துரை குட்ஷெட் தெருவில், முப்பது வருடத்திற்கு மேற்பட்ட முழுமையான கண் மருத்துவ அனுபவத்துடன், 1999-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம் சந்திரா கண் மருத்துவமனையை அதிநவீன கண் சிகிச்சை சாதனங்களுடன், ஏழை எளியோர் முதல் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள்வரை நாடிவந்து கண் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவரும், கண் மருத்துவ சிகிச்சைகளில் சாதனைகள் பல புரிந்து வெற்றி சிகரங்கள் பல தொட்டு, கண் பாதிப்புகள் அனைத் திற்கும் கவனமுடன் தீர்வு தந்துவரும் கண் மருத்துவ மாமேதை டாக்டர் ந. சீனிவாசன், ஙஇஇந, உஞ, ஙசஆஙந அவர்களைச் சந்தித்து அவரின் ஆன்மிக ஈடுபாடுகள் பற்றி ஆவலுடன் கேட்டோம். அவர் தனது பக்தி பற்றி பரவசத்துடன் நம்மிடம் விளக்கினார்.

என் குலதெய்வம் சோழவந்தான் போகும் வழியிலுள்ள கொடிமங்கலம் கிராமத் திலுள்ள சீதாலட்சுமி அம்மன். வருடம் தோறும் சிவராத்திரியன்று நான் குலதெய்வ வழிபாடு செய்துவர தவறியதே இல்லை. நேரம் கிடைக்கும்போது ஞாயிறு மாலை சென்று வணங்கியும் வருகிறேன். மேற்கூரை இல்லாத சக்திவாய்ந்த அம்மன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த சீதாலட்சுமி அம்மனை வழிபட்டால் சீக்கிரம் தீர்வு கிடைத்தே தீரும் என்பதால் என்னைப் போன்ற ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி அம்மன் அருளை பெற்றுச் செல்கிறார்கள். இந்த அற்புத சக்தி அம்மன் அருளால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்றேன். குறிப்பாக இந்த அம்மனுக்கு மேற்கூரை, பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க பலரும் முயன்றும் முடியவில்லை. அதுதான் இந்த அம்மனின் தனிப்பெரும் சக்தி.

மதுரையில் என்னை தனிப்புகழோடு திகழவைத்த அன்னை மீனாட்சியையும் அனுதினமும் பூஜித்து வணங்கிவருகிறேன்.

எல்லா கடவுள்களையும் வேண்டுவேன். குறிப்பாக நான் வரம் தரும் வாராஹி அம்மனின் அதிதீவிர பக்தன். வாராஹி மந்திரங்களை மனப்பூர்வமாக சொல்லி வாழ்வில் வளம்பெற்று வருகிறேன்.

மனதார நாம் பத்து பேருக்கு தினமும் சோறுபோட வேண்டும் என்ற தர்ம சிந்தனை வந்தால் போதும். தெய்வங்கள் நமது நல்ல எண்ணத்திற்காகவே நூறு பேருக்கு தினமும் விருந்தே தரும் மகத்தான சக்தியை தந்துவிடும். நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு.

2019-ஆம் ஆண்டில் "லைப்டைம் அச்சீவ்மெண்ட் அவார்டு' சமீபத்தில் பெற்ற வெற்றி கோப்பை விருது, லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகள் வழங்கிய பெஸ்ட் டாக்டர் அவார்டு, பெஸ்ட் சர்ஜன் அவார்டு என்று நான் எனது கண் மருத்துவ சாதனைகளுக்கு ஏராளமான விருதுகளை பெற்றதற்கும் நான் தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து என் இல்ல பூஜையறையில் பிரம்ம முகூர்த்த வேளையில் நான் தெய்வங்களின் அருளை பரிபூரணமாக வேண்டுகிறேன்.

என் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி பெரிய உறுதுணையாக இருப்பது நான் குருவாக தினமும் பூஜிக்கும் கணக்கம்பட்டி சித்தர்தான். அவர் புகைப்படத்தை எப்போதும் என் சட்டை பையில் வைத்திருக்கிறேன்.

eye

தனது பக்தி செயல்பாடுகளைச் சிறப் பாக கூறி முடித்த டாக்டர் சீனிவாசனிடம் அனைத்து தெய்வ சக்திகளின் அற்புத அருளோடு அவர் ஆற்றிவரும் அசத்தலான கண் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் டாக்டர் சீனிவாசன் அவர்கள் பல ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத சிறப்புகள் அடங்கிய உலக புகழ்பெற்ற கண் மருத்துவ முகாம்களை நடத்திவருவது பற்றியும் நம்மிடம் விரிவாகக் கூறி வியக்கவைத்தார்.

