பொருட்கடன், பிறவிக் கடன்த் தீர்க்கும் பெருமான்!

/idhalgal/om/addition-lord-who-solves-debt-birth

சில மனிதர்கள், "நான் கடன் வாங்காமல் நிம்மதியாக குடும்பம் நடத்துகிறேன். என்னைப்போல வாழவேண்டும்' என்று பெருமையாகக் கூறுவார்கள். அறியாமையால் அப்படிக் கூறுகிறார்கள் என்பதே உண்மை. காரணம், மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பலவிதமான கடன்கள் உண்டு. நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடன்பட்டவர்கள். அதே போல் நம்மைப் பெற்றெடுத்த தாய்- தந்தை, வாழ்க்கையில் நாம் உயர்வதற்கு உதவிசெய்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் நாம் கடன்பட்டவர்கள்.

er

இந்தப் பிறவியில் அதைவிட பெரும் கடன் நம்மில் பலரையும் வாட்டி வதைக்கிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடன், தொழில் செய்வதற்குக் கடன், படிப்பதற்குக் கடன், அசையும்- அசையா சொத்துகள் வாங்குவதற்குக் கடன் என பல்வேறு தேவைகளுக்காக மற்றவர்களிடம் கடன் வாங்குகிறோம். இப்படி கடன் வாங்காத மனிதர்கள் பெரும்பாலும் இருக்கமுடியாது. இதை வைத்துதான் நமது முன்னோர்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான் என்று சொல்லிவைத்தார்கள். அந்த கடனை பலர் திரும்பச் செலுத்தமுடியாமல் திணறுகின்றனர். அதைத் தீர்ப்பதற்கு வழி தெரியாமல் திண்டாடுபவர்கள் ஏராளம்.

பெரும்பாலும் குடும்பச் செலவுக்குப் போதுமான வருமானம் இல்லாதபொழுது, தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல்களில் கடன் வாங்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதிலும் பலர் கடன் வாங்கும்முன்பு யோசிப்பதுமில்லை. அவசிய தேவைக்கு மட்டுமே கடன் வாங்குபவர்கள் உண்டு. ஆடம்பரத் தேவைக்குக் கடன்பெற்றவர்களும் உண்டு. அப்படி வாங்கிய கடனை திரும்பக் கொடுக்கமுடியாமல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் பலர். குடும்பத்தினருடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தினசரி ஊடகங்களில் வருவதைப் பார்க்கிறோம்.

கடன் வாங்கும்போது, அதை எப்படி யாவது நாணயமாக அடைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் வாங்கு கிறார்கள். ஆனால் ஏதாவதொரு சூழ்நிலை யில் அதனைத் திரும்ப செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. திரும்பக் கடனை அடைப்போமென்ற நம்பிக்கை இழக்கும்போது அது பெரும் சுமையாக மாறிவிடுகிறது. கடனில் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தூங்குவதில்லை. அப்படிப்பட்டவர்கள

சில மனிதர்கள், "நான் கடன் வாங்காமல் நிம்மதியாக குடும்பம் நடத்துகிறேன். என்னைப்போல வாழவேண்டும்' என்று பெருமையாகக் கூறுவார்கள். அறியாமையால் அப்படிக் கூறுகிறார்கள் என்பதே உண்மை. காரணம், மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பலவிதமான கடன்கள் உண்டு. நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடன்பட்டவர்கள். அதே போல் நம்மைப் பெற்றெடுத்த தாய்- தந்தை, வாழ்க்கையில் நாம் உயர்வதற்கு உதவிசெய்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் நாம் கடன்பட்டவர்கள்.

er

இந்தப் பிறவியில் அதைவிட பெரும் கடன் நம்மில் பலரையும் வாட்டி வதைக்கிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடன், தொழில் செய்வதற்குக் கடன், படிப்பதற்குக் கடன், அசையும்- அசையா சொத்துகள் வாங்குவதற்குக் கடன் என பல்வேறு தேவைகளுக்காக மற்றவர்களிடம் கடன் வாங்குகிறோம். இப்படி கடன் வாங்காத மனிதர்கள் பெரும்பாலும் இருக்கமுடியாது. இதை வைத்துதான் நமது முன்னோர்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான் என்று சொல்லிவைத்தார்கள். அந்த கடனை பலர் திரும்பச் செலுத்தமுடியாமல் திணறுகின்றனர். அதைத் தீர்ப்பதற்கு வழி தெரியாமல் திண்டாடுபவர்கள் ஏராளம்.

