சில விஷயங்கள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. ஆனால் அத்தகையவை ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.
விசித்திர மருத்துவம்
மதுரைக்கு அருகில் ஒரு ஊரில், மஞ்சள் காமாலை வந்தவர்களை பூரண குணப் படுத்தி இருக்கிறார் ஒருவர். மஞ்சள் காமாலை யால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் வந்தவண்ணம் இருந்தனர். அவருடைய மருத்துவமுறை மிகவும் வித்தியாச மானது.
அதாவது நோயாளிக்கும் வைத்தியருக் கும் இடையில்- தரையில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் வைக்கிறார்கள். பிறகு, ஒரு குச்சியை இரண்டாகப் பிளந்து ஒரு பக்க முனையை மருத்துவரும், மற்றொரு பக்க முனையை நோயாளியையும் இரண்டு கைகளாலும் இடுப்பில் அனைத்துப் பிடித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் இரு குச்சிகளின் நடுப்பாகமும் தானாகவே ஒன்றுபடுகின்றன. அதாவது இணைகின்றன.
அப்போது தரையில் வைக்கப்பட்டிருக் கும் பாத்திரத்திலுள்ள தண்ணீர், மஞ்சள் நிறத்தில் மாறத் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் தண்ணீர் முழுவதும் மஞ்சள் நிறமாகவே மாறிவிடுகிறது. தண்ணீர் மஞ்ச ளாக மாற மாற, நோயாளியின் உடலைத் தாக்கியிருக்கும் காமாலை நோயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக் கிறது. பிறகு, மஞ்சள் காமாலை அடியோடு நீங்கி, நோயாளி பூரண குணமடைகிறார். இது முன்புநடந்த நிகழ்வு.
குடும்ப அனுபவம்
1954-களில் நாங்கள் திண்டுக்கல்லில் இருந்தோம். எனக்கு அப்போது நான்கு வயதிருக்கும். ஒருநாள் மாலை, குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் பிணத்தைப் பார்த்தபிறகு நேராக வீட்டிற்கு வந்த நான், பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்து விட்டேனாம்.
இதைக் கேள்விப்பட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் ஓடி வந்துவிட்டனர். மயங்கிக் கிடந்த என்னைப் பார்த்த வயதான பெண்மணி ஒருவர் என் தாயாரிடம், "பையனுக்கு "சீர்' அடித்துவிட்டது. நல்லம நாயக்கன்பட்டி சாமியாரிடம் தூக்கிக்கொண்டு போங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். என்னுடைய பெற்றோரோ, நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று முயற்சிசெய்தனர்.
ஆனால், மற்ற எல்லாரும் இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவேண்டிய இடம் நல்லமநாயக்கன்பட்டிதான் என்று கூறியிருக்கிறார்கள்.
சில விஷயங்கள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. ஆனால் அத்தகையவை ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.
விசித்திர மருத்துவம்
மதுரைக்கு அருகில் ஒரு ஊரில், மஞ்சள் காமாலை வந்தவர்களை பூரண குணப் படுத்தி இருக்கிறார் ஒருவர். மஞ்சள் காமாலை யால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் வந்தவண்ணம் இருந்தனர். அவருடைய மருத்துவமுறை மிகவும் வித்தியாச மானது.
அதாவது நோயாளிக்கும் வைத்தியருக் கும் இடையில்- தரையில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் வைக்கிறார்கள். பிறகு, ஒரு குச்சியை இரண்டாகப் பிளந்து ஒரு பக்க முனையை மருத்துவரும், மற்றொரு பக்க முனையை நோயாளியையும் இரண்டு கைகளாலும் இடுப்பில் அனைத்துப் பிடித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் இரு குச்சிகளின் நடுப்பாகமும் தானாகவே ஒன்றுபடுகின்றன. அதாவது இணைகின்றன.
அப்போது தரையில் வைக்கப்பட்டிருக் கும் பாத்திரத்திலுள்ள தண்ணீர், மஞ்சள் நிறத்தில் மாறத் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் தண்ணீர் முழுவதும் மஞ்சள் நிறமாகவே மாறிவிடுகிறது. தண்ணீர் மஞ்ச ளாக மாற மாற, நோயாளியின் உடலைத் தாக்கியிருக்கும் காமாலை நோயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக் கிறது. பிறகு, மஞ்சள் காமாலை அடியோடு நீங்கி, நோயாளி பூரண குணமடைகிறார். இது முன்புநடந்த நிகழ்வு.