"1987-ஆம் ஆண்டுமுதல் கண் மருத்துவராக செயல்பட்டு வருகிறேன்.

அந்த காலத்தில் ஙசஆஙந படிப்பு கடுமையாக இருக்கும். முதல் அட்டம்டில் பாஸ் செய்யவே முடியாது என்ற நிலையில் முதல் அட்டம்டில் தேர்ச்சிபெற்று பாராட்டு பெற்றேன்.

1989 முதல் 1994 வரை அரவிந்த கண் மருத்துவனையில் சிறப்பு கண் மருத்துவராக பணியாற்றினேன். அதன்பிறகு கவர்மென்ட் சர்வீசில் பணிபுரிந்தேன். பிறகு மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் மூன்று வருடம் பணியாற்றினேன். இதற்கு பிறகு கடின உழைப்பாலும், மக்களிடம் பெற்ற நன்மதிப்பாலும் 1999-ஆம் ஆண்டில் மதுரை குட்ஷெட் தெருவில் ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை துவங்கி நல்ல புகழ், பெயரோடு அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிகரமாக கடவுளின் அருள் ஆசியோடு செயல்பட்டு வருகிறேன்.

கண்புரை ஆப்ரேஷன் மட்டும் இதுவரை ஒன்றேகால் லட்சம் பேர்களுக்கு செய்திருக்கிறோம். ஒரு நாளைக்கு நாற்பது, ஐம்பது ஆப்ரேஷன்கள் செய்கிறோம்.

சிறுவர்கள்- சிறுமிகளுக்கு கிட்டப் பார்வை, எட்டப்பார்வை சோதனைசெய்து கண் கண்ணாடிகள் தந்துவருகிறோம். கண் கண்ணாடிகளில் இப்போது ஸ்பெஷல் கண்ணாடிகள் வந்துள்ளது. இதனால் பவர் கூடுவதை தடுக்கலாம்.

'ஆபதஞடஒசஊ' எனும் லோ டோஸ் சொட்டு மருந்து சிறுவர் சிறுமிகளுக்கு தினமும் இரவில் விட தந்து நல்ல பலன் கிடைத்து வருகிறது.

கண் பிரஷர் எனும் கண் நீர் அழுத்த நோய்க்கு சிகிச்சைகள் தருகிறோம்.

சர்க்கரை வியாதி உள்ள வர்களுக்கு சர்க்கரையால் விழித்திரையில் பாதிப்பு வருகிறதா என்று பார்க்கிறோம்.

பிபியால் விழித்திரை பாதிப்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.

வயதானவர்களுக்கு கண்ணில் புதிதாக ரத்த குழாய்கள் வளரும். அதனால் தழும்பு போல் வருவதை பார்க்கிறோம்.

இவையனைத்திற்கும் தனித்தனி பிரிவுகள் வைத்து சிறப்பு சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தி வருகிறோம்.

மாறுகண் அறுவை சிகிச்சைக்கு தனிப் பிரிவு வைத்துள்ளோம். என் உடன்பிறந்த சகோதரி டாக்டர் ஜமுனா இதை கவனிக்கி றார்.

கம்ப்யூட்டர், செல்போன் அதிகமாக உபயோகிப்போருக்கு "டிரை ஐஸ்' "உதவ ஊவஊந' வந்துவிடும். இதனை கண்டறிய லேட்டஸ்ட்டாக ட்ரை அனலிசஸ் மெஷின் எங்களிடம் வந்துள்ளது. அதன்மூலம் பாதிப்பு கண்டறிந்து தகுந்த சிகிச்சைகளை மருந்துகள், தெரபிமூலம் தந்துவருகிறோம். இதற்கு என்றே தனிப்பிரிவு வைத்துள்ளோம்.

கண்புரைக்கு பெரிய ஓபன் செய்து தையல் போடுவோம். இப்போது இரண்டு மில்லிமீட்டர் சாவி துவாரம் ஓப்பன் செய்து "ஈஐஆஈஞ ஊஙமகஒடஒஈஆபஒஞச' எனும் அதிநவீன சாதனம் மூலம் ஆப்ரேஷனை பேஷண்டுகளுக்கு செய்துவருகிறோம். இதில் ஊசி கிடையாது. மயக்க மருந்து கிடையாது. அரைமணி நேரத்தில் வீட்டிற்கு சென்று எல்லா வேலைகளையும் பார்க்கலாம். ‘ஈஊசபமதஒஞச’ எனும் வேகமாக சிகிச்சை தரும் அதிநவீன கருவியை இதில் பயன்படுத்துகிறோம்.