பெரும்பாலும் குடும்பச் செலவுக்குப் போதுமான வருமானம் இல்லாதபொழுது, தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல்களில் கடன் வாங்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதிலும் பலர் கடன் வாங்கும்முன்பு யோசிப்பதுமில்லை. அவசிய தேவைக்கு மட்டுமே கடன் வாங்குபவர்கள் உண்டு. ஆடம்பரத் தேவைக்குக் கடன்பெற்றவர்களும் உண்டு. அப்படி வாங்கிய கடனை திரும்பக் கொடுக்கமுடியாமல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் பலர். குடும்பத்தினருடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தினசரி ஊடகங்களில் வருவதைப் பார்க்கிறோம்.

கடன் வாங்கும்போது, அதை எப்படி யாவது நாணயமாக அடைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் வாங்கு கிறார்கள். ஆனால் ஏதாவதொரு சூழ்நிலை யில் அதனைத் திரும்ப செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. திரும்பக் கடனை அடைப்போமென்ற நம்பிக்கை இழக்கும்போது அது பெரும் சுமையாக மாறிவிடுகிறது. கடனில் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தூங்குவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. கடனில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யமுடியாமல் திணறு வார்கள்; திண்டாடுவார்கள். அவர்களது குடும்பத்தில் நிம்மதி இருக்காது. நேர்மறை ஆற்றல்கள் குறையும். இப்படிப்பட்டவர்களின் பிறவிக் கடன், பொருளாதாரக் கடன் ஆகியவற்றைத் தீர்க்கமுடியும் என்னும் நம்பிக்கையை இழக்காமல், அதற்குரிய இறைவனை தேடிச் செல்லவேண்டும்.

ff

ஆம்; கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை கிராமத்திலுள்ள கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயத்திற்குதான் செல்லவேண்டும். தென்தமிழகத்தில் ஆற்றல்மிக்க கோவில்களுக்குப் பஞ்சமில்லை. அதிலும் கும்பகோணம் என்றால் உலகம் புகழும் அளவுக்கு இப்பகுதியில் இறைவன் கோவில்கொண்டுள்ளான். ஆலயங்கள் ஏராளம். அப்படிப்பட்ட கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது திருச்சேறை. இந்த கிராமத்தில்தான் கடன் நிவர்த்தீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். அனைவரின் கடன்களையும் தீர்க்க அன்போடு "வா' என்று அழைக்கிறார்.

தேவாரப் பாடல்பெற்ற சிவாலயங்கள் 274. அதில் 158-ஆவது ஆலயமான திருச் சேறையில் சுயம்புமூர்த்தியாக அருளாட்சி செய்கிறார். மனிதர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி ஞானத்தைத் தருபவர். அதனால் இவருக்கு செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இவ்வாலயத்தில் ரிணவிமோசனர் என்றழைக்கப்படும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி உள்ளது. இவர் மனிதர்களின் பிறவிக் கடனையும், வாழ்க்கையில் பெற்ற கடனையும் தீர்த்து, மீண்டும் பிறவா வரத்தையும் வாரிவழங்கி வருகிறார்.

அன்னை ஆதிபராசக்தி ஞானாம் பிகை என்ற பெயருடன் இங்கு அருள் புரிகின்றாள். கடன் நிவர்த்தீஸ்வரர், சாரபரமேஸ்வரரையும், ஞானத்தை வழங்கும் அம்பாளையும் வணங்கி கடன் நிவர்த்தியிலிருந்து விடுபடலாம். இங்குள்ள அன்னை ஞானாம்பிகை நான்கடி உயரத்தில், நின்ற கோலத்தில் அழகுற காட்சிதருகிறாள். நான்கு கரங்களுடன் அன்னையின் திருமுகம் முழுநிலவுக்கு சமமாகக் காட்சியளிக்கும்.

அன்னைக்கு பௌர்ணமிதோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றன. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், உயர்கல்வி படிக்க இருப்பவர்களுக்கு ஞானத்தை ஊட்டி அன்னை வழிகாட்டி வருகிறாள்.