குடும்ப அனுபவம்
1954-களில் நாங்கள் திண்டுக்கல்லில் இருந்தோம். எனக்கு அப்போது நான்கு வயதிருக்கும். ஒருநாள் மாலை, குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் பிணத்தைப் பார்த்தபிறகு நேராக வீட்டிற்கு வந்த நான், பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்து விட்டேனாம்.
இதைக் கேள்விப்பட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் ஓடி வந்துவிட்டனர். மயங்கிக் கிடந்த என்னைப் பார்த்த வயதான பெண்மணி ஒருவர் என் தாயாரிடம், "பையனுக்கு "சீர்' அடித்துவிட்டது. நல்லம நாயக்கன்பட்டி சாமியாரிடம் தூக்கிக்கொண்டு போங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். என்னுடைய பெற்றோரோ, நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று முயற்சிசெய்தனர்.
ஆனால், மற்ற எல்லாரும் இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவேண்டிய இடம் நல்லமநாயக்கன்பட்டிதான் என்று கூறியிருக்கிறார்கள். திண்டுக்கல்லுக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் அவ்வூர் இருக்கிறது. அங்கு ஒரு சாமியார் இருந்தார்.
இதுபோன்ற நோய் வந்தவர்களை அவரிடம் அழைத்துச்சென்று குணப் படுத்துவார்கள். அவர் தினமும் அதிகாலையில் 4.00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டுப் பூஜை செய்வாராம். பூஜை முடிந்தவுடன் நோயாளியைப் பார்த்து, முகத்தில் மூன்றுமுறை தண்ணீர் தெளித்து, "ப்பூ... ப்பூ... ப்பூ'' என்று மூன்றுமுறை ஊதுவாராம். சிறிது நேரத்திலேயே பூரண குணம் கிடைத்துவிடுமாம். இது தொடர்ந்து அந்த ஊரில் நடந்துவந்த நம்ப முடியாத வியப்பு.
எனவே, அந்த சாமியாரைப் பார்க்க பெற் றோர் என்னைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டி ருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து எங்களுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த- அதாவது "சீர் அடித்துவிட்டது' என்று கூறிய பெண்மணியும் உடன்வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த அம்மாவையும் அழைத்துக்கொண்டு, ஒரு குதிரை வண்டியைப் பிடித்து நல்லம நாயக்கன் பட்டியை நோக்கிப் பயணமாகி இருக்கின்றனர்.
அந்தக் காலத்தில் திண்டுக்கல்லில் குதிரை வண்டி சவாரிதான் அதிகப் பிரபலம். நடுத்தர குடும்பத்தினருக்கு அதுதான் சொகுசு கார் போல.
இரவு 11.00 மணிக்கு நல்லம நாயக்கன்பட்டி கோவிலுக்குள் நுழைந்திருக்கின்றார்கள்.
சாமியார் அப்பொழுதுதான் தூங்கச் சென்றி ருக்கிறார். இருப்பினும் எழுந்துவந்து எனது பெற்றோரைப் பார்த்தவர், "என்ன... பையனுக்கு சீர் அடித்திருக்கிறதா?'' என்று கேட்டிருக்கிறார்.
பெற்றோருக்கு ஆச்சரியம்!
இதுபோன்று பல நோய்களையுடைவர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி இருந்தும் எனக்கு "சீர்' அடித்த காரணத்தால்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சரியாகச் சொன்னதுதான் விஞ்ஞானத்திற்கு எதிரான ஆச்சரியம்.
அதன்பிறகு கோவிலுக்குப் பக்கத்தில் விருந்தினர் தங்குகிற இடத்தில் எங்களை அமரச் சொல்லியிருக்கிறார். விடிய விடிய எனது பெற்றோர் தூங்கவே இல்லை. நானும், மாலை யில் கண் மூடியவன்தான். எதுவும் சாப்பிட வில்லை. கண் விழிக்கவும் இல்லை என்றார்கள். காலை 5.00 மணிக்கு முதல் நோயாளியாக என்னைப் பார்த்து, எனது முகத்தில் தண்ணீர் தெளித்து, "ப்பூ... ப்பூ... ப்பூ...'' என்று வழக்கம் போல மூன்றுமுறை ஊதியிருக்கிறார்.
நான் அசையவில்லை. அதைப் பார்த்த பெற்றோர், "அப்படியேதானே இருக்கிறான்.
