நாடி ஜோதிடத்தை எட்டாவது உலக அதிசயமென்று குறிப்பிடுகிறார் கள். என் அனுபவத்தில் அது உண்மையென்றே தோன்றுகிறது. இந்த நாடி ஜோதிடமானது வெளி நாட்டவர்கள் பலரைத் தன்பால் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஜப்பான்காரர்கள் அதிகமாக நாடி ஜோதிடத்தை நாடுகிறார்கள். தாம்பரத்தில் ஒரு நாடி ஜோதிட நிலையம் தொடங்கப்பட்டபோது நான் சிறப்பு விருந்தினராகச் சென்று திறந்துவைத்தேன். அப்போது (1990-களில்) தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையாமல் ஜப்பான்காரர்கள் வந்து நாடி பார்த்துச் செல்வதை நான் கவனித்திருக்கிறேன்.

நாளுக்கு நாள் ஜப்பான்காரர்களின் வருகை அதிகமாவதைக் கண்ட அந்த நாடி ஜோதிட நிறுவனத்தினர், ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் ஒரு கிளையைத் தொடங்கிவிட்டனர்.

ஜப்பான்காரர்களுக்கு நாடி ஜோதிடத்தின்மீது நம்பிக்கை ஏற்பட்டதற்கு ஓர் அதிசய சம்பவமே காரணமாக இருந்திருக்கிறது.

Advertisment

1990-களில் நாடி ஜோதிடத்தைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக ஒரு ஜப்பான்காரர் இங்கேவந்து ஏடு பார்த்திருக்கிறார்.

ss

Advertisment

அவருடைய ஏட்டில், "சீக்கிரம் உங்கள் வீட்டை மாற்றிவிடுங்கள். உங்களுக்கு ஆபத்து வரப்போகிறது' என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படியே அவர் வீட்டை உடனே மாற்றிவிட்டார். அவர் வீடுமாற்றி ஒரு மாதத்திற்குள், அவர் முன்பு வசித்த இடத்தில் எரிமலையொன்று வெடித்து, அந்தப் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நாடி ஜோதிடம் பார்த்தவர் மெய்சிலிர்த்துப் போனார். நாடி ஜோதிடத்தைப் பற்றிப் பரவசமாக அவரே பலரிடமும் எடுத்துக் கூறியிருக்கிறார். அன்றுமுதல் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக ஜப்பானியர்கள் இங்கே படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இவ்வாறு ஜப்பானியர்களே நாடுகின்ற நாடி ஜோதிடத்திற்கு இங்கே நம்மவர்கள் பலர் அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை. இதைப் பார்க்கும்போது, "உள்ளூர்ச் சரக்கு விலைபோகாது' என்னும் பழமொழிதான் நினைவுக்குவருகிறது.

கோவையிலுள்ள என் ரசிகரும் வாசகருமான ஒருவர் எனக்கு ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அனுப்பிவைத்தார். 'பட்ங் ஐண்க்க்ங்ய் ஞழ்ஹஸ்ரீப்ங் ர்ச் ஒய்ண்க்ஹ; பட்ங் ஙஹ்ள்ற்ங்ழ்ஹ் ர்ச் ஒய்க்ண்ஹ'ள் சஹஹக்ண் டஹப்ம் தங்ஹக்ங்ழ்ள்' (இந்தியாவில் ரகசியமாக மறைந்துள்ள அதிசய நாடி ஜோதிடம்) என்பதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர். அந்தப் புத்தகத்தில் "ஆன்ட்ரு ஆஞ்செலா' தம்பதியருக்கு ஏற்பட்ட அனுபவம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

"1,300 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் ஒரு குகையில் அமர்ந்துகொண்டு ஏதோ ஒரு துறவி, இங்கிலாந்தில் இருக்கும் என் வாழ்க்கையைப் பற்றி மிகத் துல்லியமாக எழுத முடியுமென்றால், அதை யாராலும் நம்பமுடியாது. ஆனால், ஒருவர் எழுதியிருக்கிறார்.

அதைக்கண்டு நான் வியந்தேன்' என்கிறார் ஆன்ட்ரு.

