ஔவையாரின் ஆலோசனைக்காக ஐந்துபேர்கொண்ட வணிகர் குழு காத்திருந்தது. அவர்கள் பார்ப்ப தற்கு, மலைநாட்டுத் தேசத்திலிருந்து மிளகுப் பொதிகளை இந்நாட்டுத் தலைநகருக்குக் கொண்டுவருபவர்களாகத் தெரிந்தனர்.
அவர்கள் வரும் வழியில், ஆரலைக் கள்வர்படை தங்களைக் கொள்ளை யடிக்க வழிமறித்தார் கள் என்றும், அவர் களிடமிருந்து தங்களின் உயிர்காக்க மிளகுப் பொதிகளையும் தங்களது கோவேரிக் கழுதைகளை யும் விட்டுவிட்டு ஓடிவந்து விட்டோம் என்றும் கூறினர்.
நாங்கள் தப்பிக்க எங்களது உடை மைகளையெல்லாம் விட்டுவிட நேரிட்டது என்றும் கதறினர்.
ஊர்ச்சபையோரை ஔவை ஒரு கணம் பார்த்தார். அப்போது ஊர்ச் சபைத் தலைவர் ஔவையிடம், சமீப காலமாகத்தான் இவ்வாறு வழிப்பறி கொள்ளை நடக்கிறது என்றும், இவ்வூருக்கு வடக்கிலிருந்து வரும் பெருவழிப்பாதையில் சுமார் ஆயிரம் காத தூரத்திலுள்ள மலைக்குன்றுகளில் கள்வர்கள் முகாமிட்டு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டுவருகிறார் கள் என்றும், அவர்களது குடும்பம் அதற்கப்பால் மறைவிடங்களில் சிறுசிறு குடில்கள் அமைத்து வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் பொது மக்களுக்கு இதுவரை எந்த இடையூறும் செய்த தில்லை என்றும், பெரு வணிகர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார் கள் என்றும் கூறினர்.
அவர்கள் ஈட்டிகளையும் பெருவாள்களையும் காட்டி வணிகர்களின் செல்வத்தைச் சூறையாடி விடுவார்கள் என்றும் கூறினர்.
ஔவை ஊர்த் தலைவரைப் பார்த்து நகைத்தார். அதில் பல கேள்விகள் உள்ளடங்கி யிருந்தன. உங்களுடைய நகைப்பிற்கான காரணம் புரியவில்லை என ஊர்த் தலைவர் கேட்டார். அவரி டம் அக்கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதாவது தெரியுமா? என ஔவை கேட்டார். எதுவும் தெரியாது எனத் தலைவர் பதிலளித்தார்.
ஔவை பொறுமை யாக சபையோரிடம், அப்பகுதியில் ஏதேனும் போர் நடந்து முடிந்துள்ளதா? என்றார். அதற்கு அவர்கள், ஆம் நமது மன்னர் வடக்கு திசையில் நம் பேரரச
ஔவையாரின் ஆலோசனைக்காக ஐந்துபேர்கொண்ட வணிகர் குழு காத்திருந்தது. அவர்கள் பார்ப்ப தற்கு, மலைநாட்டுத் தேசத்திலிருந்து மிளகுப் பொதிகளை இந்நாட்டுத் தலைநகருக்குக் கொண்டுவருபவர்களாகத் தெரிந்தனர்.
அவர்கள் வரும் வழியில், ஆரலைக் கள்வர்படை தங்களைக் கொள்ளை யடிக்க வழிமறித்தார் கள் என்றும், அவர் களிடமிருந்து தங்களின் உயிர்காக்க மிளகுப் பொதிகளையும் தங்களது கோவேரிக் கழுதைகளை யும் விட்டுவிட்டு ஓடிவந்து விட்டோம் என்றும் கூறினர்.
நாங்கள் தப்பிக்க எங்களது உடை மைகளையெல்லாம் விட்டுவிட நேரிட்டது என்றும் கதறினர்.