திங்கட்கிழமைதோறும் பதினோரு வாரங் கள் ஆலயத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு, மனமுருகி வணங்கி வழிபடுபவர்கள் பட்ட கடன்களிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். அவர்களின் குடும்பத்தில் வறுமை விலகி செல்வம் பெருகுகிறது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. தொடர்ந்து 11 வாரங்கள் வர இயலாதவர்கள், ஒரு திங்கட்கிழமை அல்லது அவர்களது ஜென்ம நட்சத்திரநாளில் ஆலயத்திற்கு வந்து பூஜைக்கான முன்பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கு 11 வாரங்கள் வழிபாடு செய்து அதற்குரிய பிரசாதங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. திங்கட்கிழமையும் கோவிலில் சிவ தோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யப்படுகிறது.

f

ஆதிகாலத்தில் இக்கோவில் மூலவராக சாரபரமேஸ்வரரை வழிபட்டு வந்துள்ளனர்.

16 வயதுவரை மட்டுமே வாழ்க்கை, அதன் பிறகு எமலோகம் செல்லவேண்டி வரம் பெற்ற மார்க்கண்டேயர் சிவபெருமானே கதியென்று மணலால் லிங்கத்தை உருவாக்கி தன் ஆயுள் இறுதிக்காலத்தில் வழிபட்டு வந்தார். மார்க்கண்டேயரைக் கொண்டுசெல்ல எமதர்மன் நேரடியாக வந்து பாசக் கயிற்றை மார்க்கண்டேயர்மீது வீச, அவர் தான் பூசை செய்துவந்த சிவ லிங்கத்தை கட்டிப்பிடித்துக்கொள்ள, இதைக்கண்டு கோபம்கொண்ட சிவபெருமான் எமதர்மரிடமிருந்து மார்க்கண்டேயரை மீட்டு, "என்றும் பதினாறு' என்று வரமளித்த இதிகாச சம்பவம் அனைவரும் அறிந்தது.

அப்படிப்பட்ட மார்க்கண்டேயர் தனக்கு என்றும் பதினாறு என இறவா வரமளித்த இறைவன் பரமேஸ்வரருக்கு நன்றிக் கடன்பட்டவர் அல்லவா! அதை உணர்ந்த மார்க்கண்டேயர் இவ் வாலயத்திற்கு வந்து ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதற்கு தினசரி பூஜை செய்து தனது பிறவிப் பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டதோடு, பக்தர்களின் நலனையும் கருத்தில்கொண்டு, இப்பிறவியில் மனிதர்களுக்கு ஏற்படும் சகல கடன்களையும் தீர்த்துவைத்து முன்வினை, பின்வினை நீங்கி பிறவா வரம் தருமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

அப்படி மார்க்கண்டேயர் உருவாக்கி வழிபட்ட அந்த சிவலிங்கமே ரிணவிமோசனர் என்றழைக்கப்படும் கடன் நிவர்த்தீஸ்வரர்.

இவ்வாலயத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத அற்புதம்- சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை. வைஷ்ணவி துர்க்கை என மூன்று துர்க்கைகள் உள்ளனர். பக்தர்களுக்கு பேரருள் தந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து தோஷங்களையும் நீக்கி சுகவாழ்வு அருள்கிறார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமை காலை 7.30- 9.00, வெள்ளிக்கிழமை காலை 10.30.-12.00, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30- 6.00 ஆகிய ராகுகால நேரத்தில் மூன்று துர்க்கையம்மன்களையும் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுபவர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி அனைத்து நன்மை களும் கிடைக்கப் பெறுகின்றனர்.

இவ்வாலய இறைவனையும் அம்பாளை யும் திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். மூவரால் பாடல்பெற்ற தேவாரத்தலமிது.

ஒவ்வொரு ஆலயத்திலும் தலவிருட்சம், தல தீர்த்தம் உண்டு. இந்த ஆலயத்திலுள்ள தலவிருட்சம் மாவிலங்கை மரம். இந்த மரம் அதிசயமானது. வருஷத்தில் நான்கு மாதங்கள் வெறும் இலைகள் மட்டுமே இருக்கும். அடுத்துவரும் நான்கு மாதங்கள் மரம் முழுவதும் வெள்ளைப் பூக்களாகவே மலரும். அதற்கு அடுத்துவரும் நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும். இது இறைவனால் படைக்கப்பட்ட அதிசய மரம். இந்த அற்புத மரத்தை சுற்றிவந்து வணங்கி சகல நன்மைகளையும் பக்தர்கள் பெறுகிறார்கள்.