"எல்லாவிதமான பகுத்தறிவும்கொண்டு, சர்வ ஜாக்கிரதை யாகத்தான் நான் அந்த நாடியைப் பார்த்தேன். என்னிடமிருந்து எந்தவிதமான செய்தியையும் நாடி ஜோதிடம் படிப்பவர்களால் கிரகிக்கமுடியாது. அப்படியிருக்கும்பொழுது எப்படி அவர்களால் என் முழு விவரங்களையும் சொல்லமுடிகிறது?' என்று ஆச்சர்யத்தால் வினா தொடுக்கிறார் ஆன்ட்ரு.

"அதைப் பார்த்த நான் ஒரு மூட்டைப் பூச்சியானேன். இந்தியாவை ஆய்வு செய்யவேண்டுமென்ற அறிவு மமதையில், சர்வசாதாரணமாக இந்தியாவைப் பார்த்த நான், நாடியைப் பார்த்து மிரண்டுபோனேன். எனக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியங்கள், இதுவரை நான் யாரிடமும் சொல்லாத விஷயங்கள், நானே மறந்துபோன சில விஷயங்கள், என் மனைவியிடம்கூட சொல்லாத விஷயங்கள் அனைத்தும் அந்த ஓலைச் சுவடியிலே வந்தன. இதைப்போல் ஒரு நிகழ்ச்சியை இதற்குமுன் நான் எதிர்கொண்டதில்லை. தலை சுற்றியது. என் மனம் மரத்துப் போனது. கண்கள் திறந் திருந்தும் எதையும் பார்க்க முடியவில்லை. ஏடு படித்துக்கொண்டிருக்கும்பொழுதே, இடையிடையே பால்கனிக்குச் சென்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.'

மேலும் ஆன்ட்ரு கூறுகிறார்.

* இந்த வயதில், இந்த நேரத்தில் வருவீர்கள் என்று ஏட்டில் எழுதப் பட்டிருந்தது.

* என்னுடைய வாழ்க்கையை ஒரு சின்னஞ்சிறிய ஓலையில் இவ்வளவு தெளிவாக வருடவாரியாக, அதுவும் வரிசைக்கிரமமாக நானேகூட எழுத முடியாது. ஆனால் அந்த ஓலையில் என்னுடைய வாழ்க்கையின் விவரங்கள் முழுவதும் எழுதப்பட்டிருந்தது.

* என்னுடைய வயது 55 என்று சரியாகச் சொன்னார். உங்கள் மனைவியின் பெயர் ஆஞ்செலா. 12 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று வந்தது.

*முதல் மனைவியை விவாகரத்து செய்தீர்கள். அதன் பின்புதான் ஆஞ்செ லாவை திருமணம் முடித்தீர்கள். மனைவி கட்டடக் கலை படித்தவர். சமீபத்தில்தான் அவருடைய வேலையை மாற்றினார் என்ற புள்ளி விவரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினார்.

* தொழிலில் உங்களது பங்குதாரர் உங்கள் மனைவிதான். வெளியாள் யாரும் பங்குதாரர் அல்ல.

* ஒன்பது மாதத்திற்கு முன்பாகத்தான் வீடு மாறியுள்ளீர்கள்.

ss

* உங்களுக்கு குழந்தைகள் இல்லை. அது போனபிறவியில் செய்த பாவம் என்று அவற்றை அடுக்கினார்.

*எனக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார் என்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் மரணமடைந்தார் என்பதும் ஏட்டில் வந்தது.

* நானும் என் மனைவியும் ஆவணப்படம், தொலைக்காட்சிக்கான பொழுதுபோக்கு விஷயங்களை படம்பிடிப்பது மற்றும் ஒரு புத்தகம் எழுதியிருப்பதும் நாடியில் வந்தன.

* முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் கட்டடக்கலை வடிவமைப்பில் பட்டப் படிப்பும், மேல்பட்டமும் பெற்றதாக வந்தது.

ஆனால் அதை நான் யாரிடமும் சொல்ல வில்லை என்பது முக்கியமானது.