இரண்டு ஆப்ரேஷன் தியேட்டர் இரண்டு மிஷின் இதில் எங்களிடம் உள்ளது.

எங்கள் கண் மருத்துவ சிகிச்சை டீமில் நல்ல திறமை அனுபவமிக்க ஏழு டாக்டர்கள் பணிபுரிந்து பாராட்டும் பெற்றுவருகிறார் கள்.

எங்களின் தனிச் சிறப்பே கண் மருத்துவ முகாம்கள் சிறிதும் வியாபார நோக்கமின்றி நடத்திவருவதுதான். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இதனால் இலவச சோதனை, சிகிச்கைளால் பெரும் பலனை அடைந்து எங்களை மனதார வாழ்த்திவருகிறார்கள். மாதம் பதினைந்து முதல் இருபது ஐ கேம்புகள் நடத்திவருகிறோம். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் ஆஸ்பத்திரியில் செய்வதை போல் அனைத்து அதிநவீன மிஷின்களை வேனில் ஏற்றிச் சென்று கேம்ப் போட்டு எங்கள் ஆஸ்பத்திரிக்கு வரமுடியாதவர்களுக்கு தேடிச்சென்று சிகிச்சைகளையுமே வெறும் டெஸ்ட்டோடு நின்று விடாமல் செய்துவருகிறோம். இந்த ஐ கேம்ப்புகளை என்னுடன் பாபு, ஜெய செந்தில் இருவரும் முழு பொறுப்பேற்று திருப்தியாக சேவை செய்துவருகிறார்கள்.

கண் சிகிச்சையில் நாங்கள் தெய்வங்களை மிக உக்கிரமாக கும்பிட்டும், வேண்டியும் வழிபடும் சூழ்நிலை தீபாவளி நேரத்தில் வருவதுண்டு. பட்டாசு வெடித்து கண்களில் பயங்கரமான பாதிப்புகள் அடைந்து சிகிச்சைக்கு வரும்போது அது எங்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்துவிடும். கருவிழி கிழிந்துபோய் வருவார்கள். தகுந்த அதிநவீன சிகிச்சைகள் தந்து கண்களை காப்பாற்ற கடவுள்தான் எங்களுக்கு துணை இருப்பார். ரத்தக் கசிவோடு வரும் சர்க்கரை நோயாளிகளின் கண்களை சரி செய்வதும் எங்களுக்கு சவாலாக இருந்த து.

தெய்வ சக்திகளின் அருளோடுதான் குணப்படுத்துவோம். காவல் துறையினருக்கு, ஆட்டோ, லாரி, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு கன்சல்டிங் பீஸ் வாங்காமல் இலவச பரிசோதனை செய்துவருகிறோம். இருபது வயது இளைஞர்கள், இளம் பெண்கள் கண்ணாடி போட்டு இருப்பார்கள். கண்ணாடி இல்லாமல் அவர்கள் செயல்பட லேசர் சிகிச்சை தந்துவருகிறோம். "ஸ்மைல்' போன்ற எல்லா சிகிச்சை தரும் கருவிகளும் எங்களிடம் உள்ளது.

பேட்டியின் நிறைவாக டாக்டரின் எதிர்கால திட்டம் பற்றி கேட்டோம். ஆர்வத்துடன் சொன்னார்.. "புதிய மருத்துவ மனை ஒன்றும் கட்டிவருகிறேன். இதில் இளைய தலைமுறை கண் கண்ணாடி ஷாப் வைத்து சம்பாதிக்க கண் டெஸ்ட் பயிற்சி தரும் கல்லூரியும் துவங்க திட்டமிட்டு இருக்கிறேன். கோவில்பட்டி, சிவகங்கையில் கிளைகள் உள்ளது. மேலும் கிளைகள் அமைக்க திட்டமிட்டு வருகிறேன்.'

கண் மருத்துவ துறையில் கலங்கரை விளக்கமாக கண்களின் பாதுகாவலராக திகழும் ஏராளமான கண் பரிசோதனை மட்டுமின்றி ஏழை, எளியோருக்கு இலவச சிகிச்சைகளும் மனிதநேயத்தோடு, கைராசியோடு, இலவச கண் மருத்துவ முகாம்கள் ஏராளமாக நடத்தி சிகரம் தொட்டுவிட்ட கண் மருத்துவ மாமேதை டாக்டர்.சீனிவாசன் அவர்களை மனமார வாழ்த்தி விடைபெற்றோம்.

டாக்டரின் தொடர்பு கைபேசி எண்கள்: 93840 20143, 98949 52181

பேட்டி படங்கள்: விஜயாகண்ணன்