சுமார் பத்தாண்டு களுக்குமுன் நான் ஐந்து நாட்கள் கோவையில் இருந் தேன். அங்குள்ள சில நண்பர் களிடம் பேசும்போது ஜோதிடம் குறித்த விவாதம் வந்தது. அப்போது, வெற்றிலை ஜோதிடர் ஒருவரைப் பற்றியும், அவரது திறமைகளைப் பற்றியும் கூறினார்கள். அதைக் கேள் விப்பட்டவுடன் அவரைப் பார்ப்பதற்குச் சென்றேன்.

அவருடைய பெயர் சக்தி சுப்பிரமணிய அடிகளார்.

அவர் கோவை அருகிலுள்ள செல்லப்ப கவுண்டன் புதூர் என்னும் இடத்தில் இருந்தார்.

புதன்கிழமை வார விடுமுறை என்றார்கள்.

Advertisment

அவரைப் பார்க்கச் செல்பவர் கள், ஒரு குறிப்பிட்ட தொகை யைச் செலுத்தி "டோக்கன்' வாங்கிக்கொள்ளவேண்டும். அவர் வெற்றிலை ஜோதிடம், ஜோதிடம் என்று இரு வகை யிலும் பார்ப்பார். வெற்றிலை ஜோதிடம் என்றால் நாம் டோக்கன் வாங்கிய நேரத்தை வைத்துக்கொண்டோ அல்லது வரிசைக்கிரமாக வரும்போது ஜோதிடரைப் பார்க்கும் நேரத்தை வைத்தோ, குறிப்பிட்ட வெற்றிலைகளை எடுப்பார்.

எடுத்த வெற்றிலைகளிலுள்ள நரம்புகளை எண்ணியோ, வெற்றிலைகளை எண்ணியோ, ஏதோ எண்கணிதக் கணக்கைப்போல் கணித்துப் பலன்களைச் சொன்னார். "எப்படி பலன் சொல்கிறீர்கள்?' என்று நான் கேட்கவில்லை.

ஜாதகத்தைக் கொடுத்தால் அதற்கும் பலன் கூறினார்.

Advertisment

அவர் கணித்துக் கூறிய பலன்கள் முழுவதும் நடைபெற்றால் நிச்சயம் முழு நம்பிக்கை ஏற்படும். எனக்குச் சொன்னதில் ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டது. ஆனால், நெற்றியடியாக சில விஷயங்களைச் சொன்னார். அதை மறுப்பதற்கில்லை.

இவரிடம் ஜோதிடம் பார்த்துப் பலன் கேட்டவர்களுக்கு அதன்படி நடந்தவற்றைப் பற்றியும் விசாரித்தேன். அதில் இருபது நாட்களுக்குள் பலன் நடந்த ஒரு குடும்பத்தைப் பற்றிக் கூறினார்கள். நேரடியாக அவர்களை சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். கோவை விமான நிலையத்திற்கு அருகில் அந்தக் குடும்பம் இருந்தது.

அவர்களுடைய பெயரைச் சொல்ல விரும்பவில்லை. நகையைப் பறிகொடுத்த அந்தப் பெண் கூறிய விவரங்களை என்னுடைய "டேப் ரெக்கார்டரில்' பதிவு செய்தேன். அதை அப்படியே இங்கு குறிப்பிடுகிறேன்.

அந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தைக்கு ஏழு வயது. இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது. அவர்கள் 2011 ஜனவரி மாதம் மைசூர் பக்கம் சுற்றுலா போய் இருக்கிறார் கள். மூன்று நாட்கள்தான் பயணம். இந்த மூன்று நாட்களும் நெருங்கிய உறவினர்கள் இவர்கள் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒரு சாவியைக் கொடுத்திருக்கி றார்கள்.

சுற்றுலா முடிந்து மூன்று நாட்கள் கழித்து கோவை திரும்பினர். அப்போது இரவு 10.30 மணி இருக்கும். வீட்டின் அருகே வரும்போது கதவு சற்று திறந்திருப் பது தெரிந்தது. ஒரு வேளை தன்னுடைய தம்பி ஊருக்குப் போகவில்லை போலும்; இன்னும் வீட்டில்தான் இருக்கிறார் என்று நினைத் துக்கொண்டு கதவைத் திறந்திருக்கிறார்கள்.

வீட்டினுள்ளே யாருமில்லை. இவர் களுக்கு பயம் கவ்விக்கொண்டது. அங்கே அவர்களுக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. முக்கியமான பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் நகைகள் மற்றும் பணம், பட்டுச் சேலைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.

வீட்டுக்குள் எந்தப் பொருளும் சிதறிக் கிடக்கவில்லை. பீரோவிலுள்ள "லாக்கரை' மட்டும் உடைத்து, எல்லாவற்றையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். ஒரே ஒரு "லாக்கரை' மட்டும் திறந்து எடுத்த நகை மட்டும் 105 பவுன். மேலும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்திருக்கின்றனர்.