எந்த மாற்றமும் தெரியவில்லையே?'' என்று கேட்டிக்கின்றனர். அதற்கு சாமியார், "நீங்கள் நம்பிக்கையோடு தூக்கிச் செல்லுங்கள். திண்டுக் கல் போவதற்குள் பழையபடியே குணமாகி விடுவான்'' என்று உறுதியளித்திருக்கிறார்.
மாங்காய் வடு போன்ற ஒரு சிறிய காயை கயிற்றில் கோத்து என் இடுப்பில் கட்டி விட்டாராம். பணம் எதுவும் வாங்கவில்லை யாம். "விருப்பப்பட்டால் உண்டியலில் ஏதாவது காசு போடுங்கள்'' என்று மட்டும் சொல்லியிருக்கிறார். சில சில்லறைக் காசுகளை உண்டிய லில் போட்டுவிட்டு, குதிரை வண்டியில் ஏறி பெற்றோர் புறப்பட்டனர்.
திண்டுக்கல்லை நெருங்கும்பொழுது, நான் கண் விழித்துப் பார்த்திருக்கிறேன். பிறகு, குதிரை வண்டியைவிட்டு கீழே இறங்கிய என் தகப்பனார், காலை உடற்பயிற்சிபோல, "நடந்து வருகிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
அதைப் பார்த்த நான், "அப்பாவுடன் நடந்துவருகிறேன்' என்று சொல்லி, கூடவே ஓடியிருக்கிறேன். குதிரை வண்டியை வண்டிக் காரர் மெதுவாக நாங்கள் நடக்கும் வேகத்திற் கேற்ப ஓட்டியிருக்கிறார்.
அப்பாவுடன் குதிரை வண்டிக்குப் பின்னால் ஓடிவந்தது மட்டும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. வீட்டிற்கு வந்தபிறகு பழைய படியே நான் நன்றாக இருந்ததாக என் பெற்றோர் கள் கூறினார்கள். பிறகு இரண்டு நாட்கள் கழித்து என்னை அழைத்துக்கொண்டு போய் ஸ்டுடியோவில் ஒரு புகைப்படம் எடுத்தார்கள். நான் அதிக நாட்கள் இருக்கமாட்டேன் என்னும் சந்தேகத்தில் புகைப்படம் எடுத்ததாகக் கூறினார் கள். புகைப்படம் எடுத்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இன்றைக்கும் கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன். அந்த வயதிலும் என் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்திருக் கிறேன். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இதைக் கவனித்து சிரித்தேன்.
பாம்புக் கடிக்கு வேட்டியைக் கிழிப்பவர் 1940-களில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் இருந்தார். நான் சிறுவனாக இருக்கும் பொழுது, அப்போது நடந்த அதிசய நிகழ்ச்சி களைப் பற்றி கூறுவார்கள். அதாவது, யாருக் காவது பாம்பு கடித்தால் தொலைபேசியில் இவருக்குத் தகவல் சொன்னால் போதும்; உடனே தன்னுடைய தலையில் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொள்வார். பிறகு தனது வேட்டியின் முனையைக் கிழித்து, பாதிக் கப்பட்டவரின் பெயருடன் ஒரு மந்திரத்தைச் சொல்லி முடிச்சு போடுவார். அதோடு பாம்பு கடிபட்டவரின் உடலி-ருந்து விஷம் இறங்கி விடுமாம்.
இதற்காகவே வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் அவருக்கு மட்டும் வேட்டி கட்டிக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. மற்ற ரெயில்வே ஊழியர்கள் எல்லாருமே முழுங்கால் சட்டைதான் அணிந்திருப்பார்கள். அதோடு இவருக்கென்று ஒரு தொலைபேசியை தனியாகக் கொடுத்து, அந்த எண் எல்லாரும் தெரிந்துகொள்ளும்படியாக பத்திரிகையில் போடப்பட்டதாம்.
மாட்டு மருத்துவர்
மதுரை அலங்காநல்லூரை அடுத்த சத்திர வெள்ளாளப்பட்டி அருகில் வலையப்பட்டி என்ற சிறு கிராமம். அந்த ஊரில் மாட்டு மருத்துவம் பார்ப்பவர் ஒருவர் இருந்தார். அவரைப் பார்த்துப் பேசவேண்டும் என்று 2010-ல் சென்றேன். மாட்டு வைத்தியத்துக்காக தினமும் மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள். மாட்டுக்கு மூக்கணாங் கயிறு அழுத்துவதன் காரணமாக மூக்கில் புண்வரும். எதிர்பாராமல் வேறு காயங்களும் ஏற்படும். அவற்றுக்கு, தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களிடம் சென்று மருந்து வாங்கிப் போடுவார்கள். பல இடங்களுக்கும் போய் குணமாகாவிட்டால் கடைசியில் இந்த மருத்துவரிடம் வருவார்கள்.