ஊர்ச்சபையோரை ஔவை ஒரு கணம் பார்த்தார். அப்போது ஊர்ச் சபைத் தலைவர் ஔவையிடம், சமீப காலமாகத்தான் இவ்வாறு வழிப்பறி கொள்ளை நடக்கிறது என்றும், இவ்வூருக்கு வடக்கிலிருந்து வரும் பெருவழிப்பாதையில் சுமார் ஆயிரம் காத தூரத்திலுள்ள மலைக்குன்றுகளில் கள்வர்கள் முகாமிட்டு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டுவருகிறார் கள் என்றும், அவர்களது குடும்பம் அதற்கப்பால் மறைவிடங்களில் சிறுசிறு குடில்கள் அமைத்து வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் பொது மக்களுக்கு இதுவரை எந்த இடையூறும் செய்த தில்லை என்றும், பெரு வணிகர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார் கள் என்றும் கூறினர்.
அவர்கள் ஈட்டிகளையும் பெருவாள்களையும் காட்டி வணிகர்களின் செல்வத்தைச் சூறையாடி விடுவார்கள் என்றும் கூறினர்.
ஔவை ஊர்த் தலைவரைப் பார்த்து நகைத்தார். அதில் பல கேள்விகள் உள்ளடங்கி யிருந்தன. உங்களுடைய நகைப்பிற்கான காரணம் புரியவில்லை என ஊர்த் தலைவர் கேட்டார். அவரி டம் அக்கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதாவது தெரியுமா? என ஔவை கேட்டார். எதுவும் தெரியாது எனத் தலைவர் பதிலளித்தார்.
ஔவை பொறுமை யாக சபையோரிடம், அப்பகுதியில் ஏதேனும் போர் நடந்து முடிந்துள்ளதா? என்றார். அதற்கு அவர்கள், ஆம் நமது மன்னர் வடக்கு திசையில் நம் பேரரசை விரிவுபடுத்த, பல திங்கள்களுக்கு முன்னால் பெரும்படை கொண்டு போர்நடத்தி, பெரும் நிலப்பரப்புகளை நம் அரசோடு இணைத்துள்ளார். அப்படி யிருந்தும், நம்மன்னர்மீது சிறிதும் அச்சமின்றி நம் நாட்டிற்கு வரும் வணிகர்களை இடைமறித்து சூறையாடிக்கொண்டுதான் அவர்கள் இருக்கின்றனர் என்றனர். ஔவை மீண்டும் இடை மறித்து, இது உங்கள் படைவெட்டுக் குமுன்பு நடந்துள் ளதா? என்று கேட்டார். இல்லை.. அதற்குப் பின்புதான் இந்த அட்டூழியம் நடக்கிறது எனச் சபை யோர் கூறினர்.
ஔவை அவர் களிடம் மீண்டும் புன்னகைத்து "பாவம், அக்கொள்ளையர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர் களுக்கு நாம்தாம் கருணை காட்ட வேண்டும். நாம் அவர்கள் குடும் பத்திற்குப் புகலிடம் தந்து காக்க வேண்டும் எனக் கூறினார். ஔவையின் கூற்றைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.
"ஆரலைக் கள்வர்கள் அனைவரும் கழுவேற்றப்படும் அளவிற்கு கொடுங்குற்றத்துக்குரியவர்கள். அவர்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமா? அது எவ்வளவு தவறான காரியமாகிவிடும் என்றனர்.
ஔவையார் சபையோரைப் பார்த்து "பொறுமையாக நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குறிப்பிடும் ஆரலைக் கள்வர் கள் என்பவர்கள் உங்களால் போரிட்டு வென்ற அந்த மண்ணின் மைந்தர்களாகவும், அந்த நாட்டு குறுநில மன்னர்களுக்குக் கீழிருந்து அந்நாட்டைக் காக்கும் போர் மறவர் களாகவும் இருந்திருக்கவேண்டும். அவர்கள் பல தலைமுறை தலைமுறையாகப் போர்த்தொழில் மட்டுமே தெரிந்தவர்களாக இருப்பர். அவர்கள் பயிர்த் தொழிலோ, நெசவுத் தொழிலோ, தச்சுத் தொழிலோ, வேறு ஏதேனும் கைத் தொழில்களோ தெரியாதவர்களாகத்தான் இருந்திருப் பார்கள். அவர்களது குடும்பத்தாரின் உணவுத்தேவைக்கு உரிய பொருள்கள் அம்மன்னர்களிடமிருந்துதான் வழங்கப்பட்டிருக்கும். திடீரென உங்கள் மன்னர் பெரும் படை கொண்டு அந்நாட்டைக் கைப்பற்றிய வுடன், அடுத்த கணப்பொழுதிலேயே அவர்களது வாழ்வு பாழாயிருக்கும். அவர்களும் அவர்களது மனைவி, குழந்தைகளும் உங்களிடமிருந்து தப்பித்துத் தொலைதூர மலைக் குன்றுகளின் மறைவிடங்களில் தஞ்சம் புகுந்திருப்பர்.