இன்னொரு லாக்கரைத் திறக்கவில்லை. அதற்கு நேரமில்லையா அல்லது முடிய வில்ûலா என்பது தெரியவில்லை. இதைக் கண்டு பதறிப்போன தம்பதியினர் காவல் துறைக்கும், நெருங்கிய உறவினர்கள், நண்பர் களுக்கும் தொலைபேசியிலும், கைபேசி யிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள் ளனர். இரவு 10.45 மணிக்கு மேலாகிவிட்ட தால் சிலர் மட்டுமே கிடைத்திருக்கின்றனர். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வந்து முறைப்படி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, "விரைவில் கண்டுபிடித்து விடுவோம்' என்று கூறிச் சென்றுள்ளனர்.v நகையைப் பறிகொடுத்தவர் அரிமா சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அவருடைய செல்வாக்கை எல்லா வழிகளிலும் முறைப்படி பயன்படுத்தி உண்மையை அறிய முயன்றிருக்கிறார். ஒரு சிலர் ஜோதிடர்களின் பெயர்களையும், சிலர் வெற்றிலை ஜோதிடர் சக்தி சுப்பிரமணியத் தைப் பற்றியும் கூறியுள்ளனர்.

rajesh

காலை வரை இவர்கள் யாரும் தூங்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த ஜோதிடரையும் பார்க்கமுடியவில்லை. வெற்றிலை ஜோதிடர் மட்டும் காலை ஆறுமணிக்குக் கிடைத்திருக்கிறார். அவரிடம் சென்று முறையாக வெற்றிலை ஜோதிடம் பார்த்திருக்கின்றனர்.

அவர் கணித்துச் சொன்னவை கீழே தரப்பட்டுள்ளது.

* உங்கள் நகைகள் இன்னும் அழிக்கப் படவில்லை. அப்படியேதான் இருக்கின்றன.

* உங்களுடைய வீட்டுக்கு வடக்குப் பக்கம் உள்ளவர்தான் நகையைத் திருடி யிருக்கிறார்.

* நகைகளை பூமிக்குள் புதைத்து வைத்துள்ளார்.

* இன்னும் 20 நாட்களுக்குள் உங்களுடைய நகைகள் அப்படியே கிடைத்துவிடும். ஆனால் பணம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கவே கிடைக்காது.

ஜோதிடர் சக்தி சுப்பிரமணியம், கோவில் மற்றும் கடவுள் சம்பந்தமாக பூஜைகள், பரிகாரங்கள் போன்றவற்றைக் கூறியிருக்கி றார். பரிகாரத்துக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவானது என்றார்கள். இந்த வீட்டுக்கார அம்மாவின் அப்பா- கல்யாணத்திற்கு நகை போட்டதால் அவர்தான் பரிகாரம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.

அதன்படி நகையைப் பறிகொடுத்த பெண்ணின் தகப்பனார்தான் ஜோதிடர் சொன்னவற்றை முறைப்படி செய்து முடித்தார். காலையில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். சந்தேகப்பட்ட வர்களிடம் இதுபற்றி விசாரனை நடத்தி யுள்ளனர்.

அதுபோல் பக்கத்து வீட்டுக் காவலாளியிடம் விசாரித்திருக்கிறார்கள். காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பார்த்த அந்த ஆள் நடுங்கியிருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கு மட்டும் அவரை எங்கேயோ இதற்குமுன்பு பார்த்ததாக நினைவுவந்தது.

அதன்பிறகு வீட்டை உடைத்து நகையைத் திருடுகிறவர்களை அழைத்து போலீசார் விசாரித்திருக்கின்றனர். அதில் ஒரு பழைய திருடன் மட்டும். "நான் திருடுவதையே விட்டுவிட்டேன் ஐயா'' என்று சொல்லியிருக்கிறான்.

பிறகு, "நேற்றுகூட பழைய திருடன் மணி என்னிடம் வந்து, "பக்கத்து வீட்டில் திருட்டுபோன நகையை விசாரிக்க வந்தவர்கள் சந்தேகப்பட்டு என்னை விசாரித்தனர். நான் திருட்டுத் தொழிலை விட்டு எட்டு வருடங்கள் ஆகிறது என்பது உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது என்னை வந்து விசாரிக்கும்போது நான் நடுங்கிவிட்டேன்' என்று சொன்னான்'' என்றதும், காவலாளிமீது சந்தேகப்பட்ட அந்த போலீஸ்காரருக்கு சந்தேகம் உறுதி ஆயிற்று.

உடனே, "அந்த மணி இப்போது எங்கிருக்கிறான்? என்ன செய்கிறான்?'' என்று விசாரித்திருக்கின்றனர். அதற்கு அவன், "கோவை விமான நிலையத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு வீட்டில் "வாட்ச்மேன்' வேலை பார்க்கிறான்'' என்று கூறியுள்ளான்.

அதைக் கேட்டவுன் காவல்துறையினர் அந்த வீட்டை நோக்கி விரைந்தனர்.