இவர், மாட்டுக்கு மருந்து எதுவும் கொடுப்ப தில்லை. "மாட்டுக்கு புண் வந்துள்ளது. குணப் படுத்தவேண்டும்' என்று சொன்னால் போதும், அவர் விடியற்காலையில் சூரியன் உதய மாவதற்குமுன்பு எழுந்து, தண்ணீர்கூட குடிக் காமல் ஒரு செடியிலுள்ள கொழுந்து இலை ஒன்றைக் கிள்ளி எடுப்பார். பிறகு, ஒரு மாட்டின் கால் தடத்தில்- அது ஏதாவது மாட்டின் கால் தடமாகக்கூட இருக்கலாம் - அந்த தடத்தில் சிறிதளவு மண்ணை எடுத்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கிய கொழுந்து இலையை அதனுள் வைத்து மேலே மண்ணைப் போட்டு மூடுவார். அப்பொழுது மூன்று தெய்வங்களின் பெயரைச் சொல்வார். "அதில் ஒரு தெய்வம் பகவான் கிருஷ்ணன்'' என்றார்.
"வேறு மந்திரம் ஏதும் சொல்கிறீர்களா?'' என்றேன். "இல்லை'' என்றார்.
"ஏதாவது குட்டி தேவதைகளைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டால், "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்றார்.
"நாங்களும் இதைச் செய்யமுடியுமா?'' என்றேன். "ஓ... தாராளமாகச் செய்யலாம். ஆனால், நாங்கள் அந்த மருத்துவ இலையை உங்களுக்கு சொல்லித் தரமாட்டோம். ஏனென் றால், இது எங்களுடைய பரம்பரையில் வருவது. நாங்கள் அதை ரகசியமாகப் பாதுகாத்து வருகிறோம்'' என்றார்.
அவருக்கு அப்போது வயது 58 இருக்கும். ஆனால், பார்ப்பதற்கு 75 போல தோற்றமளித்தார். வீட்டில் அவர், சகோதரர் மற்றும் மைத்துனர் ஆகிய மூவரும் இந்த வைத்தியத்தைச் செய்கிறார்கள். கைமேல் பலன் கிடைக்கிறது என்றார்கள் அங்கிருந்த வர்கள். "வைத்தியத்திற்கு பணம் எதுவும் வாங்க மாட்டோம்'' என்றார்.
மூல நிவாரண தம்பதி
திருச்சி அருகில் மேலவாலாடி என்ற ஊர் உள்ளது. அங்கு 1960-களில் ஒரு விசித்திர சக்திகொண்ட கணவன்- மனைவி இருந்திருக்கின்றனர். அதாவது, யாருக்காவது மூலநோய் வந்தால், அந்த ஊருக்குச் சென்று அத்தம்பதியைப் பார்த்து குணமடைவார்கள்.
போகிறவர்கள் மாலையில் அந்த வைத்தியத் தம்பதியின் வீட்டிலேயே தங்க வேண்டுமாம். அங்கு எதுவும் சாப்பிடவேண்டிய அவசிய மில்லை. காலையில் எழுந்தவுடன் சாமி கும்பிட்டு விபூதியை நெற்றியில் பூசிவிடுவார் களாம். அவர்களின் வீட்டைக் கடந்தவுடன் மூல நோய்க்காரர்களுக்கு எறும்பு கடித்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுமாம். வீட்டுக்கு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்ததைவிட நன்றாக குணமாகியிருக்குமாம்.
அழிவு
வெள்ளையர்கள் வரை பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் நம் தேசத்தின்மீது அடிக்கடி படையெடுத்ததால் பெருமைக்குரிய இதுபோன்ற நம்முடைய விஷயங்கள் எல்லாம் அதிகம் மறைந்துவிட்டன; அழிந்துவிட்டன.
நம்மவர்களுடைய பரம்பரையில் வந்த அடுத்தடுத்த வாரிசுகளும் இவற்றைக் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களும் தங்களுடைய வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. முறையாகப் பதிவுசெய்தும் வைக்கவில்லை. அடுத்தவர் புகழடைவதை விரும்பாத குறுகிய மனப்பான்மையே இதுபோன்ற அரிய கலைகள் அழிந்ததற்கான அடிப்படை காரணம்.
(அதிசயங்கள் தொடரும்)