அவ்வாறு சென்றவர்களுக்கு யார் உணவளிப்பார்கள்? தங்களுடைய குழந்தைகள் பசி, பட்டினியுடன் துடிக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பசியால் துவண்டுவிழும்போது அவர்களால் என்ன செய்யமுடியும்? அன்றைய நாள் உணவுக்கு அங்கிருக்கும் கீரை, கனிகளைச் சாப்பிட்டு, அடுத்த நாளுக்குரிய உணவிற்கு எந்தத் தொழிலும் செய்யத்தெரியாமல், அவ்வழியே செல்லும் செல்வச் செருக்குமிக்கவர்களிடம் உள்ள செல்வங்களைக் கவர்ந்து வந்துதான் தங்களது குடும்பங்களைக் காப்பாற்றமுடியும் என்ற சூழலுக்கு அவர்களைத் தள்ளியது யார்? இதற்குக் காரணமானவர்கள் குற்றவாளி களா? அவர்கள் குற்றவாளிகளா? மேலும், அவர்கள் பொதுமக்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை என நீங்களே கூறும்போது, அவர்களின் மனிதாபிமானத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? உங்களுடைய குழந்தைச் செல்வங்கள் பயத்தாலும் பசியாலும் துவண்டு விழுவதை நீங்கள் பார்க்கும்போதுதான் அவர்களின் நிலை உங்களுக்குப் புரியும். போரில் கை-கால்களை இழந்த தங்களின் சக நண்பர்கள் குடும்பங்களுக்காகவும், இந்த நிலையைக் கையிலெடுத்து அவர்களைக் காப்பாற்ற எண்ணி யிருப்பார்கள்.
தன் நாட்டு மக்களுக்காக தங்களின் உயிரையும் ஈயத்தயாரானவர்கள். அவர்களுக்கு உங்கள் மன்னர் மீதுதான் கோபம். மன்னரின் நிலத்தாசை மீது கோபம். தங்களோடு வாழ்ந்து தங்களோடு பயணித்து தங்கள் உடல் பாகங்களை இழந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க, உங்கள் நாட்டு செல்வ மேம்பாட்டிற்குப் பயன்படும் வணிகர்களின் செல்வங்களைத்தான் சூறையாடுகிறார்கள். இதனால் தான் அவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்.
அவர்களிடமிருந்து வணிகர்களையும் செல்வந்தர்களையும் காப்பாற்ற வேண்டுமாயின், நாம் சேர்ந்து ஒரு நற்செயல் செய்யவேண்டும். மலைக்குன்றுகளில் தஞ்சம் புகுந்திருப்பர்களின் எண்ணிக்கையறிந்து, அவர்களுக்கு இருதிங்கள் கால அளவிற்குத் தேவையான உணவு தானியங்களை, இச்சந்தையூர் வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து சேகரித்து அனுப்பிவைக்க வேண்டுகிறேன். இது விவரம் குறித்து நான் எனது குரு மடத்தாருக்கு ஓலையனுப்பு கிறேன். குருமடத்துக்காராள குருநாதருக்கு இது கிடைக்கப் பெற்றவுடன், அவர் அவர்களது வாழ்வாதாரத்திற்கான வேளாண் தொழிலுக்கான சூழலை, அவ் விடத்திலேயே ஏற்படுத்தித் தருவார். உங்களுடைய உணவு தானியங்கள் தயாராவதற்குள், குருமடத்தார் அவர்களை அணுகி சமாதானம் செய்து விடுவார்கள். அவர்கள் இடத்திலேயே காராள குருமார் தங்கள் சகாக்களுடன் தங்கிவிடுவார். (காராள குருமார் குறித்த அத்தனை விவரங் களையும் முந்தைய அத்தியாயங்களில் தெளிவு படுத்தியுள்ளோம்.)