அங்கு சென்றால் காவல்காக்க வேண்டிய அவனே பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டான் என்று தெரிந்தது.

"என் மைத்துனர் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. எனவே, நான் குடும்பத்துடன் போகிறேன். வருவதற்கு பத்து நாட்களாகும்' என்று பக்கத்து வீட்டில் சொல்லியிருக்கிறான்.

மணியின் செல்போன் எண்ணைத் தெரிந்துகொண்டு, போலீசார் தொடர்ந்து கண்காணித்திருக்கின்றனர். அவன் மிகவும் திறமையாக- சிம் கார்டைக் கழற்றி வைத்திருக்கிறான். சிம் கார்டை மாற்றவில்லை. மணியைக் கண்காணிக்க தனியாக ஒரு பெண் போலீசைப் போட்டுள்ளனர். அவனோ மிகவும் எச்சரிக்கையாகவும், சாதுரியமாகவும் காலையிலும், மாலையிலும் இரண்டு வேளை மட்டும் செல்போனில் பேசியிருக்கிறான். அவனுடைய சொந்த ஊர் ஓசூர்.

அவன் பேசுவதை வைத்து பெங்களூர் என்று கண்டுபிடித்து, அவனைத் தொடர்ந்து கண்காணித்து, கடைசியில் மடிவாலா என்னும் இடத்தில் வளைத்துப் பிடித்துவிட்டார்கள். அங்கு கட்டடம் கட்டும் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தான். திருடிய 40 ஆயிரம் ரூபாய் பணத்தை முழுவதும் செலவு செய்துவிட்டான். திருடியதை தன் மனைவி யிடம்கூட சொல்லாமல் இருந்திருக்கிறான்.

போலீசுக்கு பயந்து நகையை மட்டும் புதைத்து விட்டான்.

சுற்றுலா சென்ற மூன்று நாட்களில் முதலிரண்டு நாட்கள் அந்த வீட்டில் தங்கிய உறவினர்கள், பகலில் வெளியில் சென்றுவிட்டு இரவில்வந்து வீட்டில் தங்கியுள்ளனர். மூன்றாவது நாள் "நாங்கள் வருகிறோம். நீங்கள் யாரும் தங்கவேண்டாம்' என உறவினர்களிடம் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த மூன்றாம் நாள்தான் இவன் தன்னுடைய திருட்டு வேலையை அங்கு காட்டியிருக்கிறான்.

வீட்டிற்குள் நுழைந்த மணி சமையலறை யில் இருந்த கத்தியை உபயோகித்து பீரோவைத் திறந்துள்ளான். திருட்டு விவகாரத்தில் யாரையும் கூட்டுச் சேர்க்க வில்லை. தனியாகத்தான் திருடியிருக்கிறான்.

எடுத்த நகைகளை அந்த வீட்டின் அருகிலுள்ள ஒரு குப்பை மேட்டுக்குப் பக்கத்தில் புதைத்து வைத்துள்ளான்.

அதுவும் ஒரு அடி ஆழத்தில்தான்!

போகிப் பண்டிகையன்று பழைய துணி போன்ற பொருட்களை இவன் புதைத்த இடத்திற்கு அருகில் போட்டு எரித்திருக்கிறார் கள். நல்லவேளை... நகைக்கு ஒன்றும் ஆகவில்லை.

நகையைப் புதைத்த இடத்தை அவனால் போலீசுக்கு முதலில் அடையாளம் காட்ட முடியவில்லை. இருட்டில் புதைத்ததால் எந்த இடம் என்பதை சரியாகக் காட்ட இயலவில்லை. சரியான இடத்தைக் காட்ட அவனுக்கு ஒரு மணி நேரம் ஆனதாம்.

தோண்டி எடுத்தவுடன் நகைகைள உரியவரிடம் காட்டி சரி பார்த்தவுடன், போலீசார் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பிறகு முறைப்படி ஏழு நாட்கள் கழித்து, தற்செயலாக கோவைக்கு வந்த போலீஸ் உயரதிகாரி கையால் உரியவர்களிடம் கொடுத்தார்கள்.

திருட்டுப் போன நகையைக் கண்டு பிடிக்க தமிழகக் காவல்துறையினர் எடுத்துக்கொண்ட முயற்சியையும், சீக்கிரமே கண்டுபிடித்துக் கொடுத்ததையும் எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை என்கிறார்கள்.

திருட்டுப் போன 12-ஆம் நாள் நகை கிடைத்தது.

இன்றைய நிலவரப்படி 105 பவுன் நகைகளைச் செய்ய எவ்வளவு லட்ச ரூபாய் தேவைப்படும் என்பது உங்களுக்கே தெரியும். தமிழகக் காவல்துறையின் திறமையால் அத்தனை நகைகளும் மீட்கப்பட்டு விட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நடந்தவற்றையெல்லாம் முன்கூட்டியே வெற்றிலை ஜோதிடர் சொல்லிவிட்டார் என்பதுதான்! இதை என்னவென்று சொல்வது?

(அதிசயங்கள் தொடரும்)