* நீங்கள் ஏற்கெனவே ஒரு பிள்ளை யைத் தத்தெடுக்க முயற்சி செய்திருப்பீர்கள். மீண்டும் ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க முயலவேண்டும். அந்த குழந்தை நிலைக்கும். அந்த குழந்தை ஒரு ஆண். அவன் வந்த பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்காலத்தில் அவனும் உங்களது மனைவியும் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். (ஒரு குழந்தையை தத்தெடுக்க முயற்சிசெய்து. அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது என்பது உண்மைதான்.) ப் என் தந்தையின் பெயர் டிமோ-டீ அகஸ்ட் (பண்ம்ர்-பங்ங் ஆன்ஞ்ள்ற்). தாயார் பெயர் டாரத்தி (உர்ழ்ர்ற்ட்ஹ்). இந்தப் பெயர்கள் நாடியில் அப்படியே அட்சரம் பிசகாமல் வந்தன. இதை படித்ததும், அந்த ஓலைச் சுவடியின் அகலம் இரண்டு அங்குலம்.

அந்த அளவுக்கு நான் குறுகிப் போனேன். என் ஆன்மாவின் டி.என்.ஏ. அந்த ஏட்டில் அமர்ந்துள்ளதாக உணர்ந்தேன்.

இவ்விதமாக அந்த சிலிர்ப்பான அனுபவத்தை விவரித்துக்கொண்டே போகி றார் ஆன்ட்ரு. அந்நிய நாட்டவர்களையும் அதிசயிக்க வைக்கும் நாடி ஜோதிடத்தைப் பற்றிப் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஆரம்பத்தில் எனக் கும் அத்தகைய ஐயப்பாடுகள் இருந்தன.

அவற்றிற்கெல்லாம் தெளிவான பதில்களை, நாடி ஜோதிடர் ஒருவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன். அந்த விளக்கங்களைக் கேள்வி- பதில் வடிவில் கீழே தருகிறேன்.

நான்: இந்த ஏடுகள் 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவையா?

நாடி ஜோதிடர்: 1,300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ராஜராஜசோழன் காலத்தில் வடநாட்டிற்குச் சென்று, வடமொழி மூலத்திலிருந்து பிரதியெடுக் கப்பட்டது. பின்பு சரபோஜி மன்னர் காலத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டது. வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் முக்கியமான ஏடுகளான விஞ்ஞானம், மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவை தவிர, தனிப்பட்ட மனிதர்களுக்கு எழுதப்பட்ட ஜோதிட ஏடுகள் ஏலத்திற்கு விடப்பட்டன.

நான்: ஏடுகளைப் பழையவைபோல் காட்டுவதற்காக அதில் சில மூலிகைகளைத் தடவுகிறார்கள் என்றும், போலி ஏடுகள் தயாரிக்கிறார்கள் என்றும் சொல்கிறார் களே?

நாடி ஜோதிடர்: ஜோதிடர்களின் எண்ணிக்கை பெருகுவதால் ஏடுகளைப் பிரதியெடுக்கும்படியாகிறது. எனவே, அது பழையதாக இருக்கவேண்டும் என்பதற்காக, அதுபோன்ற மூலிகைகளைத் தடவுகிறார்கள். மற்றபடி மக்கள் சந்தேகிப்பதைப்போல் போலி ஏடுகள் தயார் செய்யவில்லை; செய்யவும் முடியாது.

நான்: குறைந்தது 500 வருடங்களாக இந்த ஏடுகள் இருக்கின்றன என்பதை நம்ப முடியவில்லையே?

நாடி ஜோதிடர்: 200 ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்ட வால்மீகி இராமாயணம், வியாசபாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள், 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கம்ப இராமாயணம், 500 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மற்றும் உலகிலுள்ள மத சம்பந்தமான புனித நூல்கள் போன்றவற்றின் மூலப் பிரதிகளையா இப்பொழுது நாம் படித்துக்கொண்டிருக்கிறோம்?

அவற்றின் நகல்களைத்தானே படித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றைப் போன்றவையே இந்த நாடி ஜோதிட ஏடுகளும்.