அவர், அவர்கள் இருக்கும் மலையடி வாரத்தில் நீர்வரத்தைக் கண்டறிந்து மழைக் காலங்களில் மலைகளிலிருந்து வழியும் நீரினைச் சேகரமாக்கும் கண்மாய்களை உருவாக்கித் தருவார். ஆண்டிற்கு இருபோகம் விளையும் அளவிற்கு நிலத்தைச் சீர்திருத்தி, அதில் பயிர் செய்யும் தொழில்நுட்பங்களை அவர் களுக்குக் கற்றுக்கொடுப்பார். இப்பயிர்த் தொழிலுக்கான அடிப்படை செலவினங்களை, பெருவணிகர்களிடம் கொடையாகப் பெற்று அங்குசென்று சேர்ப்பதால், மனித இனம் காப்பாற்றப்பட்டு பகைநீங்கி செழிப்புறும் என ஊர்ச் சபையோர்களிடம் கூறி, உண்மை நிலையை உணரச்செய்தார்.
காராள குருமார், ஓரிடத்திலுள்ள தட்ப வெப்ப சூழ்நிலையை ஆராய்ந்து, அதன் விளைவால் கார்முகில் கொடுக்கும் மழை அளவுதனைக் கணக்கிட்டு, கார்முகிலை ஆளும் திறன் படைத்தவர்களாக அம்மக்களை உருவாக்கி, பெய்யும் மழை நீரை முழுமையாக பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்தும் நீர் மேலாண்மையை திறம்படச்செய்யும் அளவிற்கு, அவர்களின் அருகிலிருந்து பெற்ற தந்தையைப்போல் கற்றுணரச் செய்வார்.
இவ்வாறு ஓரிடத்தில் வறுமையுற்று நலிவடைந்த சமுதாயத்தவர் மற்றும் போர்க்குடி சமுதாயத்தவர்மீது கருணைகாட்டி, அவ் விடத்தை செழுமைமிக்க இடமாக மாற்றி, அங்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்து, தஞ்சம் புகுந்தவர்களின் வாழ்வை சீர்பெறச் செய்த அந்தக் காராள குருவானவர், பின்னாளில் அங்கு வாழ்ந்தவர்களின் வாரிசுதாரர்களால் தெய்வமாக வழிபடப் பட்டார். தங்களது வாழ்வுகாக்கும் குல தெய்வமாக "அடைக்கலம்காத்த ஐயன்'' எனப் பெயர்சூட்டி ஆலயம் அமைத்து அவரை வழிபடலாயினர்.
தங்களின் வாழ்வு சீரும் சிறப்பும் பெற்று, அதனால் எவ்விடங்களுக்குச் சென்று வாழ்ந்தாலும், ஆண்டுக்கொருமுறை தங்களின் கருணை வடிவமாகத் திகழும் அடைக்கலம்காத்த ஐயனாரை வழிபட, தங்கள் மூதாதையர் வாழ்ந்த அவ்வூருக்கு வந்து ஒன்றுகூடி, மிகப்பெரிய அளவில் சிறப்பு பூசைகள் செய்துவருகின்றனர்.
அன்றைய தினம் அங்குவரும் அனைவருக் கும் அன்னதானங்களும் தர்மகாரியங்களும் செய்து மகிழ்வர். அங்கே ஆதிகாலத்தில் அடைக்கலமாய் வந்துசேர்ந்தவர்கள், இன்றைய நாட்களில் பல ஜாதிகளாக, அதாவது- வெள்ளாளர், சேர்வார், நாடார், ஆசாரியார், பள்ளர், செட்டியார், குயவர், கள்ளர் என பிரிந்திருந்தாலும், அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒரே குலதெய்வமாக ஐயனாரை வணங்குவது தமிழர் இனத்தின் ஒற்றுமை ஓங்கும் பெருமித நிகழ்வாகத் திகழ்கிறது.
வேளாண் தொழிலுக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழும் ஏரி, கண்மாய், குளங்கள் வெட்டுவதற்கு யாரேனும் வணிகரோ, செல்வந்தர்களோ கொடை கொடுத்திருந்தால், அவர் பெயராலேயே இன்றளவும் அந்த நீர் நிலைகள் அழைக்கப் படுகின்றன. உதாரணமாக சாத்தன்குளம், தத்தன் ஏரி, தோடன் ஏரி, புள்ளன் ஏரி, புளியன்குளம் என இன்னும் நிறைய இடங்களில் நிலைத்து நிற்கின்றன.
பண்பாட்டு ஆய்ந்தறிதல் தொடரும்.
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்