மரா ராம் ஆலயம்...

இந்த ஆலயம் ஆந்திராவிலுள்ள அமராவதியில் இருக்கிறது. குண்டூருக்கு அருகிலுள்ளது அமராவதி.

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் இது ஒன்று.

இது ஒரு சிவன் ஆலயம். இந்த ஆலயம் பலநாடு மாவட்டத்தில் இருக்கிறது.

Advertisment

இங்கு பகவான் சிவன், அமரேஸ்வர் என்ற கடவுளாக குடிகொண்டிருக்கி றார். அதை அமரேஸ்வர் லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த ஆலயம் கிருஷ்ணா நதியின் தென்கரையில் இருக்கிறது.

இங்கிருக்கும் சிவனின் மனைவி பார்வதியை பால சாமுண்டிகா என்றும் அழைக்கிறார்கள்.

Advertisment

இந்த சிவலிங்கம் பகவான் இந்திரனால் அமைக்கப் பட்டது.

இந்த சிவலிங்கம் மிகவும் உயரமானது. 15 அடி உயரம்கொண்ட இந்த சிலையை ஏணியில் ஏறியே தினமும் அர்ச் சனை செய்கிறார்கள். தினந்தோறும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

rr

இந்த சிவலிங்கத்தின் நெற்றிப் பகுதியில் சிவப்பு நிறத்தில் ஒரு திலகம் இருக்கிறது. புராண கதையின்படி இந்த சிவலிங்கம் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறது. இது மேலும் வளரக் கூடாது என்பதற்காக சிவலிங்கத்தின் மேற்பகுதியில் ஆணி அடித்திருக்கிறார் கள். ஆணி அடிக்கப்பட்ட இடத்தில் குருதி வர, அதுவே இப்போது சிவப்பு நிற திலகமாக காட்சியளிக்கிறது.

சிந்தாப்பள்ளியின் அரசரான வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு தரணிக்கோட்டாவின் அரசரும் கூட. அவர் அமரேஸ்வரின் தீவிர பக்தர். இந்த ஆலயத்தைப் புதிப்பித்துப் பெரிதாகக் கட்டியவர் அவர்தான்.

இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை இது. பல வருடங் களுக்குமுன்பு இந்த ஊரில் ஒரு கலவரம் நடந்திருக்கிறது.

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் அந்த கலவரம் ஏற்பட்டிருக் கிறது.

அதில் ஏராளமானவர்கள் இறந்திருக்கி றார்கள். அதைப் பார்த்து மன்னர் கவலையில் மூழ்கி யிருக்கிறார்.

அவர் அமராவதிக்கு வந்து, பகவான் சிவனை வழிபட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது.

1796-ஆம் வருடத் தில் சிந்தாப்பள்ளிக்குப் பதிலாக தன் தலைநகரமாக அமராவதியை அவர் ஆக்கிக்கொண்டார். தன் வாழ்வையே சிவனுக்காக அவர் அர்ப்பணித்துக் கொண்டார். இந்த ஆலயத்தைப் புதிப்பித்துப் புகழ்பெற வைப்பதிலேயே அவரின் முழு கவனமும் இருந்தது.

கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு வேதங்களைக் கற்ற ஒன்பது அர்ச்சகர் களை அவர் நியமித்தார்.

அவர்களின் வாழ்வாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 12 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார்.

அத்துடன் அவர்களுக்கு மேலும் பல வசதி களைச் செய்துகொடுத்தார். இப்போதிருக்கும் ஆலயம் அவர் உருவாக்கியதுதான்.

இந்த ஆலயத்தைப் பற்றி புராணத்திலுள்ள கதை இது...

பகவான் சிவனிடம் வரம்பெற்ற தாரகா சுரன் என்ற அரக்கன் தேவர் களுக்கு பல இன்னல்களைத் தந்திருக்கிறான்.

பாதிக்கப்பட்ட தேவர் கள் சிவனிடம் சென்று முறையிட, அந்த அரக்கனை அழிக்க முடிவெடுக்கிறார் சிவன். தேவர்களை இப்போதைய ஆலயம் இருக்குமிடத்தில் போய் இருக்கும்படி அவர் கூறுகிறார்.

அமரேஸ்வர் ஆணை யிட்ட இந்த இடத்திற்கு அப்போதே அமராவதி என்ற பெயர் வந்து விட்டது.

பகவான் சிவனுக்கும், அவருடைய மனைவி பால சாமுண்டிகாவிற்கும் இங்கு பூஜைகள் செய்யப் படுகின்றன.

விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் கோடாபள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வெற்றிபெற்ற பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து பகவான் சிவனை வழிபட்டிருக்கிறார்.

அந்தச் செய்தி இங்கிருக் கும் கல்வெட்டில் இருக்கி றது.

இங்கு மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தசரா பண்டிகையையும் பக்தர்கள் சந்தோஷத் துடன் கொண்டாடுவதை நாம் பார்க்க லாம்.

கிருஷ்ணாநதி புண்ணிய நதியாக இருப்ப தால், இங்குவரும் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் நதியில் நீராடுகிறார்கள்.

இந்த ஆலயம் புதிப்பிக்கப்பட்ட காலத்தில், மண்ணுக்கு அடியிலிருந்து மிகவும் பழமையான ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் குண்டூருக்குப் பயணிக்க வேண்டும். பயண தூரம் 424 கிலோ மீட்டர் அங்கிருந்து 40 கிலோமீட்டர் பயணித் தால், அமராவதி அமரா ராம் ஆலயத்தை நாம் அடையலாம்.