நான்: 300 வருடங்களுக்கு ஒருமுறை அதேமாதிரியான மனிதர்கள் மறுபடியும் பிறந்து வாழ்கிறார்கள் என்று சொல்கி றார்களே, அது உண்மையா? அந்தக் கணக்கின்படி ஓலைச்சுவடிகள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறுகிறார் களே, அது உண்மையா?

நாடி ஜோதிடர்: ஜாதகத்திலுள்ள 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 27 யோகங்கள், 108 நட்சத்திரப் பாதங்கள், திதிகள், கரணங்கள், இன்னும் உள்ள தச வர்க்கம், அஷ்டவர்க்கம் போன்ற பல்வேறு வர்க்கங்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தால் மொத்தம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ஜாதக வகைகள்தான் உண்டு. அந்த வகைகளுக்குள்தான் இந்த உலகிலுள்ள மனிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள். இனிமேலும் பிறக்கப் போகிறார்கள்.

நான்: இன்னும் நிறைய ஏடுகள் படிக்கப்படாமல் இருப்பதாகக் கூறுகிறார் களே?

நாடி ஜோதிடர்: இன்னும் ஒரு லட்சம் ஏடுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன. சில ஏடுகளை செல்லரித்துவிட்டன. சில ஏடுகள் ஆவணி அவிட்டம் அன்று வைகை ஆற்றில் போட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். சிலரது வீடுகளில் இருந்த தனிப்பட்ட ஏடுகள் அழிந்து போகாதபடி தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் மற்றும் ஆங்கிலேயே அதிகாரிகள் சிலர் அவற்றை சேகரித்துப் பத்திரப்படுத்தியுள்ளனர்.

நான்: வெளிநாட்டினர் நம்முடைய முக்கியமான ஏடுகளை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மையா?

நாடி ஜோதிடர்: விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், வானசாஸ்திரம் போன்ற துறைசார்ந்த ஏடுகள் பலவற்றை ஐரோப்பிய நாட்டினர் எடுத்துக்கொண்டு போய்விட்டனர் என்பது உண்மைதான்.

அவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் பல விஞ்ஞானக் கருவிகளையும், மருந்துகளையும் கண்டுபிடித்துவிட்டனர்.

நான்: சிலருக்கு நாடி கிடைப்பதில்லை. அப்படியென்றால் எல்லாருக்கும் ஏன் நாடி எழுதப்படவில்லை?

நாடி ஜோதிடர்: மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றம் போன்றவை எல்லாருக்குமல்ல. தேவைப்படும் மனிதர்களுக்கு மட்டுமே. மேலே குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கும் போகாதவர்கள் உண்டு. எனவே, ஜோதிடம் பார்க்க இந்த வருடம், இந்த மாதம், இந்த தேதி, இந்த வயது வரும்பொழுதுதான் நாடி பார்க்கவருவார்கள் என்று, அவர்களுக்குதான் ரிஷிகள் நாடி எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குதான் நாடி ஜோதிடம் பார்க்கிறோம்.

இந்த நாடி ஜோதிடர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது நாம் எவ்வளவோ உன்னதமான விஷயங்களைப் பறிகொடுத்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது. அதற்குக் காரணம் நம் பெருமையை நாம் உணரவில்லை என்பதுதான். நம்மிடம் இருந்த சிறப்புகளை நாம் மதிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான். ஆனால், நம்மிடமுள்ள மகிமைகளை வெளிநாட்டவர்கள் உணர்ந்து, அவற்றை உபயோகித்துக்கொள்கிறார்கள்.

இனிமேலாவது, நம்மிடமுள்ள தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். நம்மிடமுள்ள உன்னதங்களை உணரத் தொடங்கவேண்டும். பகுத்தறிவு என்ற பெயரில் நம் கண்களை நாமே கட்டிக்கொள்ளாமல், எதையும் உற்றுநோக்கி உணர்ந்து அறிந்தபிறகு, ஒன்றைப் பற்றிய அபிப்பிராயம் சொல்லவேண்டும். இப்படிச் செய்தால், இந்தியா உலக அரங்கில் தலைநிமிரும் என்பது நிச்சயம்.

(அதிசயங்கள் தொடரும்)