நன்றி உணர்வை மனதார வழங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் இந்தப் 14 நாட்கள் இல்லங்களில் பெரிய சண்டை மற்றும் சச்சரவுகள் நிகழாத வண்ணமும், அமைதியான சூழல் படரும் வண்ணமும் இருப்பது, அவர்களின் ஆசிர்வாதம் மேலும் நம்மை நல்வழிப்படுத்த பெரும் துணையாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அசைவ உணவைத் தவிர்த்து, உடல்ரீதியான சுகங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்காமல் இறை மற்றும் மூதாதை யர்களின் சிந்தனையில் இருந்து பெரும் சுபிட்சத்தைப் பெறும் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஜாதகரீதியாக ஆழமான பிதுர் தோஷம் உள்ளவர்கள் கேரளாவில் அமைந்துள்ள திருவள்ளம் சென்று உங்கள் குடும்பத்தில் முன்னோர் எந்த திதியில் இறந்தார்களோ அந்த திதியில் தர்ப்பணம் அளித்து வர, வழிவழியாக வந்த தோஷங்கள் விலகும்.