650 ஆண்டுகளாக கருங்கா- மாலையில் காட்சி தந்து பக்தர்களூக்கு அருள்பாலிக்கும்! பாதாள செம்பு முருகன்! -சக்தி

/idhalgal/om/650-years-karunga-has-been-giving-blessings-devotees-evening-underground-copper-murugan

மீபகாலமாகவே அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் உள்பட அனைத்து தரப்பினருமே கருங்காலி மாலையை ஆர்வமாக அணிந்துவருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது.

அதற்குள் 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார்.

பாதாளத்தில் செம்பு உலோகத் தில் முருகன் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது.

தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் பூமிக்கு அடியில் ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத் திலுள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடு வதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் சென்று வழிபட்டு செல்கிறார்கள். இக்கோவிலில் மற்ற முருகன் கோவிலுக்கு மாலை அணிவிப்பதுபோல் இந்த செம்பு முருகனுக்க

மீபகாலமாகவே அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் உள்பட அனைத்து தரப்பினருமே கருங்காலி மாலையை ஆர்வமாக அணிந்துவருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது.

அதற்குள் 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார்.

பாதாளத்தில் செம்பு உலோகத் தில் முருகன் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது.

தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் பூமிக்கு அடியில் ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத் திலுள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடு வதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் சென்று வழிபட்டு செல்கிறார்கள். இக்கோவிலில் மற்ற முருகன் கோவிலுக்கு மாலை அணிவிப்பதுபோல் இந்த செம்பு முருகனுக்கு மாலை அணிவித்து பூஜைசெய்வது கிடையாது. அதற்கு பதிலாக கருங்காலி மாலையை அணிவித்துதான் பூஜைசெய் வார்கள். அப்டிப்பட்ட கருங் காலி மாலையைத்தான் பக்தர் களுக்கும் வழங்கிவருகிறார்கள்.

mur

பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக திருக்கோவிலூர் சித்தர் கருதப் படுகிறார். போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப் பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்துவந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 600 ஆண்டு களுக்குமுன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ராமலிங்கம்பட்டியில் வசித்துவந்திருக்கிறார். இவர் 1 1/2 அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தால் வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்துவந்தார். நாளடைவில் வழிபாடின்றி போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத் தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர் மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.

பாதாள கருவறையில் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதோடு வலது கையில் அபயமுத்திரையும் இடது கையில் வேல் ஏந்தியும் காட்சிதருகிறார். இந்த சிலைக்குமுன்பு திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது. கோவலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம்கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப் பட்டதாகும். இதேபோல் முன்மண்டபத்தில் செல்வ விநாயகர், அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் வீற்றிருக்கின்றனர். கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன் சிலை அமைந்திருப்பது சிறப்பு.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர் களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நறுமணம் கமழும் இந்த விபூதி பல்வேறு நோய்களை குணமாக்கும் மகத் துவம் வாய்ந்ததாகும். 18 வகையான மூலிகைகளைக்கொண்டு இங்கு விபூதி தயாரிக்கப்படுவது குறிப் பிடத்தக்கது. இந்த பாதாள செம்பு முருகனை தரிசிப்பதற்காக தினசரி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான முருக பக்தர்கன் தரிசித்துவிட்டு கருங்காலி மாலையையும் வாங்கிச் செல்கிறார்கள். அதுபோல் பிரபல இயக்குநர் பாரதிராஜா மற்றும் தனுஷ், சிவகார்த்திகேயன் யோகிபாபு, ஐயாவீரமணி உட்பட நடிகர், நடிகைகள் பலரும் வந்து பாதாள முருகனை தரிசித்துவிட்டு கருங்காலி மாலையையும் வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.

இக்கோவிலின் பாஸ்கர சேதுபதி வம்சா வளியில் வந்த மிராஸ்தார் கந்தமாறன் பேரனான பரம்பரை அறங்காவலராக இருக் கக்கூடிய அறிவானந்த சுவாமிகள் பழமை யான பொருட்களை பாதுகாத்துவருகிறார்.

தங்கள் மூதாதையர்கள் பரம்பரை சொத்தான விலை மதிப்பில்லாத ஆபரணங்கள், கலைநயமிக்க பொருட்களை பாதுகாத்து வரும் இவர் கோவிலில் இந்தப் பொருட்களை தகுந்த பாதுகாப்புடன் கண்காட்சியாக வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ராஜராஜ சோழன் காலத்தில் காசுகள், பரசுராமன், சிவன், எல்லையம்மாள் என்ற ரேணுகாதேவி செம்பு காசுடன் யானை தந்தத்தால் கலை நயமிக்க வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட கையில் அணியும் காப்புகள், இரட்டை தலை நந்திகள், யானை தந்ததால் ஆன பாசிகள் மணிகள் மற்றும் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பு சிலைகளும் இங்கு இருக்கின்றன.

பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் பரம்பரை அறங்காவலரான அறிவானந்த சுவாமிகள் நம்மிடம்...

மகிமை நிறைந்த கருங்காலி மாலைகளை நமது பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் 650 வருடங்களாகவே சார்த்தி வழிபடுவது பாரம்பரிய மரபாகவே இருந்து வருகிறது. இந்த கருங்காலி குச்சியை வெளிநாடான ஆப்ரிக்கா மற்றும் அரியானா, கேரளா மாநிலங்களில் இருந்து ஒரிஜினல் கருங்காலி குச்சிகளை கொள்முதல் செய்து அதை மாலைகளாக தயார்செய்து 48 நாட்கள் அல்லது 18 நாட்கள் பூஜைசெய்து அதன்பின் பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறோம்.

முன்னாள் இராணுவத்தினர், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும். பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரிஜினல் கருங்காலி மாலை கருநிறத் தில் சாயம் போகாமல் இருக்கும். ஆனால் போலி கருங்காலி மாலைகள் சாயம் போய் வெளுத்துவிடும். அதனால் பக்தர்கள் கோவிலில் விற்கக்கூடிய ஒரிஜினல் கருங்காலி மாலைகளை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டுகிறோமே தவிர வெளியில் விற்கக்கூடிய போலி கருங்காலி மாலைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று கூறினார்.

om010124
இதையும் படியுங்கள்
Subscribe