ஆலய வளாகத்தில், பிந்துசுதா என்ற தீர்த்தக் குளம். மார்க்கண்டேயர் உருவாக்கி இறைவனுக்கு அபிஷேகம் செய்த மார்க்கண்டேய தீர்த்தம் உள்ளது. இது தெப்பக்குளமாகவும் விளங்கிவருகிறது கோவிலுக்குள்ளே ஞான தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி முறையாக விரதமிருந்து கடன் நிவர்த்தீஸ்வரர், ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபடுதல்மூலம் வாழ்க்கையில் பட்ட கடன்கள், இன்னல்கள் அனைத் தும் நீங்கி சுகத்தையும் சந்தோஷத்தையும் பெறுகிறார் கள்.

இவ்வாலயத்தில் அனைத்து விசேஷ தினங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. தினசரி நான்குகால பூஜைகள் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. மேலும் ஆடிப்பூர விழா, கந்த சஷ்டி விழா, நவராத்திரி விழா, மகா சிவராத்திரி விழா, பிரதோஷ விழா- இப்படி அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது. அஷ்டமி திதியில் பைரவருக்கு பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இதில் ஆன்மிக அன்பர்கள் பெரும் திரளாக வந்து கலந்துகொண்டு வழிபட்டு நன்மையடைகிறார்கள்.

"நம்முடைய பிறவிக் கடன்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள், ஞானிகள், நமது முன்னோர்கள். இறைவன்மூலம் பல வழிமுறைகளையும் பரிகாரங்களையும் செய்து வழிகாட்டி சென்றுள்ளனர். அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்காததால் கடன் பிரச்சினையிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறோம்.

கடன் பிரச்சினைகளால் நமது வாழ்க்கையே முடிந்துவிட்டதென்று மனம் நொந்துபோகாமல், உங்கள் கடன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதைத் தீர்க்கமுடியுமென்ற இறைநம்பிக்கை உங்கள் நிலைமையை மாற்றும். அதை உணர்ந்த பக்தர்கள் கடன் சிக்கலைத் தீர்க்கும்- கைமேல் பலனை தரும் திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரரை வந்து வழிபடுகிறார் கள்.

"அப்படிப்பட்ட இறைவன்மீதுள்ள அசையா நம்பிக்கையுடன் இவ்வாலய இறைவனையும் அம்பாளையம், இங்குள்ள சகல தெய்வங்களையும் வழிபடுவதற்காக வந்துள்ளோம்' என்கிறார்கள் கடலூர் மாவட்டம் கொடைக்களம் கிராமத்தைச் சேர்ந்த, சித்ரா, கலாராணி, சிவசங்கரி, வர்ணிகா, சிவானந்தம் ஆகியோர்.

கடன்பட்டால் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பெருமான் பாடியுள்ளார். கடன் மனிதர்களுக்கு பெரும் பிரச்சினை. பெரும் துக்கமும்கூட மனிதப் பிறவியே பெரும் கடன்தான். கடன் பிரச்சினை ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளுமளவுக்குச் சென்றுவிடுகிறது. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளிருந்து விடுதலைபெற இங்குள்ள கடன் நிவர்த்தீஸ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

இப்படி இவ்வாலய இறைவனை வழிபட்டு கடன்நிவர்த்தி பெற்றவர்கள் கணக்கிலடங்காதவர். நம்பிக்கையோடு வாருங்கள். இறைவன் அருளால் கடனிலிருந்து விடுபடுங்கள்.

"இவ்வாலய இறைவனை மனமுருக வேண்டி வழிபட்டு கடன்நிவர்த்தி பெற்ற பக்தர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து இறைவனையும் அம்பாளையும் மனமுருக வழிபட்டு தங்களது நன்றிக் கடனை செலுத்திச் செல்கிறார்கள்'' என்கிறார் இவ்வாலய பிரதான அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை. கும்பகோணத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 97868 14242, 94437 37759.

om010523
இதையும் படியுங்கள்
Subscribe